பாடம் 20. தூக்கணாங்குருவியும் ஒட்டகச்சிவிங்கியும்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 20 – தூக்கணாங்குருவியும் ஒட்டகச்சிவிங்கியும் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சரியான விடையைத் தெரிவு செய்வேன்
1. மரக்கிளையை உலுக்கியது _________
- தேனி
- ஒட்டகச்சிவிங்கி
- தவளை
- சிட்டுக்குருவி
விடை : ஒட்டகச்சிவிங்கி
2. மரத்தூள் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
- மரம் + தூள்
- மர + தூள்
- மர்த்து + தூள்
- மரத் + தூள்
விடை : மரம் + தூள்
3. திட்டம் + படி இச்சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது _________
- திட்டபடி
- திட்டப்படி
- திட்டம்படி
- திட்டுபடி
விடை : திட்டப்படி
4. மிதிப்பதுண்டு இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது _________
- மிதிப்பது + உண்டு
- மிதிப்ப + துண்டு
- மதிப்ப + உட்டு
- மிதி + துண்டு
விடை : மிதிப்பது + உண்டு
5. சேர்ந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்
- மகிழ்ந்து
- பிரிந்து
- இணைந்து
- சிறந்து
விடை : பிரிந்து
வினாக்களுக்கு விடையளிப்பேன்
1. தூக்கணாங்குருவி தவளையிடம் உதவி கேட்கும்பொழுது அருகில் இருந்தது எது?
தூக்கணாங்குருவி தவளையிடம் உதவி கேட்கும்பொழுது தேனீ அருகில் இருந்தது
2. தூக்கணாங்குருவிக்கு எவையெல்லாம் உதவி செய்தன?
தூக்கணாங்குருவிக்கு உதவி செய்தவர்கள் தவளையும், தேனீயும் ஆவார்கள்.
3. கார்ரக்.. கார்ரக்… என ஒலி எழுப்பியது எது?
தவளைகள்
4. கதையில் பிறரை அடிக்கடி தொல்லைகள் செய்தது எது?
நல்லதை நினைப்போம்! நன்மை பெறுவோம்!
இச்சூழலில் நீ என்ன செய்வாய்
1. யார் மீதாவது மோதிவிட்டால் …
எதுவும் சொல்லாமல் சென்றுவிடுவேன். | |
தெரியாமல் இடித்து விட்டேன் என்று வருத்தம் தெரிவிப்பேன். | ✓ |
2. பேருந்து பயணத்தின்போது அலைபேசியில் பாடல் கேட்க நினைத்தா…
அலைபேசியில் சத்தமாக வைத்துக் கேட்பேன். | |
எனக்கு மட்டுமே கேட்கும்படி வைத்துக் கேட்பேன். | ✓ |
3. எழுதுகோல் இல்லாதபோது என் நண்பர் எனக்கு எழுதுகோல் கொடுத்தால்…
திருப்பிக் கொடுத்துவிட்டு நன்றி சொல்வேன். | ✓ |
திருப்பிக் கொடுக்காமல் நானே வைத்துக் கொள்வேன். |
சொற்றொடரை நிரப்புவோம்
1. வாத்தின் கால்
விடை: குரங்கிற்கு உள்ளது வால்
2. மீண்டும் பாடினான்
விடை: நீரில் மட்டும் வாழும் உயிரினம் மீன்
3. இனிய காலை
விடை: செடியின் பசுமையான ஒரு பகுதி இலை
4. மாங்காய் சாப்பிடு
விடை: வீட்டில் வளர்க்கும் விலங்கு மாடு
5. புதிய அல்லி
விடை: காட்டில் வாழும் விலங்கு புலி
குருவிக்குப் பொருத்தமான கூட்டைத் இணைப்பேன்
வந்தனர் – மாணவர்கள் | நீந்தியது – மீன் |
மேய்ந்தது – ஆடு | பறந்தன – பறவைகள் |
எப்படிச் சொல்லலாம்? தெரிந்து எழுதுவோம்
பெயர்களையும் எழுப்பும் ஒலிகளையும் இணைத்து எழுதுவோம்
|
|
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. ஒட்டகச்சிவிங்கியின் காதில் கொட்டியது ______________
- தேனீ
- குழவி
- தவளை
- சிட்டுக்குருவி
விடை : தேனீ
2. ஒட்டகச்சிவிங்கியின் மேல் ஏறி விளையாடியது ______________
- தேனீ
- குழவி
- தவளை
- சிட்டுக்குருவி
விடை : தவளை
3. மிதிபட்டு இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது
- மிதி + பட்டு
- மிதிப் + பட்டு
- மீதி + பட்டு
- மீதிப் + பட்டு
விடை : மிதி + பட்டு
2. வினாக்களுக்கு விடையளிக்க
1. ஒட்டகச்சிவிங்கியிடம் நண்பர்களாக இருப்போம் என்று கூறியது எது?
ஒட்டகச்சிவிங்கியிடம் நண்பர்களாக இருப்போம் என்று கூறியது தேனீயாகும்.
2. ஒட்டகச்சிவிங்கி மனம் மாறியது எவ்வாறு?
தனக்கு எற்பட்ட துன்பம் போல் தானே குருவிகக்கும், தேனீக்கும், தவளைக்கு ஏற்பட்டிருக்கும் என்று எண்ணி மனம் மாறியது.
அகர முதலியைப் பார்த்து பொருள் அறிக
- புத்திசாலி – அறிவாளி
- அடாத செயல் – தகாத செயல்
சரியான சொல்லை நிரப்பிப் படித்து காட்டுக
1. தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் ……………………….. என ஒலியெழுப்பி மகிழ்ச்சியாக இருந்தன. (கீச்… கீச்… / கூக்கு… கூக்கு)
விடை : கீச்… கீச்…
2. மரத்தின் அடியில் ……………………….. ஒதுங்கியது (ஒட்டகம் / ஒட்டகச்சிவிங்கி)
விடை : ஒட்டகச்சிவிங்கி
3. தூக்கணாங்குருவிக்கு முதலில் ……………………… உதவிக்கு வந்தது. (மரங்கொத்தி / மீன்கொத்தி)
விடை : மரங்கொத்தி
4. ஒட்டகச்சிவிங்கி அருகில் இருந்த …………………….. தொப்பென்று விழந்தது. (ஆற்றில் / குளத்தில்)
விடை : குளத்தில்
6. வினை மரபினை அறிந்து கொள்வோமா? பொருத்தமானதை உரிய கோட்டில் எழுதுக
(மாத்திரை விழுங்குதல், உணவு உண்ணுதல், பழம் தின்னுதல், பால் பருகுதல், தண்ணீர் குடித்தல்)
![]() | மாத்திரை விழுங்குதல் |
![]() | தண்ணீர் குடித்தல் |
![]() | பால் பருகுதல் |
![]() | உணவு உண்ணுதல் |
![]() | பழம் தின்னுதல் |
சொல் விளையாட்டு
ஒன்றை மாற்றினால் மற்றொன்று கிடைக்குமே!
1. வெயில் இச்சொல்லில் வெ வை மாற்றி ம வை நிரப்பு
ஆடும் பறவை வரும் ஆழகாய் இருக்கும்
விடை : மயில்
2. மரம் இச்சொல்லில் ம வை மாற்றி அ வை நிரப்பு
அறுக்க உதவும் கருவியை பெறுவாய்
விடை : அரம்
3. கூச்சம் இச்சொல்லில் கூ வை மாற்றி ம வை நிரப்பு
உன் அடையாளங்களில் ஒன்றைப் பெறுவாய்-
விடை : மச்சம்
4. குருவி இச்சொல்லில் கு வை மாற்றி அ வை நிரப்பு
குளிந்து மகிழ்ந்து குளிர்ச்சி அடைவாய்
விடை : அருவி
5. பணம் இச்சொல்லில் ப வை மாற்றி ம வை நிரப்பு
மூக்கின் வழியே நுகர்ந்து மகிழ்வாய்
விடை : மணம்
அறிந்து கொள்வோம்
தலை கீழாகக் கூடு கட்டி வாழும் பறவை தூக்கணாங்குருவியாகும் |
சிந்திக்கலமா?
உன் வீட்டுத்தோட்டத்தில் உள்ள மரத்தில் பறைவையோ, அணிலே கூடு கட்டினால் அதற்குத் தொல்லை தராமல் எவ்விதம் நடந்து கொள்ளலாம்? சிந்தித்து விடை கூறுக.
வீட்டுத் தோட்டத்தல் உள்ள மரத்தில் அணிலோ, பறவையே கூடு கட்டினால் அதற்கு தொல்லை தராமல் இருப்பேன். அதன் அருகில் செல்லவோ, பட்டாசு வெடிக்கவோ மாட்டேன்.