Class 3rd Tamil Book Solution for CBSE | Lesson.13 – திருக்குறள் கதைகள்

பாடம் 13. திருக்குறள் கதைகள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 13 – திருக்குறள் கதைகள் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

 Class 3 Tamil Chapter 13 "திருக்குறள் கதைகள்" solution for CBSE / NCERT Students

Class 3 Tamil Text Books – Download

வாங்க பேசலாம்

உமக்குப் பிடித்த திருக்குறள் கதையை உமது சொந்த நடையில் கூறுக.

எனக்கு பிடித்த திருக்குறள் கதை “காலத்தே பயிர் செய்” என்பதாகும்.

மலைச்சாமி என்ற ஏழை விவசாயி, இலந்தைக்குட்டை என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவனுக்கென்று சொந்தநிலம் ஏதும் கிடையாது என்பதனால் மாதையன் என்ற செல்வந்தனின் நிலத்தைக் குத்தகைக்குக் எடுத்து விவசாயம் செய்து வந்தான்.

மாதையன் விவசாயின் உழைப்பைச் சுரண்டுவதிலேயே குறிக்கோளாய் இருந்தான். இருந்த போதிலும் மலைச்சாமி நேர்மையானவனாகவும், புத்திசாலியாகவும் இருந்ததால் செல்வந்தனிடம் ஏமாறவில்லை.

ஒருமுறை செல்வந்தன் விவசாயியிடம் குத்தகைக்கு ஈடாக “மண்ணுக்கு மேலே விளைபவை எனக்கு, மண்ணுக்குக் கீழே விளைபவை உனக்கு” என்று கட்டளையிட்டான். புத்திக் கூர்மையுடன் விவசாயி நிலக்கடலை பயிரிட்டதால் விவசாயிக்கே இலாபம் கிட்டியது. ஏமாற்றமடைந்த செல்வந்தன் அடுத்தமுறை விவசாயியை ஏமாற்ற எண்ணி நிபந்தனையை மாற்றினான். இம்முறை “மண்ணுக்குக் கீழே விளைபவை எனக்கு, மண்ணுக்கு மேலே விளைபவை உனக்கு” என்றான். ஆராய்ந்த விவசாயி இம்முறை நெல் பயிரிட்டான். இம்முறையும் விவசாயிக்கே இலாபம், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான் செல்வந்தன்.

அதனால் எவ்விடத்து எதை, எப்படி, எக்காலத்தில் செய்ய வேண்டும் என்பதை அறிந்து செய்தால் உலகையே வென்று விடலாம்.

குறள்

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்                     – காலமறிதல், குறள் 484

விளக்கம்

செயலை முடிப்பதற்கு ஏற்ற காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால் உலகமே வேண்டும் எனக் கருதினாலும் அது கைகூடும்.

1. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. “ஞாலம்” இச்சொல்லுடன் பொருந்தாத சொல் …………………………………..

  1. உலகம்
  2. வையகம்
  3. புவி
  4. மலை

விடை : மலை

2. கீழ்க்காணும் சொற்களுள் மாறுபட்ட பொருள் தருவது ……………………..

  1. அறம்
  2. தீமை
  3. கொடை
  4. ஈகை

விடை : தீமை

3. ‘என்பு’ இச்சொல்லிற்குப் பொருத்தமான சொல் ……………………………

  1. முகம்
  2. எலும்பு
  3. கை
  4. கால்

விடை : எலும்பு

4. ‘நல்ல + செயல்’ இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ……………….

  1. நல்லசெயல்
  2. நல்செயல்
  3. நற்செயல்
  4. நல்லச்செயல்

விடை : நற்செயல்

5. ‘இன்சொல்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..

  1. இனிமை + சொல்
  2. இன் + சொல்
  3. இன்மை + சொல்
  4. இனிமை + செல்

விடை : இனிமை + சொல்

2. குறட்பாக்களில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக

ஞாம் – காம்ன்பி – அன்பி
ணிவுடையன் – அணியல்லற்றை – மற்று

3. முறைமாறி உள்ள சீர்களை வரிசைப்படுத்தி எழுதுக

1. இன்சொலன் பணிவுடையன் ஒருவற்கு ஆதல்
    பிற மற்றுப் அணியல்ல

விடை :

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

2. தகவிலர் தக்கார் அவரவர் என்பது
    படும் எச்சத்தாற் காணப்

விடை :

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்

4. பாடி மகிழ்வோம்

கடலோரத்தில் அலை உருளுது பிரளுது
தத்தளிக்குது தாளம் போடுது.

கொக்கு நெட்ட கொக்கு
நெட்ட கொக்கு இட்ட
முட்ட கட்ட முட்ட

இலந்தப் பழத்திற்கு ஆசப்பட்ட கொழந்த
வாழப்பழம் தின்றது

கூடுதல் வினாக்கள்

1. ஒருவர் நடுவுநிலைமை உடையவர், இல்லாதவர் என்பது எவ்வாறு அறியப்படும்?

ஒருவர் நடுவுநிலைமை உடையவர், இல்லாதவர் என்பதனை அவருக்குப்பின் நிலைத்து நிற்கும் புகழாலும் பழியாலும் அறியப்படும்.

2. உலகமே வேண்டும் எனக் கருதினால் அது எப்படி கைகூடும்?

செயலை முடிப்பதற்கு ஏற்ற காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால் உலகமே வேண்டும் எனக் கருதினாலும் அது கைகூடும்.

3. எது அன்பு இல்லாத உயிர்களை வருத்தும்?

அன்பு இல்லாத உயிர்களை அறம் வருத்தும்.

4. ஒருவருடைய நிலைத்த செல்வம் எது?

ஒருவருடைய நிலைத்த செல்வம் என்பது அவர் கற்ற கல்வியே ஆகும். அதனைத் தவிர வேறு எந்த செல்வமும் நீடித்து இருக்காது.

5. ஒருவருக்கு மிகச்சிறந்த அணிகலன் எது?

பணிவு உடையவராகவும் இனிமையான சொற்கள் பேசுபவராகவும் இருப்பதே ஒருவருக்கு மிகச்சிறந்த அணிகலன்.

6. திருக்குறள் பற்றிய குறிப்பு வரை

  • திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
  • இவர் இயற்றிய இந்நூல், எக்காலத்துக்கும் ஏற்ற அறவுரைக் கருத்துகளைக் கொண்டுள்ளது.
  • இந்நூலில் அறம், பொருள், இன்பம் என மூன்று பிரிவுகள் உள்ளன.
  • 133 அதிகாரங்களும் அதிகாரத்திற்குப் பத்துக் குறளென 1330 குறட்பாக்களும் உள்ளன.
  • ஒவ்வொரு குறட்பாவும் ஈரடியால் ஆகிய வெண்பாவாகும்.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment