பாடம் 2.5 மயங்கொலிகள்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 2.5 – “மயங்கொலிகள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. சிரம் என்பது _______ (தலை / தளை)
விடை : தலை
2. இலைக்கு வேறு பெயர் _______ (தளை / தழை)
விடை : தழை
3. வண்டி இழுப்பது _______ (காலை / காளை)
விடை : காளை
4. கடலுக்கு வேறு பெயர் _______ (பரவை / பறவை)
விடை : பரவை
5. பறவை வானில் _______ (பறந்தது / பரந்தது)
விடை : பறந்தது
6. கதவை மெல்லத் _______ (திறந்தான் / திரந்தான்)
விடை : திறந்தான்
7. பூ _______ வீசும். (மனம் / மணம்)
விடை : மணம்
8. புலியின் _______ சிவந்து காணப்படும். (கன் / கண்)
விடை : கண்
9. குழந்தைகள் _______ விளையாடினர். (பந்து / பன்து)
விடை : பந்து
10. வீட்டு வாசலில் _______ போட்டனர். (கோலம் / கோளம்)
விடை : கோலம்
தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளை திருத்தி எழுதுக
1. எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
விடை : என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.
2. தேர்த் திருவிலாவிற்கு செண்றனர்.
விடை : தேர்த் திருவிழாவிற்கு சென்றனர்.
3. வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது.
விடை : வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது
குறுவினாக்கள்
1. மயங்கொலி எழுத்துகள் யாவை?
உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம்.
- ண, ன, ந
- ல, ழ, ள
- ர, ற
ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.
2. ண,ன,ந ஆகிய எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக
எழுத்து | பிறக்கும் முறை |
ண | நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது. |
ன | நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது. |
ந | நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது. |
கூடுதல் வினாக்கள்
சரியான தொடரைக் கண்டறிந்து எழுதுக
- பாரம்பரியச் சின்னங்களைப் நமது நாட்டின் பாதுகாப்பேன்.
- நமது நாட்டின் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பேன்.
- நமது பாரம்பரியச் நாட்டின் சின்னங்களைப் பாதுகாப்பேன்.
- பாரம்பரியச் நாட்டின் சின்னங்களைப் நமது பாதுகாப்பேன்.
விடை: நமது நாட்டின் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பேன்.
1. மயங்கொலி எழுத்துகள் எவை?
- ண, ன, ந
- ல, ழ, ள
- ர, ற
ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.
2. சொற்களில் ண, ன இடம்பெறும் வகை பற்றி எழுதுக
“ட” என்னும் எழுத்துக்கு முன் “ண்” வரும்
எ.கா. : கண்டம், வண்டி, நண்டு
ற என்னும் எழுத்துக்கு முன் ன் வரும்
எ.கா. : மன்றம், நன்றி, கன்று
3. ல, ள, ழ – எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக
எழுத்து | பிறக்கும் முறை |
ல | நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’ என்கிறோம். |
ள | நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் பொது ளகரம் என்கிறோம். இது ‘ன’ போல இருப்பதால் ‘னகர ளகரம்’ என்று கூறுவர் |
ழ | ழ- நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும். (ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்). ழ தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம். இது ‘ம’ போல இருப்பதால் ‘மகர ழகரம்’ என்று கூறுவது இலக்கண மரபு. |
4. ல, ள, ழ பொருள் வேறுபாடு உணர்க.
விலை -பொருளின் மதிப்பு | இலை – செடியின் இலை |
விளை – உண்டாக்குதல் | இளை – மெலிந்து போதல் |
விழை – விரும்பு | இழை – நூல் இழை |
5. ர, ற எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக
எழுத்து | பிறக்கும் முறை |
ர | நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம். |
ற | நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம |
6. ல, ள, ழ பொருள் வேறுபாடு உணர்க.
ஏரி – நீர்நிலை | கூரை – வீட்டின் கூரை |
ஏறி – மேலே ஏறி | கூறை – புடவை |
7. ண, ன பொருள் வேறுபாடு அறிக.
வாணம் – வெடி | பணி – வேலை |
வானம் – ஆகாயம் | கூறை – புடவை |
மொழியோடு விளையாடு
உரிய வினைமுற்றுகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புக
நட | உண் | உறங்கு | |
ஆண்பால் | நடக்கிறான் | உண்கிறான் | உறங்கினான் |
பெண்பால் | நடக்கிறாள் | உண்கிறாள் | உறங்கினாள் |
பலர்பால் | நடக்கிறார் | உண்டார் | உறங்கினார் |
ஒன்றன் பால் | நடந்தது | உண்டது | உறங்கியது |
பலவின் பால் | நடந்தன | உண்டன | உறங்கின |
தன்மை | நடந்தேன் | உண்கிறேன் | உறங்கினேன் |
முன்னிலை | நடந்தீர் | உண்டீர் | உறங்குவீர் |
படர்க்கை | அவன் நடந்தான் | அவன் உண்பான் | அவன் உறங்கினாள் |
இறந்த காலம் | நடந்தான் | உண்டான் | உறங்கினான் |
நிகழ் காலம் | நடக்கிறான் | உண்கிறான் | உறங்குகிறான் |
எதிர் காலம் | நடப்பான் | உண்பான் | உறங்குவான் |
வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக
வினைச்சொல் | வேர்ச்சொல் |
1. நடக்கிறது | நட |
2. போனான் | போ |
3. சென்றனர் | செல் |
4. பேசினாள் | பேசு |
5. வருக | வா |
6. தருகின்றனர் | தா |
நிற்க அதற்குத் தக…
தமிழ்ச்சொல் அறிவோம்
- நோய் – Disease
- மூலிகைத்தாவரம் – Medical plant
- நுண்ணுயிர் முறி – Antibiotic