Class 10th Tamil Book Solution for CBSE | Lesson 8.2 – ஞானம்

பாடம் 8.2 ஞானம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 8.1 – “ஞானம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 10 Tamil Text Books – Download

நூல் வெளி

  • நம்பாடப்பகுதியில் கொடுக்கப்பட்ட கவிதை தி.சு. வேணுகோபாலனின் “கோடை வயல்” என்னம் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
  • தி.சொ.வேணுகோபாலன் திருவையாற்றில் பிறந்தவர்;
  • மணிப்பால் பாெறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்;
  • எழுத்து‘ காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர்.
  • இவரின் மற்றொரு கவிதைத் தாெகுப்பு மீட்சி விண்ணப்பம்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

‘வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்’ இவ்வடி குறிப்பிடுவது ……………

  1. காலம் மாறுவதை
  2. வீட்டைத் துடைப்பதை
  3. இடையறாது அறப்பணி செய்தலை
  4. வண்ணம் பூசுவத

விடை : இடையறாது அறப்பணி செய்தலை

குறு வினா

காலக் கழுதை சுட்டெறும்பானது கவிஞர் செய்வது யாது?

  • காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலை குறிப்பது ஆகும்.
  • வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அற்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.
  • வாளித்தண்ணீர், சாயக்குவளை, துணி கந்தையானாலும், சாயம் அடிக்கும் தூரிகை கட்டையானலும் சுத்தம் செய்வது போல, காலக்கழுதை கட்டெறும்பான பின்னும் அறப்பணி ஓயாது தொடர்கிறது.

சிறு வினா

1. ‘சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்’ என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.

(குறிப்பு – சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)

உரைக்குறிப்புகள்:-

  • அறம் என்பதன் விளக்கம் தரல்
  • சுற்றுச்சூழல் என்றால் என்ன?
  • சுற்றுச்சூழலோடு அறத்திற்கு உள்ள தொடர்பை விளக்குதல்.
  • அறம் சார்ந்த வகையில் மாசு அடைவதைத் தவிர்க்க வழி கூறுதல்.
  • சட்டங்கள் வன்மையாக இருந்தாலும், அரசின் வாயிலாக மென்மைப்படுத்தல் வேண்டும்.
  • நெகிழி, ஆலைக்கழிவு, நச்சுக்காற்று வாகனப்புகை இவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தல்.
  • இக்குறிப்புகளை மையமாக வைத்து உரையாற்ற வேண்டும்.

2. வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை – இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.

  • வீட்டின் சுவர், சன்னல் போன்றவற்றில் அழுக்குப் படிந்தும், சன்னல்களில் கரையான் படிவதைத் தடுக்க, வாளித் தண்ணீரைக் கொண்டு சுவரையும் ஜன்னலையும் நன்கு கழுவ வேண்டும்.
  • பிறகு கந்தை துணியால் நன்கு துடைத்து விட வேண்டும்.
  • மூன்றாவதாக சாயக் குவளையில் உள்ள சாயத்தை கட்டைத் தூரிகை கொண்டு சாயம் பூசி புதுபிக்க வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • காலக்கழுதை – உருவகம்
  • கந்தைத்துணி – இருபெயரொட்டு பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

1. துடைத்தேன் =  துடை + த் + த் + ஏன்

  • துடை – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஏன் – குறிப்பு வினைமுற்று விகுதி

2. அடித்தேன் =  அடி + த் + த் + ஏன்

  • அடி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஏன் – குறிப்பு வினைமுற்று விகுதி

4. ஓய்ந்த = ஓய் + த்(ந்) + த் + உ

  • ஓய் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

1. “ஞானம்” கவிதையின் ஆசிரியர் …………..

  1. அப்துல்ரகுமான்
  2. வேணுகோபாலன்
  3. இராஜகோபாலன்
  4. இராமகோபாலன்

விடை : வேணுகோபாலன்

2. உலகிற்கான பணிகள் எதைச் சார்ந்து வளர வேண்டும் 

  1. மறம்
  2. ஞானம்
  3. கல்வி
  4. அறம்

விடை : அறம்

3. “ஞானம்” கவிதை இடம் பெற்ற தொகுப்பு …………..

  1. மீட்சி விண்ணப்பம்
  2. கோடை வயல்
  3. கோடை மழை
  4. தீக்குச்சி

விடை : கோடை வயல்

4. தி,சொ.வேணுகோபாலன் பிறந்த ஊர் ……………..

  1. திருவாதவூர்
  2. திருவாரூர்
  3. திருவையாறு
  4. தஞ்சாவூர்

விடை : திருவையாறு

5. தி.சொ.வேணுகோபாலன் ………….. காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர்

  1. மணிக்கொடி
  2. வானம்பாடி
  3. கவிக்குயில்
  4. எழுத்து

விடை : ‘எழுத்து’

6. வேணுகோபாலன் பேராசிரியராகப் பணியாற்றியது …………….

  1. கோவை மருத்தவக் கல்லூரியில்
  2. மணிப்பால் பொறியில் கல்லூரியில்
  3. சென்னை கிண்டி கல்லூரியில்
  4. வேளாண்மைக் கல்லூரியல்

விடை : மணிப்பால் பொறியில் கல்லூரியில்

7. “மீட்சி விண்ணப்பம்” கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் …………….

  1. வேணுராம்
  2. சி.சு. செல்லப்பா
  3. வேணுகோபாலன்
  4. கபிலர்

விடை : வேணுகோபாலன்

8. “ஞானம்” கவிதை உணர்த்தும் பொருள் …………….

  1. உலகப் பணி
  2. சமூக அறப்பணி
  3. வீட்டைப் புதுப்பித்தல்
  4. இடைவிடாத சமூக அறப்பணியை

விடை : இடைவிடாத சமூக அறப்பணியை

9. அறப்பணி ஓய்ந்தால் ……………. இல்லை

  1. மனிதன்
  2. உலகம்
  3. இயற்கை
  4. கடல்

விடை : உலகம்

10. “புதுக்கொக்கி பொருந்தினேன்” – இத்தொடர் உணர்த்துவது ……………

  1. சாளரக் கதவை சீர்ப்படுத்துதல்
  2. பொய்களை நீக்குதல்
  3. சமூகத்தை சீர்படுத்துதல்
  4. வீட்டைப் புதுப்பித்தல்

விடை : சமூகத்தை சீர்படுத்துதல்

பொருத்துக

1. கரையான்அ. கட்டெறும்பு
2. காலக்கழுதைஆ. வந்தாெட்டும்
3. தெருப்புழுதிஇ. காற்றடைக்கும்
4. சட்டம்ஈ. மண்வீடு கட்டும்
விடை ; 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

பொருத்துக

1. வாளிஅ. குவளை
2. சாயம்ஆ. தண்ணீர்
3. கந்தைஇ. தூரிகை
4. கட்டைஈ. துணி
விடை ; 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறு வினா

1. வேணுகோபாலனின் கவிதைத் தொகுப்புகள் யாவை?

மீட்சி விண்ணப்பம், கோடைவெயில்

2. “ஞானம்” என்னும் கவிதையில் இடம் பெறும் அஃறிணை உயிர்கள் யாவை?

கரயான், கழுதை, கட்டெறும்பு

3. “காலக்கழுதை
கட்டெறும்பான
இன்றும்
கையிலே” – என இவ்வடிகளக்கு இணையா தமிழ் பழமொழி எழுதுக

கழுதை தேய்ந்து கட்டெறும்பானது

4. தி.சொ.வேணுகோபாலன் குறிப்பு வரைக

  • தி.சொ.வேணுகோபாலன் திருவையாற்றில் பிறந்தவர்;
  • மணிப்பால் பாெறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்;
  • ‘எழுத்து’ காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர்.
  • இவரின் கவிதைத் தாெகுப்பு மீட்சி விண்ணப்பம், கோடைவெயில்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment