பாடம் 5.5 ஆக்கப்பெயர்கள்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 11 Tamil Chapter 5.5 “ஆக்கப்பெயர்கள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
சரியான தொடரைத் தெரிவு செய்.
- நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகிறேன்.
- இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்.
- இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகிறேன்.
- இதழ்களில் பேசுகிறேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு.
விடை: இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்.
சிறு வினா
ஆக்கப்பெயர் விகுதிகள் தற்கால வாழ்வியலில் மிகுந்துள்ளன ஏன்?
- காலச்சூழலுக்கு ஏற்றவாறு பயன்பாட்டிற்காகப் பல்வேறு பெயர்களைப் புதிதாக ஆக்கிக் கொள்கிறோம்.
- இடுகுறியாகவும், காரணமாகவும் ஆக்கப்படும் புதிய சொல் ஆக்கப்பெயராகும்
- பெயர், வினைச்சொற்களுடன் காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி என்னும் விகுதிகள் சேர்த்து உருவாக்கப்படும் புதுச்சொற்கள், தமிழின் சொற்களஞ்சியத்தை விரிவடையச் செய்கின்றன.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. உடமைப்பொருளில் வந்த ஆக்கப்பெயர்
- தோட்டக்காரன்
- உறவுக்காரர்
- வீட்டுக்காரன்
- நாட்டுக்காரி
விடை : வீட்டுக்காரன்
2. உறவுப்பொருளில் வந்த ஆக்கப்பெயர்
- தோட்டக்காரன்
- உறவுக்காரர்
- வீட்டுக்காரன்
- நாட்டுக்காரி
விடை : உறவுக்காரர்
3.தொழில் பொருளில் வந்த ஆக்கப்பெயர்
- தோட்டக்காரன்
- தையல்காரன்
- வீட்டுக்காரன்
- நாட்டுக்காரி
விடை : தையல்காரன்
4. புதியதாக ஆக்கப்படும் சொல்லுக்கு ______ எனப்பெயர்
- பொருட்பெயர்
- இடப்பெயர்
- ஆக்கப்பெயர்
- வினைப்பெயர்
விடை : ஆக்கப்பெயர்
5. பெயர்சொற்களை ஆக்கப் பயன்படும் விகுதிகளை ______ விகுதிகள் என அழைப்பர்
- பொருட்பெயர்
- இடப்பெயர்
- வினைப்பெயர்
- ஆக்கப்பெயர்
விடை : ஆக்கப்பெயர்
6. ஆக்கப்பெயர்களில் தனிச் சிறப்புடையவை
- பகுதிகள்
- விகுதிகள்
- இடைநிலைகள்
- சந்திகள்
விடை : பகுதிகள்
பொருத்துக
1. உயர்நிலை பணிவோர் | அ. ,ஆளி |
2. கடைநிலை பணிவோர் | ஆ. ஆளர் |
3. இருபால் பொதுப்பெயர் | இ. ஆள் |
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ |
குறு வினா
1. தமிழில் பயன்படும் ஆக்கப்பெயர் விகுதிகளை சான்றுடன் தருக
காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி, தாரர், மானம், அகம் முதலியன தமிழில் பயன்படும் ஆக்கப்பெயர் விகுதிகளாகும்.
சான்று
காரன் – வண்டிக்காரன் | காரர் – சமையல்காரர் |
காரி – வேலைக்காரி | ஆள் – பணியாள் |
ஆளர் – ஆணையாளர் | ஆளி – குற்றவாளி |
தாரர் – விண்ணப்பதாரர் | மானம் – கட்டுமானம் |
அகம் – அலுவலகம் |
2. பொருளக்கு முன்னோர் எவ்வாறு பெயரிட்டு வழங்கினர்?
உலகப்பொருள் அனைத்தும் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. சில பொருள்களுக்கு காரணம் கருதியும் (காரணப்பெயர்), சில பொருள்களுக்கு காரணம் இன்றியும் (இடுகுறிப்பெயர்கள்) முன்னோர் பெயரிட்டு வழங்கினர்
சான்று
- நாற்காலி, காற்றாடி (காரணப்பெயர்)
- இலை, கல், மண் (இடுகுறிப்பெயர்கள்)
3. காரணப்பெயர்கள், இடுகுறிப்பெயராவதனை விளக்குக
காலப்போக்கில், பொருளின் மாற்றத்தால், அவை பயன்படும் நிலைக்கு ஏற்றவாறு சில நேரங்களில் காரணப்பெயர் இடுகுறிப்பெயராகி விடுகிறது.
சான்று : நாற்காலி
- நான்கு கால்களோடு பின்புறம் சாயும் கைகளை வைத்துக் கொள்ளவும் வசதியாக மரத்தால் செய்யப்பட்ட இருக்கை, காரணம் கருதி “நாற்காலி” எனப் பெயரிடப்பட்டது.
- இன்று நான்கு கால்கள் இல்லாத இருக்கைகளையும் “நாற்காலி” என அழைக்கிறோம்.
- அதாவது கருதி வழங்கப்பட்ட ஒரு பொருளுக்கான பெயர் இன்று இடுகுறியாக வழங்கப்படுகிறது.
4. ஆக்கப்பெயர் விகுதிகளின் தனிச்சிறப்பை எழுதுக
- தமிழ்ச்சொற்களோடு ஆக்கப்பெயர் விகுதிகள் சேரும்போது, எண்ணற்ற புதுச்சொற்கள் உருவாகின்றன.
- அவை தமிழ்மொழியின் சொற்களஞ்சியத்தை விரிவடையச் செய்கின்றன.
- தமிழ்மொழியில் பேச்சு வழக்கில் ஆக்கப்பெயர்கள் மிகுதியாக வழங்குவதினைக் காணலம்.
சான்று
- பூ விற்கும் பெண் – பூக்காரி (காரி)
- நெசவு செய்பவர் – நெசவாளி / நெசவாளர் (ஆளி / ஆளர்)
5. ஆக்கப்பெயர்ச்சொற்களை, விகுதிகளைக் கொண்டு எத்தனை வகைகளாக பிரிக்கலாம்? அவை யாவை?
ஆக்கப்பெயர்ச்சொற்களை, விகுதிகளைக் கொண்டு மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை
- பெயருடன் சேரும் விகுதிகள்
- பெயருடன், வினையுடன் சேரும் விகுதிகள்
- வினையுடன், எச்சத்துடன் சேரும் விகுதிகள்
6. பெயருடன் சேரும் விகுதிகளை சான்றுடன் விளக்குக
காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி, தாரர் என்பன பெயருடன் சேரும் ஆக்கப்பெயர் விகுதிகளாகும்
பெயர் | விகுதி | ஆக்கப்பெயர் |
வண்டி | காரன் | வண்டிக்காரன் |
சமையல் | காரர் | சமையல்காரர் |
வேலை | காரி | வேலைக்காரி |
பணி | ஆள் | பணியாள் |
ஆணை | ஆளர் | ஆணையாளர் |
குற்றம் | ஆளி | குற்றவாளி |
விண்ணப்பம் | தாரர் | விண்ணப்பதாரர் |
7. பெயருடன், வினையுடன் சேரும் விகுதியை சான்று விளக்குக
“அகம்” என்ற ஆக்கப்பெயர் விகுதி பெயருடனும், வினையுடனும் சேர்ந்து வரும்
சான்று
- அச்சகம் = அச்சு + அகம் (அச்சு என்னும் பெயருடன் வந்துள்ளது)
- அலுவலகம் = அலுவல் + அகம் (அலுவல் என்னும் பெயருடன் வந்துள்ளது)
8. வினையுடன், எச்சத்துடன் சேரும் விகுதியை சான்று விளக்குக
“மானம்” என்ற ஆக்கப்பெயர் விகுதி வினையுடனும், எச்சத்துடன் சேர்ந்து வரும்
சான்று
- அடமானம் = அடை+ மானம் (அடை என்னும் வினையுடனும் வந்துள்ளது)
- கட்டுமானம் = கட்டு + மானம் (கட்டு என்னும் எச்சத்துடன் வந்துள்ளது)
9. காரன், காரி, கார் என்னும் ஆக்கப் பெயர் விகுதிகள் எவ்வெப்பொருளில் வரும் என்பதனைச் சான்றுடன் விளக்குக.
ஆக்கப்பெயர் விகுதிகளுள் “காரன், காரி, காரர்” என்பன உடைமை, உரிமை, உறவு (தொடர்பு), தொழில் (ஆளுதல்) என்னும் நான்கு பொருளில் வரும்.
சான்று | காரன் | காரி | காரர் |
உடைமை – வீடு | வீட்டுக்காரன் | வீட்டுக்காரி | வீட்டுக்காரர் |
உரிமை – தமிழ்நாடு | தமிழ்நாட்டுக்காரன் | தமிழ்நாட்டுக்காரி | தமிழ்நாட்டுக்காரர் |
உறவு – சொந்தம் | சொந்தக்காரன் | சொந்தக்காரி | சொந்தக்காரர் |
தொழில் – தையல் | தையல்காரன் | தையல்காரி | தையல்காரர் |
10. பணிபுரிவோரை பிரித்து அறிய உதவும் ஆக்கப்பெயர் விகுதிகள் யாவை?
- ஆக்கப்பெயர் விகுதிகளுள் “ஆளர்” என்பது உயர்நிலை பணிவோரையும்
- “ஆள்” என்பது கடைநிலை பணிவோரையும்
- “ஆளி” என்பது பணிபுரிவோருள் இருபாலரையும் குறிக்கும் ஆக்கப்பெயர்களோடு வரும்
சான்று | ஆளர் | ஆள் |
உதவி | உதவியாளர் | உதவியாள் |
காப்பு | காப்பாளர் | காப்பாள் |
மேல் | மேலாளர் | மேலாள் |
சான்று | ஆளி |
நெசவு | நெசவாளி |
முதல் | முதலாளி |
தொழில் | தொழிலாளி |
இலக்கணத் தேர்ச்சி கொள்
பயிற்சி – 1
கீழ்காணும் பத்தியில் உள்ள ஆக்கப் பெயர்களை எடுத்தெழுதுக
எங்கள் பள்ளியில் நடைபெற்ற புத்தகத் திருவிழவிற்கு காவல்துறை ஆணையாளர், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர், “மாணவர்களாகிய நீங்கள் படிப்பகங்களைப் பயன்படுத்தி விண்ணியல், மண்ணயில் போன்ற துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். நல்ல பண்பாளர்களைக் கூட்டாளி ஆக்கிக் கெண்டு உதவியாள் இல்லாமலே ஒரு நிறுவனத்தின் மேலாளராகவோ, முதலாளியாகவோ ஆகலாம்” என்று கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
ஆக்கப்பெயர்கள்
ஆணையாளர் | அழைப்பாளர் | விண்ணியல் |
மண்ணயில் | பண்பாளர் | உதவியாள் |
கூட்டாளி | மேலாளர் | முதலாளி |
பயிற்சி – 2
அடைப்புக்குள் உள்ள ஆக்கபெயர் விகுதிகளைக் கொண்டு, விடுகதைக்குரிய ஆக்கப் பெயர்களை கண்டறிக.
1. வேவு பார்த்திடுவான்; ஓசையின்றி சென்றிடுவான் (ஆளி) _______
விடை : உளவாளி
2. அறிவைத் தேடிப் போகுமிடம்; உலகம் அறிய உதவுமிடம் (அகம்) _______
விடை : நூலகம்
3. வந்தால் மகிழ்ச்சி இது; உழைத்தால் கிடைக்கும் இது (மானம்) _______
விடை : வருமானம்
4. வேட(ஷ)ம் போட்டவன்; வேடதாரிப் பட்டம் வாங்கியவன்? (தாரி) _______
விடை : பட்டதாரி
5. அளந்து அளந்து கொட்டிடுவான்; அகம் மகிழத் தந்திடுவான் (ஆள்) _______
விடை : கொடையாள்
மொழியை ஆள்வோம்
சான்றோர் சித்திரம்
இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர் (1882 – 1954)
தமிழில் எல்லாம் உண்டு; தமிழின் கவிச்சுவைக்கு ஈடுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று; அனைத்து இயல்களையும் கற்க முடியும் எனச் சான்றுகளுடன் எடுத்துச் சொன்ன பெருந்தகை இரிசகமணி டி.கே. சிதம்பரநாதர். இவர் தமது இலக்கிய இரசிகத் தன்மையால் தமிழுக்கும் தமிழருக்கும் புத்துணர்வு ஊட்டியவர். டி.கே.சி-யின் வீட்டுக் கூடத்தில் வட்ட வடிமான தொட்டிக் கட்டு, ஞாயிறுதோறும் மாலை ஐந்து மணிக்குக் கூடிய கூட்டம், இலக்கியத்தைப் பற்றி பேசியது. அவ்வமைப்பு “வட்டத் தொட்டி” என்றே பெயர்பெற்றது. டி.கே.சி. இலக்கியங்களின் நயங்களைச் சொல்லச் சொல்லக் கூட்டத்திலுள்ள அனைவரும் தங்களை மறந்து இலக்கியத்தில் திளைப்பர். தமிழின் இனிமை என்பது மட்டும் அவர்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும் வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதேயே டி.கே.சி. விரும்பினார். தமிழ்க்கலைகள், தமிழ் இசை, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் சுவையையும், மேன்மையையும் எடுத்துச் சொன்னார். கடிங்களிலும் அவற்றையே வியந்து எழுதினார். அவர்தம் கடிதங்கள் இலக்கியத் தரம் கொண்டு புதிய இலக்கிய வகையாகவே கருதப்பட்டன. இதய ஒலி, கம்பர் யார்? முதலான நூல்ககளும் முத்தெள்ளாயிரம், கம்பராமாயணம் ஆகியவற்றுக்கு எழுதிய உரையும் அவர்தம் இலக்கிய நுகர்வுக்கடலின் சில அலைகள் எனலாம். சென்னை மாநில மேலவையின் உறுப்பினராகவும், அறிநிலையத்துறையின் ஆணையராகவும் திகழந்த டி.கே.சி. ஏற்றிய இலக்கியஒளி தமிழ் அழகியமலை வெளிச்சப்படுத்தியது.
வினாக்களுக்கு விடையளிக்க
1. அன்று, அல்ல என்பவற்றுக்கான பொருள்வேறுபாடு அறிந்து தொடர் அமைக்க
- அன்று : நீ செய்யும் செயல் நன்று அன்று.
- அல்ல : நான் கேட்டவை இவை அல்ல.
2. சொல்லச் சொல்ல, திளைப்பர் இலக்கணக் குறிப்புத் தருக
சொல்லச் சொல்ல
- அடுக்குத்தொடர்
திளைப்பர்
- படக்கைப் பலர்பால் எதிர்கால வினைமுற்று.
3. ரசிகர் தமிழ்ச்சொல் எழுதுக. மாநில மேலவை – ஆங்கிலக் கலைச்சொல் தருக
ரசிகர்
- சுவைப்பவர், சுவைஞர்
மாநில மேலவை
- Legislative Council
4. வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி விரும்பினார் – விடைக்கேற்ற வினா அமைக்க
வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிட எதில் திளைப்பதையே டி.கே.சி விரும்பினார்?
5. மேலவை, புத்துணர்வு – இச்சொற்களின் புணர்ச்சி வகையைக் கண்டறிக
மேலவை = மேல் + அவை
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “மேலவை” என்றாயிற்று
புத்துணர்வு = புதுமை + உணர்வு
- “ஈறுபோதல்” என்ற விதிப்படி “புது + உணர்வு” என்றாயிற்று
- “தன் ஒள்று இரட்டல்” என்ற விதிப்படி “புத்து + உணர்வு” என்றாயிற்று
- “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “புத்த் + உணர்வு” என்றாயிற்று
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “புத்துணர்வு” என்றாயிற்று
தமிழாக்கம் தருக
The folk songs of TamilNadu have in them a remarkable charm just as we find in the folk songs of any other country. But what is special in these Tamil songs is, they not only possess a native charm and the aroma of the soil but have preserved in them a certain literary and artistic quality. This is so because the people who speak the language of these folk songs, the Tamils, have had a great historical past and a wonderful literary tradition. Folk songs are so old and yet so full of life that they are always new and progressively modern. These songs were born several centuries ago; they are being born every generation; they will be born and reborn over and over again!
விடை :-
தமிழ்நாட்டின் நாட்டுப்புறப் பாடல்கள் பிற மொழி நாட்டுப்புறப் பாடல்களை விட ஒரு குறிப்பிடத்தக்க அழகுணர்ச்சி நிறைந்த கவர்ச்சியைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அதனால், தமழில் உள்ள பாடல்கள் தனிச்சிறப்பு உடையன. இயற்கை அழகின் தோற்றத்தையும். சொந்த மண்ணின் மணத்தையும், குறிப்பிட்ட இலக்கிய மற்றும் கலை உணர்வுகளையும் தன்னகத்தே பாதுகாத்து வைத்துள்ளது. நாட்டுப்புற்பாடல்கள், அவை புழங்கும் தாய்மொழி ஒரு பெரிய வரலாற்றைக் கடந்த அற்புதமான இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்டதாக இருந்துள்ளது. நாட்டுப்புறப் பாடல்கள், மிகவும் பழமையானவை. அது புதிய வாழ்க்கையையும் படிப்படியாக நவீனமயமாக்கப்படும் வாழ்க்கையையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தலைமுறையினருக்குமு் மறுபடியும் மறுபடியும் தோன்றிப் புதுபித்து வந்துள்ளது.
கீழ்காணும் பாடலின் முதலடியைக் கவனித்து பிற அடிகளில் உள்ள சீர்களை ஒழுங்கு செய்க
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலேஊறுகின்றதீஞ்சுவைத்தண்ணீரே
உகந்ததண்ணீர்இடைமலர்ந்தசுகந்தமணமலரே
மேடையிலேவீசுகின்றமெல்லியபூங்காற்றே
மென்காற்றில்விளைசுகமேசுகத்திலுறும்பயனே
ஆடையிலேஎனைமணந்தமணவாளாபொதுவில்
ஆடுகின்றஅரசேஎன்அலங்கலணிந்தருளே
விடை :
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில்விளைசுகமேசுகத்திலுறும்பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந் தருளே!
இலக்கியநயம் பாராட்டுக
செந்நெலும் கரும்பும் விளைந்தனவே – நல்ல
தேன்பொழி மலர்களும் விரிந்தனவே
இன்னலும் பசியும் போயொழிக – தேசம்
எழிலுடன் கூடியே நலமுறுக
பிரிவுகள் பேசியே பூசலிட்ட – பழம்
பேதமை தனைத்தள்ளி அனைவருமே
ஒருதனிக் குடும்பமாய் வாழ்ந்திடுவோம் – நம்முள்
ஒற்றுமை ஓங்கிடச் செய்திடுவோம்
தமிழன் திருநாள் பொங்கலென்றால் – அதில்
தமிழன் பண்புகள் பொங்குமன்றோ?
புவியெலாம் சேர்ந்தொரு வீடதிலே – யாரும்
புறம்பிலை என்றசொல் தமிழன்றோ?
யாதும் ஊரெனச் சாற்றியதும் – மக்கள்
யாவரும் கேளிர் என்றதுவும்
மேதினிக் குரைத்தவர் நம்முன்னோர் – இன்று
வேற்றுமை நாமெண்ணல் சரியாமோ?
– பெ. தூரன்
ஆசிரியர் குறிப்பு
பெ. தூரன் என்று சுருக்கப் பெயரில் குறிப்பிடப் பெறுபவர் “பெரியசாமித்தூரன்”. இவர் சிறந்த இலக்கியப் புலமையும், ஆழ்ந்த அறிவியல் அறிவும் பெற்றவர். தமிழில் பல நூல்களை எழுதியுள்ளார். குழந்தைகளுக்காகத் தாய்மொழியில் இனிய எளிய பாடல்களை எழுதி, நல்லறிவு புகட்ட முயன்றார். தமிழ்மொழியல் குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியத்தைப் படைத்தளித்த உழைப்பாளி
திரண்ட கருத்து
இயற்கையைப் போற்ற வேண்டும். அதனால் வளம் பெருகும். உணவுப் பொருள் உற்பத்தி பெருகம். வறுமை போகும் என்பவற்றை வலியுறது்துகிறார். முன்பு சாதி, சமய வேறுபாடுகளால் சிதைந்து அடிமைப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அவற்றை நீக்கி அனைவரும் ஒரு குடும்பகமாக வாழ வேண்டுமென அறிவுரை கூறுகிறார். ஒற்றுமையுடன் அனைவரும் ஒன்றுபட்டு வழ்வது நல்லது என்னும் செய்தி, உறுதிபடக் கூறப்பட்டுள்ளது. தமிழர் திருநாளான பொங்கலில் தமிழப்பண்பு வெளிப்பட விழா எடுத்து வாழவேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறார். வேற்றுமைகளை மறந்து, மனித இன உயர்வுகளுக்கு பாடுபடவேண்டுமென்பதை வலியுறுத்துகிறார். எளி சொற்களில் இனிய கருத்தை அருமையாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடை நயம்
மோனைத் தொடை
- ஒருதனி – ஒற்றுமை, தமிழன் – தமிழன், புவியெலாம் – புறம்பிலை, யாதும் – யாவரும் என்னும் சீர்களில் முதலெழுத்து ஒன்றி வந்து சீர்மோனை வந்துள்ளது.
இயைபுத் தொடை
- விளைந்தனவே – விரிந்தனவே, போயொழிக – நலமுறுக, வாழ்ந்திடுவோம் – செய்திடுவோம், சாற்றியதும் – ஏற்றிதுவும் என்னும் ஈற்றுசீர்களில் ஓசைநயம் பொருந்தி இயைபுத்தொடை அமைந்துள்ளது.
சந்தநயம்
- எளிய சொற்களில் ஓசைநயம் பெறப்பாடி இன்புறுவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளமை சந்த நயத்தை புலப்படுத்தும்
மொழியை விளையோடு
கருத்துப் படத்தைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக
தமிழ்மொழியின் ஐவகை இலக்கணப் பிரிவுகளுள் “பொருள் இலக்கணம்” ஆகும். இது தமிழர் வாழ்க்கைமுறை கூறுவதாகும். பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என இரு வகைப்படும். அகப்பொருள் முதற்பொருள, கருப்பொருள், உரிப்பொருள் என மூன்று பிரிவுகளை கொண்டது.
முதற்பொருள் நிலத்தையும், பொழுதினையையும் குறிக்கும். நிலத்தினை ஐந்து வகையாக பிரிப்பர். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பாலை ஆகும்.
பொழுதினை சிறுபொழுது, பெரும்பொழுது என இரு வகையாக பிரிப்பர். சிறுபொழுது ஒருநாளின் வைகறை, காலை, நண்பகல், மாலை, ஏற்பாடு, யாமம் என்னும் ஆறு பிரிவு கொண்டது. பெரும்பொழுது ஓர் ஆண்டின் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் ஆறு பிரிவுகளை உடைது.
கருப்பொருள் என்பது தெய்வம், மக்கள், புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் என்னும் பிரிவுகளை கொண்டது. இது ஐந்து திணைகளுக்கும் தனித்தனியே அமையும்
உரிப்பொருள் ஐந்து வகையாக பிரிப்பர். குறிஞ்சி- புணர்தலும் புணர்தல் நிமித்தமும், முல்லை- இருத்தலும் இருத்தல் நிமித்தமும், மருதம்- ஊடலும் ஊடல் நிமித்தமும், நெய்தல்- இரங்கலும் இரங்கல் நிமித்தமும், பாலை- பிரிதலும் பிரிதல் நிமித்தமும் இது ஐந்திணைக்குரிய உரிப்பொருளாகும்.
எண்ணங்களை எழுத்தாக்குக.
![]() | எண்ணித் துணிந்தால் வழுக்குப் பாறையும் ஏணிப்படி! வெற்றி என்பது விழாகனி! அதை எட்டிப்பறிப்பதே காலத்தின் விதி! வெற்றி பெற வேண்டும் என்பதே எல்லோருக்கும் ஆசை! அடைந்தவர் என்னவோ மிகவும் சொர்ப்பம்! நெஞ்சில் உறுதியும் உடலில் வலிமையும் எதிர்நீச்சல் குணமுமே ஏற்றமிகு படிகள்! ஆபத்த நிறைந்தது தான் ஆழ்கடல்! அதில் அள்ளிவரும் முத்தோ பெருஞ்செல்வம்! துணிந்துவிட்டால் இமயமும் உனது காலுக்கு கீழ்! என்பதே இப்படித்தின் மூலம் புரிந்து கொண்டவை. |
புதிர்களுக்கான விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக
(கம்பு, மை, வளை, மதி, இதழ், ஆழி)
1. எலியும் நுழையும்; எழிலரசி கையும் நுழையும் ________
விடை : வளை
2. அடிக்கவும் செய்யலாம்; கோடைக்கு கூழாகவும் குடிக்கலாம் ________
விடை : கம்பு
3. கண்ணிலும் எழுதலாம்; வெண்தாளிலும் எழுதலாம் ________
விடை : மை
4. அறிவின் பெயரும் அதுதான்; அம்புலியின் பெயரும் அதுவேதான் ________
விடை : மதி
5. பூவின் உறுப்பும் நானே; புன்னகையின் பிறப்பிடமும் நானே ________
விடை : இதழ்
6. வண்டியையும் இயக்கமும்; பெரும் கப்பலையும் தாங்கும் ________
விடை : ஆழி
நிற்க அதற்கு தக…
கலைச்சொல் அறிவோம்
Document – ஆவணம் | Invasion – படையெடுப்பு |
Translator – மொழிபெயர்ப்பாளர் | Culture – பண்பாடு |
Agreement – ஒப்பந்தம் | Sailor – மாலுமி |
அறிவை விரிவு செய்
மறைக்கப் பட்ட இந்தியா – எஸ். இராமகிருஷ்ணன் |
நான் வித்யா- லிவிங் ஸ்மைல் வித்யா |
ஜீவா – வாழ்க்கை வரலாறு – கே. பால தண்டாயுதம். |
சொல்லாக்கம் – இ. மறைமலை |