பாடம் 5.6 படைபாக்க உத்திகள்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 5.6 “படைபாக்க உத்திகள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
கற்பவை கற்றபின்…
1. பூவை விட்டு இறங்காதே
இறக்கை முறிந்த வண்ணத்துப் பூச்சியே
உனக்காக எறும்புகள் இக்கவிதை படைப்பாக்க உத்திகளால் தனித்துவம் பெற்றுள்ளன – விளக்குக.
விருப்பப்படி பறக்க உதவும் இறக்கை முறிந்தால், வண்ணத்துப் பூச்சிகள் கதி என்னவாகும்? எறும்பு உள்ளிட்டவற்றிக்குக் கொண்டாட்டம் தான்
உடலில் உயிரிருந்தாலும் காத்துக் கொள்ள முடியுமா? பறக்க உதவும் இறேக முறிந்தால் என்னாவது?
விரும்பிய படி மலர்த்தேனை உன்ன முடியுமா? மகரந்த சேர்க்கைக்குத்தான் உதவ முடியுமா?
எனவே விழிப்புணர்வு தேவை. வானில் பறக்கும் வண்ணத்துப் பூச்சியும் தன் நிலை தவறினால் உயிரிழக்க நேரும்.
இங்கு கூறப்பட்ட அறிவுரை, வண்ணத்துப்பூச்சிக்கு மட்டுமன்று; ஆறறிவு படைத்த மனிதனுக்கும் தான். மெய்பொருள் காண்பது அறிவு!
2. மனிதர்க்கு உணவாவதை எண்ணி
கண்ணீர் விட்டனவோ மீன்கள்
கடல் நீரில் உப்பு இக்கவிதை படைப்பாக்க உத்திகளால் தனித்துவம் பெற்றுள்ளன – விளக்குக.
கடல் நீர், அது தோன்றிய காலத்திலிருந்தே உப்புக் கரித்துக் கொண்டுதான் உள்ளது.
இப்பாடலை பாடிய கவிஞர், அதற்கு ஒரு புதிய காரணத்தை கற்பித்துக் கூறியுள்ளார்.
மீனின் சுவை அறிந்த மனிதன், அதை விட்டு வைக்க நினைப்பானா? மீன்கள் மனிதர்க்கு உணவாவதை எண்ணிக் கண்ணீர் வடிப்பதனால், கடல்நீர் உப்பானதாகக் கூறுகிறார்.
உன்மையில் அழகானதொரு கற்பனை தான். இயற்கை நிகழ்வை உள்ளது உள்ளபடி கூறுவர் சிலர். அந்த இயற்கை நிகழ்வில், தம் கற்பனையை ஏற்றி கூறுவர் சிலர். இப்புதுக்கவிதை, அவ்வகையில் தற்குறிப்பேற்ற அணியைப் படைப்பு உத்தியாகக் கொண்டுள்ளது எனலாம்.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
நிழல் போலத் தொடர்ந்தான் – இது எவ்வகை உவமை?
- வினை
- பயன்
- வடிவம்
- மெய்
விடை : வடிவம்
குறு வினா
உவமை, உருவகம் – வேறுபடுத்துக?
உவமை :-
- சொல்வதை எளிதில் உணருமாறு கூற உவமை பயன்படும்
- உவமை முன்னும், உவமேயம் பின்னும் அமையும்
- சான்று : மதிமுகம் – மதி போன்ற முகம்
உருவகம் :-
- ஒப்பீட்டுச் செறிவும், பொருள் அழுத்தமும் கொண்டது உருவகம்
- உவமேயம் முன்னும் பின்னும் அமையும்
- சான்று : முகமதி – முகமாகியமதி
சிறு வினா
உள்ளுறை உவமை, இறைச்சி – எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக
உள்ளுறை:
- கவிஞர் தாம் கூறக் கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், அகமாந்தரின் மன உணர்வுகளை இயற்கைப் புனைந்துரை மூலம் கருப்பொருள்களால் உவமைப்படுத்துவது உள்ளுறை ஆகும்
- பாடலில் இடம் பெறும் மாந்தரின் உள்ளத்தில் எழும் உணர்வுகளின் குறிப்புப் பொருளாகவும் அமையும்
- அகநானூற்றில் தோழிக்குச் சொல்லுவதுபோல் மறைந்து நிற்கும் தலைவனுக்கு தலைவி கூறுவதாகப் பெருங்குன்றூர்கிழார் பாடிய “ஈயல் புற்றத்து” எனத் தொடங்கும் பாடல் உள்ளுறை உணர்த்துவதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்
இறைச்சி:
- அகப்பாடலில் இடம்பெறும் உள்ளுறை போன்ற மற்றொரு உத்தி, இறைச்சி. இறைச்சி என்பது உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பு இல்லாத குறிப்பு பொருளாகும்
- இது அகப்பாடலில் மட்டுமே இடம்பெறும். தலைவியை ஆற்றுவிக்கும் தோழி, “தலைவன் செல்லும் வழியில் ஆண் யானை, பெண் யானையின் பசியைப் போக்க, “யா” மரத்தின் பட்டையை உரித்து, நீர்ச்சுவையைப் பருகச் செய்யும்” என்று கூறுவாள்
- இது பாடலின் கருத்து. ஆனால், “தலைவன் இந்தக் காட்சியைக் காண்பான். விரைவில் திரும்பி, தலைவியின் துன்பம் தீர்ப்பான்” என்பது, இது உணர்த்தும் குறிப்பு பொருளாகும். இவ்வாறு உரிப்பொருளின் புறத்தே நின்று, வேறு கருத்தைக் குறிப்பாக உணர்த்துவது “இறைச்சி” ஆகும்.
கூடுதல் வினாக்கள்
1. உவமை என்பது யாது? உவமையை ஏன் பயன்படுத்தினர்?
- ஒரு பொருளை மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையாகும்.
- ஒரு கருத்தைக் கூறுகையில், கேட்போர் மனத்தைக் கவரும் வகையிலும், எளிதில் உணரும் வகையிலும் கூறுவதற்கு உவமையைப் பயன்படுத்தினர்.
2. உவமை எவ்வெவற்றின் அடிப்படையில் தோன்றும்? சான்று தருக
வினை (தொழில்), பயன், வடிவம் (மெய்), உரு (நிறம்) என்னும் நான்கின் அடிப்படையில் உவமை உருவாகும்.
எ.கா.
- புலிபோல – தொழில் உவமை
- மழைபோல – பயன் உவமை
- துடி போன்ற – வடிவு உவமை
- தளிர் போல – நிறஉவமை
3. உவமையில் அமையும் உறுப்புகள் யாவை? சான்று தருக
உவமானம் (உவமை), உவமேயம் (பொருள்), உவமை உருபு, பொதுத்தன்மை என்னும் நாக்கு உறுப்புகள் உவமையில் அமையும்.
சான்று : செல்வன் புலி போலப் பாய்ந்தான்
- உவமானம் (உவமை) – புலி
- உவமேயம் (பொருள்) – செல்வன்
- உவமை உருபு – போல
- பொதுத்தன்மை – பாய்தல்
4. உருவகமாவது யாது? சான்று தருக
- உவமையையும், உவமிக்கப்படும் பொருளையும் வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றோ எனக்கூறவது உருவகம் ஆகும்.
- உருவகத் தொடரில் உவமேயம் (உவமிக்கப்படும் பொருள்) முன்னும், உவமை (ஒப்பாகக் காட்டப்படும் பொருள்) பின்னுமாக அமையும்
சான்று : மதிமுகம், பாதமலர்
4. உருவகம் எவ்வெவற்றின் அடிப்படையில் அமையும் ? சான்று தருக
- வினை, பயன், வடிவம் (மெய்), உரு (நிறம்) ஆகியவற்றில் அடிப்படையில் உருவம் அமையும்
சான்று :
- எண்ணவலை பின்னும் மூளைச்சிலந்தி (சிந்தனை) – வினை
- ஆவேசப் பயுல்களாலும் அசைக்க முடியாது ஆகாசப்பூ (சூரியன்) – பயன்
- நீல வயலின் நட்சத்திர மணிகள் (வானமும் விண்மீன்களும்) – மெய்
- மலைக்கிழவியின் நரைத்த கூந்தல் (அருவி) – நிறம்
6. உள்ளுறை உவமம் என்றால் என்ன?
கவிஞர் தாம் கூறக் கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், அகமாந்தரின் மன உணர்வுகளை இயற்கைப் புனைந்துரை மூலம் கருப்பொருள்களால் உவமைப்படுத்துவது உள்ளுறை ஆகும்
7. உள்ளுறை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
வினை, பயன் போன்றவற்றின் அடிப்படைகளில் தோன்றும் குறியீடுகளைக் கொண்டு உள்ளுறை உருவாக்கப்படுகிறது.க்ஷ
இலக்கணத் தேர்ச்சிகொள்
1. ஒட்டுப் போடாத
ஆகாயம் போல – இந்த
உலகமும் ஒன்றேதான்…. இக்கவிதையில் பயின்று வருவது
- உவமை
- உருவகம்
- உள்ளுறை
- இறைச்சி
விடை : உவமை
2. சரியானவற்றைப் பொருத்தித் தேர்க :
அ) காதை | 1) கந்தபுராணம் |
ஆ) சருக்கம் | 2) சீவகசிந்தாமணி |
இ) இலம்பகம் | 3) சூளாமணி |
ஈ) படலம் | 4) சிலப்பதிகாரம் |
- 4, 3, 2, 1
- 3, 4, 1, 2
- 3, 4, 2, 1
- 4, 3, 1, 2
விடை : 4, 3, 2, 1
3. ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்
- சிவஞான முனிவர்
- மயிலைநாதர்
- ஆறுமுகநாவலர்
- இளம்பூரணர்
விடை : மயிலைநாதர்
4. உவமை எவ்வெவற்றின் அடிப்படையில் தோன்றும்? சான்று தருக
வினை (தொழில்), பயன், வடிவம் (மெய்), உரு (நிறம்) என்னும் நான்கின் அடிப்படையில் உவமை உருவாகும்.
5. உவமைத் தொடர்களால் அழைக்கப்பெறும் சங்கப்புலவர்கள் பெயர்களைத் தொகுத்து அவற்றில் உள்ள உவமைகளை கண்டறிக
செம்புலப்பெயல்நீரார், தேய்புரிபழகயிற்றினார், அணிலாடுமுன்றிலார் என்போர் உவமைகளால் பெயர் பெற்ற புவர்களாவர்.
செம்புலப்பெயல்நீர் | உவமை, செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் (போல) |
தேய்புரிபழங்கயிறு | உவமை, தேய்ந்து மெலிந்த பழைய கயிறு (போல) |
அணிலாடுமுன்றில் | உவமை, அணில் விளையாடும் வீட்டின் முற்றம் (போன்ற) |
6. காப்பியம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
காப்பியம் இரு வகைப்படும். அவை
ஐம்பெருங்காப்பியம்:-
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி
ஐஞ்சிறுகாப்பியம்:-
நீலகேசி, சூளாமணி, உதயணகுமார காவியம், யசோதர காவியம், நாககுமார காவியம்
7. காப்பியத்தைக் குறிக்கும் பிற பெயர்கள் யாவை?
இதிகாசம், புராணம், இலக்கியம், சரிதம், காவியம் ஆகியன காப்பியத்தின் வேறு பெயர்கள்
8. காப்பியச் சிற்றுறுப்புகள் சிலவற்றை எழுதுக.
காதை, சருக்கம், இலம்பகம், படலம் முதலானவை காப்பியச் சிற்றுறுப்புகளாகும்
9. பாவிகம் – விளக்குக.
காப்பியத்தின் பண்பாகப் ‘பாவிகம்’ என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது.
காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தினையே பாவிகம் என்பர்.
சான்று:-
“பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப” என்பது கம்பராமாயணத்தின் பாவிகம்.
4. கீழ்காண்பனவற்றுள் இறைச்சி பற்றிய கூற்றைத் தேர்க
- குறியீடுகளைக் கொண்டு உருவாக்கப்படும்
- ஒப்பீட்டுச் செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும்
- வினை, பயன், வடிவம், நிறம் ஆகிய நான்கின் அடிப்படையில் தோன்றும்
- உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்பொருள்
விடை : உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்பொருள்
5. உள்ளுறைக்கும், இறைச்சிக்கும் உள்ள வேறுபாட்டினை சான்றுடன் ஆய்க
உள்ளுறை :
கவிஞர் தாம் கூறக் கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், அகமாந்தரின் மன உணர்வுகளை இயற்கைப் புனைந்துரை மூலம் கருப்பொருள்களால் உவமைப்படுத்துவது உள்ளுறை ஆகும்
தோழிக்கு கூறுவதுபோல் மறைந்து நின்ற தலைவனுக்குத் தலைவி கூறியதாகப் பெருங்குன்றூர்கிழார் பாடிய “ஈயல் புற்றத்து” எனத் தொடங்கும் பாடல், உள்ளுறைக்குச் சிறந்த சான்று.
அகநானூற்றில் தோழிக்குச் சொல்லுவதுபோல் மறைந்து நிற்கும் தலைவனுக்கு தலைவி கூறுவதாகப் பெருங்குன்றூர்கிழார் பாடிய “ஈயல் புற்றத்து” எனத் தொடங்கும் பாடல் உள்ளுறை உணர்த்துவதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இதில் பசியுடன் அலையும் கரடி ஈசல் புற்றில் கைவிட்ட செயலும், அங்குப் பதுங்கி இருந்த பாம்பு கரடி நகம் பட்டுத் துன்புறும் செய்தியும் சுட்டப்பட்டுள்ளன.
இரவில் காட்டைக் கடந்துவரும் தலைவன் செயலுக்குத் தலைவி அஞ்சுவது மறைபொருளாக சுட்டப்பட்டுள்ளது. தலைவனுக்குக் கரடியும், தலைவிக்கு பாம்பும் குறியீடுகளாக அமைந்த உள்ளுறை உவமமாகும்.
இறைச்சி:
உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பு இல்லாத குறிப்பொருளே இறைச்சியாகும்
“நசை பெரிது” எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல், இறைச்சிக்கு சிறந்த சான்றாகும்.
தலைவியை ஆற்றுவிக்கும் தோழி, “தலைவன் செல்லும் வழியில் ஆண் யானை, பெண் யானையின் பசியைப் போக்க, “யா” மரத்தின் பட்டையை உரித்து, நீர்ச்சுவையைப் பருகச் செய்யும்” என்று கூறுவாள்
இது பாடலின் கருத்து. ஆனால், “தலைவன் இந்தக் காட்சியைக் காண்பான். விரைவில் திரும்பி, தலைவியின் துன்பம் தீர்ப்பான்” என்பது, இது உணர்த்தும் குறிப்பு பொருளாகும். இவ்வாறு உரிப்பொருளின் புறத்தே நின்று, வேறு கருத்தைக் குறிப்பாக உணர்த்துவது “இறைச்சி” ஆகும்.
மொழியை ஆள்வோம்
சான்றோர் சித்திரம்
சோமசுந்தர பாரதியார் (1879 – 1959)
ஒருமுறை எட்டயபுரம் அரண்மனைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புலவர் வந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்துப் பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். அக்கூட்டத்திற்கு இரண்டு நண்பர்கள் சென்றிருந்தனர். பலரும் பாடல் இயற்றிக் கொடுக்க அனைத்துப் பாடல்களிலும் நண்பர்கள் இருவரின் பாடல்களே சிறந்ததெனத் தேர்ந்தெடுத்த அப்புலவர், இருவருக்கும் ‘பாரதி’ என்ற பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்தார். அவ்விருவரில் ஒருவர் சுப்பிரமணிய பாரதியார், மற்றொருவர் சோமசுந்தர பாரதியார்.
பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர், இலக்கிய ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமைகொண்ட நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த வழக்கறிஞராகவும் திகழ்ந்தார். வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு வ. உ. சி. யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். ‘என்னிடம் இரண்டு சரக்குக் கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது’ என்று வ. உ. சி. பெருமிதத்துடன் இவரைக் குறிப்பிடுவார். இவர் தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர். தசரதன் குறையும் கைகேயி நிறையும், திருவள்ளுவர், சேரர் தாயமுறை,தமிழும் தமிழரும் முதலிய பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார். இவர் சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடுகொண்டு சடங்குகள் இல்லாத திருமண விழாக்களை முன்னின்று நடத்தினார். வ. உ. சி., சுப்பிரமணிய சிவா ஆகிேயார் மீதான வழக்குகளில் அவர்களுக்காக இவர் வாதாடியது குறிப்பிடத்தகுந்தது.
அவருடைய தீந்தமிழுக்குச் சான்று: “கட்டளை அல்லது நல்ல தமிழ் நடைக்கு, எளிதில் பொருள் விளங்கும் தெளிவு இன்றியமையாதது. இயல் வழக்கில்லா அருஞ்சொற்களும் பொருள் பல குறித்து மருளவைக்கும் பொதுச்சொற்களும் விரவும் நடையைச் செய்யுள் வழக்கில் ஒருவரும் விரும்பார். எளிமையும் தெளிவும் எழுத்திலும் பேச்சிலும் எம்மொழி நடைக்கும் இனிமையும் எழிலும் என்றும் உதவும் என்பது எல்லார்க்கும் உடன்பாடு”.
(நாவலர் சோமசுந்தர பாரதியின் நூல்தொகுதி 4 – ‘நற்றமிழ்’ என்னும் கட்டுரையிலிருந்து.)
வினாக்கள்:-
1. பாரதி பட்டம் பெற்ற இருவர் யார்?
2. பின்வரும் தொடருக்கு இலக்கணக்குறிப்பு எழுதுக : எளிமையும் தெளிவும்
3. புணர்ச்சி விதி தருக : வழக்கறிஞர்
4. சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல் ஒன்றினை எழுது
5. சோமசுந்தர பாரதியார் ஈடுபட்ட போராட்டம் எது?
விடைகள்:-
1. சுப்பிரணிய பாரதியார், சோம சுந்தர பாரதியார்
2. எளிமையும் தெளிவும் – எண்ணும்மை
3. வழக்கறிஞர் = வழக்கு + அறிஞர்
- உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்ற விதிப்படி வழக்க் + அறிஞர் என்றாயிற்று
- உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி வழக்கறிஞர் என்றாயிற்று
4. தசரதனன் குறையும் – கைகேயின் நிறையும்
5. இந்தி எதிர்ப்பு போராட்டம்
தமிழாக்கம் தருக.
Periyar was not only a great social revolutionary; he was something more than that. He is known as a great champion of the underprivileged; even in this sphere he was much more than that. His sphere of activity was very wide and when he took up any issue he went deep into it, understood all the aspects of it and did not rest until he had found a permanent solution to it. Communal differences in our society were deep-tooted and appeared to be permanent features of our society until Periyar came on the scene.
தமிழாக்கம்
பெரியார் சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்லாமல், அதையும் தாண்டி அவரிடம் பல சிறப்புகள் உள்ளன. அவர் பிற்படுத்தப்பட்டோர்களுக்காகப் போராடி வெற்றி கண்டவர். அது மட்டுமல்லாமல் அவருடைய செயல்கள் தொலைநோக்குப் பார்வை உடையது. எந்தப் பிரச்சனைக்கும் அவர் கூக்குரல் கொடுத்தார். அதனை ஆராய்ந்து புரிந்த பின் அதற்கான நிரந்தர தீர்வையும் கண்டுபிடித்து நிறைவேற்றினார். பெரியார் அவர்களின் வருகைக்கு முன்னர் சாதிகளுக்கு இடையே வேற்றுமை நம் சமூகத்தில் பரவி இருந்தது.
இலக்கிய நயம் பாராட்டுக.
பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டுமப்பா!
நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார் !
தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார் !
– கவிமணி தேசிக விநாயகம்
தலைப்பு:-
தீண்டாமையை விரட்டுவோம்
ஆசிரியர் குறிப்பு:-
- பெயர் : கவிமணி தேசிக விநாயகம்.
- பெற்றோர் : சிவதாணு – ஆதிலட்சுமி
- பிறப்பு : 1876 முதல் 1954
- ஊர் : கன்னியாகுமாரி மாவட்டம், தேரூர்
- இயற்றிய நூல்கள் : ஆசியஜோதி, மலரும் மாலையும்
திரண்ட கருத்து:-
மனிதனுக்கு பிறப்பால் புகழ் வராது. சிறப்பான பகழ் வரவேண்டுமெனில் நல்ல செயல்கள் செய்ய வேண்டும். நல்ல செயல்கள் செய்பவரை உலகம் நாடும், தீமை செய்பவரை ஒருவரும் தீண்டமாட்டார்.
தொடை நயம்:-
தொடையற்ற பாக்கள் நடையற்று போகும்
என்பதற்கேற்ப இப்பாடலில் மோனை, எதுகை, இயைபு, அளபெடை நயங்கள் அமைந்துள்ளது.
மோனை:-
குயவனக்கு யானை, செய்யுளுக்கு மோனை
முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும்
சான்று : நன்மை – நாடும், தின்மை – தீண்ட
எதுகை:-
மதுரைக்கு வைகை, செய்யுளுக்கு எதுகை
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
சான்று : நன்மை – தின்மை, சிறப்பு – பிறப்பினால்
இயைபு:-
இறுதி எழுத்தோ, ஓசையோ ஒன்றி வரத்தொடுப்பது இயையு
சான்று : வாராதப்பா – வேண்டுமப்பா, மேற்குலத்தார் – ஒண்ணாதார்
அணி நயம்:-
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு, செய்யுளுக்கு அணி அழகு
என்பதற்கு இப்பாடலில் இயல்பு நவிற்சி அணி வந்துள்ளது
முடிவுரை:-
கற்றாரும், கல்லாருக்கும் ஏற்ற வகையில எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.
கீழ்க்ககாணும் தொடர்களில் அடைப்புக்குள் உள்ள பெயர்சச்சொல்லலைத் தொடர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுக.
1. கபிலன் திறமையானவர் என்று ________ (குமரன்) தெரியும்.
விடை: கபிலன் திறமையானவர் என்று குமரனுக்குத் தெரியும்.
2. நேற்று முதல் ________ (அணை) நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
விடை: நேற்று முதல் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
3. உங்களுக்கு _______ (யார்) நன்மை என நினைக்கிறீர்கள்.
விடை: உங்களுக்கு யாரால் நன்மை என நினைக்கிறீர்கள்.
4. முருகன் _______ (வேகம்) சென்றும் பேருந்ததைப் பிடிக்க இயலவில்லை.
விடை: முருகன் வேகமாகச் சென்றும் பேருந்ததைப் பிடிக்க இயலவில்லை.
5. நம்முடைய _______ (தேவை) அளவு குறைந்ததால் மகிழ்ச்சி பெருகும்.
விடை: நம்முடைய தேவையின் அளவு குறைந்ததால் மகிழ்ச்சி பெருகும்.
பொருள் வேறுபாடு அறிந்து தொடர் அமைக்க
1. களம், கலம்
விடை: போர்க்களத்தில் புண்பட்ட வீரர்களுக்குக் கலத்தில் நீர் தரப்பட்டது.
2. வலம், வளம்.
விடை: ஆற்றின் வலப் புறம் உள்ள நீர்வளத்தால் செழித்திருந்தன.
3. புல் – புள்
விடை: புல் தரையில் நிறைய புடள்கள் அமர்ந்திருந்தன
4. உழை – உளை
விடை: உளையில் இறங்கி உழவர் உழைக்கின்றனர்
5. கான் – காண்
விடை: கானில் விலங்களைச் காணச் சென்றேன்
6. ஊண் – ஊன்
விடை: ஊனை ஊணாக் கொண்டால் உடல் நலத்திற்கு கேடு நேரும்.
7. தின்மை – திண்மை
விடை: திண்மையுடையோர் வறியவருக்கு தின்மை செய்தல் கூடாது.
பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.
எ.கா. இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும் புரிஞ்சிக்கோ.
விடை : இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்
1. நிலத்தக் கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும்.
விடை : நிலத்தை உழுதால்தான் வயிறு நிறையும்
2. அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான.
விடை : அன்று அவனுக்குப் பணம் கொடுத்து உதவியிருக்க வேண்டியதுதான்
3. வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு.
விடை : வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அப்பா எங்கு அழைத்துக் கொண்டு போனார்.
4. புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது.
விடை : பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. மூன்று நாட்களாக துன்பப்படுகிறது.
5. ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல்.
விடை : இரவு சித்தப்பாவை காவலுக்குப் போகச் சொல்
மொழியோடு விளையாடு…
எண்ணங்களை எழுத்தாக்குக.
ஆடி காட்டும் புறஅழகு எல்லாம் அழகல்ல! பெண்ணுக்கு உள்ளம் காட்டும் அக அழகே அழகு! புறத்தைத் தூய்மையாக்கத் தண்ணீர் போதும் அகத்தைத் தூய்மையாக்க வாய்மை வேண்டுமம்மா! மெய்ப்பொருள் அறிந்து பொய்பொருள் தவிர்! | ![]() |
ஈற்றடி எழுதித் துளிப்பாவை நிறைவு செய்க.
எ.கா. பூட்டியவீட்டிலும் பூத்துச் சிரிக்கிறது
விடை : முல்லை
1. விழும் மரங்கள் அழியும் காடு ______
விடை : வீடு
2. அப்படியென்ன சொல்லியது காற்று குதித்தாடுகிறது மேகம் ______
விடை : இடி
3. பூத்த மலரொன்று பறக்கிறது ______
விடை : தென்றல்
4. வானம் அழுகிறது பூமி சிரிக்கிறது ______
விடை : மழை
கருத்துப்படத்தைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக.
பத்தி அமைத்தல்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை சங்க இலக்கியங்கள். அவை இரண்டு வகைப்படும். ஒன்று எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
எட்டுத்தொகை நூல்கள் அகம், புறம், அகமும் புறமும் என மூன்று வகையாக பிரிப்பர். அகம் சார்ந்த நூல்கள் நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை நூல்களாகும். புறம் சார்ந்த நூல்கள் புறநானூறு, பதிற்றுப்பத்து நூல்களாகும். அகமும் புறமும் சார்ந்த நூல் பரிபாடல் ஒன்றே ஆகும்.
பத்துப்பாட்டு அகம், புறம் சார்ந்த நூல்கள் என இரண்டு வகையாக பிரிப்பர். அகம் சார்ந்த நூல்கள் குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை ஆகிய நூல்களாகும். புறம் சார்ந்த நூல்கள் மதுரைக்காஞ்சி திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகிய நூல்களாகும் இவற்றுள் ஆற்றுப்படை நூல்கள் ஐந்து ஆகும்.
செய்து கற்போம்
நீங்கள் அறிந்த ஊர்களின் பெயர்க்காரணங்களைத் தொகுத்து ஒப்படைவு உருவாக்குக.
திருநெல்வேலி:-
நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் வேணுவனம் நெல்வேலி எனப் பெயர் பெற்றது. பின்னர் திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலி எனப்பெயர் பெற்றது.
மேலும் இந்து பழங்கதையின்படி சிவபெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
குற்றாலம்:-
குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகப் காணப்படும் வனப்பகுதி என்பதால் குற்றாலம் எனப் பெயர் பெற்றது. சங்க காலத்தில் தேனூர் என்ற பெயருடன் திகழ்ந்து.
சிவகாசி:-
தென் மதுரையை ஆண்ட ஹரிகேசரிபராக்கிரம பாண்டியன் வரானாசியிலிருந்து (வாரனாசி என்பது காசி) ஒரு சிவலிங்கத்தை கொண்டு வந்து நிறுவினார். காசியிலிருந்து வந்த சிவலிங்கம் இங்கு நிறுவப்பட்டதால் காசி சிவலிங்கம் பெயராலே சிகவாசி ஆயிற்று.
சிதம்பரம்:-
இறைவன் நடசராசர் அம்பலத்தில் ஆடல் புரிதலால் சிற்றம்பலம் என்றும் அதுவே சிதம்பரம் என்றாயிற்று என்பர். சித் + அம்பரம் = சிதம்பரம் என்றாயிற்று. சித் என்றால் அறிவு. அம்பரம் என்றால் ஆகாயம் அல்லது வெட்டவெளி. வெட்டவெளிக்கு எல்லை கிடையாது. அதுபோல எல்லையற்ற அறிவைக் கொண்டவராலும் புரிந்து கொள் முடியாதவர் நடராசர்.
சிவகாசி:-
செங்கல்பட்டு சென்னையின் புறநகர் பகுதியாகும். சென்னையின் நுழைவுவாயில் என்றழைக்கப்படுகிறது. முன்பு இங்கு நீர்நிலைகளில் செங்கழுநீர் பூக்கள் நிறைந்திருந்தன என்பர். எனவே செங்கழுநீர்ப்பட்டு என்று அழைக்கப்பட்டது. அது மருவி செங்கல்பட்டு என்றானது.
பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து தமிழ்ப்படுத்துக.
சர்க்கார் கொடுக்கும் சம்பளம் ஜீவனத்துக்குப் போதுமா? அதற்குள் ஜீவனம் நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது. எல்லாம் மாயை; உள்ளூர் நிற்கும் ஆத்மா மாசுபடவில்லை. தான் வேறு இந்த மாயை வேறு. தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு அம்சம் என்று திடமாக நம்பியிருந்தார். ஏனென்றால், அவரது ஆத்ம விசாரத்தைச் சோதனை போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ மனுஷனுக்கோ அவகாசம் கிடைத்ததில்லை. மனுஷ வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையை ஸ்புடம் போட்டுப் பார்ப்பது போல தவறுக்கு மேல் தவறு செய்துகொண்டிருந்தது.
விடை:-
அரசு கொடுக்கும் சம்பளம் வாழ்வுக்குப் போதுமா? அதற்குள் வாழ்க்கை நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது. எல்லாம் பொய்த்தோற்றம்; உள்ளூர் நிற்கும் ஆத்மா மாசுபடவில்லை. தான் வேறு இந்த தோற்றம் வேறு. தான் இந்தப் உலகத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு தோற்றம் என்று திடமாக நம்பியிருந்தார். ஏனென்றால், அவரது உயிர் அடையாளத்தைச் சோதனை போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ மனிதனுக்கோ நேரம் கிடைத்ததில்லை. மனித வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையை ஸ்புடம் போட்டுப் பார்ப்பது போல தவறுக்கு மேல் தவறு செய்துகொண்டிருந்தது.
நிற்க அதற்குத் தக
படிப்போம்; பயன்படுத்துவோம்!
- Artist – கவின்கலைஞர்
- Cinematography – ஒளிப்பதிவு
- Animation – அசைவூட்டப் படமாக்கம்
- Sound Effect – ஒலிவிளைவு
- Newsreel – செய்திப்படம்
- Multiplex Complex – ஒருங்கிணைந்த வளாகம்
அறிவை விரிவு செய்
- எனது சுயசரிதை – சிவாஜி கணேசன்
- காப்பியத்தமிழ் – இரா. காசிராசன்
- சினிமா இரசனை – அம்ஷன்குமார்
- உலகத் திரைப்பட வரலாறு I, II, III – அஜயன் பாலா
- பேசும் படம், உலக சினிமா I, II – செழியன்
- இராமலிங்க அடிகள் வரலாறு – ஊரன் அடிகள்