Class 7th Tamil Book Solution for CBSE | Lesson 5.2 – அழியாச்செல்வம்

 பாடம் 5.2 அழியாச்செல்வம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 5.2 – “அழியாச்செல்வம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 7 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • வைப்புழி – பொருள் சேமித்து வைக்கும் இடம்
  • கோட்பா – ஒருவரால் கொள்ளப்படாது
  • வாய்த்து ஈயில் – வாய்க்கும் படி கொடுத்தலும்
  • விச்சை – கல்வி

பாடலின் பொருள்

கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது. மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது. ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகா.

நூல் வெளி

  • நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
  • இது நானூறு வெண்பாக்களால் ஆனது.
  • நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர்.
  • திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
  • இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.

மதீப்பிடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் _____.

  1. வீடு
  2. கல்வி
  3. பொருள்
  4. அணிகலன்

விடை : கல்வி

2. கல்வியைப் போல் __________ செல்வம் வேறில்லை.

  1. விலையில்லாத
  2. கேடில்லாத
  3. உயர்வில்லாத
  4. தவறில்லாத

விடை : விலையில்லாத

3. வாய்த்தீயின் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. வாய்த்து + ஈயீன்
  2. வாய் + தீயின்
  3. வாய்த்து +தீயின்
  4. வாய் + ஈயீன்

விடை : வாய்த்து + ஈயீன்

4. கேடில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. கேடி + இல்லை
  2. கே +இல்லை
  3. கேள்வி + இல்லை
  4. கேடு + இல்லை

விடை : கேடு + இல்லை

5. எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. எவன்ஒருவன்
  2. எவன்னொருவன்
  3. எவனொருவன்
  4. ஏன்னொருவன்

விடை : எவனொருவன்

குறு வினா

கல்விச் செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.

கல்வியைப் பொருள் போல வைத்திருபபினும் அது பிறரால்  கொள்ளபடாது. ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.

சிறு வினா

கல்விச் செல்வம் குறித்து நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

  • கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால்  கொள்ளபடாது.
  • ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.
  • மிக்க சிறப்பினை உடைய அரசாலும் கவர முடியாது.
  • ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும்.
  • மற்றவை செல்வம் ஆகாது.

சிந்தனை வினா

கல்விச் செல்வம் அழியாத செல்வம் எனப்படுவது ஏன்?’ – சிந்தித்து எழுதுக.

  • நீர், நெருப்பு ஆகியவற்றால் கல்வி அழியாது.
  • திருடர்களால் கல்வியைத் திருட முடியாது.
  • கல்வியை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்தாலும் குறையாது.

– எனவே பிற செல்வங்கள் அழியும். ஆனால் கல்விச் செல்வம் அழியாதது ஆகும்.

கற்பவை கற்றபின்

பின்வரும் பாடலைப் படித்து மகிழ்க.

வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்
வேகாது வேந்த ராலும்

கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்
நிறைவன்றிக் குறைவு றாது

கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு
மிகஎளிது கல்வி யென்னும்

உள்ளபொருள் உள்ளிருக்கப் புறத்தேயோர்
பொருள்தேடி உழல்கின் றீரே

– தனிப்பாடல் திரட்டு.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. சமண முனிவர் பலரால் எழுதப்பட்ட நூல் ……………….

  1. நாலடியார்
  2. திருக்குறள்
  3. புறநானூறு
  4. அகநானூறு

விடை : நாலடியார்

2. நாலடியார் ……………………. நூல்களுள் ஒன்று

  1. பத்துப்பாட்டு
  2. எட்டுத்தொகை
  3. பதினெண்கீழ்கணக்கு
  4. பதினென்மேல்கணக்கு

விடை : பதினெண்கீழ்கணக்கு

3. வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல் ……………….

  1. திருக்குறள்
  2. புறநானூறு
  3. அகநானூறு
  4. நாலடியார்

விடை : நாலடியார்

4. விச்சை என்பதன் பொருள் ………………..

  1. புத்தகம்
  2. பாடம்
  3. பாடல்
  4. கல்வி

விடை : கல்வி

5. நாலடியார் ……………………… இணையாக போற்றப்படுகிறது

  1. திரிகடுகம்
  2. நற்றிணை
  3. குறுந்தொகை
  4. திருக்குறள்

விடை : திருக்குறள்

6. நாலடியார் நூலில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை …………….

  1. 400
  2. 200
  3. 300
  4. 100

விடை : 400

குறு வினா

1. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் எது?

ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகாது.

2. நாலடியார் நூலின் வேறு பெயர்கள் யாவை?

நாலடி நானூறு, வேளாண்வேதம்

3. நாலடியார் – திருக்குறள் ஒப்புமை தருக?

நாலடியாரும் திருக்குறளும் அறம், பொருள், இன்பம் என்ற முப்பால் பகுப்புகளை கொண்டது

4. திருக்குறளுக்கு இணையாக நாலடியார் போற்றப்படுவதை எவ்வாறு அறியலாம்?

திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை “நாளும் இரண்டும் சொல்லும் சொல்லுக்குறுதி” என்னும் தொடர் மூலம் அறியலாம்.

சிறு வினா

நாலடியார் குறிப்பு வரைக?

  • நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
  • இது நானூறு வெண்பாக்களால் ஆனது.
  •  நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர்.
  • திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
  • இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment