Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 7.4 – சிலப்பதிகாரம்

பாடம் 7.4 சிலப்பதிகாரம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 7.4 – “சிலப்பதிகாரம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

நூல் வெளி

  • சிலப்பதிகாரம், புகார் காண்டத்தின் இந்திரவிழா ஊரெடுத்த காதையிலிருந்து இப்பாடப்பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது.
  • ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
  • இது முத்தமிழ்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது.
  • மூவேந்தர் பற்றிய செய்திகளை கூறுகிறது.
  • சிலப்பதிகாரத்தில் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என் மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.
  • கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது
  • மணிமேகலை காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டிருப்பதால் இவையிரண்டும் இரட்டைக் காப்பியங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
  • சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள்.
  • சேர மரபினைச் சேர்ந்தவர்.
  • மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார்.
  • கோவலன் கண்ணகி கதையைக் கூறி, “அடிகள் நீரே அருளுக” என்றதால் இளங்கோவடிகளும் “நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்” என இக்காப்பியம் படைத்தார் என்பர்.

சொல்லும் பொருளும்

  • சுண்ணம் – நறுமணப்பொடி
  • காருகர் – நெய்பவர் (சாலியர்)
  • தூசு – பட்டு
  • துகிர் – பவளம்
  • வெறுக்கை – செல்வம்
  • நொடை – விலை
  • பாசவர் – வெற்றிலை விற்போர்
  • ஓசுநர் – எண்ணெய் விற்போர்
  • மண்ணுள் வினைஞர் – ஓவியர்
  • மண்ணீட்டாளர் – சிற்பி
  • கிழி – துணி

இலக்கணக் குறிப்பு

  • வண்ணமும் சுண்ணமும் – எண்ணும்மை
  • பயில்தொழில் – வினைத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

மயங்கிய – மயங்கு + இ(ன்) + ய் + அ

  • மயங்கு – பகுதி
  • இ(ன்) – இறந்த கால இடைநிலை
  • ‘ன்’ – புணர்ந்து கெட்டது.
  • ய் – உடம்படு மெய்
  • அ – பெயரெச்ச விகுதி

பாடநூல் வினாக்கள்

சிறு வினா

பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

  • பாசவர் – வெற்றிலை விற்பவர்கள்
  • வாசவர் – நறுமணப் பொருட்களை விற்பவர்
  • பல்நிண விலைஞர் – பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்
  • உமணர் – உப்பு விற்பவர்

III. குறு வினா

“பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்”

அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?

சிலப்பதிகாரம்

ஆ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.

கர்வனர் – ட்டினும்

இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.

ட்டினும் – சுட்டு

ஈ) காருகர் – பொருள் தருக.

நெய்பவர் (நெசவாளர்)

உ) இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?

சந்தனமும் அகிலும்

நெடு வினா

சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக  வளாகங்களோடும், அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

  • மருவூர்ப்பாக்கத்து வணிகவீதிகளில் வண்ணக்குழும்பு, சுண்ணப்பொடி விற்பது போல இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் விற்கப்படுகின்றன.
  • குளிர்ச்சி பொருந்திய சந்தனம், பூ வகைகள், ஊதுவத்தி, அகில் போன்ற நறுமணப் பொருள்களும் இன்றைய வணிக வளாகத்திலும், கிடைக்கின்றன, விற்கப்படுகின்றன.
  • பொன், மணி, முத்து, பவளம், ஆகியவை மருவூர்ப்காக்க வீதிகளில் விற்பனை செய்யப்பட்டது. இன்று வணிக வளாகத்திலும் நகைக்கடைகளில் பொன், மணி, முத்து, பவளம் விற்கப்படுகிறது.
  • வணிக வீதிகளில் குவியலாகக் கிடந்து தானிய வகைகள்.
  • இன்று அங்காடிகளில் தானிய வகைகளை எடை போட்டு பொட்டலங்களில் கட்டி விற்பனை செய்கின்றனர்.
  • மரூவூர்ப்பாக்கத் தெருக்களில் உப்பு, வெற்றிலை, நறுமணப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது போல், இன்றைய அங்காடிகளிலும் விற்கப்படுகின்றது.
  • வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப்பொருட்கள், இரும்புப் பொருட்கள் கிடைத்ததைப் போல, இன்றைய அங்காடிளிலும் விற்கப்படுகின்றது.
  • வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப்பொருட்கள், இரும்புப் பொருட்கள் கிடைத்ததைப் போல இன்றைய அங்காடி, வணிக வளாகங்களில் கிடைப்பதோடு, கூடுதலாக பல நவீனப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள (நெகிழி) பொருள்கள் நவீன அலங்காரங்களுடன் கிடைக்கின்றன.
  • மருவூர்பாக்க வீதிகளில் பொற்கொல்லர், இரத்தின வேலை செய்பவர், தையற்காரர், தோல் பொருள் செய்பவர், துணியாலும், கட்டையாலும் பொம்மை செய்பவர்கள் எனப் பல திறப்பட்ட கைவினைஞர்கள் இருந்தனர்.
  • அதைப்போலவே, இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் இத்தகு கைவினைக் கலைஞர்கள், நவீன தொழில் நுட்பத்துடன் தொழில் வல்லோராய் இருக்கின்றார்கள். அழகு மிளிரும் கைவினைப் பொருள்களைச் செய்து விற்பனையும் செய்கின்றனர்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • நன்கலம், வெறுக்கை, நுண்வினை, அரும்பெளல் – பண்புத்தொகை
  • பகருநர் – வினையாலணையும் பெயர்
  • செறிந்த – பெயரெச்சம்
  • குழலினும் யாழினும் – எண்ணும்மை

பகுபத உறுப்பிலக்கணம்

1. அளந்து = அள + த்(ந்) + த் + உ

  • அள – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

2. குவித்த = குவி + த் + த் + உ

  • குவி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்த கால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

3. காட்டும் = காட்டு + உம்

  • காட்டு– பகுதி
  • உம் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டு பெயரெச்ச விகுதி

பலவுள் தெரிக

1. மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் ……………..

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. குண்டலகேசி
  4. வளையாபதி

விடை : சிலப்பதிகாரம்

2. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் ……………

  1. இரண்டு
  2. நான்கு
  3. ஐந்து
  4. மூன்று

விடை : மூன்று

3. சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள்……………

  1. 10
  2. 20
  3. 30
  4. 40

விடை : 30

4. “அடிகள் நீரே அருளக” என்று இளங்கோவடிகளிடம் வேண்டிக் கொண்டார் ……………

  1. கம்பர்
  2. கபிலர்
  3. திருத்தக்கத்தேவர்
  4. சீத்தலைச்சாத்தனார்

விடை : சீத்தலைச்சாத்தனார்

5. சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய காப்பியம் ……………

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. குண்டலகேசி
  4. வளையாபதி

விடை : மணிமேகலை

6. மணிமேகலையின் ஆசிரியர் …………… 

  1. சீத்தலைச்சாத்தனார்
  2. கம்பர்
  3. கபிலர்
  4. திருத்தக்கத்தேவர்

விடை : சீத்தலைச்சாத்தனார்

7. மண்ணீட்டாளர் எனக் குறிக்கப் பெற்றவர் ……………

  1. ஓவியர்
  2. வணிகர்
  3. சிற்பி
  4. சாலியர்

விடை : சிற்பி

8. இந்திரவிழா ஊரெடுத்த காதை அமைந்த காண்டம் ……………

  1. வஞ்சிக்காண்டம்
  2. புகார்க்காண்டம்
  3. மதுரைக்காண்டம்
  4. பால காண்டம்

விடை : புகார்க்காண்டம்

9. சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடை ……………

  1. உரைநடை
  2. வசன நடை
  3. செய்யுள்நடை
  4. உரைப்பாட்டு மடை

விடை : உரைப்பாட்டு மடை

10. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ……………… ஆகும்

  1. இணைக்காப்பியம்
  2. முதற்காப்பியம்
  3. பிணைக்காப்பியம்
  4. இரட்டைக் காப்பியம்

விடை : இரட்டைக் காப்பியம்

11. கண்ணகியும், கோவலனும் சென்று அடைந்த ஊர் …………..

  1. காவிரிப்பூம்பட்டினம்
  2. கொடும்பாளூர்
  3. திருவரங்கம்
  4. உறையூர்

விடை : கொடும்பாளூர்

12. இளங்கோவடிகள் ………….  நாட்டைச் சேர்ந்தவர்

  1. சேர
  2. சோழ
  3. பல்லவ
  4. பாண்டிய

விடை : சேர

13. அழகர்மலை என்பது …………..

  1. மால்குன்றம்
  2. வேலவன்குன்றம்
  3. திருமால்குன்றம்
  4. திருவரங்கம்

விடை : திருமால்குன்றம்

14. பெருங்குணத்துக் காதலாள் …………

  1. மணிமேகலை
  2. கண்ணகி
  3. மாதவி
  4. மாதிரி

விடை : கண்ணகி

15. மருவூர்பாக்கம் அமைந்த நகர் ……………

  1. புகார்
  2. வஞ்சி
  3. மதுரை
  4. காஞ்சி

விடை : புகார்

16. பொருந்தா சொல்லை எழுதுக

  1. சுண்ணம் – நறுமணப்பொடி
  2. காருகர் – நெய்பவர்
  3. தூசு – பட்டு
  4. துகிர் – முத்து

விடை : துகிர் – முத்து

17. பொருந்திய சொல்லை கண்டுபிடி

  1. சுண்ணம் – நெய்பவர்
  2. காருகர் – பவளம்
  3. தூசு – பட்டு
  4. துகிர் – நறுமணப்பொடி

விடை : தூசு – பட்டு

18. பொருந்திய சொல்லை கண்டுபிடி

  1. வெறுக்கை – செல்வம்
  2. நொடை – எண்ணெய் விற்போர்
  3. ஓசநர் – வெற்றிலை விற்போர்
  4. பாசவர் – விலை

விடை : வெறுக்கை – செல்வம்

பொருத்துக

1. தூசுஅ. செல்வம்
2. துகிர்ஆ. பட்டு
3. வெறுக்கைஇ. விலை
4. நொடைஈ. பவளம்
விடை ; 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ

பொருத்துக

1. கண்ணுள் வினைஞர்அ. சிற்பி
2. மண்ணீட்டாளர்ஆ. ஓவியர்
3. கிழிஇ. தொழில்
4. வினைஈ. துணி
விடை ; 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

II. சிறு வினா

1. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் யாவை?

சிலப்பதிகாரத்தில் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என் மூன்று காண்டங்கள் உள்ளன.

2. சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள் யாவை?

சிலப்பதிகாரத்தில் முப்பது காதைகளை உடையது.

  • புகார்க்காண்டம் – 10
  • மதுரைக்காண்டம் – 13
  • வஞ்சிக்காண்டம் – 7

3. இரட்டைக் காப்பியங்கள் எவை? அவ்வாறு அழைக்கப்படக் காரணம் யாது?

  • இரட்டைக் காப்பியங்கள் என்பது சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகும்
  • காலத்தாலும், கதைத்தொடர்பாலும் தொடர்புடையதாய் இருக்கும்

4. சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள் யாவை?

முதல்காப்பியம்,முத்தமிழ்காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றமைக் காப்பியம் – உரையிட்ட பாட்டுடைச் செய்யுள்

5. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் விளக்குக

  • உரையிடையிட்ட பாட்டுடை என்பது “உரைபாட்டு மடை” என்னும் தமிழ் நடை
  • இது சிலப்பதிகாரத்தில் இடம் பெறுகிறது.
  • உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு என்பது பொருளாகும்.

6. மருவூர்பாக்க வீதியில் இருந்த கைவினைத் தொழில் வல்லுநர்கள் யாவர்?

செப்புப் பாத்திரம் செய்வோர், மரத்தச்சர், இரும்புக்கொல்லர், ஓவியர், பொற்கொல்லர், தையற்காரர், தோல் பொருள் தைப்பவர்

7. சிலப்பதிகாரத்தில் மருவூர்பாக்க வீதியில் பற்றிய செய்தி இடம்பெறும் கண்டம் மற்றும் காதை யாவை?

மதுரைக்காண்டம், இந்திரவிழா ஊரெடுத்த காதை

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment