Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 4.2 – பெருமாள் திருமொழி

பாடம் 4.2 பெருமாள் திருமொழி

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 4.2 – “பெருமாள் திருமொழி” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • சுடினும் – சுட்டாலும்
  • மாளாத – தீராத
  • மாயம் – விளையாட்டு

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. ‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது?

  1. குலசேகராழ்வாரிடம் இறைவன்
  2. இறைவனிடம் குலசேகராழ்வார்
  3. மருத்துவரிடம் நோயாளி
  4. நோயாளியிடம் மருத்துவர்

விடை : இறைவனிடம் குலசேகராழ்வார்

குறு வினா

மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்து சுட்டாலும், அத்துன்பம் நமக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்ப காட்டுவார்.

சிறு வினா

“மாளாத கால் நோயாளன் போல” என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

உடலில் ஏற்பட்ட புண்:-

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்து சுட்டாலும், அத்துன்பம் நமக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்பு காட்டுவார்.

நீங்காத துன்பம்:-

வித்துக் கோட்டில் எழுந்தருளயிருக்கும் அன்னையே! மருத்துவரைப் போன்று நீ எனக்கு துன்பத்தைக் தந்தாலும், உன் அடியவனாகிய நான் (நோயாளியைப் போல) உன் அருளையே எப்போதும் எதிர்பார்த்து வாழ்கிறேன்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • மீளாத்துயர் – ஈறு கெட்ட எதிர்மறை பெயரச்சம்
  • அறுத்து – வினையெச்சம்
  • ஆளா உனதருளே – ஈறு கெட்ட எதிர்மறை பெயரச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

அறுத்து = அறு + த் + த் +உ

  • அறு – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

1. பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ……………

  1. 120
  2. 115
  3. 110
  4. 105

விடை : 105

2. வித்துவக்கோடு என்னும் ஊர் ………………… மாநிலத்தில் ………………. மாவட்டத்தில் உள்ளது

  1. கேரள, பாலக்காடு
  2. கர்நாடக, மாண்டியா
  3. ஆந்திரா, நெல்லூர்
  4. கேரள, திருவனந்தபுரம்

விடை : கேரள, பாலக்காடு

3. குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள இறைவனை உய்ய வந்த பெருமாளை ………………. உருவகித்துப் பாடுகிறார்.

  1. காதலியாக
  2. தோழனாக
  3. அன்னையாக
  4. தந்தையாக

விடை : அன்னையாக

4. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் – என்னும் அடிகளில் இடம் பெற்றுள்ள நயம்

  1. மாேனை
  2. எதுகை
  3. உருவகம்
  4. அந்தாதி

விடை : எதுகை

5. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ……………. திருமொழியாக உள்ளது பெருமாள் திருமொழி.

  1. மூன்றாம்
  2. ஐந்தாம்
  3. நான்காம்
  4. ஆறாம்

விடை : ஐந்தாம்

6. பெருமாள் திருமொழியைப் பாடியவர் ………………….

  1. நம்மாழ்வார்
  2. பெரியாழ்வார்
  3. ஆண்டாள்
  4. குலசேகர ஆழ்வார்

விடை : குலசேகர ஆழ்வார்

7. குலசேகர ஆழ்வாரின் காலம் ……………… நூற்றாண்டு

  1. எட்டாம்
  2. ஏழாம்
  3. ஆறாம்
  4. ஐந்தாம்

விடை : எட்டாம்

8 “வாளால் அறுத்து” எனத் தொடங்கும் பெருமாள் திருமொழியின் பாடப்குதியாக உள்ள முதலாயிரத்தின் பாசுரம் ……………..

  1. 681
  2. 691
  3. 701
  4. 711

விடை : 691

9 “மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்” என்னும் அடிகளில்  மாயம் என்பதன் பொருள்

  1. அறியாமை
  2. நிலையாமை
  3. வினோதம்
  4. விளையாட்டு

விடை : விளையாட்டு

10. காதல் நோயாளன் போன்றவர் …………..

  1. வித்துவக்கோட்டு இறைவன்
  2. குலசேகராழ்வார்
  3. மருத்துவர்
  4. மக்கள்

விடை : குலசேகராழ்வார்

11. மருத்துவன் போன்றவர் …………..

  1. குலசேகராழ்வார்
  2. மருத்துவர்
  3. மக்கள்
  4. வித்துவக்கோட்டு இறைவன்

விடை : வித்துவக்கோட்டு இறைவன்

12. “நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேன்” என்றவர் …………..

  1. மருத்துவர்
  2. மக்கள்
  3. குலசேகராழ்வார்
  4. வித்துவக்கோட்டு இறைவன்

விடை : குலசேகராழ்வார்

13. மாயத்தால் மீளாத் துயர் தருபவர் ………………

  1. குலசேகராழ்வார்
  2. வித்துவக்கோட்டு இறைவன்
  3. மருத்துவர்
  4. மக்கள்

விடை : வித்துவக்கோட்டு இறைவன்

14. வாளால் அறுத்து சுடுபவர் ………………

  1. குலசேகராழ்வார்
  2. வித்துவக்கோட்டு இறைவன்
  3. மருத்துவர்
  4. மக்கள்

விடை : மருத்துவர்

15. பொருத்தமில்லாத ஒன்றினைத் தேர்வு செய்க.

  1. நாலாயிரத்திவ்வியப் பிரந்தம்
  2. ஐந்தாம் திருமொழி
  3. திருப்பாவை
  4. முதலாயிரம்

விடை : திருப்பாவை

16. சங்க கால இலக்கியங்களில் ……………. நிறைந்துள்ளன

  1. அறிவியல் கருத்துகள்
  2. அறியாமை
  3. மூட நம்பிக்கை
  4. பொய்மை

விடை : அறிவியல் கருத்துகள்

குறு வினா

1. பெருமாள் திருமொழி நூல் குறிப்பு வரைக.

  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது பெருமாள் திருமொழி ஆகும்
  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் 105 பாடல்கள்.
  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினை இயற்றியவர் குலேசகர ஆழ்வார்.

2. குலசேகர ஆழ்வார் சிறு குறிப்பு வரைக

  • குலேசர ஆழ்வார் பிறந்த ஊர் கேரளாவிலுள்ள திருவஞ்சிக்களம் ஆகும்.
  • பெருமாள் திருமொழி, முகுந்தமாலை ஆகியன இவர் இயற்றிய நூல்கள் ஆகும்.
  • வட மொழியிலும், தென் மொழியிலும் புலமை பெற்றவர்.
  • எட்டாம் நூற்றாண்டில் பிறந்தவர் ஆவார்.

3. “நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே” என்று யார் யாரிடம் கூறினார்?

குலசேகர ஆழ்வார் திருவித்துவக் கோட்டம்மாவிடம் கூறினார்.

4. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் – மாயம் செய்தவர் யார்?

மாயம் செய்தவர் : திருவித்துவக் கோட்டம்மா

5. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் – இவ்வடிகளில் சுட்டப்படும் “மருத்துவன்” மற்றும் “நோயாளன்” போன்றவர் யாவர்?

மருத்துவன் போன்றவர் : திருவித்துவக் கோட்டம்மா

நோயாளன் போன்றவர் : குலசேகர ஆழ்வார்

6. குலசேகர ஆழ்வார் திருவித்துவக் கோட்டம்மா இறைவனிடம் வேண்டுவது யாது?

மருத்துவரை நேசித்தல்:-

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என உணர்ந்து நோயாளி மருத்துவரை நேசிப்பார்.

இறைவன் அருளை எதிர்பாரத்தல்:-

இறைவா! நீ உன் விளையாட்டால் எனக்கு நீங்காத துன்பத்தைத் நோயாளியைப் போல உன் அருளை எதிர்பார்த்து வாழ்கிறேன்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment