Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 3.3 – மலைபடுகடாம்

பாடம் 3.3 மலைபடுகடாம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 3.3 – “மலைபடுகடாம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • அசைஇ – இளைப்பாறி
  • அல்கி – தங்கி
  • கடும்பு – சுற்றம்
  • நரலும் – ஒலிக்கும்
  • ஆரி – அருமை
  • படுகர் – பள்ளம்
  • வயிரியம் – கூத்தர்
  • வேவை – வெந்தது
  • இறடி – திசை
  • பொம்மல் – சோறு

பகுபத உறுப்பிலக்கணம்

1.  மலைந்து = மலை + த் (ந்) + த் + உ

  • மலை – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

2. பொழிந்த = பொழி + த் (ந்) + த் + உ

  • பொழி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

இலக்கணக் குறிப்பு

  • அசைஇ, கெழீஇ – சொல்லிசை அளபெடைகள்
  • பரூஉக், குரூஉக்கண் – செய்யுளிசை அளபெடைகள்

நூல் வெளி

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று “மலைபடுகடாம்”
  • 583 அடிகளை கொண்டது.
  • “”கூத்தராற்றுப்படை” என அழைக்கப்படுகிறது.
  • மலைக்கு யானையை உருவாகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைப்படுகடாம் எனப்பெயர் பெற்றது.
  • “நன்னன்” என்ற குறுநில மன்னன் பாட்டுடைத் தலைவன் ஆவான்.
  • மலைபடுகடாம் ஆசிரியர் “இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கெளசினார்”.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

“சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது-

  1. புத்தூர்
  2. மூதூர்
  3. பேரூர்
  4. சிற்றூர்

விடை : பேரூர்

குறு வினா

இறடிப் பொம்மல் பெறுகுவிர் – தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக

தினைச் சோற்றையும் உணவாகப் பெறவீர்கள்.

சிறு வினா

1. முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவு வகைகள் யாவை?

திணைகிடைக்கும் உணவுப் பொருட்கள்
முல்லைவரகு, சாமை
மருதம்செந்நெல், வெண்ணெல்

2. கூத்தனைக் கூத்தன் ஆற்றப்படுத்தலைக் கூத்தாராற்றப்படை எவ்வாறு காட்டுகிறது.

வழிகாட்டல்:-

பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள். இரவில் சேர்ந்து தங்குங்கள். எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள். சிவந்த பூக்கள் கொண்ட அசோக மூங்கில்கள் ஓசை எழுப்பும் மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையங்கள்.

நன்னின் கூத்தர்கள்:-

பகைவரே இல்லாமல் ஆட்சி செய்பவன், பகை வந்தாலும் எதிர் கொள்ளும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.

இன் சொற்கள்:-

நீங்கள் உரிமையுடன் உங்கள் வீட்டிற்கு போவது போலவே அவர்களுடைய வீட்டிற்குள் நுழையுங்கள். அவர்களும் உங்களிடம், உறவினர் போலப் பழகி இனிய சொற்களைப் பேசுவார்கள்.

உணவு:-

நெய்யில் வெந்த மாசிசம், தினைச் சோறு ஆகியவற்றை உணவாக அளிப்பர். அவற்றை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

நெடு வினா

ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

குறிப்புச்சட்டம்
முன்னுரை
உணவு
கல்வி
தொழில்
நன்னடை
முடிவுரை

முன்னுரை:-

அன்றைய நிலையில் பொருளுக்காக ஆற்றப்படுத்துவது நிகழ்ந்தது. ஆனால் இன்று ஆற்றுப்படுத்தல் அதிலிருந்து விலகி வேறுபடுகின்றது.

உணவு:-

அன்றைய பாணர்கள், கூத்தர்கள் மன்னனிடமோ, வள்ளலிடமோ ஆற்றுப்படுத்தினர். ஆனால் இன்று வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு தரும் அன்னச் சத்திரங்கள் பற்றியும், அன்னதானம் நடைபெறும் இடங்களைப் பற்றியும் ஆற்றுப்படுத்துகின்றனர்.

கல்வி:-

கல்வி கற்க முடியாதவர்களுக்கு  கல்வி உதவித் தொகை அளிக்கும் அரசின் திட்டங்கள் பற்றியும், உதவும் தொண்டு நிறுவனங்கள் குறித்தும் இன்று பல் வழிகாட்டல் செய்கின்றனர்.

தொழில்:-

இன்று வேலைவாய்ப்பின்மை பெருகி வருகின்றது. அதனைப் போக்க அரசும் பொதுத்துறை நிறுவனங்களும் தொழிற்பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லாமல் திண்டாடுவோருக்கு அவை குறித்த வழிகாட்டல்கள் இன்று செய்யப்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் ஓரவு போக்கப்படுகின்றது.

நன்னடை:-

சமுதாயத்தில் இன்று வன்முறை பெருகியுள்ளது. இதற்குக் காரணம் சினம், பொறாமை, சகிப்புத்தன்மை இல்லாமை ஆகியவையே! அவற்றைக் கட்டுப்படுத்த, அனைவருக்கும் மனதை ஒருநிலைப்படுத்த தியானப் பயிற்சி செய் இன்று வழிகாட்டல்கள் செய்கின்றனர்.

முடிவுரை:-

வழிகாட்டல் என்பது நெறிபிறழும் சமுதாயத்தைக் காக்க உதவும் ஒரு இன்றியமையாத கருவியாகும். வழிகாட்டலுக்கு வித்து ஆற்றப்படுத்தல் இலக்கியங்களே சான்றாகும்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • எய்தி, கூறி, புக்கு – வினையெச்சங்கள்
  • பொழிந்த, சேர்ந்த – பெயரெச்சங்கள்

பலவுள் தெரிக

1. மலைபடுகடாம் ……………… நூல்களுள் ஒன்று.

  1. பதினெண்கீழ்கணக்கு
  2. எட்டுத்தொகை
  3. பத்துபாட்டு
  4. நீதி

விடை : பத்துபாட்டு

2. மலைபடுகடாம் ……………..  அடிகளை கொண்ட நூல்

  1. 283
  2. 383
  3. 483
  4. 583

விடை : 583

3. மலைபடுகடாமின் வேறு பெயர் ………….

  1. கூத்தராற்றுப்படை
  2. பெரும்பாணாற்றுப்படை
  3. சிறுபாணாற்றுப்படை
  4. விறலியாறற்றுப்படை

விடை : கூத்தராற்றுப்படை

4. பொருந்தாத பொருளுக்கான இணை எது?

  1. வேவை – வெந்து
  2. இறடி – தினை
  3. பொம்மல் – சோறு
  4. நரலும் – சுற்றம்

விடை : நரலும் – சுற்றம்

5. மலைபடுகடாம் என்னும் நூலில் மலைக்கு உவமையாக கூறப்படுவது ………….

  1. மான்
  2. யானை
  3. மேகம்
  4. வானம்

விடை : யானை

6. இரணிய முட்டத்துப் பெருங்குன்றூரைச் சார்ந்த புலவர் ………….

  1. பெருஞ்சித்திரனார்
  2. மருதனார்
  3. பெருங்கெளசிகனார்
  4. நக்கீரர்

விடை : பெருங்கெளசிகனார்

7. பொருந்தாதை கண்டறிக

  1. திருமுருகாற்றுப்படை – நக்கீரர்
  2. சிறுபாணாற்றுப்படை – நல்லூர் நத்தத்தனார்
  3. பொருநாராற்றுப்படை – முடத்தாமக்கண்ணியார்
  4. மலைபடுகடாம் – கடியலூர் உருத்திரங்கண்ணணார்

விடை : மலைபடுகடாம் – கடியலூர் உருத்திரங்கண்ணணார்

8. “அன்று அவண் அசைஇ” – என்பதில்  “அசைஇ” என்பதன் பொருள் ………….

  1. அசைவாடிய
  2. இளைப்பாறி
  3. அமைதியாகி
  4. இன்பமாகி

விடை : இளைப்பாறி

9. “கன்று ஏரி” – என்பதில் “ஏரி” எனக் குறிப்பிடப்படுவது ………….

  1. நெருப்பு
  2. கொம்பு
  3. வால்
  4. நீர்

விடை : நெருப்பு

10. அசோக மரங்கள் எவ்வண்ணப் பூக்களை கொண்டது?

  1. கரும்
  2. சிவந்த
  3. நீலநிற
  4. வெண்மையான

விடை : சிவந்த

10. “அல்கி” என்பதன் பொருள் …………

  1. தங்கி
  2. உள்ளே
  3. வெளியே
  4. அழிந்து

விடை : தங்கி

11. “கூத்தாராற்றுப்படை” என்றழைக்கப்படும் நூல் ……………..

  1. பெரும்பாணாற்றுப்படை
  2. மலைபடுகடாம்
  3. சிறுபாணாற்றுப்படை
  4. விறலியாறற்றுப்படை

விடை : மலைபடுகடாம்

12. நன்னன் எந்நில மன்னன்?

  1. பெருநில
  2. சிறுநில
  3. குறுநில
  4. மாநில

விடை : குறுநில

13. மலைபடுகடாமின் (கூத்தாராற்றுப்படை) பாட்டுடைத் தலைவன் …………..

  1. பாரி
  2. கபிலர்
  3. நன்னன்
  4. பெருங்கெளசிகனார்

விடை : நன்னன்

பொருத்துக

1. அசைஇஅ. சுற்றம்
2. அல்கிஆ. கன்றின் நெருப்பு
3. கன்று ஏரிஇ. இளைப்பாறி
4. கடும்புஈ. தங்கி
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

பொருத்துக

1. ஆரிஅ. பள்ளம்
2. நரலும்ஆ.கூத்தர்
3. படுகர்இ. அருமை
4. வயிரியம்ஈ. ஒலிக்கும்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

பொருத்துக

1. இறடிஅ. தங்கி
2. அல்கிஆ. பள்ளம்
3. படுகர்இ. வெந்தது
4. வேவைஈ. தினை
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

குறு வினா

1. ஆற்றுப்படை என்றால் என்ன?

ஆற்றப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்தல், யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை ஆகும்.

2. மலைப்படுகடாம் பெயர்க்காரணம் கூறுக

மலைக்கு யானையை உருவாகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைப்படுகடாம் எனப்பெயர் பெற்றது.

3. நன்னனின் ஊரில் கூத்தர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் யாவை?

  • நெய்யில் வெந்த மாசித்தின் பொரியல்
  • தினைச் சோறு

4. பண்டையத் தமிழ் கலைஞர்கள் யாவர்?

கூத்தர், பாணர், விறலியர்

5. மலைப்படுகடாமில் ஒளிரும் பூங்கொத்துகளுக்கு கூறப்பட்ட உவமை யாது?

மலைப்படுகடாமில் ஒளிரும் பூங்கொத்துகளுக்கு கூறப்பட்ட உவமை எரியும் நெருப்பு ஆகும்.

6. “நோனாச் செருவின் வலம்படு நோன்தான்
மானா விறல்வெள் வயிரியம் எனினே – என்று யார் யாரிடம் கூறினார்?

நன்னனைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரிடம் கூறினார்.

7. “நோனாச் செருவின் வலம்படு நோன்தான்
மானா விறல்வெள் வயிரியம் எனினே – தொடர் பொருள் விளக்குக

தொடர் இடம் பெறும் நூல் : மலைபடுகடாம்

தொடர் பொருள் விளக்கம் : பகைவரைப் பெறாமல் பேர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.

8. தினை, சோறு ஆகியவற்றிற்கு மலைபடுகடாம் தரும் சொற்கள் யாவை?

தினை – இறடி, சோறு – பொம்மல்

9. “அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்” இவ்வடியில் “கழை, ஆரி, படுகர்” என்னும் பொருள் தரும் சொல் எது?

கழை – மூங்கில், ஆரி – அருமை, படுகர் – பள்ளம்

10. மலைபடுகடாம் குறிப்பு வரைக 

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
  • 583 அடிகளை கொண்டது.
  • கூத்தராற்றுப்படை என அழைக்கப்படுகிறது.
  • மலைக்கு யானையை உருவாகமாகக் கூறி, அதன் ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்துள்ளதால் மலைப்படுகடாம் எனப்பெயர் பெற்றது.
  • நன்னன் என்ற குறுநில மன்னன் பாட்டுடைத் தலைவன் ஆவான்.
  • மலைபடுகடாம் ஆசிரியர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கெளசினார்.

11. பத்துப்பாட்டில் அமைந்த ஆற்றுப்படை நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்களையும் எழுதுக

நூல்ஆசிரியர்
திருமுருகாற்றுப்படைநக்கீரர்
பெரும்பாணாற்றுப்படைகடியலூர் உருத்திரங்கண்ணணார்
சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்தத்தனார்
பொருநாராற்றுப்படைமுடத்தாமக்கண்ணியார்
கூத்தராற்றுப்படைபெருங்கெளசிகனார்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment