Class 11th Tamil Book Solution for CBSE | Lesson 4.5 – கலைச் சொல்லாக்கம்

பாடம் 4.5 கலைச் சொல்லாக்கம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 4.5 “கலைச் சொல்லாக்கம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 11 Tamil Text Books – Download

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல், தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுதல் ஆகிய வரிசையில் புணர்ந்த சொல்

  1. மூதூர்
  2. வெற்றிடம்
  3. நல்லாடை
  4. பைந்தளிர்

விடை : நல்லாடை

குறு வினா

1. கருங்கல் புணர்ச்சி விதி கூறுக

கருங்கல் = கருமை + கல்

  • ஈறுபோதல் என்ற விதிப்படி கரு + கல் என்றாயிற்று
  • இனமிகல் என்ற விதிப்படி கருங்கல் என்றாயிற்று

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. பொருள் தெரியாத சொற்களுக்குப் பொருள் கூறுதல் _______ நோக்கம்.

  1. அகராதியின்
  2. கலைச்சொல்லின்
  3. இணையத்தின்
  4. வலைப்பூவின்

விடை : அகராதியின்

2. மக்கள் பயன்பாட்டிற்குக் கலைச்சொற்களைக் கொண்டு சேர்க்கத் துணை நிற்பவை

  1. பொதுமக்களும் இதழ்களும்
  2. பள்ளிகளும் இதழ்களும்
  3. இதழ்களும் ஊடகங்களும்
  4. மாணர்வர்களும் ஊடகங்களும்

விடை : இதழ்களும் ஊடகங்களும்

3. மாணவர்களிடையே கலைச்சொற்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுதது

  1. செய்தித்தாள்
  2. பள்ளியில் செயல்படும் கையெழுத்து இதழ்
  3. வரா மாத இதழ்
  4. வானொலி

விடை : பள்ளியில் செயல்படும் கையெழுத்து இதழ்

4. தென் ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை என்னும் கட்டுரை எழுதியவர்

  1. திரு.வி.கல்யாண சுந்தரனார்
  2. பாரதிதாசன்
  3. காந்தியடிகள்
  4. பாரதியார்

விடை : பாரதியார்

குறு வினா

1. கலைச்சொல் என்றால் என்ன?

ஒரு மொழியில் காலத்திற்கேற்ப, துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக, உருவாக்கிப் பயன்படுத்தப்படும் சொற்களைக் கலைச்சொற்கள் என்கிறோம்.

2. அகராதியின் நோக்கம் யாது?

பொருள் தெரியாத சொற்களுக்குப் பொருள் கூறுவதே அகராதியின் நோக்கம் ஆகும்.

3. கலைச்சொல் பயன்படும் துறைகள் சிலவற்றை கூறுக

வேளாண்மை, மருத்துவம், பொறியியல், தகவல் தொடர்பியல்

4. கலைச்சொல் உருவாக்கத்தின் மாணவர்களின் பங்களிப்பைக் குறித்து வரையறு

நாள்தோறும், துறைதோறும் கண்டுபிடிப்புகள் உருவாகி வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் அவற்றிற்கெனக் கலைச் சொல்லாக்கங்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவை ஏட்டளவில் இல்லாமல் பயன்பாட்டிற்கு வருவதே, மாணவர்களின் பங்களிப்பாக அமையும்.

5. தாய்மொழிவழிக் கற்றலில் ஐப்பானியர் சிறக்க காரணம் என்ன?

உலகின் எம்மூலையில், எவ்வகை கண்டுபிடிப்பு நிகழ்ந்தாலும், ஜப்பானியர் உடனுக்குடன் தம் தாய் மொழியில், அதனை ஆக்கம் செய்து விடுகின்றனர். அதனால் தாய் மொழி வழியில் அறிவியல் தொழில்நுட்பப் பாடங்களை கற்கின்றனர். ஆகையால் ஜப்பானில் நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.

சிறு வினா

1. கலைச்சொல் பயன்படும் துறைகள் சிலவற்றை கூறுக

காலத்திற்கு ஏற்ப, வளரும் துறைசார்ந்த புதுக்கண்டுபிடிப்க்கென உருவாக்கிப் பயன்படுத்தும் சொல் கலைச்சொல். மொழியின் வேர்ச்சொல் (பகுதி) கொண்டு இதனை உருவாக்க வேண்டும்.

அவ்வாறு புதிய கலைச்சொற்களை உருவாக்கும்போது, மொழி தன்னைப் புதுப்பித்துக் கொள்வதோடு, புது வளர்ச்சியும் பெறும். கலைச்சொறகள் பெரும்பாலும் காரணப் பெயர்களாகவே இருக்கும்.

2. மருத்துவம் சார்ந்த சில கலைச்சொற்களை கூறுக

Clinic  – மருத்துவமனைBlood Group – குருதிப்பிரிவு
Compounder – மருந்தாளுநர்X – ray – ஊடுகதிர்
Typhoid – குடல் காய்ச்சல்Ointment – களிம்பு

3. கல்வித்துறை சார்ந்த சில கலைச்சொற்களை கூறுக

Note Book – எழுதுசுவடிAnswer Book – விடைச்சுவடி
Rough Note book – பொதுக்குறிப்பு சுவடிProspectus – விளக்கச் சுவடி

4. கலைச்சொல் அகராதி என்றால் என்ன?

பல்வேறு துறைகள் சார்ந்த கலைச்சொற்களைத் தனித்தனியே தொகுத்து அகர வரிசைப்படுத்தி வெளியிடப்படுவது கலைச்சொல் அகராதி என்று பெயர்

5. அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் கலைச்சொற்களை அறிக

Smart phone – திறன்பேசிWebsite – இணையம்
Touch screen – தொடுதிரைBlog – வலைப்பூ
Bug – பிழைGazette – அரசிதழ்
Ceiling – உச்ச வரம்புDespatch – அனுப்புகை
Circular – சுற்றறிக்கைSubsidy – மானியம்
Sub Junior – மிக இளையோர்Super Senior – மேல் மூத்தோர்
Customer – வாடிக்கையாளர்Carrom – நலாங்குழி ஆட்டம்
Consumer – நுகர்வோர்Sales Tax – விற்பனை வரி
Account – பற்று வரவுக் கணக்குReferee – நடுவர்
Cell phone – கைபசி, அலைபேசி,  செல்லிடப்பேசி

நிறுத்தக்குறியீடுகள்

காற்புள்ளி ( , )

பொருள்களைத் தனித்தனியாகக் குறிப்பிடும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள், எடுத்துக்காட்டுகள், இணைப்புச்சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் காற்புள்ளி வருதல் வேண்டும்.

  • அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்க்கைப்பேறு நான்கு.
  • நாம் எழுதும்போது, பிழையற எழுத வேண்டும்.
  • இனியன் நன்கு படித்தான் ; அதனால், தேர்ச்சி பெற்றான்.
  • ஐயா; அம்மையீர்,
  • சிறியவன் பெரியவன், செல்வன் ஏழை.

அரைப்புள்ளி ( ; )

தொடர்நிலைத் தொடர்களிலும் ஒரு சொல்லுக்கு வேறுபட்ட பொருள் கூறும் இடங்களிலும் அரைப்புள்ளி வருதல் வேண்டும்.

  • வேலன் கடைக்குச் சென்றான்; பொருள்களை வாங்கினான் ; வீ டு திரும்பினான்.
  • சீர் – மாறுபாடு இல்லாதது; அளவு; இயல்பான தன்மை; ஒழுங்கு ; சமம் ; நேர்த்தி; அழகு; சீதனம்; செய்யுளின் உறுப்பு

முக்காற்புள்ளி ( : )

சிறுதலைப்பு, நூற்ப குதி எண், பெருங்கூட்டுத் தொடர் முதலிய இடங்களில் முக்காற்புள்ளி வருதல் வேண்டும்.

  • சார்பெழுத்து :
  • பத்துப்பாட்டு 2:246
  • எட்டுத்தொகை என்பன வருமாறு:

முற்றுப்புள்ளி ( . )

தொடரின் இறுதி, முகவரி இறுதி, சொற்குறுக்கம், நாள் முதலிய இடங்களில் முற்றுப்புள்ளி வருதல் வேண்டும்.

  • உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.
  • தலைமையாசிரியர், அரசு மேனிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.
  • தொல்.சொல்.58.
  • 18/02/2018.

வினாக்குறி ( ? )

ஒரு வினாத்தொடர், முற்றுத்தொடராகவும் நேர் கூற்றுத் தொடராகவும், இருப்பின் , இறுதியில் வினாக்குறி வருதல் வேண்டும்.

  • அது என்ன? (முற்று)
  • நீ வருகிறாயா? என்று கேட்டான். (நேர்கூற்றுத் தொடர்)

வியப்புக்குறி ( ! )

வியப்புக்குறி, வியப்பிடைச் சொல்லுக்குப் பின்பும் நேர் கூற்று வியப்புத்தொடர் இறுதியிலும் அடுக்குச் சொற்களின் பின்னும் வியப்புக்குறி வருதல் வேண்டும்.

  • எவ்வளவு உயரமானது!
  • என்னே தமிழின் பெருமை! என்றார் கவிஞர்
  • வா! வா! வா! போ! போ! போ!

விளிக்குறி ( ! )

அண்மையில் இருப்பாரை அழைப்பதற்கும், தொலைவில் இருப்பாரை அழைப்பதற்கும் விளிக்குறி பயன்படுத்த வேண்டும். வியப்புக்குறியும் விளிக்குறியும் ஒரே அடையாளக்குறி உடையன.

  • அவையீர் !
  • அவைத்தலைவீர் !

மேற்கோள்குறி ( ‘ ‘ , “ “ )

ஒற்றை மேற்கோள்குறி, இரட்டை மேற்கோள்குறி என இருவகைப்படும்.

ஒற்றை மேற்கோள்குறி வரும் இடங்கள்

ஓர் எழுத்தேனும் சொல்லேனும் சொற்றொடரேனும் தன்னையே குறிக்கும் இடம், கட்டுரைப்பெயர், நூற்பெயர் குறிக்கும் இடம், பிறர் கூற்றுப்பகுதிகள் முதலான இடங்களில் ஒற்றைக்குறி வருதல் வேண்டும்.

  • ‘ஏ‘ என்று ஏளனம் செய்தான்.
  • பேரறிஞர் அண்ணா ‘செவ்வாழை‘ என்னும் சிறுகதை எழுதினார்.
  • ‘கம்பனும் மில்டனும்’ என்னும் நூல் சிறந்த ஒப்பீட்டு நூல் ஆகும்.
  • ‘செவிச்செல்வம் சிறந்த செல்வம்‘ என்பர்.

இரட்டை மேற்கோள்குறி வரும் இடங்கள்

நேர்கூற்றுகளிலும் மேற்கோள்களிலும் இரட்டைக்குறி வருதல் வேண்டும்.

  • “நான் படிக்கிறேன்“ என்றான்.
  • “ஒழுக்கமுடைமை குடிமை“ என்றார்.

நிறுத்தக்குறிகள் எல்லாம் வெறும் அடையாளங்கள் அல்ல. அவையெல்லாம் பொருள்பொதிந்த அடிப்படையில் தோன்றியவை என்பதை மாணவர்கள் நன்குணர்ந்து அவற்றைப் பின்பற்றிப் பேசவும் எழுதவும் வேண்டும்.

இலக்கணத் தேர்ச்சி கொள்

1. கலைச்சொல்லாக்கம் – பொருள் தருக

ஒரு மொழியில் காலத்திற்கேற்ப, துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக உருவாக்கிப் பயன்படுத்தப்படும் சொற்கள் கலைச்சொற்கள் எனப்படும்.

2. கலைச்சொல்லாக்கப் பணிகள் தொடங்குவதற்குரிய விதிமுறைகள் யாவை?

  • புதிதாக உருகவாக்கப்பெறும் கலைச்சொல் தமிழ்ச்சொல்லாக இருத்தல் வேண்டும்.
  • பொருள் பொருத்தமுடையதாகவும், செயலைக் குறிப்பதாகவும் அமைதல் வேண்டும்.
  • வடிவில் சிறியதாகவும், எளிமையானதாகவும் இருத்தல் வேண்டும்.
  • ஒசை நயமுடையதாகவும், தமிழ் இலக்கண மரபுக்கு உட்பட்டதாகவும் இருத்தல் வேண்டும்.
  • மொழியின் வேர்ச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு, பல சொற்களை மேலும் உருவாக்கும் ஆக்கத்திறன் கொண்டதாகக் கலைச்சொற்களை உருவாக்கல் வேண்டும்.
  • இவ்விதிமுறைகளைக் கலைச்சொல்லாக்கப் பணிகள் தொடங்கும் முன் பின்பற்ற வேண்டும்.

3. பின்வரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச் சொற்களை எழுதுக?

  • School Education – பள்ளி கல்வி
  • Director – இயக்குநர்
  • Chief Minister – முதலமைச்சர், முதல்வர்
  • Text Book – பாடப்புத்தகம்
  • Horticulture – தோட்டக்கலை
  • Escalator – நகரும் மின்படி

4. Ship என்னும் ஆங்கிலச் சொல்லின் பழந்தமிழ் இலக்கியப் பெயரைக் கூறுக

நாவாய், கலம்

5. பின்வரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச் சொற்களை எழுதுக?

Personality – ஆளுமை, வேறுபட்ட பண்புEmotion – மனஉணர்ச்சி, மனக்கிளர்ச்சி
Plastic -நெகிழிEscalator – நகரும் மின்படி
Straw -நெகிழிக்குழல், உறிஞ்சுகுழல்Mass Drill – கூட்டு உடற்பயிற்சி
Horticulture – தோட்டக்கலைDespatch – நடுத்தரம், சராசரி அளவு
Apartment – அடுக்குமாடி, அடுக்ககம், தொகுப்புமனை

5. உலக அளவில் கணிதச் சூத்திரங்களையும், வேதியியல் குறியீடுகளையும் தமிழில் எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்று வா.செ. குழந்தைசாமி கூறுகிறார்.

உலக அளவில் பயன்படுத்தப்படும் கணிதச் சூத்திரங்களையும், வேதியியல் குறியீடுகளையும் தமிழில் பயன்படுத்தும்போது, பழந்தமிழிலக்கிய சொல்லைத் தேரந்து பயன்படுத்துதல் (எ.கா. : வலவன் / Pilot)

பேச்சுமொழிச் சொல்லைப் பயன்படுத்துதல் (எ.கா. : அம்மை)

பிறமொழிச் சொல்லைப் கடன்பெறுதல் (எ.கா. : தசம முறை / Decimal)

புதுச்சொல் படைத்தல் (எ.கா. : மூலக்ககூறு /  Molecule)

உலக வழக்கை அப்படியே ஏற்றுக் கொள்ளல் ( எ.கா. : எக்ஸ் கதிர் / X-Ray)

பிறமொழித்துறைச் சொற்களை மொழி பெயர்த்தல் (எ.கா. : ஒளிச்சேர்க்கை / Photosynthesis)

ஒலிபெயர்த்துப் பயன்படுத்துதல் (எ.கா. : மீட்டர்  / Meter) (ஒளிச்சேர்க்கை / OM)

உலக அளவிலான குறியீடுகள் – சூத்திரங்கள் R√A = r, r2 H2O, Ca

அப்படியே ஏற்றல் என்னும் நெறிமுறையைக் கையாள வேண்டுமென்று வா.செ.குழந்தைசாமி கூறுகிறார்.

 

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

ஜியு.போப்

செந்தமிழ்ச் செம்மல் டாக்டர் ஜி.யு.போப் 1839ஆம் ஆண்டில் தென்னிந்தியாவுக்கு வந்தார். சென்னையை அடைந்த போப் “சாந்தோம்” என்னும் இடத்தில் முதன்முதலாகத் தமிழ் உரையைப் படித்துச் சொற்பொழிவாற்றினார். ஆங்கிலேயரான அவரின் தமிழுரை கூடியிருந்த தமிழர்களுக்குப் பெருவியப்பளித்தது. தமிழ் மொழியைப் பயிலத் தொடங்கிய சிறிது காலத்திலேயே ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டுமென்ற எண்ணத்தில், தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தாகக் குறிப்பிட்டுள்ளார். இவரது திருக்குறள், திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிறப்பு வாய்ந்தவை.

போப் அவர்கள் தஞ்சாவூரில் வாழ்ந்தபோது, தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுற அறிந்தார். அப்போதுதான் தொல்காப்பியம், நன்னூல் முதலிய பேரிலக்கண நூல்களைப் பாடசாலை மாணவர் படிப்பது எளிதன்று என்பதைக் கண்டு, சிறிய தமிழ் இலக்கண நூல்கள் சிலவற்றை எழுதி வெளியிட்டார். ஐரோப்பியர் தமிழ் மொழியை கற்றுக் கொள்ளுவதற்குரிய நூல் ஒன்றை (Tamil Hand Book) எழுதினார். ஆங்கில மொழியில் எழுதப் பெற்றிருந்த தமிழ்நாட்டு வரலாற்றை தமிழில் எழுதிப் பதிப்பித்தார். பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகைய கல்வியே பயனளிக்குமென்றும் போப் கருதினார். எழுபது ஆண்டுகள் தமிழோடு வாழ்ந்திருந்து, தமிழக்கு நலம் அருளிய பெரியார் ஜி.யு.போப் ஆவார்.

கீழ்க்காணும் வினாக்களுக்கு விடை தருக

1. இலக்கணக் குறிப்பு தருக

அ) பிறந்தவர்

படர்க்கை பலர்பால் இறந்த கால வினைமுற்று

ஆ) அருளிய

பெயரெச்சம்

2. திருக்குறளை ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப் – விடைக்கேற்ற வினாவை எழுதுக

எந்த எண்ணத்தில் ஜி.யு.போப்  திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்?

3. பதிப்பித்தார் – பகுபத உறுப்பிலக்கணம் தருக

பதிப்பித்தார் – பதிப்பி + த் + த் + ஆர்

  • பதிப்பி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

4. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக

பள்ளிகூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறை கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகையைக் கல்வியேப் பயனளிக்கும்மென்றும் போப் கருதினார்.

விடை

பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறை கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகையை கல்வியே பயனளிக்கும்மென்றும் போப் கருதினார்.

5. பொருத்துக

அ) தொல்காப்பியம்i) சங்க நூல்
ஆ) திருக்குறள்ii) பக்தி நூல்
இ) புறநானூறுiii)அற நூல்
ஈ) திருவாசகம்iv) இலக்கண நூல்
விடை : அ – iv, ஆ – iii, இ – i, ஈ – ii

செய்திகுக் கீழுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை மொழிபெயர்ப்பு பகுதியிலிருந்து கண்டறிந்து எழுதுக.

The Chinese have no religious science. The practices of their religion (Buddhism) are derived from India. They believe that it is the Indians who brought idols to them and that the latter were their religious educators. In China and in India they believe in metempsychosis. The Chinese and Indians draw from the same religious principles different conclusions. In India medicine and philosophy are practiced. The Chinese practice medicine equally. Their chief treatment is cauterization. The Chinese practice astronomy but the Indians practice this science still more.

Written by Abu Zayd Al Sirafi, traveler, 10th century.

Foreign notices of South India by K.A.Neelakanda Sastri.

சீனாவுக்கென்று தனியாக மதங்கள் இல்லை. இந்தியாவின் மதத்தை (பவுத்தம்) அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். சிலைகளைத் தங்களுக்கு அறிமுகம் செய்தோர் இந்தியர்கள் என்று நம்பும் சீனர்கள், இந்தியர்களே தங்களின் மத ஆசிரியர்கள் என்னும் கருதுகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் மரணத்துக்குப் பிந்தைய மறுபிறப்பை நம்புகின்றன. ஒரே மதக் கோட்பாடு இருந்தாலும், சீனர்களும் இந்தியர்களும் வெவ்வேறு தீர்மானங்களுக்கு வருகிறார்கள். இந்தியாவில் மருத்துவமும்,  தத்துவமும் நடைமுறையில் உள்ளன. அவர்களுக்குச் சமமான சீனர்களும் மருத்துவத்தை நடைமுறையில் வைத்திருக்கிறார்கள். “தீய்த்தல்” அவர்களுது பிரதான சிகிச்சை முறை, சீனர்கள் வானியல் சாஸ்திரப் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள. ஆனால் இந்த அறிவியிலை இந்தியர்கள் இன்னும் அதிகமாய்ப் பயன்படுத்துகின்றனர்.

Religion – மதம்Medicine – மருந்து
Idols – சிலைகள்Science –  அறிவியல்
Philosophy – தத்துவம்

கீழ்க்காணும் பத்திகளைப் படித்து மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி எழுதுக.

கல்வி என்றால் என்ன? அது நூல்களைப் படிப்பதா? அல்லது அது பலவகையானதைக் குறித்த அறிவா? அதுவும் இல்லை. எத்தகைய பயிற்சியின்மூலம் மனத்தின் ஆற்றலும் அது வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுப் பயன்தரும் வகையில் அமைகிறதோ, அந்தப் பயிற்சிதான் கல்வியாகும். அக்கல்வி வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அதுதான் மனத்தை ஒருமுகப்படுத்தும் பயிற்சி. கல்வியின் நோக்கம் செய்திகளைப் பற்றிய அறிவைச் சேமிப்பதன்று. கல்வியின் நோக்கமே மனத்தை ஒருமுகப்படுத்துவதுதான். மனவொருமைப்பாடே கல்வியின் அடிப்படை.

எல்லோரும் தங்கள் அறிவு வளர்ச்சிக்கு அம்முறையைத்தான் பின்பற்றியாக வேண்டும். மனத்தை ஒருமுகப்படுத்தும் அளவுக்கு அறிவும் வளரும். இயற்கையால் மூடப்பட்டிருக்கும் அறிவுச்சுடரைத் திறப்பதற்கு இதுவொன்றே சிறந்த வழியாகும். மனிதன் தன் சக்தியை நூற்றுக்குத்

தொண்ணூறு விழுக்காடு வீண் செய்து விடுகிறான். இதனால்தான், அவன் அடிக்கடி தவறுகள் செய்கிறான். பண்புடைய மனத்தைப் பெற்றவன் ஒரு தவற்றையும் செய்ய மாட்டான். மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள முக்கிய வேறுபாடு மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. எத்துறையிலும் வெற்றி பெறுவது, இதைப் பொறுத்துத்தான் அமைகிறது. இசை, ஓவியம், சிற்பம் முதலிய எல்லாக் கலைகளிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெறச் செய்வது மன ஒருமைப்பாடுதான். மேலும், உலகத்தின் புதிர்களை மூடி வைத்திருக்கும் கதவுகளைத் திறக்கக்கூடிய வலிமையை நாம் பெற வேண்டும். இவ்வலிமையை நமக்கு அளிக்கக்கூடியது மன ஒருமைப்பாடுதான். அதுவே கல்விக்கு அடிப்படையாகும். (சுவாமி விவேகானந்தர் – கல்வி)

விடை:-

மாதிரிப்படி

பயிற்சியின் மூலம் மனவுறதியைக் கட்டுப்படுத்தி, பயன்தரச் செய்வதே கல்வி, அதனை வளர்க்க, மன ஒருமைப்பாடே அடிப்படை, அறிவை வளர்க்கவும் மன ஒருமைப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். இயற்கை மூடியுள்ள அறிவுச் சுடரைப் பெற அதுவே சிறந்த வழி. சக்தியை மனிதன் வீணாக்கிவிடுவதால், அடிக்கடி தவறு செய்கிறான். பண்புடை மனம் பெற்றவன், தவறு செய்யான். மனதை ஒருமுகப்படுத்தி வெற்றி பெற்று, மனிதன் விலங்கிலிருந்து வேறுபடுகிறனான். கலைகளில் தேர்ச்சி பெற, மன ஒருமை தேவை. புதிர்களை விடுவிக்கும் திறம் அதற்கு உண்டு. அதுவே கல்விக்கு அடிப்படை.

உண்மைப்படி – மன ஒருமையே வெற்றி

மனவுறுதியைக் கட்டுப்படுத்திப் பயிற்சியால் பயன்தரச் செய்வதே கல்வி. மனவொருமைப்பாடே கல்வியை வளர்க்க அடிப்படை, அறிவு வளர, மனவொருமைப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். இயற்கை மூடியுள்ள அறிவுச்சுடரை பெறச் சிறந்தவழி அதுவே. சக்தியை மனிதன் வீணாக்கி விடுவதால் தவறிழைக்கிறான். மனத்தை ஒருமுகப்படுத்தி வெற்றி பெற்றால், மனிதன் விலங்கிலிருந்து திறம் அதற்குண்டு. அதுவே கல்விக்கு அடிப்படை.

இலக்கிய நயம் பாராட்டுக

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சிலமூடர் – நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்தி
காட்சிக் கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதமை யற்றிடும் காணீர்

-பாரதியார்

ஆசிரியர்:-

இப்பாடலைப் பாடியவர் நற்றமிழ்க் கவிஞர் பாரதியார். இப்பாடலில் சமுதாயத்தில் பெண்கள் கல்வி கற்க வேண்டுவதை வலியுறுத்தியுள்ளார்.

மையக்கருத்து:-

பெண்கள் அறிவை வளர்க்கக் கல்வி அளிக்க வேண்டும். அதனால் உலகமே வெளிச்சம் பெறும் என்பதை மையக் கருத்தாக வைத்துப் பாடியுள்ளார்

எதுகைத்தொடை:-

அடிதோறும் முதல் சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றிவருவதால் இப்பாடல் அடி எதுகையாக அமைந்துள்ளது.

  • பெண்ணுக்கு – மண்ணுக்கு – கண்கள் – பெண்கள்

அணி:-

இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி “இயல்பு நவிற்சி அணி” ஆகும்.

  • ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி எனக் கூறுவர்.
  • பெண்கள் கல்வி பெற வேண்டும் என்பதை நயம்படி இயல்பான சொற்களை விளக்கியுள்ளார்.

மேலும் கண்கள் இரண்டில் ஒன்றைக் குத்திக்காட்சி கெடுத்திடலாமோ? என வினவுவதால் உவமையும் அமைந்துள்ளது.

சந்த நயம்:-

இப்பாடலில் எதுகை, மோனைச் சொற்கள் அமைய எளிய, இனிய சொற்களைக் கொண்டு சுவையுடன் பாடத்தக்க வகையில் பாடியுள்ளமையால் சந்தநயம் வெளிப்படுகிறது.

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக.

Class 11 Tamil Chapter 4.6 எண்ணங்களை எழுத்தாக்குக.

இயற்கையாகப் பெற்ற அறிவால் கற்றுப் பெற வேண்டியது அதிகம்
கலைகள் கற்போம்; ஓயுதல் செய்வோம்;
நல்ல ஆடை செய்வோம்; நாகரிகம் வளர்ப்போம்;
நடையும் பரப்பும் உணர் ஊர்திகள் செய்வோம்;
சட்டம் கற்போம்; சகலகலை திட்டம் வகுப்போம்;
மண்ணை ஆய்வோம்!
விண்ணையும் ஆய்வோம்!
திறமை, ஊக்கம், நேர்மை மறவாமல் உழைப்போம்!
ஆணும், பெண்ணும் சமம் என உழைப்போம்!
தேடு பொருள் அத்தனையும் தேசியம் செய்வோம்!

விடுபட்ட இடத்தில் அடுத்து வரவேண்டிய சொற்களை கண்டறிந்து எழுதுக

1. தனிமொழி – அறிவு; …………….. – வண்ணமயில்; பொதுமொழி – ……………..

விடை : தொடர்மொழி, பலகை (பலகை / பல கை)

2. கார்காலம் – …………….; குளிர்காலம் – ஐப்பசி, கார்த்திகை; – ……………… மார்கழி, தை

விடை : ஆவணி, புரட்டாசி; முன்பனிக்காலம்

3. எழுத்து, சொல், ……………. , யாப்பு, ……………… தொடை

விடை : பொருள், அணி

4. எழுத்து, ……………. , சீர், தளை, ……………… தொடை

விடை : அசை, அடி

5. சேரன் – வில்; சோழன் – ……………. ; ……………… – மீன்

விடை : புலி, பாண்டியன்

சொல்லை பிரித்து தொடர் அமைக்க

எ.கா.:- கால்நடை – கால் நடை

கால்நடைகால்நடைகளை மேய்ச்சல் நிலத்திற்கு ஓட்டிப் போனார்கள்
கால் நடைகாலையில் கால் நடைபயிற்சி (கால் நடை) உடலுக்கு நல்லது

1. பிண்ணாக்கு – பிள் நாக்கு

பிண்ணாக்குகடலைப் பிண்ணாக்கு கால்நடைத் தீவனமாகப் பயன்படும்.
பிள் நாக்குபாம்பு தன் பிண்ணாக்கை (பிள் நாக்கை) வெளியே நீட்டியது.

2. எட்டுவரை  – எள் துவரை

எட்டுவரைஅவன் எட்டுவரை தான் படித்துள்ளான்.
எள் துவரைஎங்கள் நிலத்தில் எட்டுவரை (எள் துவரை) விதைத்துள்ளோம்.

3. அறிவில்லாதவன் – அறிவில் ஆதவன்

அறிவில்லாதவன்அறிவில்லாதவனுக்கு எதையும் சொல்லிய புரிய வைக்க எளிதில் முடியாது.
அறிவில் ஆதவன்ஆசிரியர் என்னை அறிவில் ஆதவன் என பாரட்டினார்.

4. தங்கை – தம் கை

தங்கைஅண்ணன் தன் தங்கையை தேர்வில் முதலிடம் பிடித்தற்கு பாராட்டினான்
தம் கைதங்கையே (தன் கையே) தமக்கு உதவி என்பது பழமொழி

5. வைகை 

வைகைமதுரையை வைகை நதி வளம்கொழிக்க செய்கிறது
வை கைபணப்பையில் “வை கை”யை உதைப்பேன் என்றார் தந்தை

6. நஞ்சிருக்கும்

நஞ்சிருக்கும்வாழைப்பழத்தை நஞ்சிருக்கும் போது தின்னக்கூடாது
நஞ்சு இருக்கும்பாம்புக்கு பல்லில் நஞ்சு இருக்கும்

நிற்க அதற்குத் தக

படிப்போம்; பயன்படுத்துவோம்

Education Committee – கல்விக்குழுAncestor – மூதாதையர்
Infrastructure – உள்கட்டமைப்புValue Education – மதிப்புக்கல்வி
Classical Language – செம்மொழிMental Ability – மன ஆற்றல்

அறிவை விரிவு செய்

என் சரித்திரம் – உ.வே.சாமிநாதர்
• செம்மண் மடல்கள் – இரா.மீனாட்சி
• ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுதி I, II – ஜெயகாந்தன்

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment