Class 12th Tamil Book Solution for CBSE | Lesson 2.5 – நால்வகைப் பொருத்தங்கள்

பாடம் 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 2.5 “நால்வகைப் பொருத்தங்கள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 12 Tamil Text Books – Download

பாடநூல் வினாக்கள்

இலக்கணத் தேர்ச்சிகொள்

1) தமிழில் திணைப்பாகுபாடு ______ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

  1. பொருட்குறிப்பு
  2. சொற்குறிப்பு
  3. தொடர்க்குறிப்பு
  4. எழுத்துக்குறிப்பு

விடை : பொருட்குறிப்பு

2) “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே” – இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல் ______

  1. நன்னூல்
  2. அகத்தியம்
  3. தொல்காப்பியம்
  4. இலக்கண விளக்கம்

விடை : தொல்காப்பியம்

3) யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே _____

  1. அஃறிணை, உயர்திணை
  2. உயர்திணை, அஃறிணை
  3. விரவுத்திணை, அஃறிணை
  4. விரவுத்திணை, உயர்திணை

விடை : உயர்திணை, அஃறிணை

4) பொருத்தி விடை தேர்க.

அ) அவன் அவள் அவர்1) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
ஆ) நாங்கள் முயற்சி செய்வோம்2) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
இ) நாம் முயற்சி செய்வோம்3) தன்மைப் பன்மைப் பெயர்கள்
ஈ) நாங்கள், நாம்4) பதிலிடு பெயர்கள்
  1. 4, 1, 2, 3
  2. 2, 3, 4, 1
  3. 3, 4, 1, 2
  4. 4, 3, 1, 2

விடை : 4, 1, 2, 3

5) மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை?

திணை, பால், எண், இடம்

6) உயர்திணைப் பன்மைப் பெயர்கள், பன்மை விகுதி பெற்றுவருமாறு இரண்டு தொடர்களை எழுதுக.

  • நீங்கள் எங்கள் வீட்டிற்கு வாருங்கள்.
  • அவர்கள் ஆலயம் வந்தார்கள்.

குறு வினா

1.மொழியின் பண்புகள் யாவை?

திணை, பால், எண், இடம்

2. பயனிலை விகுதிகளில் எவை பால் பகுப்பைக் காட்டுகின்றன?

ஆன், ஆள், ஆர், அது அன்

3. தற்காலத்தில் அஃறிணை எழுவாய் மாற்றம் அடைந்துள்ளதை உணர்த்தும் இரு தொடர்களை எழுதுக.

காளைமாடு வயிலில் உழுதது

ஆண்குரங்கு மரத்தில் குதித்தது

4. பெயர்ச்சொற்களை திணை அடிப்படையில் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பெயர்ச்சொற்களை திணை அடிப்படையில் இரண்டு வகைப்படும். அவை

  • உயர்திணைப் பெயர்
  • அஃறிணைப் பெயர்

5. இடம் எத்தனை வகைப்படும்?

இடம் மூவகைப்படும். அவை தன்மை, முன்னிலை, படர்க்கை என

6. பதிலிடு பெயர்கள் யாவை?

அவன், அவள், அவர், அது, அவை

7. தன்மை, முன்னிலை, படர்க்கை என அழைக்கப்படுவன யாவை?

  • பேசுபவன்
  • முன்னிருந்து கேட்பபவன்
  • பேசப்படுபவன் (அல்லது) பேசப்படும் பொருள்

ஆகிய மூன்றும் முறையே தன்மை, முன்னிலை, படர்க்கை என அழைக்கப்படும்

8. தன்மைப் பன்மையின் வகைகளை எழுதுக.

உளப்பாட்டுத் தன்மைப் பன்மை, உளப்படுத்தாகத் தன்மைப் பன்மை என இரு வகைப்படும்

9. தன்மைப் பன்னமயின் வகைகள் யாவை?

தன்மைப்பன்மை இரண்டு வகைப்படும். அவை உளப்பாட்டுத் தன்மை, உளப்படுத்தாத் தன்மை பன்மை

10. உளப்படுத்தாகத் தன்மைப் பன்மை என்பது யாது?

பேசுபவர் முன்னிலையாரைத் தவிர்த்துத் தன்மைப் பன்மையில் பேசுவது உளப்படுத்தாத தன்மைப் பன்மை ஆகும்.

சான்று : நாங்கள் முயற்சி செய்வோம்

11. மொழியின் இலக்கணம் குறித்து தமிழ் நடைக் கையேட்டின் கூற்று யாது?

ஒரு மொழியில் அடிப்படை அறிவு என்பது அந்த மொழியில் உள்ள எழுத்துகளையும் சொற்களையும் அவற்றின் பொருளையும் வாக்கிய அமைப்புகளையும் தெரிந்திருப்பதே. மேலே குறிப்பிட்ட நான்கையும் உள்ளடக்கியது ஒரு மொழியின் இலக்கணம்.

கற்பவை கற்றபின்

இடப்பாகுபாடு தொடர் அமைப்பிற்கு இன்றியமையாதது என்பதைப் பாடப்பகுதியிலிருந்து சான்று காட்டுக.

தமிழில் தன்மையிலோ முன்னிலையிலோ ஒருமை பன்மை பாகுபாடு உண்டே தவிர ஆண்பால், பெண்பால் பாகுபாடு இல்லை

சான்று நான் புத்தகம் படித்தேன்

தன்மைப் பன்மை:-

உளப்பாட்டுத் தன்மைப் பன்மை, உளப்படுத்தாகத் தன்மைப் பன்மை என இரு வகைப்படும்

உளப்பாட்டுத் தன்மைப் பன்மை:-

பேசுபவர் (தன்மை) முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பேசுவது உளப்பாட்டுத் தன்மைப் பன்மை ஆகும்.

சான்று : நாம் முயற்சி செய்வோம்

உளப்படுத்தாகத் தன்மைப் பன்மை:-

பேசுபவர் முன்னிலையாரைத் தவிர்த்துத் தன்மைப் பன்மையில் பேசுவது உளப்படுத்தாத தன்மைப் பன்மை ஆகும்.

சான்று : நாங்கள் முயற்சி செய்வோம்

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

மாயூரம் வேதநாயகம் (1826-1889)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்னிந்தியப் பகுதியில் ஏற்பட்ட மிகக்கொடிய பஞ்சத்தைத் தாது வருடப் பஞ்சம் (Great Famine 1876-1878) என்று, இன்றும் நினைவு கூர்வர். ஒரு கோடி மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கி இறந்திருக்கலாம் எனப் பதிவுகள் கூறுகின்றன. இதைக் கண்டு மனம் பொறுக்காத தமிழர் ஒருவர் மனமுவந்து தமது சொத்துகள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாகக் கோபாலகிருஷ்ண பா ரதியார், ‘நீயே புருஷ மேரு…’ என்ற பாடலை இயற்றி அவரைப் பெருமைப்படுத்தினார். அவர்தான், நீதிபதி மாயூரம் வேதநாயகம். இவர், மொழிபெயர்ப்பாளராகவும் நாவலாசிரியராகவும் பெயர் பெற்றவர்; தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை இயற்றியவர். மாயவரத்தின் நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றிய இவர், தமது சமகாலத் தமிழறிஞர்களான மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார், இராமலிங்க வள்ளலார், சுப்பிரமணிய தேசிகர் போன்றோரிடம் நட்புப் பாராட்டி நெருங்கியிருந்தார்; கி.பி. 1805முதல் கி.பி. 1861ஆம் ஆண்டுவரை ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து ‘சித்தாந்த சங்கிரகம்’ என்ற நூலாக வெளியிட்டார்; மேலும் பெண்மதி மாலை, திருவருள் அந்தாதி, சர்வ சமய சமரசக் கீர்த்தனை, சுகுண சுந்தரி முதலிய நூல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார். இசையிலும் வீணை வாசிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்த இவர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார்; வடமொழி, பிரெஞ்சு, இலத்தீன் ஆகிய மொழிகளைக் கற்றறிந்திருந்தார். இவர், பெண்கல்விக்குக் குரல் கொடுத்த மிக முக்கிய ஆளுமையாக அறியப்படுகிறார். இவருடைய மொழியாட்சிக்குச் சான்றாக, பிரதாப முதலியார் சரித்திரத்திலிருந்து ஒரு பத்தி:

“கல்வி விஷயத்தைப் பற்றி உன் பாலன் சொல்வதைக் கேள்” என்று என் பிதா ஆக்ஞாபித்தார். உடனே என் தாயார் என் முகத்தைப் பார்த்தாள். நான் முன் சொன்னபடி என் பாட்டியாரிடத்திலே கற்றுக்கொண்ட பாடத்தை என் தாயாருக்குச் சொன்னேன். அதைக் கேட்டவுடனே என் தாயாருக்கு முகம் மாறிவிட்டது. பிறகு சற்று நேரம் பொறுத்து, என் தாயார் என்னை நோக்கி, “என  ண்மணியே, நீ சொல்வது எள்ளளவுஞ் சரியல்ல. கல்வி என்கிற பிரசக்தியே இல்லாதவர்களான சாமானிய பாமர ஜனங்களைப் பார். அவர்களுடைய செய்கைகளுக்கும் மிருகங்களுடைய செய்கைகளுக்கும் என்ன பேதமிருக்கிறது? நமக்கு முகக் கண்ணிருந்தும் சூரியப் பிரகாசம் இல்லாவிட்டால் என்ன பிரயோஜனம்?” என்றார்.

வினாக்கள்

1. தென்னிந்தியப்பகுதியில் ஏற்பட்ட மிகக்கொடிய பஞ்சத்தின் பெயர் என்ன?

தாது வருடப் பஞ்சம் (Great Famine 1876-1878)

2. தமிழின் முதல் நாவல் எது? அதனை எழுதியவர் யார்?

தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரனம். அதனை எழுதியவர் மாயூரம் வேதநாயகம்

3. மாயூரம் வேதநாயகம் காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்கள் யாவர்?

மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார், இராமலிங்க வள்ளலார், சுப்பிரமணிய தேசிகர்

4. தமிழின் முதல் நாவலான பிராதாப் முதலியார் சரித்திரத்தை இயற்றியவர் யார்?

மாயூரம் வேதநாயகம்

5. பார்த்தாள் – பகுபத உறுப்பிலக்கணம் தருக

பார்த்தாள் = பார் + த் + த் + ஆள்

  • பார் – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஆள் – பெண்பால் வினைமுற்று விகுதி

6. மாயூரம் வேதநாயகம் எழுதிய நூல்கள் யாவை?

ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து ‘சித்தாந்த சங்கிரகம்’ என்ற நூலாக வெளியிட்டார்; மேலும் பெண்மதி மாலை, திருவருள் அந்தாதி, சர்வ சமய சமரசக் கீர்த்தனை, சுகுண சுந்தரி முதலிய நூல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார்;

7. “சொன்னேன்” இச்சொல்லின் வேர்ச்சொல் எது?

வேர்ச்சொல் – சொல்

மொழிபெயர்ப்புப் பகுதியைப் படித்து, இருபது ஆங்கிலச் சொற்களையும் அதன் தமிழாக்கத்தையும் எடுத்து எழுதுக.

In 1977, shocked at the environmental devastation caused by deforestation in her beloved Kenya, Wangari Mathai founded the Green Belt Movement. For thirty years, the movement has enabled many women to plant trees in their regions providing them with food, fuel and halting soil erosion and desertification. She used the movement to enlighten the people on the fruits of representative democrcy. This led Kenya to Kenya’s first fully democratic elections in a generation. In the election, Mathai was elected to the Parliament and made a Minister of environment. She was conferred a Nobel Prize in 2004 because of her outstanding success in guiding Kenyan women to plant more than thirty million trees. She has transformend the lives of tens of thousands of women through sustainable social forestry schemes.

1977ஆம் ஆண்டில் தனது உயிரினும் இனிய கென்யா நாட்டில் காடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு கண்டு மனம் வெதும்பி வங்காரி மத்தாய் பசுமை வளாக இயக்கத்தைத் தோற்றுவித்தார். அதைத் தொடர்ந்து முப்பது ஆண்டுகள், இந்த இயக்கத்தால் பல ஆப்பிரிக்கப் பெண்கள் தமது பகுதிகளில் மரங்களை நட்டு, அதன் வழியாகத் தங்களுக்குத் தேவையான உணவையும் எரிபொருளையும் தாமே ஈட்டியதோடு நில்லாமல் ஆப்பிரிக்காவில் நிலவிய மண் அரிப்பால் நிலம் பாலைவனமாவதையும் தடுத்து நிறுத்தினர். அவர் இந்த இயக்கத்தின் வழியாக மக்களாட்சியின் பயன்களை அறியச் செய்தார். இது அத்தலைமுறையினர் அனைவருக்கும் முதல்முறையாகத் தேர்தலில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இத்தேர்தலில் வங்காரி மத்தாய் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுப் பிறகு சுற்றுச்சூழல் அமைச்சரானார். கென்யப் பெண்களுக்கு வழிகாட்டி, மூன்றுகோடி மரங்களை நட்டு வளர்த்ததால் அவரது தன்னலமற்ற பணியைப் பாராட்டி, 2004ஆம் ஆண்டு வங்காரி மத்தாய்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.

devastation – பேரழிவுdeforestation – காடழிப்பு
thirty years – முப்பது வருடங்கள்founded – நிறுவப்பட்டது
regions –  மண்டலங்கள்providing – விநியோகம்
halting – ஓய்விடங்கள்soil erosion – மண்ணரிப்பு
desertification – பாலைவனமாக்கல்enlighten – அறிவூட்டல்
representative – பிரதிநிதிgeneration – தலைமுறை
democracy – குடியாட்சிparliament – நாடாளுமன்றம்
election – தேர்தல்tens of thousands – பல்லாயிரக்கணக்கான
success – வெற்றிMinister of environment – சுற்றுச்சூழல் அமைச்சர்
thirty million – மூன்றுகோடிGreen Belt Movement – பசுமை வளாக இயக்கம்
social forestry schemes – சமூக காடுகள் வளரப்புத்திட்டம்

மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

எ.கா:- விலை, விளை, விழை

விடை : கார் பருவத்தில் நன்றாக விளைந்ததால் தானியங்களின் விலை குறையாமல் இருக்க ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விழைவதாக அரசு அறிவித்தது

1. தலை, தளை, தழை

விடை : ஆட்டிற்கு தழை திருடப்போன இடத்தில் மரத்தில் தலை தட்டி விழுந்தவனை தோட்டக்காரன் தளையிட்டு ஊர்த்தலைவரிடம் அழைத்து சென்றான்.

2. கலை, களை, கழை

விடை : கழை காட்டில் தீப்பிடித்தால் களைகளுடன் கலைமான்களும் செத்து மடிந்தன

3. அலை, அளை, அழை

விடை : கடல் அலையில் விளையாடச் சென்ற முருகன் அளையில் இருந்த அரவம் தீண்ட எத்தனை முறை அழைத்தும் பேச்சு மூச்சின்றி மயங்கிக் கிடந்தான்.

இலக்கிய நயம் பாராட்டுக.

வெட்டி யடிக்குது மின்னல் – கடல்

வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;

கொட்டி யிடிக்குது மேகம் – கூ

கூவென்று விண்ணைக் குடையுது காற்று

சட்டச்சட சட்டச்சட டட்டா – என்று

தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்

எட்டுத்திசையும் இடிய – மழை

எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!

– பாரதியார்

முன்னுரை:-

இப்பாடலின் ஆசிரியர் மகாகவி பாரதியார் ஆவார். எட்டையபுரத்தில் பிறந்த இளைமையிலே கவிப்பாடும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார். நாட்டு விடுதலைக்காக அநேக பாடல்களை பாடியதால் தேசியக்கவி என்றும் அழைக்கப்பட்டார். இவரது கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் என்னும் முப்பெரும் நூல்களாக மிகவும் சிறப்புப் பெற்றவையாகும்.

திரண்ட கருத்து:-

பூமியை நோக்கி அடிக்கும் மின்னலானது பளிச்சென்ற வெளிச்சத்துடன் இருக்கின்றது. சூறாவளி காற்று அடிப்பதால் விண்ணத்தொடும் அளவிற்கு கடலலையானது பொங்குகின்றது. மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி உண்டாக்கும் ஓசையானது காதால் கேட்க முடியாத அளவிற்கு கொட்டி இடிக்கின்றது. “கூகூ” என்ற ஓசையுடன் காற்றானது வேகமாக வீசி விண்ணை குடைகின்றது. மழைத்துளி மண்ணில் விழும்போது உண்டாகும் ஒலியோ மத்தளங்கள் இசைத்து தாளம் போடுவது போல ஒலிக்கின்றன. இடைவிடாமல் மழையைப் பொழிந்து பொழிந்து வானம் கனைக்கின்றது. எட்டுத்திசையும் இடியின் ஓசை கேட்க மழை எப்படிப் பூமியை வந்தடைந்தது.

தொடை நயம்:-

மோனை:-

குயவனக்கு யானை, செய்யுளுக் மோனை

முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும்

சான்று : வெட்டியடிக்கும் – வீரத், ட்டுத்திசையும் – ங்ஙனம்

எதுகை:-

மதுரைக்கு வைகை, செய்யுளுக்கு எதுகை

இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது மோனையாகும்

சான்று : வெட்டியடிக்கும் – எட்டுத்திசையும், சட்டசட – தொட்டி

அணி நயம்:-

அணியற்ற கவிதை பிணியுள்ள வணிதை

மழையின் சிறப்பை உணர்த்த மழை பெய்வதற்கு முன்னால் நிகழும் நிகழ்ச்சிக்கான இடி, இடித்தல், மின்னல், காற்று வீசுதல் ஆகிய நிகழ்வுகளை எல்லாம் உயர்வுபடுத்திக் கூறியுள்ளதால் இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி இடம் பெற்றுள்ளது.

சொல் நயம்:-

சொல் போனால், பல் போகும்

பாரதியார் இப்பாடலில் பயன்படுத்தியிருக்கும் சொற்களின் ஒலிக்குறிப்புகளும் பொருளும் ஒரு பெரும் புயலை நம் கண்முன் காட்டுகின்றன. புதிய ஒலி இன்பத்தையும், புதிய பொருள் உணர்ச்சியையும் பாரதியார் இப்பாடலில் பயன்படுத்தியுள்ளார்

சந்த நயம்:-

சந்தம் தமிழுக்கு சொந்தம்

ஏற்ற இசைக் கருவியுடன் இசைத்து பாடினால் கேட்போருக்கும், பாடுவோருக்கும் இனிமையைத் தரும் விதத்தில் தாள நயத்துடன் பாரதியார் இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடல் சிந்துப் பா வகையை சார்ந்ததாகும்.

முடிவுரை:-

கற்றாரும், கல்லாருக்கும் ஏற்ற வகையில எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.

கீழ்காணும் அழைப்பிதழைப் பத்தியாக மாற்றுக

Class 12 Tamil Chapter 2.5 கீழ்காணும் அழைப்பிதழைப் பத்தியாக மாற்றுக

பத்தி

அக்டோபர் மாதம் 2-ம் நாள் காலை 10 மணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் பேரிடர் மேலாண்மைக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கிற்கு இயற்கை வேளாண் உழவர் திரு. அமுதன் முன்னிலை வகிக்கிறார். இக்கருத்தரங்கில் செங்குட்டுவன் அவர்கள் இயற்கைச் சீற்றங்களும் பருவகால மாற்றங்களும் என்ற தலைப்பிலும், திரு. முகிலன் அவர்கள் பேரிடர்களை எதிரத்து கொள்ளுதலும் தீர்வுகளும் என்ற தலைப்பிலும், திரு. வின்சென்ட் அவர்கள் பேரிடர்க் காலங்களில் செய்யக்கூடியதும் செய்யக்கூடாதம் என்ற தலைப்பிலும் கருத்துகளை தர உள்ளனர்.

கருத்தரங்கின் நிறைவாக, பேரிடர் மேலாண்மை இயக்குநர், திரு. இமயவரம்பன் அவர்கள் தலையுரை ஆற்றுவார்கள். நிகழ்ச்சிக்கு வருகின்றவர்களைச் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் திருமதி. அரசி அவர்கள் வரவேற்க உள்ளார். பசுமைப்படை மாணவர் தலைவர் ஜமீலா நன்றியுரை ஆற்றிட உள்ளார். தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடனும், நிறைவில் நாட்டுப் பண்ணுடனும் நிகழ்ச்சி நிறைவடையும். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக.

Class 12 Tamil Chapter 2.5 எண்ணங்களை எழுத்தாக்குக.

வளமாக எல்லோரும் வாழ வசதியான இயற்கையைத் தந்த பூமியாகிய நான் இன்று வெப்ப மிகுதியால் உருகிக் கொண்டிருக்கிறேன். பச்சை பட்டாடை உடுத்தி பசுமையத் தந்த என்ன வெம்மை என்னும் காட்டில் தள்ளி விடும் மனித இனமே நான் இல்லை என்றால் நீ எப்படிப் பூமியில் வாழ்வாய்…!

எல்லா காலங்களிலும் பருவங்கள் தவறாது மழையைத் தந்தேன். நீங்கள் எல்லோரும் வளமாய் வாழ நல்ல நிலத்தை தந்தேன். உங்களுடைய சுயநலத்திற்காக என் அன்பு மகளாம் வளமான காட்டை அழித்து என்னை வறுமையாக்கி, வறட்சியை உண்டு பண்ணியது ஏன?

இன்றைய வெப்ப மிகுதியால் என் உடல் சூடேறுகிறது. என்னைக் குளிர்விக்க வேண்டிய நீங்களே மீண்டும் மீண்டும் மரங்களை வெட்டுகின்றீர்கள் என்று எனக்காக அல்ல உங்களுக்காக கேட்கிறேன். எப்போது ஒரு மரத்தை நடப்போகின்றீர்கள். அனலாக கொதிக்கும் உன் உடலை கொஞ்சமாவது குளிர்விப்பாயா?

நஞ்சாகி வரும் நெகிழியை முற்றிலுமாகத் தவிர்த்து விடு. என் மேனியடையும் சூட்டைக் குறைந்துவிடு. எல்லா வளத்தையும் இலவசமாகத் தரும் என்னைக் காக்க மறந்திடாதீர்கள்! வரும் தலைமுறையினரும் வாழ்ந்திட நீங்கள் தடையாக இருக்காதீர்கள்.

புதிர்கேற்ற விடையை அறிக

அ)

அடைமழை பெய்த அடுத்த நாள்
படைபடையாய் வந்ததாம்
பரங்கி நாட்டு விமானம்
எதிரி சுடாமலேயே
இறகொடிந்து இறந்ததாம் – என்ன?

  • ஈசல்

ஆ)

தண்ணீரும் மழையும் இல்லாமல்
பயிர் பச்சையாய் இருக்கிறது
பாக்கு வெற்றிலை போடாமல்
வாய் சிவப்பாய் இருக்கிறது – என்ன?

  • கிளி

இ)

கறுத்த ரோஜா மொட்டு
கனத்த மேகம் கண்டு
கணத்தில் இதழ் விரிந்திடும்
காத்திடும் பின் சாய்ந்திடும் – அது என்ன?

  • குடை

ஈ)

மூன்று பெண்களுக்கும் ஒரே முகம்
மூத்த பெண் ஆற்றிலே;
நடுப்பெண் காட்டிலே;
கடைசிப்பெண் வீட்டிலே; – அவைகள் யாவை?

  • முதலை, உடும்பு, பல்லி

உ)

நான் ஏறும் குதிரை
நாலுகால் குதிரை
அந்தக் குதிரைக்கு
ஆயிரம் கண்கள் அது என்ன?

  • கட்டில்

படிப்போம் பயன்படுத்துவோம் (தொடர்வண்டி நிலையம்)

Platformநடைமேடை
Train Trackஇருப்புப்பாதை
Railway Signalதொடர்வண்டி வழிக்குறி
Ticket Inspectorபயணச்சீட்டு ஆய்வர்
Level Crossingஇருப்புப்பாதையைக் கடக்குமிடம்
Metro Trainமாநகரத் தொடர்வண்டி

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment