பாடம் 4.6 மெய்ப்பாடு
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 4.6 “மெய்ப்பாடு” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
இலக்கணத் தேர்ச்சிகொள்
1. கல்வியை நிலைக்களனாகக் கொண்ட மெய்ப்பாடு
- பெருமிதம்
- உவகை
- நகை
- மருட்கை
விடை: பெருமிதம்
2. நகை என்னும் மெய்ப்பபாடு தோன்றும் நிலைக்களன்களுள் ஒன்று
- கொடை
- பிணி
- பேதைமை
- செல்வம்
விடை: பேதைமை
3. எண்வகை மெய்ப்பபாடுகள் யாவை?
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை
4. மருட்கை என்னும் மெய்ப்பபாடு தோன்றும் நிலைக்களன்கள் யாவை?
- புதுமை
- பெருமை (பெரியது)
- சிறுமை (சிறியது)
- ஆக்கம் (வியத்தகு செயல்)
பாடநூல் வினாக்கள்
நெடு வினா
சூரியனைப் பிரசவிக்கும் பாறை எனும் சிறுகதை உணர்த்தும் கருத்துகளைச் சுவை குன்றாமல் சுருக்கி வரைக.
மனிதனுக்குக் குழந்தைப் பருவம் என்பது அற்புதமான அனுபவங்களை அளிக்கும் பருவமாகும். இதனை ஒரு சிறுவன் வாயிலாகத் தோப்பில் முகம்மது மீரான் தமது ‘சூரியனைப் பிரசவிக்கும் பாறை என்ற கதைமூலம் நயம்படக் கூறியுள்ளார். அது உணர்த்தும் கருத்தைச் சுவை குன்றாது காண்போம்.
பள்ளியில் ஆசிரியர் “சூரியன் எங்கே உதிக்கிறது?” என்று கேட்டதும் மீரான்மட்டும் எழுந்திருந்து கிழக்குத் திசையைக் காட்டிப் பாராட்டைப் பெறுகிறான். அவன் நாள்தோறும் தன் கிராமத்தில், காலையில் எழுந்து பார்க்கும்போது பாறையின் பிளவிலிருந்து வெளிப்படுவதைக் கண்டிருக்கிறான். பகலில் வானில் மேயும் சூரியன், பொழுதானதும் மீண்டும் வேறு பாறையின் வயிற்றுக்குள் சென்றுவிடுவதையும், அதன்பின் இரவு மேய்வதையும் பார்த்திருக்கிறான். இளம் வயதில் அவன் கேள்விப்பட்ட செய்திகள் உண்மையா என அறிய ஏங்கினான்.
சூரியனைப் பெறும் பாறையைக் காணவும், அங்கு இருப்பதாகச் சொல்லப்பட்ட ஊசிக் கிணற்றையும் அதைக் காவல் காத்து நிற்கும் பாம்பையும் பார்க்க ஆசைப்பட்டான். அதற்கு ஆற்றைத் தாண்டிப் போக வேண்டும் என்று கேள்விப்பட்ட சின்ன மனம், வழி அறியாது திகைத்தது.
கொழும்பிலிருந்து வந்த தங்கன் (சமய அறிஞர்) தாகம் தீர்க்க உருவாக்கிய கிணறு ஆழமானது. அதைத் தம் தாகத்தைத் தீர்த்துக் கொண்டதும் அவர் மூடிவிட்டார். அதைக் காக்கும் பாம்பு அங்குச் செல்பவரைத் தீண்டிக் கொன்றுவிடுமென்றும் அம்மா சொன்னது இளம் மனத்தில் ஆழப்பதிந்திருந்தது. மீரானுக்கு அந்தப் பாறையில் ஒரு தடவையாவது ஏறிப் பார்த்துவிடவேண்டும் என்ற தீராத ஆசை வளர்ந்தது.
மேலே உள்ள பள்ளிக்கு (மசூதிக்கு) நேச்சா இல்லாமல் போகக் கூடாது. அந்தக் கிணறு ஒரு கப்பல் அளவு நூலாலும் ஆழம் காணமுடியாதது என்பதெல்லாம் உண்ணும்போதும் உறங்கும்போதும் மனத்தில் ஓடிக்கொண்டே இருந்தது.
ஒருமுறை நேச்சா கொண்டு சென்றவர்களைத் தொடர்ந்து சென்றவன், நேச்சா (நேர்த்திக்கடன்) முடித்தவர்கள் திரும்பியபோது தனித்துத் தங்கி, ஊசிக்கிணற்றையும் அதை மூடிய பாறையையும் சென்று பார்க்க நினைத்தான். பாறைமேல் நின்று பச்சைப் பசேலென்ற பெருவெளியையும் மாதா கோவிலையும் சிலுவையையும் கண்டான். சற்றுத் தொலைவில் நெடும்பனையில் எடுத்த பதனி எடுத்து வந்தவனைத் திரும்பிப் பார்த்தான். பின்னால் பாம்பு படம் எடுத்து நிற்பதைக் கண்டு பயந்தான். கையும் காலும் மரத்து இதயத் துடிப்பு நின்றது. பாம்பு படத்தைச் சுருக்கிக் கொண்டது. பாம்புடன் பேசினான்.
பாம்பு இல்லை சுடிக்கமாட்டேன்’ எனக் கூறி நகர்ந்தது. நடந்த வழியில் மீண்டும் திரும்பிப் பார்த்தான். பாம்பு தலை தூக்கியது. தன்னைக் கடிக்கக்கூடாது என்றும் தெரியாமல் வந்து விட்டதால் போய் விடுவதாகவும் மீரான் சொன்னான். எதிரில் வந்த பாம்பின் அசைவு மொழி மீரானுக்குப் புரிந்தது. தான் சூரியனைப் பிரசவிக்கும் பாறையையும் ஊசிக் கிணற்றையும் பார்க்க வந்ததாகக் கூறினான். அந்தப் பாறை சூரியனைப் பிரசவிக்கும் பாறை இல்லை என்றும் அதற்குக் கிழக்கிலுள்ள பகுதிகளை மறைத்து நிற்கிறது என்றும் பாம்பு கூறியது. உண்மை அறிய விரும்பிய பையனைப் பாம்பு பாராட்டிவிட்டு சிறுவனைத் தன் நண்பன் எனக் கூறியது.
பாம்புடன் நடத்திய உரையாடலில், பாம்புகள் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவை என்பதையும் மனிதர்கள் சத்தியத்திற்குக் கட்டுப்படாத நீசர்கள் என்றும் காலப்போக்கில் புரிந்து கொள்ளமுடியும் என்றும் பாம்பின் மூலம் மீரான் அறிந்தான்.
தான் கிணறு பற்றிக் கேட்டது கட்டுக்கதை என்றும் பாம்பு குறித்துத் தான் கேள்விபட்டதெல்லாம் மூடர் பேச்சு என்றும் புரிந்து கொண்டான். வட்டக்கல் என்பது கிணற்றின் மூடி அல்லவென்றும் பாம்புகளுக்கு வீடு என்றும் தெரிந்து கொண்டான். யாரோ ஒருவர் முன்பு சொன்ன பொய் மூடநம்பிக்கையாக மாறியதை இச்சந்திப்பு மீரானுக்கு அறிவுறுத்தியது. உண்மையை விளக்கிவிட்டுப் பாம்பு நீங்கிச் சென்று வட்டக்கல் கீழ் மறைந்தது. அன்று சூரியனும் மறையவே பாறை மீதிருந்து மீரான் இறங்கியபோது, தந்தை கம்புடன் நின்றதைக் கண்டு. “வாப்பா அடிக்காதே” எனத் தந்தையிடம் கெஞ்சினது நினைவுக்கு வந்தது.
இன்று மிரானுக்கு வயது முப்பத்தாறு முடிந்துவிட்டது. அன்று பாம்பு சொன்னதன் பொருளும் புரிந்தது. பாம்புக்கு அன்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற உறுதி பூண்டான். இன்று தந்தை கம்புடன் நிற்கவில்லை. இளமை நினைவுகள் வளரவளர. அந்த எண்ணங்களிலிருந்து மறைவதில்லை. இளமையில் கற்பது கல்மேல் எழுத்தாகுமல்லவா?
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக.
1. வெகுளி என்பதன் பொருள்
- அழுகை
- சினம்
- தோன்றல்
- அஞ்சாமை
விடை : சினம்
2. தறுகண் என்பதன் பொருள்
- அழுகை
- சினம்
- தோன்றல்
- அஞ்சாமை
விடை : அஞ்சாமை
3. மூப்பு என்பதன் பொருள்
- அழுகை
- சினம்
- தோன்றல்
- முதுமை
விடை : முதுமை
4. மடம் என்பதன் பொருள்
- அழுகை
- சினம்
- திரிந்து உணர்தல்
- குழந்தைத்தனம்
விடை : திரிந்து உணர்தல்
5. அசைவு என்பதன் பொருள்
- அழுகை
- நிலை தாழ்தல்
- திரிந்து உணர்தல்
- குழந்தைத்தனம்
விடை : நிலை தாழ்தல்
5. புணர்வு என்பதன் பொருள்
- அன்பினால் இணைதல்
- நிலை தாழ்தல்
- திரிந்து உணர்தல்
- குழந்தைத்தனம்
விடை : நிலை தாழ்தல்
சிறு வினா
1. நகை என்ற மெய்ப்பாடு தோன்றும் நிலைக்களன்கள் யாவை?
- எள்ளல், இளமை, பேதமை, மடம்
2. அழுகை என்ற மெய்ப்பாடு தோன்றும் நிலைக்களன்கள் யாவை?
- இழிவு, இழவு, அசைவு, வறுமை
3. உவகை என்ற மெய்ப்பாடு தோன்றும் நிலைக்களன்கள் யாவை?
- செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு
4. வெகுளி என்ற மெய்ப்பாடு தோன்றும் நிலைக்களன்கள் யாவை?
- உறுப்பறை, குடிகோள், அலை, கொலை
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு
1. தலைகவசம் அணியவில்லை என்றால்
- ரூபாய் 1,000 தண்டத்தொகை
- மறுமுறையும் இத்தவறு நடந்தால் ரூபாய் 1,000 தண்டத்தொகை மற்றும் 3 மாதம் ஓட்டுநர் உரிமம் தகுதி நீக்கம் செய்யப்படும்.
2. இருக்கைப் பட்டை அணியவில்லை என்றால்
- ரூபாய் 1,000 தண்டத்தொகை
3. பொதுச் சாலையில் பந்தயம் வைத்து வாகனங்களை ஓட்டுவது
- முதல் முறை ரூபாய் 5,000 தண்டத்தொகை
- மறு முறை ரூபாய் 10,000 தண்டத்தொகை
4. 18 வயது முழுமை பெறாதவர் வாகனத்தை இயக்கினால்
- அவரின் பெற்றோருக்கு ரூபாய் 25,000 தண்டத்தொகை
5. அதிவேகமாக வாகனங்களை இயக்கினால்
- முதல் முறை ரூபாய் 1,000 முதல் 5,000 வரை தண்டத்தொகை
- மறு முறை ரூபாய் 2,000 தண்டத்தொகை
6. அலைபேசி பேசிக்கொண்டு வாகனம் இயக்கினால்
- ரூபாய் 1,000 தண்டத்தொகை
7. காப்பீடு இல்லாமல் வாகனம் இயக்கினால்
- ரூபாய் 2,000 தண்டத்தொகை
நான் உறுதியளிக்கிறேன்
மூன்று நிற விளக்குகள் உணர்த்தும் சாலைப் பாதுகாப்புச் செய்திகளைக் கூறுக.
சிவப்பு | நில் |
மஞ்சள் | கவனி |
பச்சை | செல் |
பொருத்துக
விதிமீறல் | தண்டத்தொகை |
1. கைப்பேசி பேசிக்கொண்டு வாகனம் இயக்குதல் | அ) 2,000 ரூபாய் |
2. பந்தயம் வைத்து வாகனம் ஓட்டுதல் | ஆ) 25,000 ரூபாய் |
3. காப்பீடு இல்லாத வாகனம் ஓட்டுதல் | இ) 5,000 ரூபாய் |
4. 18 வயது முழுமையடையாதவர் வாகனத்தை இயக்கினால், அவரின் பெற்றோருக்கு | ஈ) 1,000 ரூபாய் |
விடை: 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ |
மொழியை ஆள்வோம்….
சான்றோர் சித்திரம்
மறைமலையடிகள் (1876-1950)
சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் சென்றார் ஒருவர். அந்தக் கல்லூரியின் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர், “குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு ச் சொல்லுங்கள்” என்று கேட்டார். அவர் “அஃது எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார். ‘நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள்’ என்றார் பரிதிமாற்கலைஞர். ‘தெரியாது’ என்று சொன்னவரை, “எப்படித் தேர்வு செய்யலாம்?” என்று பிறர் கேட்டபோது, ‘அஃது’ எ ன்பது ஆய்தத் தொடர் குற்றியலுகரம், ‘எனக்கு’ என்பது வன்தொடர்க் குற்றியலுகரம், ‘தெரியாது’ என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம் என்று விளக்கினார் பரிதிமாற்கலைஞர். இந்நிகழ்வில் பரிதிமாற்கலைஞரையே வியக்க வைத்தவர் மறைமலையடிகள்.
பரிதிமாற்கலைஞருடனான அவருடனான நட்பு ‘தனித்தமிழ்’ மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது. பிறமொழிக் கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார். ‘சுவாமி வேதாசலம்’ எனும் தன்பெயரை ‘மறைமலையடிகள்’ என மாற்றிக் கொண்டதோடு தம் மக்களின் பெயரையும் தூய தமிழ்ப் பெயர்களாக மாற்றினார். இளம்வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த அடிகளார் ஞானசாகரம் (1902), Oriental Mystic Myna (1908), Ocean Of Wisdom (1935) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, சாகுந்தல நாடகம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முதலான பல நூல்களை எழுதியுள்ளார். முறையான பள்ளிக் கல்வியை முடித்திராத மறைமலையடிகள் ஆக்கிய நூல்களும் ஆற்றிய சொற்பொழிவுகளும் அவர் ஓர் அறிவுக்கடல் என்பதை நமக்கு உணர்த்தும்.
வினாக்கள்:-
1. ஒரு நேர்காணலில் “குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுச் சொல்லுங்கள்” என்று கேட்டதற்கு மறைமலைஅடிகள் கூறியது என்ன?
2. சுவாமி வேதாசலம் என்பதன் தமிழாக்கம் என்ன?
3. மறைமலை அடிகள் நடத்திய இதழ் எது?
4. இப்பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள எண்ணும்மையினை எடுத்து எழுதுக.
5. இப்பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள உருவகத்தினை எடுத்து எழுதுக.
விடைகள்:-
1 “அஃது எனக்குத் தெரியாது”
2. மறைமலை அடிகள்
3. ஞானசாகரம்
4. வரலாறும் காலமும்
5. அறிவுக்கடல்
தமிழாக்கம் தருக.
The Serious dearth of library facilities in this country is scarcely keeping with India’s status in the international community of nations or with her educational and social needs. In this matter. India compares unfavourably not only with other independent Dominions of the commonwealth but even with certain British colonies. She possesses only one public library on any considerable size, and even this institution is inadequate to serve the need of the capital city. Only a few towns can boast of possessing any library at all. The rural papulation is completely neglected; There are no travelling libraries to reach them of kind that are to be found even in some backward countries. The growth of libraries has lagged. Far behind the increase in the number of schools and the rise in the rate of literacy. The great mass of the people in India do not have the means to buy books or even magazines and newspapers; in the absence of sufficient public libraries and reading room, most of them cannot attain regular reading habits
விடை:-
இந்திய நாட்டில் நூலக வசதிகளின் பற்றாக்குறையால் கல்வி மற்றும் சமூக தேவைகளில் இந்தியாவின் நிலைப்பாடு சர்வதேச அரங்கில் மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைந்தே உள்ளது. இந்திய விஷயத்தில் இந்தியா, சில பொதுவுடைமை நாடுகள் மற்றும் ஆங்கிலக் குடியேற்ற நாடுகளோடு எதிர்மறையாக ஒப்பிடப்படுகிறது. பெரிய அளவில் ஒரே ஒரு பொதுநூலகத்தை மட்டுமே இந்தியா வைத்திருக்கிறது. மேலும், அது தலைநகரத்தில் தேவையை நிறைவு செய்ய போதுமானதாக இல்லை. இங்கு ஒருசில நகரங்கள் மட்டுமே நூலகத்தால் பெருமை அடைய இயலும். கிராமப்புற மக்கள் முற்றிலுமாக புறகணிக்கப்படுகிறார்கள். அவர்களை பயனடையச் செய்வதற்கு சில பின் தங்கிய நாடுகளில் உள்ளதை விட நூல்கள் ஏதும் இங்கு இல்லை.
இந்தியாவில் நூலகங்களின் வளர்ச்சி தாமதமாகவே உள்ளது. பின்னாளில் பள்ளிகளின் எண்ணிக்கையில் ஏற்றம் இருந்தாலும், எழுத்தறிவில் பின் தங்கியே இருக்க நேரிடும். இந்தியாவில் பெருமளவு மக்களுக்குப் புத்தகங்கள், வார இதழ்கள், பத்திரிக்கை வாங்குவதற்கு வழி இல்லை மற்றும் போதுமான பொது நூலகங்கள், வாசிப்பு அறை, இல்லாமையால் பெரும்பாலனவர்களுக்கு வாசிக்கும் பழக்கமே இல்லாமல் போகிறது.
கீழ்க்காணும் பத்திகளைப் படித்து மூன்றில் ஒரு பங்காகச் சுருக்குக.
இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு, உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையே பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு மூல காரணமாகின்றன. மருத்துவம் சார்ந்த தேவைகளுக்கென்று குறிப்பிட்ட தொகையை ஒதுக்கும் அளவிற்கு உடல்நிலையைக் கவனத்தில் கொள்ளாமல், ஓர் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துகள் சேர்ந்ததே சமச்சீர் உணவு. எனவே அளவறிந்து உண்ண வேண்டியது அவசியமாகும்.
ருசிக்காக, சாப்பிடக் கூடாத பொருள்களைச் சாப்பிடுவதும், பசிக்காக அளவுக்கு மீறிச் சாப்பிடுவதும்தான் பிணிகளுக்குக் காரணம். சாதாரணமாக உண்ட உணவு செரிமானமாவதற்கு 4 மணி நேரம் ஆகிறது. பொதுவாகவே உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். இதனால் மாவுப்பொருள் செரிமானமாதற்கு உமிழ்நீர் சுரந்து உணவுடன் உட்செல்லும்.
உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள சத்துகள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றிய தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும்.
நமது எடை மற்றும் உயரத்தினை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானது. பிறகு தங்களது எடை மற்றும் உயரத்தினைப் பொறுத்து ஆரோக்கியமான உணவு முறையைத் தேர்ந்தெடுக்கவும் உடற்பயிற்சி செய்யவும் முடிவெடுக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதருக்கும் அவரது வயது, பாலினம், உடல் உழைப்பு, உடல்நிலை, வாழும் இடம், பருவநிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஊட்டச்சத்துக்களின் தேவை மாறுபடும். தேவையான தானியங்களுடன் பருப்பு மற்றும் பயறு வகைகளைச் சேர்த்து, அதிக காய்கறிகளுடனும் பழங்களுடனும் கூடிய உணவு முறையே நம் ஆரோக்கியத்திற்கான சரியான தீர்வு.
பத்தியின் சுருக்கம்:-
இன்றைய சூழலில் ஓய்வின்மி, காலம் தவறி உணவு, மாற்றம் முதலானவை உடல் நலப் பாதிப்புக்குக் காரணம். மருத்துவத்திற்கென தொகை ஒதுக்கும் அளவுக்கு இயந்தரமாகிவிட்டோம். உணவே மருந்தாக உண்டு மகிழ்ந்தனர் முன்னோர். ஒவ்வொருவரும் சமச்சீர் உண்வு உட்கொள்வது கட்டாயமாகிவிட்டது. உணவுப் பொருளில் அடங்கியுள்ள சத்து பற்றி அறிவது நமது கடமை. ருசிக்காக அன்றி பசிக்காக மிகுதியாகச் சாப்பிடுவது பிணிக்கு காரணமாயிற்று. நமது எடை மற்றும் உயரத்தைப் பொறுத்தே உணவு முறையும் உடற்பயிற்சியும் அமைதல் வேண்டும். வயது, பாலினம் மற்றும் உடலுழைப்பின் அடிப்படையில் ஊட்டச்சத்து தேவைப்படும். காய்கறி, தானியம், பயிறு இவற்றுடன் கூடிய உணவு முறையே சரியான தீர்ப்பு.
தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
1. வாழைக்காட்டில் குயில்கள் அவறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன.
விடை: வாழைத்தோட்டத்தில் குயில்கள் கூவிக்கொண்டும், காகங்கள் கரைந்துகொண்டும் இருந்தன.
2. முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்.
விடை: முருகன் சோறு உண்டு, பால் பருகினான்.
3. கோவிந்தன் குடியிருக்க சுவர் கட்டி கூரை அமைத்தார்.
விடை: கோவிந்தன் குடியிருக்கச் சுவர் எழுப்பிக் கூரை வேய்ந்தார்.
4. வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குட்டியும் யானைக் குட்டியும் கண்டேன்.
விடை: வனவிலங்குக் காப்பகத்தில், சிங்கக் குருளையையும் யானைக் கன்றையும் கண்டேன்.
5. ஆட்டுத்தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள் அமைத்திருந்தன.
விடை: ஆட்டுப்பட்டியைச் சுற்றிலும் எலிகள் வளைகள் அமைத்திருந்தன.
6. பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.
விடை: பனை ஓலையால் கூரை வேய்ந்திருந்தனர்.
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
1. நம் மானிலம், இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.
விடை: நம் மாநிலம், இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது.
2. எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது.
விடை: எங்கள் ஊரில் நூலகக் கட்டடம் கட்ட, அரசு நிதி ஒதுக்கியது.
3. ரங்கன், வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.
விடை: அரங்கன், வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.
3. மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
விடை: வானம் பார்த்த பூமியில், பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
4. ஐப்பசி அடைமழையில், ஊருனி நிறைந்தது.
விடை: ஐப்பசி அடைமழையில், ஊருணி நிறைந்தது.
5. இன்னிக்கு சாயங்காலம், கபடி போட்டி நடைபெறும்.
விடை: இன்றைக்குச் சாயுங்காலம், கபடிப்போட்டி நடைபெறும்.
பின்வரும் பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக.
1. ஆனைக்கும் அடிசறுக்கும்.
பழமொழி விளக்கம்:
மிகப்பெரிய வலிமையுடைய விலங்கு என்று கருதப்படும் யானைகூடச் சில சந்தர்ப்பங்களில் நிலைதடுமாறித் தோல்வியைச் சந்திக்கும்.
வாழ்க்கை நிகழ்வு:
ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் மாராபோட்டியில் மணி என்பவன் கலந்துகொண்டு, அதிக அளவில் காளைகளை அடக்கி வென்று, நிறைய பரிசுப் பொருட்களைக் கைப்பற்றுவான். தமிழ்நாடு முழுக்க நடைபெறும் புகழ்மிக்க ஜல்லிக்கட்டுகளில் கலந்துகொண்டு, வெற்றி பெற்றவன். ஆனால், நேற்றுச் சூலைமேட்டு ஜல்லிக்கட்டில் அவனால் ஒரு காளையைக்கூட அடக்க முடியவில்லை. ஆனைக்கும் அடிசறுக்குவதுபோல் ஒரு காளைகூட மணியின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கவில்லை. ஒரு பரிசும் இன்றி ஊர் திரும்பினான்.
பழமொழிப் பொருத்தம்:
யானை ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் வெற்றிவாகை சூடிய மணி.
அடிசறுக்கல்: ஒரு காளையைக்கூட அடக்க இயலாமல் ஊர் திரும்பியது.
2. தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
பழமொழி விளக்கம் :
ஒருவன் எதை விதைக்கிறானோ, அதுவே விளையும். நெல் பயிரிட்டால் அதற்குப் பதிவாகச் சோளம் விளையாது. அதுபோல நாம் நல்லது செய்தால் நல்லதும், தீயது செய்தால் தீயதும் நமக்கு விளைபயனாகக் கிடைக்கும் என்பது கருத்து.
வாழ்க்கை நிகழ்வு
கந்தனும், கடம்பனும் ஒரே ஊரில் மளிகைக்கடை நடத்தி வந்தனர். கந்தன், நியாயமான விலைக்குப் பொருட்களை விற்பான். வாடிக்கையாளர்களிடம் அன்பாகப் பேசுவான். பணம் இல்லை. பிறகு தருகிறேன் என்றால்கூட வறியவர்களுக்குக் கடனாகப் பொருட்களைத் தருவான். இதனால் கந்தனின் கடையில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.
ஆனால், கடம்பன் கடன் தரமாட்டான்; விலை, கூடுதலாக விற்பான். வாடிக்கையாளர்களை மதிக்க மாட்டான். இதனால், கடம்பன் கடையில் கூட்டமிருக்காது. பொறாமைப்பட்ட கடம்பன், கந்தனை வீழ்த்த நினைத்தான். சர்க்கரையில் ரவையைக் கலந்து,கந்தனின் கடைக்குத் திருட்டுத்தனமாக அனுப்பத் திட்டமிட்டான். அன்று கடம்னின் மளிகைக் கடைக்குத் திடீரெனச் சோதனைபோட வந்த உணவுக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளிடம் வசமாகச் சிக்கிக்கொண்டான். கடம்பன் தினையா
விதைத்தான்? வினைதானே விதைத்தான். அதனால் கலப்படச் சர்க்கரையை வியாபாரம் செய்வதாகக் கூறி அதிகாரிகள் கடம்பனிற்கு பல ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்தனர்.
பழமொழிப் பொருத்தம்:
நன்மை செய்த கந்தனுக்குச் சிக்கல் இல்லை. கெடுதல் நினைத்த கடம்பன் அபராதம் செலுத்தினான்.
3. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
பழமொழி விளக்கம்:
சுற்றமாகிய உறவுகளிடமும் நட்புகளிடமும் குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டிக் ண்டிருந்தால், உறவுகளும் நட்புகளும் நம்மை விட்டு விலகிவிடுவர்.
வாழ்க்கை நிகழ்வு:
மணிமேகலையின் அப்பா கண்டிப்பானவர்.மணிமேகலையிடமும் அவளுடைய அம்மாவிடமும் வீட்டில் மிகக் கண்டிப்புடன் நடந்து கொள்வார். அவருக்கு அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். ஒரு தாளின் முனையில் குண்டுசி குத்தினாலும் தாள் கசங்காமல் குத்த வேண்டும். வீட்டிற்குள் ஒரு குப்பைகூட இருக்கக்கூடாது. யாரும் சத்தமாகப் பேசக்கூடாது. அவரது விருப்பத்திற்கு மாறாக நடந்தால் கூச்சல் விடுவார்.
வீட்டிற்கு வரும் உறவினர்களிடமும் கண்டிப்பாக நடந்துகொள்வார். செருப்பை வரிசையாகக் கழட்டிவிடுங்கள்; கால் கழுவிக்கொண்டு உள்ளே வாருங்கள் எனப் பல கட்டுப்பாடுகளை விதித்ததால், உறவினர்கள் யாரும் அவர் வீட்டிற்கு வருவதில்லை. அவர் வீட்டில் திருமணம் நடந்தபோதும், புதுமனை புகுவிழா நடந்தபோதும் ஓர் உறவினர்கூட வரவில்லை. அனைவரிடமும் குற்றங்குறைகளைக் கண்டுபிடித்துப் பேசியதால், நண்பர்களோ சுற்றத்தவர்களோ எவரும் வரவில்லை என்பதை அப்போதுதான் அவர் உணர்ந்தார்.
பழமொழிப் பொருத்தம்:
மணிமேகலையின் அப்பா மற்றவர்களைத் திருத்துவதாக நினைத்து, குறைகூறிக் கொண்டே இருந்ததால் உறவுகளையும் நட்புகளையும் இழந்தார்.
4. எறும்பு ஊரக் கல்லும் தேயும்.
பழமொழி விளக்கம் :
ஒரு செயலில் வெற்றி பெறத் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டால், இறுதியில் வெற்றி கிடைக்கும்.
வாழ்க்கை நிகழ்வு
சங்கர் தேர்வில் எப்போதும் தோல்வியை மட்டுமே எதிர்கொள்வான். 18, 28, 14 என்பதே அவன் பெறும் மதிப்பெண்கள். ஆனால், வகுப்பில் எப்போதும் துரை முதலிடம். 99, 98 என்பதே அவன் பெறும் மதிப்பெண்கள். நாம் அதிக நேரம் படிக்கிறோம் தோல்வியடைகிறோம்; துரை குறைவான நேரம் படித்து அதிக மதிப்பெண்களைப் பெறுகிறானே என்பதே கந்தனின் மனக்குறை. என்ன செய்வது? அவனுக்குப் பிடித்த ஆசிரியரிடம், ‘நான் வெற்றி பெறுவது எப்படி?’ என்று கேட்டான், ஆசிரியர், “புரிந்து கொண்டு படி; படித்ததை எழுதிப் பார்; பிறகு மனத்திற்குள் சொல்லிப் பார். ஒவ்வொரு வினா விடையையும் இப்படிச் செய்தால் தேர்ச்சி பெறுவாய்; எறும்பு ஊரக் கல்லும் தேயும்” என்று அறிவுறுத்தினார். சங்கர் அதைக் கடைப்பிடித்தான். எட்டுமணி நேரம் படித்தவன், பன்னிரண்டுமணி நேரம் படித்தான். படித்ததை எழுதிப் பார்த்தான்; பார்க்காமல் சொல்லிப் பார்த்தான்; தேர்வு வந்தது; அருமையாக எழுதினான்; நல்ல மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெற்றான்.
பழமொழிப் பொருத்தம்:
சங்கர் தொடர்ந்து படித்தலில் ஈடுபட்டு முயன்றதால் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றான். தொடரும் முயற்சி வெற்றி தரும் அல்லவா.
5. ஊழி பெயரினும் தாம் பெயரார்.
பழமொழி விளக்கம் :
உலகமே அழியும்நிலை ஏற்பட்டாலும், தம் நிலையிலிருந்து சிலர் மாற மாட்டார்கள்.
வாழ்க்கை நிகழ்வு
அவர் ஒரு வட்டாட்சியர். அவர் பெயர் சந்துரு. அரசியல்வாதி அவரிடம் வந்து அந்த ஊரில் உள்ள குன்றை அவர் பெயரில் பட்டா செய்து தருமாறு வற்புறுத்தினார். “ஒரு குன்றை எப்படித் தனியாருக்குப் பட்டா செய்யமுடியும்?” என்று மறுத்தார் தாசில்தார். தமக்குப் பட்டா செய்து கொடுத்தால், ஒரு பத்து கோடி ரூபாய் தருவதாகக் கூறினார் வந்தவர். வட்டாட்சியர் இசையவில்லை. அக்குன்று பற்றி விசாரித்தார் வட்டாட்சியர். அக்குன்று முழுவதும் கிரானைட் கற்களால் ஆனது என்ற விவரத்தை அறிந்தார். மீண்டும் அந்தப் பணக்காரர் வட்டாட்சியரைச் சந்தித்துப் பெருந்தொகையை அவரிடம் கொடுக்க முன்வந்தார். வட்டாட்சியர் மனம் மாறவில்லை. அரசியல்வாதி ஊராட்சித் தலைவரிடம் சொல்லி வீட்டுக்குடிநீர் இணைப்பைத் துண்டித்தார். மின்வாரியத்திலும் கூறி, மின்வெட்டு செய்தார். ஊழி பெயரினும் தாம் பெயரார் என்பதற்கு ஏற்ப, அரசியல்வாதியின் எந்தத் தொல்லைக்கும் அவர் அடிபணியவில்லை; உறுதி குலையாது செயல்பட்டார்.
பழமொழிப் பொருத்தம் :
பணக்காரர் பெரும் இன்னல்களை விளைவித்தாலும், வட்டாட்சியர் மனம் மாறவில்லை. தம் பதவிக்குப் பொருந்தாததைச் செய்யவில்லை. ஊழி பெயரினும் தாம் பெயரார் என்பதற்குப் பொருத்தமானவர் அவர்.
6. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
பழமொழி விளக்கம்:
ஆற்றல் மிக்க, திறமை வாய்ந்த ஒருவருக்கு எதுவும் ஆயுதமாகப் பயன்படும் என்பது பொருள்.
வாழ்க்கை நிகழ்வு
வேளச்சேரி சாலையில் ஒரு தள்ளுவண்டிக்காரர் மக்காச்சோளத்தை அவித்துச் விற்பனை செய்வதற்காக மண்ணெண்ணெய் அடுப்பைப் பற்ற வைக்கத் தயாரானார். அடுப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கு முன், அதன் ஓட்டை சிறியதாக இருந்ததால் தன் மூளையைப் பயன்படுத்தினார்.
வழுவழுப்பான தாளை எடுத்து கூம்பு வடிவத்தில் புனலாகச் செய்தார். அதனை ஸ்டவ் அடுப்பின் துவாரத்தில் பொருத்தி, எண்ணெய்க் கேனில் இருந்த மண்ணெண்ணெயைச் சிந்தாமல் சிதறாமல் ஊற்றி முடித்து, அடுப்பைப் பற்ற வைத்தார்.
பழமொழிப் பொருத்தம் :
தள்ளுவண்டிக்காரன் தாளை ஒரு கருவியாகப் பயன்படுத்தியது ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பதை எடுத்துக்காட்டுகிறது.
7. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
பழமொழி விளக்கம்:
மக்களாயினும் பிற உயிர்களாயினும் கூடி வாழ்ந்தால் நன்மைகள் பல ஏற்படும்.
வாழ்க்கை நிகழ்வு
முகம்மது என்பவர் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தான். கிராம மக்கள் குடிநீருக்காகப் பல மைல் தூரம் சென்று ஒரிரு குடங்கள் தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்துவதைப் பார்த்து வருத்தமடைந்தான். இதனால் தன் கிராமத்தில் உள்ள நீராதாரங்களைச் சரிசெய்ய தன் நண்பர்கள் உதவியுடன் ஊருணிகளைத் தூர் வாரி, சுற்றி மண்ணெடுத்துக் கூட்டிச் சரிசெய்ய எண்ணினான். அவனால் அதனைச் செய்துமுடிக்க இயலவில்லை. முகம்மதுவுடன் ஊர்மக்கள் அவ்வேலையைத் தொடர்ந்தது அந்த வேலை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்கள்.
பழமொழிப் பொருத்தம் :
முகம்மது முன்னெடுத்து, ஊர்மக்கள் அனைவரும் கூடிச் செய்த செயல் அனைவருக்கும் நன்மையைத் தந்தது.
8. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
பழமொழி விளக்கம் :
ஒருவரின் மனநிலை, உணர்வுகள் மற்றும் உள்ளக்கிடக்கைகள் முகபாவனைகள் மூலம் வெளிப்படும்.
வாழ்க்கை நிகழ்வு:
ஆறாம் வகுப்புக் கணித ஆசிரியர் சில கணக்குகளைக் கொடுத்து வீட்டுப் பாடமாகச் செய்து வரச் சொன்னார். வகுப்பில் எல்லா மாணவர்களும் தாங்கள் செய்து வந்த பயிற்சி ஏடுகளை ஆசிரியரின் மேசைமேல் அடுக்கி வைத்தனர். அமுதன் என்ற மாணவன் மட்டும் தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருந்தான்.
கணித ஆசிரியர் அவனது முகத்தைப் பார்த்து, “ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்?” எனக் கேட்டார். அதற்கு அவன் “ஐயா! நேற்று இரவு எங்கள் வீட்டில் தாய் தந்தையர் இருவருக்குள்ளும் ஏதோ சண்டை. அதன் காரணமாக என் மனநிலை சரியில்லை. எனவே, வீட்டுப்பாடம் செய்யவில்லை” என்றான். ஆசிரியரும் புரிந்து கொண்டு, “உன் மனம் சரியில்லை என்பதை உனது முகம் காட்டிவிட்டது” என்று கூறி ஆறுதல் சொல்லி அமர வைத்தார். நல்ல மனநிலையை முகம் மலர்ச்சியுடன் காட்டும். மன வேறுபாட்டை முகம் காட்டிக் கொடுத்து விடும்.
எண்ணங்களை எழுத்தாக்குக.
![]() | கல்வி ஒருவரை அறிவனால் மேதையாக்கும். கல்வி கற்றால் நீதியரசராக ஆகலாம். கல்வியின் காரணமாக காவல்துறை அதிகாரி ஆகலாம். கல்வி கற்பதால் மருத்துவர் ஆகலாம். கல்வி ஒருவரை நல்லாசிரியனாக்கும். கல்வியே ஒருவர்க்கு பெருமை சேர்க்கும். கல்வி கற்றவரை உலகம் போற்றும். |
சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.
1. பலகை
பலகை | பலகையால் ஆன மேசையில் உணவு உண்டனர். |
பல கை | பல கைகள் ஒன்றிணைந்து வெற்றியைத் தமதாக்கின. |
2. தாமரை
தாமரை | தடாகத்தில் தாமரை மலர்ந்திருந்தன. |
தா மரை | தாவுகின்ற மானை(மரை)ப் பிடிக்க முடியாது. |
3. கோவில்
கோவில் | கோவிலில் குடமுழுக்கு நடந்தேறியது.. |
கோ இல் | அரசன் உறைவிடம் கோ இல் எனப்படும். |
4. வெங்காயம்
வெங்காயம் | வெங்காயம் மருத்துவ குணம் நிறைந்தது. |
வெங் காயம் | வெம்மையால் உண்டான காயம். |
5. தலைமை
தலைமை | பள்ளி ஆண்டு விழாவிற்கு தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். |
தலை மை | தலையில் மை அடிப்பது பழக்கமாகிவிட்டது. |
நிற்க அதற்குத் தக …
படிப்போம் பயன்படுத்துவோம்
- Discussion – கலந்துரையாடல்
- Higher Education – உயர்்கல்வி
- Value Education – மதிப்புக்கல்வி
- Road safety – சாலைப் பாதுகாப்பு
- Traffic signal – போக்குவரத்துச் சமிக்ஞை
- Vice Chancellor – துணைவேந்தர்
அறிவை விரிவு செய்
- நீங்களும் கவிபாடலாம் – கி.வா. ஜகந்நாதன்
- படைப்புக்கலை – மு. சுதந்திரமுத்து
- கவிஞராக – அ.கி. பரந்தாமனார்
- வெயிலும் நிழலும் – பிரமிள்
- மெய்ப்பாடு – தமிழண்ணல்
- வேர்களின் பேச்சு – தோப்பில் முகம்மது மீரான்
- துறைமுகம் – சுரதா
இதுவரை – சி. மணி