Class 12th Tamil Book Solution for CBSE | Lesson 6.2 – கவிதைகள்

பாடம் 6.2 கவிதைகள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 12 Tamil Chapter 6.2 “கவிதைகள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 12 Tamil Text Books – Download

நூல் வெளி

  • நம்பாடப் பகுதியிலுள்ள கவிதைகள் ‘நகுலன் கவிதைகள்’ என்னும் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.
  • கவிஞர் நகுலன் (டி.கே. துரைசாமி). கும்பகோணத்தில் பிறந்தவர்;
  • கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர்;
  • அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்;
  • தமிழின் அனைத்துச் சிற்றிதழ்களிலும் எழுதி வந்தவர்.
  • புதுக்கவிதை வடிவம் தமிழ் மொழியில் தடம் பதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், புதுக்கவிதை மூலம் வாழ்வியலுக்குத் தேவையான கருத்துகளை நறுக்கென்று கூறியுள்ளார்.
  • இவர், சொல் விளையாட்டுகளோ, வாழ்க்கை பற்றிய எந்தக் குழப்பமோ இன்றித் தெளிவான சிந்தனையோடு கருத்துகளை உரைத்துள்ளார்.
  • இவருடைய கவிதைகள் மூன்று, ஐந்து, கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்குமூலம், சுருதி உள்ளிட்ட சிறு சிறு தொகுதிகளாக வந்துள்ளன.
  • இவர் 7 புதினங்களை எழுதியுள்ளார்;
  • பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. ஆர்ப்பரிக்கும் கடல்
    அதன் அடித்தளம்
    மௌனம்; மகா மௌனம் – அடிகள் புலப்படுத்துவது

  1. இரைச்சல்
  2. குறைகுடம் கூத்தாடும்
  3. நிறைகுடம் நீர்த்தழும்பல் இல்
  4. புற அசைவுகள் அகத்தினை அசைக்க இயலாது.

விடை : நிறைகுடம் நீர்த்தழும்பல் இல்

குறு வினா

‘மூச்சு நின்று விட்டால்
பேச்சும் அடங்கும்’ – கவிதைக்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக.

  • “எரிவதை நிறுத்தினால் கொதிப்பது தானே அடங்கும்”
  • “சான்றோர் கொள்கையும் மாண்டால் அடங்கும்”

சிறு வினா

கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும் தொடர்புபடுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன் கவிதையைக் கொண்டு நிறுவுக.

1. நிரந்தரமாக இருக்க எண்ணினோம்
நிரந்தரமில்லாமல் சென்று விடுகிறோம்

2. உயர்ந்த கொள்கைகளும் உயிர்போனால்
உதாசினப்படுத்தப்படும்

3. உண்மைகள் எல்லாம் சில உண்மைகளைத்
திரைமறைவு செய்வதற்கே

4. ஆர்பரிப்பில் அடங்காத மனம்
அமைதியில் அடங்கிவிடும்

5. கடலின் உள்நிகழ்வே கடல் அலைகள்
மனிதின் வெளிப்பாடே புறச்செயல்கள்

  • நகுலனின் கவிதைகளே இங்கு பேசப்பட்டுள்ளளன. நகுலனின் கவிதையின் முழங்கு பொருளே இவை.
  • எனவே, கவிஞன் தான் நினைத்தவற்றைச்ச சொல்வடிவத்தில் சுருக்கிச் சொல்ல முற்படும்போது உதிர்ந்த முத்துகளே இவை.

கூடுதல் வினாக்கள்

புணர்ச்சி விதி

பிரயோஜனமில்லை = பிரயோஜனம் + இல்லை

  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “பிரயோஜனமில்லை” என்றாயிற்று.

பலவுள் தெரிக

1. நம்பாடப்பகுதியிலுள்ள கவிதைகள் ………………. என்னும் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.

  1. கண்ணாடியாகும் கவிதைகள்
  2. நாய்கள்
  3. வாக்குமூலம்
  4. நகுலன் கவிதைகள்

விடை : நகுலன் கவிதைகள்

2. கவிஞர் நகுலனின் இயற்பெயர் ……………..

  1. டி.கே. துரைசாமி
  2. இராகோபாலன்
  3. கிருஷ்ணமூர்த்தி
  4. டி.கே. நீலமேகம்

விடை : டி.கே. துரைசாமி

3. கவிஞர் நகுலன் பிறந்த ஊர் ……………

  1. தஞ்சாவூர்
  2. திருச்சி
  3. கும்பகோணம்
  4. விழுப்புரம்

விடை : கும்பகோணம்

4. கவிஞர் நகுலன் வாழ்ந்த ஊர் ………………..

  1. கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம்
  2. கர்நாடக மாநிலத்தில் மாண்டியா
  3. ஆந்திர மாநிலத்தின் கடப்பா
  4. தஞ்சாவூர்

விடை : கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம்

5. கவிஞர் நகுலன் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்ற பல்கலைக்கழகம் ……………….

  1. பாரதிதாசன்
  2. பாரிதியார்
  3. திருவள்ளூவர்
  4. அண்ணாமலை

விடை : அண்ணாமலை

6. கவிஞர் நகுலன் இயற்றியுள்ள நூல்கள் …………….

  1. காய கண்டிகை
  2. கண்ணாடியாகும் கண்கள்
  3. உறுமீன்களற்ற நதி
  4. இறுதிப்பூ

விடை : கண்ணாடியாகும் கண்கள்

7. கவிஞர் நகுலன் எழுதியுள்ள புதினங்கள் …………….

  1. ஆறு
  2. ஏழு
  3. எட்டு
  4. ஒன்பது

விடை : ஏழு

8. கவிஞர் நகுலன் ………….யின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

  1. கண்ணதாசன்
  2. பாரதி
  3. பாரிதிதாசன்
  4. வாணிதாசன்

விடை : பாரதி

9. “இருப்பதற்கென்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்” என்று எழுதியவர்

  1. கண்ணதாசன்
  2. பாரதி
  3. நாகூர் ரூமி
  4. நகுலன்

விடை : நகுலன்

சிறு வினா

1. நகுலன் இயற்றியுள்ள புதினங்கள் யாவை?

மூன்று, ஐந்து, கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்குமூலம், சுருதி

2. நகுலன் யாருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்?

பாரதியார் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

3. புதுக்கவிதை என்றால் என்ன?

புதிய வடிவம் கொண்ட கவிதை என்ற பொருள் மட்டுமல்ல. புதிய சிந்தனைகளைும், புதிய கருத்துகளையும் புதுமையாகச் சொல்வது புதுக்கவிதை ஆகும்.

4. இருப்பதற்கென்றுதான்
   வருகிறோம்
   இல்லாமல்
   போகிறோம் – இக்கவிதைக்கு பொருத்தமான பழமொழியை எழுதுக

கானல் நீர் போல

5. ஆர்ப்பரிக்கும் கடல்
   அதன் அடித்தளம்
   மெளனம்; – இக்கவிதைக்கு பொருத்தமான பழமொழியை எழுதுக

குரைக்கிற நாய் வேட்டை பிடிக்காது

குறு வினா

நகுலன் (டி.கே. துரைசாமி) – பற்றிய குறிப்பு வரைக

  • நகுலன் (டி.கே. துரைசாமி) கும்பகோணத்தில் பிறந்தவர்.
  • கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாழந்தார்.
  • அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
  • தமிழின் அனைத்து சிற்றிதழ்களிலும் எழுதி வந்தவர்.
  • புதுக்கவிதைகள் மூலம் வாழ்வியலுக்கு தேவையான கருத்துகளை நறுக்கென்று கூறியவர்.
  • மூன்று, ஐந்து, கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்குமூலம், சுருதி உள்ளிட்ட புதினங்களை எழுதியுள்ளார்.
  • பாரதியார் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment