Class 3rd Tamil Book Solution for CBSE | Lesson.5 – மாணவர்கள் நினைத்தால்…

பாடம் 5. மாட்டு வண்டியிலே…

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 5 – மாட்டு வண்டியிலே to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 3rd Book Back Answer - maatu vandiyile

Class 3 Tamil Text Books – Download

சரியான விடையைத் தெரிவு செய்வேன்

1. தண்ணீர் இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ……………….

  1. தண் + ணீர்
  2. தண் + நீர்
  3. தண்மை + நீர்
  4. தன் + நீர்

விடை : தண்மை + நீர்

2. மேலே இச்சொல்லின் எதிர்ச்சொல் ……………….

  1. உயரே
  2. நடுவே
  3. கீழே
  4. உச்சியிலே

விடை : கீழே

3. வயல் + வெளிகள் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………….

  1. வயல்வெளிகள்
  2. வயவெளிகள்
  3. வயற்வெளிகள்
  4. வயல்வளிகள்

விடை : வயல்வெளிகள்

4. கதை + என்ன இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………….

  1. கதைஎன்ன
  2. கதையன்ன
  3. கதையென்ன
  4. கதயென்ன

விடை : கதையென்ன

5. வெயில் இச்சொல்லின் எதிர்ச்சொல் ……………….

  1. நிழல்
  2. பகல்
  3. வெப்பம்
  4. இருள்

விடை : நிழல்

சொல் கோபுரம் அமைப்பேன்

Class 3rd Book Back Answer - maatu vandiyile_Sol Kopuram Amaipen

கண்டுபிடித்து பொருத்துவோம்

Class 3rd Book Back Answer - maatu vandiyile_Kandu Pidithu Poruthuvom

சொற்களுக்குள் ஒளிந்துள்ள உணவுப்பொருளைக் கண்டுபிடித்து எழுதுவேன்

Class 3rd Book Back Answer - maatu vandiyile_unavu Porutkalai kandu pidithu eluthuven

கண்ணாடியில் பாரப்போம்; புதிருக்குப் பொருத்தமான விடையை எழுதுவோம்

Class 3rd Book Back Answer - maatu vandiyile_puthiruku Poruthamana Vidayai Eluthuvom

1. எட்டுக் கைகள் விரிந்தால் ஒற்றைக்கால் தெரியும் அது என்ன? ……………………

விடை : குடை

2. அடிமலர்ந்து, நுனி மலராத பூ என்ன பூ? ……………………

விடை : வாழைப்பூ

3. கையிலே அடங்கும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை அது என்ன? ……………………

விடை : புத்தகம்

4. அன்றாடம் மலரும் அனைவரையும் கவரும் அது என்ன? ……………………

விடை : கோலம்

5. என்னோடு இருக்கும் சிறுமணி, எனக்குத் தெரியாது ஆனால் உனக்குத் தெரியும் அது
என்ன? ……………………

விடை : கண்

6. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது. அது என்ன? ……………………

விடை : பட்டாசு

7. அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு அது என்ன? ……………………

விடை : நெல்

8. ஒளி கொடுக்கும் விளக்கல்ல, வெப்பம் தரும் நெருப்பல்ல, பளபளக்கும் தங்கம் அல்ல அது என்ன? ……………………

விடை :  சூரியன்

கண்டுபிடித்து வட்டமிடுவோம்

Class 3rd Book Back Answer - maatu vandiyile_Kandupidithu Vattamiduven

உரிய வடிவத்தோடு இணைப்பேன்; பிடித்த வண்ணமிடுவேன்

Class 3rd Book Back Answer - maatu vandiyile_Uriya vadivathoodu Inaipen

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தெரிவு செய்வேன்

1. இளமதி இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ………………

  1. இள + மதி
  2. இ + மதி
  3. இளமை + மதி
  4. இனிமை + மதி

விடை : இளமை + மதி

2. பல இச்சொல்லின் எதிர்ச்சொல் ………………

  1. நிறைய
  2. அதிகம்
  3. சில
  4. நிறைவு

விடை : சில

3. பலகை இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ………………

  1. பல + கை
  2. பல் + கை
  3. ப + கை
  4. பலகு + கை

விடை : பல + கை

இணைக்கலாமா?

Class 3 Tamil Solution - Lesson 9 இணைக்கலாமா?

1. அச்சாணிபச்சை நிறம்.
2. பசுமைநெற்பயிரின் உலர்ந்த தாள்
3. வைக்கோல்வண்டிச்சக்கரம் உருண்டு செல்ல உதவும் ஆணி
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ

சொல் கோபுரம் அமைப்போம்

Class 3 Tamil Solution - Lesson 9 சொல் கோபுரம் அமைப்போம்

1. இதனைக் ’கரம்’ என்றும் கூறலாம் (1)

விடை : கை

2. பசு கொடுக்கும் பானம் (2)

விடை : பால்

3. ஆறுகள் சென்று சேருமிடம் (3)

விடை : கடல்

4. வண்டியில் சக்கரம் கழன்று விழாமல் பாதுகாப்பது (4)

விடை : அச்சாணி

5. பாலைவனக்கப்பல் (5)

விடை : ஒட்டகம்

வீட்டில் உள்ள தாத்தா பாட்டியிடம் மூன்று புதிர்களைக் கேட்டறிந்து குறிப்பேட்டில் எழுதி வருக.

1. கூரை வீட்டை பிரித்தால் ஓட்டு வீடு, ஓட்டு வீட்டுக்குள் வெள்ளை மாளிகை, வெள்ளை மாளிகை நடுவில் ஓர் குளம் நான் யாா்?

விடை : தேங்காய்

2. சாப்பிட எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவேன். ஆனால் நீரைக் குடிக்க தந்தால் இறப்பேன் நான் யார்?

விடை : நெருப்பு

3. ஓயாமல் சத்தம் போடுவேன். நான் இயந்திரம் அல்ல. உருண்டு உருண்டு வருவேன். பந்து இல்லை நான் யார்?

விடை : கடல்

வாங்க பேசலாம்

1. மாட்டு வண்டியில் அல்லது வேறு ஏதேனும் வாகனத்தில் வெளியூர் சென்றிருக்கிறாயா? அப்படி நீ சென்று வந்த அனுபவம் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.

பாலன் :நண்பர்களே! நீங்கள் மாட்டு வண்டிப் பயணம் சென்ற உள்ளீர்களா?
ரகு :நாங்கள்  இதுவரை சென்றதில்லை
பாலன் :எங்கள் அப்பா மாட்டு வண்டி என்று சொல்லப்படும் கட்டை வண்டி வைத்துள்ளார்.
கலை :இந்த மாட்டுவண்டியின் என்னென்னன பயன்கள் உண்டு?
ரமேஷ் :எங்கள் அப்பா மாட்டு வண்டி வைத்திருக்கிறார். விவசாயப் பொருட்களையும், கல், மண், கம்புகள் கொண்டு செல்லவும் பயன்படுத்துவார் என் அப்பா.
ராஜேஷ் :மாட்டுவண்டிய இயங்க என்னென்ன வேண்டும்?
பாலன் :கடையாணி, அல்லைப்படல், குடம், நுகத்தடி, வட்டை, சவாரித்ப்பை, பட்டா, இருசு, ஏர்க்கால், மூக்கேர், ஏர்கால் சட்டம், பூட்டாங்கயிறு, பட்டாங்குச்சி, முனைக்குச்சி, கொலுப்பலகை போன்றவை மாட்டுவண்டி இயங்க தேவை
கலை :எங்கள் ஊரான அன்னவாசலில் கோவில் கொடை விழாவில் இரவு கூத்து பார்க்க என் அப்பா, நான், அம்மா, தங்கை ஆகியோார் சென்றோம். ஜல் ஜல் என்று சலங்களைகள் ஆட மாட்டு வண்டியில் சென்றது சுகமான அனுபவம்.
சுசிலன் :கயிற்றின் உதவியுடன் மாடுகள் வண்டியில் பிணைக்கப்பட்டு இருக்கும். இப்போது பெரும்பாலான மாட்டு வண்டிகள் உருளிப் பட்டைகளால் ஆனவை. பயணம் சுகமாக இருக்க எங்கள் வீட்டு மாட்டு வண்டியில் வைக்கோலை வண்டியில் நிரப்பி அதன் மேல் அமர்ந்து பயணிப்போம்.
கார்மேகம் :எங்கள் வீட்டு மாட்டு வண்டியில் காங்கேயம் காளைகள் பூட்டப்பட்டு இருக்ககும்.
மதன் :என் அப்பா மாட்டுவண்டியை நின்று கொண்டே ஓட்டுவார். சில நேரம் அண்ணனும் மாட்டு வண்டியை ஓட்டுவான்.
முகிலன் :வயல்வெளிகளுக்கு இடையே மாட்டுவண்டிப் பயணம் செய்வோம். இயற்கையோடு இணைவோம்.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment