Class 3rd Tamil Book Solution for CBSE | Lesson.23 – நல்வழி

பாடம் 23. நல்வழி

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 23 – நல்வழி to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 3 Tamil Chapter 23 "நல்வழி" solution for CBSE / NCERT Students

Class 3 Tamil Text Books – Download

வாங்க பேசலாம்

உங்களிடம ஒரு பழம் தான் இருக்கிறது. உங்கள் தம்பியும் தங்கையும் அந்த பழம் வேண்டுமென்று கேட்கிறார்கள். அவர்களுக்குப் பழத்தைப் பிரித்துக் கொடுப்பீர்களா? நீங்களே எடுத்துக் கொள்வீர்களா? உங்கள் கருத்தைக் கூறுக

அந்த ஒரு பழத்தை இரண்டாக பிரித்து பாதியை என் தம்பிக்கும் மீதியை என் தங்கைக்கும் கொடுத்து அவர்கள் உண்பதைக் கண்டு மகிழ்வேன்.

1. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. “உலகூட்டும்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________________

  1. உல + கூட்டும்
  2. உலகு + கூட்டும்
  3. உலகு + ஊட்டும்
  4. உலகூட்டு + உம்

விடை : உலகு + ஊட்டும்

2. “அந்நாளும்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________________

  1. அந் + நாளும்
  2. அ + நாளும்
  3. அந்நா + ளும்
  4. அந்த + நாளும்

விடை : அ + நாளும்

3. “இசைந்து” இச்சொல்லின் பொருள் ___________________

  1. மறுத்து
  2. பாடி
  3. ஒப்புக்கொண்டு
  4. உதவி

விடை : ஒப்புக்கொண்டு

கூடுதல் வினாக்கள்

1. உலக மக்களுக்கு உணவாய் அமைவது ……………..

  1. பால்
  2. நீரூற்று
  3. பழம்
  4. காய்கறி

விடை : நீரூற்று

2. “நல்வழி” என்னும் நூலை இயற்றியவர் ………………

  1. ஒளவையார்
  2. திருவள்ளூவர்
  3. பாரதியார்
  4. கம்பர்

விடை : ஒளவையார்

2. இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களைப் பாடலிருந்து எழுதுக

ற்று – ஊற்று – ஏற்றவர்க்கு
பெருக்கற்று – பெருக்கால்
ல்ல – இல்லை – நல்கூர்ந்தார்

3. வினாக்களுக்கு விடையளிக்க

1. நல்வழி என்னும் நூலை எழுதியவர் யார்?

நல்வழி என்னும் நூலை எழுதியவர் ஒளவையார்

2. ஊற்று நீரைக் கொடுப்பது எது?

ஆற்று மணலைத் தோண்டுகிறபோது சுரக்கின்றது ஊற்று

3. நல்ல குடிப்பிறந்தாரின் இயல்பு எத்தகையது?

நல்ல குடிப்பிறப்பில் தோன்றியவர்கள், வறுமை நிலையில் வாடினாலும், தம்மிடம் வந்து பொருள் தருக எனக் கேட்போருக்கு இல்லை எனக் கூறாது தம்மால் முடிந்தவரை கொடுத்து உதவுவார்கள்.

4. பாடலை நிறைவு செய்க

ஆற்றுநீரில்துள்ளியே
அழகாய்நீந்தும்மீன்களே!
வாழும்வரைநீங்களே
வண்ணவண்ணமீன்களே!
அன்னைகடலில் வாழும்
சின்னசின்னநண்பர்களே!
சிரித்துமகிழ்ந்துவாழுங்கள்
சிற்றினம்நிதம்காணுங்கள்

5. பொருத்துக

1. நல்லமனம்
2. ஆற்றுகுணம்
3. மணல்நீர்
4. உதவும்வீடு
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – இ, 4 – ஆ

6. இரண்டாம் எழுத்தை மாற்றிப் புதிய சொல் உருவாக்கலாமா?

1. பம்ம். பம், பம்
2. நம்ம், நம், நம்
3. உவுவு, உவு, உவு
4. பத்துந்து, பழுது
5. குயில்குல், குணால், குல்

சிந்திக்கலாமா?

ஒருவர் செல்வம் படைத்தவராயிருந்தும் பிறர்க்கு உதவாமல் இருப்பதாக நீங்கள் அறிகிறீர்கள். உதவுதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அவர்க்கு எப்படி எடுத்துச் சொல்லலாம்?

இந்த உலகத்திற்கு வரும்போது நாம் எதையும் கொண்டு வரவில்லை. போகும்போதும் எவற்றையும் நாம் எடுத்துச் செல்வதில்லை. எனவே இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழும்போது அது நமக்கு நன்மையையும், மகிழ்வையும் நிறைவாகத் தருகிறது.

அறிந்துகொள்வோம்

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு

– திருக்குறள்

ஐயம் இட்டு உண் – ஆத்திச்சூடி

7. எதிர்ச்சொல் எழுதுவோம்

1. பனிக்கட்டி குளிர்ச்சியாய் இருக்கும். நெருப்பு வெப்பமாய் இருக்கும்.
குளிர்ச்சியாய் x வெப்பமாய்
2. பூனை மேசையின் மேல் இருந்தது. எலி மேசையின் கீழ் இருந்தது
மேல் x கீழ்
3. தங்கை வெளியே சென்றாள். அண்ணன் உள்ளே வந்தான்
வெளியே x உள்ளே
4. சிறுவன் பேருந்தில் ஏறினான். சிறுமி பேருந்திலிருந்து இறங்கினாள்
ஏறினான் x இறங்கினாள்

8. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுப்போமா?

  1. ஆற்றின் ஓரம் கரை. ஆடையின் இருப்பது கறை (கரை / கறை)
  2. காட்டில் வாழ்வது புலி. கடையில் விற்பது புளி (புலி / புளி)
  3. மனிதர் செய்வது அறம். மரத்தை அறுப்பது அரம் (அறம் / அரம்)
  4. மீனைப் பிடிப்பது வலை. கையில் அணிவது வளை (வளை / வலை)
  5. பொழுதை குறிப்பது வேளை. பொறுப்பாய்ச் செய்வது வேலை (வேலை / வேளை)
  6. ஒழுக்கத்தை குறிப்பது திணை. உணவு பயிரைக் குறிப்பது தினை (திணை / தினை)
  7. உயர்ந்து நிற்பது மலை. உனக்குப் பிடிக்கும் மழை (மலை / மழை)
  8. வீரத்தைக் குறிப்பது மறம். விறகைத் தருவது மரம் (மரம் / மறம்)
  9. விடிந்த பின் வருவது காலை. வீரத்தால் அடங்குவது காளை (காளை / காலை)
  10. சான்றோர் வெறுப்பது கள். சாலையில் கிடப்பது கல் (கல் / கள்)

9. வேறுபட்ட வண்ணத்தில் உள்ள எழுத்துக்களைச் சேர்த்தால் கிடைக்கும் ஆடை வகைகளை எழுதுக.

ள்ளம்ரும்புபார்த்திபன்ஆர்த்தி
விடை : பருத்தி
ருந்துட்டம்கசடு
விடை : பட்டு
ம்பும்பரம்அப்ம்தக்காளி
விடை : கம்பளி

கூடுதல் வினாக்கள்

1. ஆற்று மணல் என் சுடுகிறது?

ஆற்றில் நீர் வற்றியதால் அதன் வறண்ட மணல் பகுதி, வெப்பதால் சூடேறி பாதங்களை சுடுகிறது.

2. நல்வழி – குறிப்பு வரைக

நாம் வாழ்வின் கடைபிடிக்க வேண்டிய நல்லநெறிகளைக் கூறுவது நல்வழி.

இதனை இயற்றியவர் ஒளவையார்.

இந்நூல் கடவுள் வாழ்த்தோடு மொத்தம் 41 வெண்பாக்கள் உள்ளன.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment