Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 6.5 புறப்பொருள் இலக்கணம்

பாடம் 6.5 புறப்பொருள் இலக்கணம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 6.5 – “புறப்பொருள் இலக்கணம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடு.

  1. உழவு, மண், ஏர், மாடு
  2. மண், மாடு, ஏர், உழவு
  3. உழவு, ஏர், மண், மாடு
  4. ஏர், உழவு, மாடு, மண்

விடை : உழவு, ஏர், மண், மாடு

2. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் ………….

  1. நாட்டைக் கைப்பற்றல்
  2. ஆநிரை கவர்தல்
  3. வலிமையை நிலைநாட்டல்
  4. கோட்டையை முற்றுகையிடல்

விடை : வலிமையை நிலைநாட்டல்

குறு வினா

1. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

  • வெட்சித் திணை x கரந்தைத் திணை
  • வஞ்சித் திணை x காஞ்சித் திணை
  • நொச்சித் திணை x உழிஞைத் திணை

2. பொதுவியல் திணை பற்றிக் குறிப்பெழுதுக.

வெட்சித்திணை முதல் பாடாண் திணை வரை உள்ள புறத்திணைகளில் பொதுவான செய்திகளையும் அவற்றுள் கூறப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணை
ஆகும்.

கூடுதல் வினாக்கள்

1. புறத்திணை என்றால் என்ன?

மகிழ்ச்சி. புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை ஆகும்.

2. ஆநிரை கவர்தல் வெட்சித் திணை என கூறக்காரணம் யாது?

  • மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த காலத்தில், ஆநிரைகளைச் (மாடுகளை) சொத்தாகக் கருதினர்.
  • ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழுவினர் ஆநிரைகளைக் கவர்தல் வழக்கமாக இருந்தது.
  • ஆநிரைகளைக் கவர்ந்துவர வெட்சிப் பூவினைச் சூடிக்கொண்டு செல்வர்.
  • எனவே, ஆநிரை கவர்தல் வெட்சித் திணை எனப்பட்டது.

3. கரந்தைத் திணை பெயர்க் காரணம் யாது?

கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை மீட்கச்செல்வர். அப்போது கரந்தைப் பூவைச் சூடிக்கொள்வர். அதனால் கரந்தைத் திணை என்று பெயர் பெற்றது.

4. வஞ்சித்திணை என்றால் என்ன?

மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணை ஆகும்.

5. காஞ்சித் திணை என்றால் என்ன?

தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு, காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடல் காஞ்சித்திணை ஆகும்.

6. நொச்சித்திணை என்றால் என்ன?

கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு
நொச்சிப் பூவைச் சூடி உள்ளிருந்தே போரிடுவது நொச்சித்திணை ஆகும்.

7. உழிஞைத்திணை என்றால் என்ன?

மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்ற உழிஞைப் பூவைச் சூடிய தன் வீரர்களுடன் அதனைச் சுற்றி வளைத்தல் உழிஞைத்திணை ஆகும்.

8. தும்பைத் திணை என்றால் என்ன?

பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவைச்சூடிப் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது தும்பைத் திணை ஆகும்.

9. வாகைத்திணை என்றால் என்ன?

போரிலே வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது, வாகைத்திணை ஆகும்.

வாகை என்றாலே வெற்றி பொருள் ஆகும்.

10. பாடாண் திணை என்றால் என்ன?

பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீ ரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது, பாடாண் திணை ஆகும்.

(பாடு+ஆண்+திணை = பாடாண் திணை).

11. பொதுவியல் திணை என்றால் என்ன?

வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது, பொதுவியல் திணை ஆகும்.

12. கைக்கிளை எதனை குறிக்கிறது?

கைக்கிளை என்பது ஒருதலைக் காமத்தைக் குறிக்கிறது.

13. பெருந்திணை எதனை குறிக்கிறது?

பெருந்திணை. பொருந்தாக் காமத்தைக் குறிக்கிறது.

14. திணைகளையும் அதன் பூக்களையும் பட்டியலிடுக

  • வெட்சித்திணை – வெட்சிப்பூ (இடலிப்பூ)
  • கரந்தைத்திணை – கரந்தைப்பூ (கொட்டைக்கரந்தை)
  • வஞ்சித்திணை – வஞ்சிப்பூ
  • காஞ்சித்திணை – காஞ்சிப்பூ
  • நொச்சித்திணை – நொச்சிப்பூ
  • உழிஞைத்சித்திணை – உழிஞைப்பூ (முடக்கத்தான், முடக்கொற்றான்)
  • தும்பைத்திணை – தும்பைப்பூ
  • வாகைத்திணை – வாகைப்பூ

 மொழியை ஆள்வோம்…. 

மொழிபெயர்க்க.

Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensible by the ancient Tamils.

மருத நிலம்

பண்டைய சங்க இலக்கிய காலத்தில், பூகோள அடிப்படையில் (நில அமைப்புப்படி) தமிழ்நாடு ஐந்து வகையாகக இருந்தது. அவற்றுள் மருத நிலப்பகுதியே உழவுத் தொழிலுக்கு ஏற்றதாய் இருந்தது. அந்த நிலப்பகுதியில் விவசாயிகள் (உழவர்கள்) பயன்பெறும் வகையான தேவையா பருவ காலங்கள் சிறந்திருந்தது. தேவையா சூரிய வெப்பம், வளமான நிலம், போதுமான அளவு மழையும் இருந்தது. அதனால் விசாயம் செழித்தது. மருத நிலத்தின் இயற்கைக் கூறுகளாலும், போதுமான சூரிய வெப்பத்தினாலும் பழந்தமிழகத்தில் மருத நிலத்தில் உழவுத் தொழில் சிறந்திருந்தது.

பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.

(வரப் போகிறேன், இல்லாமல் இருக்கிறது, கொஞ்சம் அதிகம், முன்னுக்குப் பின், மறக்க நினைக்கிறேன்)

1. வரப் போகிறேன்

விடை ; இன்னும் சிறிது நேரத்தில் வரப் போகிறேன்

2. இல்லாமல் இருக்கிறது

விடை ; எங்கள் நாடு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது

3. கொஞ்சம் அதிகம்

விடை ; சங்க காலத்தில் மன்னர்களுக்கு காதலும் வீரமும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது

4. முன்னுக்குப் பின்

விடை ; முன்னுக்குப் பின் முரணாக பேசுவது நன்றன்று.

5. மறக்க நினைக்கிறேன்

விடை ; எனக்கு பிடிக்காதவர்களை மறக்க நினைக்கிறேன்

தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக.

மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவர்க்கு அறுசுவை உணவு போல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப்பெருமை சாற்றுகிறது

தொகைச் சொற்கள்

1. நாற்றிசை = நான்கு + திசை

நான்கு – ௪கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு

2. முத்தமிழ் = மூன்று + தமிழ்

மூன்று – ௩இயல், இசை, நாடகம்

3. இருதிணை = இரண்டு + திணை

இரண்டு – ௨உயர்திணை, அஃறிணை

4. முப்பால் = மூன்று + பால்

மூன்று – ௩அறத்துப்பால, பொருட்பால், இன்பத்துப்பால்

5. ஐந்திணை = ஐந்து + திணை

ஐந்து – ௫குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை

6. அறுசுவை = ஆறு + சுவை

ஆறு – ௬இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு

பாடலில் இடம்பெற்றுள்ள தமிழ்ப் புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து எழுதுக.

கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்
கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை
காசிம்புலவரை, குணங்குடியாரைச் சீகனாப் புலவரை
செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ

  • கம்பன்
  • உமறுப்புலவர்
  • ஜவாது ஆசுகவி
  • காசிம்புலவர்
  • குணங்குடியார்
  • சீகனாப் புவலர்
  • செய்குதம்பி பாவலர்

கீழ்க்காணும் நாள்காட்டியில் புதன் கிழமையை ஒன்றாம் தேதியாகக் கொண்டு தமிழெண்களால் நிரப்புக.

ஞாயிறுதிங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனி
௧௦௧௧
௧௨௧௩௧௪௧௫௧௬௧௭௧அ
௧௯உ0௨க௨௨௨௩௨௪௨௫
௨ ௬௨௭௨அ௨௯௩௦௩௧

தொடரைப் படித்து விடையைத் தேர்ந்தெடுக.

(சோறு, கற்றல், கரு, பூவில், எழுத்து)

1. நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் ______

விடை: கற்றல்

2. விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை ______

விடை: கரு

3. கல் சிலை ஆகுமெனில், நெல் ______ ஆகும்.

விடை: சோறு

4. குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து ______

விடை: கற்றல்

5. மீன் இருப்பது நீரில்; தேன் இருப்பது ______

விடை: பூவில்

அகராதியில் காண்க

1. குணதரன்

விடை ; நற்குணமுள்ளவன், முனிவன்

2. செவ்வை

விடை ; செம்மை, மிகுதி, வழி

3. நகல்

விடை ; படி, பிரதி

4. பூட்கை

விடை ; வலிமை, மனவுறுதி, யானை, கொள்கை

கவினுற எழுதுக.

Chapter 7.5 - காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.கிழக்கு வெளுத்தது
பொழுது புலர்ந்தது
அரைகுறை உறக்கத்திலும்
எழுந்தான் ஆர்வத்தோடு
தோளில் ஏற்றினான் ஏரினை…
சந்ததிகள் செழித்த வளர
பசித்தவனுக்குப் பசியாற்ற…
பகலவனை வணங்கி
புற்பட்டு விட்டான்.
அரை நிர்வாணத்தோடு…

கலைச்சொல் அறிவாேம்

 

Agreement – ஒப்பந்தம்Monarchy – முடியாட்சி
Border – எல்லைRebellion – கிளர்ச்சி
Discourse – சொற்பொழிவு

அறிவை விரிவு செய்

நூல்ஆசிரியர்
என்கதைநாம்க்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
வேருக்கு நீர்ராஜம் கிருஷ்ணன்
நாற்காலிகாரர்ந. முத்துசாமி

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment