Class 3rd Tamil Book Solution for CBSE | Lesson.5 – மாணவர்கள் நினைத்தால்…

பாடம் 5. மாணவர்கள் நினைத்தால்…

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 5 – மாணவர்கள் நினைத்தால்… to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 3 Tamil Chapter 5 "மாணவர்கள் நினைத்தால்..." solution for CBSE / NCERT Students

Class 3 Tamil Text Books – Download

வாங்க பேசலாம்

1. நெகிழியினால் ஏற்படும் தீமைகள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.

2. நெகிழியை அவசியம் பயன்படுத்த வேண்டும் என்ற இடங்களாக எவற்றைக் கருதுகிறாய்? அவ்விடங்களில் நெகிழிக்குப் பதிலாக வேறு என்ன பொருள்களைப் பயன்படுத்தலாம் என வகுப்பறையில் கலந்துரையாடுக.

சரவணன் :நெகிழியினால் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கிறது. தெரியுமா?
அருண் : என்னென்ன பாதிப்புகள் சொல்லேன்?
சரவணன் : கால்வாய்களை அடைத்து நீர் செல்லவிடாமல், நிலத்தில் மட்காமல் தங்கி நீர் பூமியினுள் செல்ல முடியாமலும் சுற்றுப்புறம் பாதிப்படைகிறது. தேநீர், சாக்லேட், பால்கோவாவில் சுற்றப்பட்ட நெகிழி உறைகளால் புற்று நோய் ஏற்படும் என ஆய்வுகள் கூறுகின்றன.
காயதிரி : நெகிழிக் குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன் டெங்கு மலேரியா என பற்பல நோய்கள் தோன்றவும் காரணமாக அமைகிறது.
மகேஷ் : நெகிழிப் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் வாயுக்களால் மூச்சுக்குழல் பாதிப்பு, குடல்புண், செரிமானமின்மை, போன்ற நோய்கள் உருவாகிறது.
சங்கரி : பால், தண்ணீர்க் குடம், மாத்திரை, குழாய், பேனா போன்றவை செய்ய நெகிழி தேவை தானே?
விக்னேஷ் : பாலை பாத்திரத்தில் வாங்கலாம். தண்ணீரை அலுமினிய பாத்திரத்தில் பிடிக்கலாம். மாத்திரை உறைகளை காற்றுபுகா காதித, சணல் அட்டைகளில் தரலாம்.
முத்து : நெகிழிப்பொருட்களில் 10% மட்டுமே மீண்டும் பயன்படுத்தக் கூடியவை. 80% மறு சுழற்சி செய்ய முடியாதவை.
சுப்பிரமணி : ஆறுகள் நெகிழியைக் கடலில் கொண்டு வந்து சேர்ப்பதால் பல் லட்சம் கடல்வாழ் உயிரினங்களும் பல லட்சம் பறவைகளும் இறக்கின்றன.
தர்மன் :
நெகிழை எரிப்பதால் டையாக்சின் வாயு வெளிப்பட்டு புற்றுநோய் உருவாகிறது.
அருண் :பிளாஸ்டிக்கே (நெகிழியே)
நீரை விழுங்கினாய்
நிலத்தை விழுங்கினாய்
உயிர்களை விழுங்கும் முன்
உனக்கு
விடை கொடுக்கிறோம்.
சரவணன் :பிளாஸ்டிக் பையில் டீ வாங்காதே!
பித்தப் பையில் கான்சர் வாங்காதே!!
மெர்வின் :பிளாஸ்டிக் தம்ளரில் தண்ணீரு!
பூமித்தாய்க்கோ கண்ணீரு!!

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

1. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. முயற்சி இச்சொல்லின் பொருள் …………………………………..

  1. ஆக்கம்
  2. ஊக்கம்
  3. இயக்கம்
  4. பக்கம்

விடை : ஊக்கம் / இடைவிடாத உழைப்பு

2. ஆன்றோர் இச்சொல்லின் பொருள் …………………………

  1. பெற்றோர்
  2. உற்றோர்
  3. சுற்றோர்
  4. பெரியோர்

விடை : பெரியோர்

3. வைத்திருந்தனர் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………….

  1. வைத்து + யிருந்தனர்
  2. வைத் + இருந்தனர்
  3. வைத்து + இருந்தனர்
  4. வைத் + திருந்தனர்

விடை : வைத்து + இருந்தனர்

4. வீதியெங்கும் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………………

  1. வீதி + எங்கும்
  2. வீதி + யெங்கும்
  3. வீதியெ + ங்கும்
  4. வீதி + அங்கும்

விடை : வீதி + எங்கும்

5. நெகிழி + அற்ற என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………………………

  1. நெகிழிஅற்ற
  2. நெகிழியற்ற
  3. நெகிழ்அற்ற
  4. நெகிழ்யற்ற

விடை : நெகிழியற்ற

6. பாதிப்பு + அடைகிறது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………….

  1. பாதிப்அடைகிறது
  2. பாதிப்புஅடைகிறது
  3. பாதிப்படைகிறது
  4. பாதிபடைகிறது

விடை : பாதிப்படைகிறது

2. வினாக்களுக்கு விடையளி

1. மேரி இனி யாருடன் விளையாடப் போவதாகக் கூறினாள்?

மேரி இனி அவள் வீட்டுக் கன்றுக்குட்டியுடன் விளையாடப் போவதாகக் கூறினாள்

2. பசு எதனால் இறந்தது?

பசு நெகிழியை உட்கொண்டதால் இறந்தது

3. நெகிழியினால் ஏற்படும் தீமைகள் இரண்டினை எழுதுக.

  • மட்காத இந்த நெகிழிப் குப்பைகளால் சாக்கடைகளில் நீர்தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு ஈ மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது.
  • நெகிழிக் குப்பைகளை எதிப்பதால் ஓசோன் படலம் பாதிப்படைகிறது. இதனால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக நம்மைத் தாங்குகிறது. இதனால் நோல் நோய்கள் ஏற்படுகிறன்றன.

4. நெகிழி விழிப்புணர்வு வாசகம் ஒன்றினை உருவாக்குக.

நெகிழி நெகிழாது! நிம்மதி கிடைக்காது!!

3. பொருத்தமான சொல்லை எடுத்து நிரப்புக

1. நெகிழியற்ற …………………. உருவாக்குவோம். (உலகை / உளகை)

விடை : உலகை

2. நெகிழியை ஒழிப்போம் ………………… காப்போம். (மன்வளம் / மண்வளம்)

விடை : மண்வளம்

3. மேரி ………………….. குதித்து ஓடிவந்தாள். (மகிள்வோடு / மகிழ்வோடு)

விடை : மகிழ்வோடு

4. எறும்பு …………………….. கல்லும் தேயும். (ஊரக் / ஊறக்)

விடை : ஊரக்

5. துணிப்பை என்பது ……………………. (எளிதானது / எலிதானது)

விடை : எளிதானது

4. இணைந்து செய்வோம்

நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக எளிதில் மட்கும் பொருள்களாக எவற்றையெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பட்டியலிடுக.

Class 3 Tamil Solution - Lesson 5 இணைந்து செய்வோம்

துணிப்பைபாக்கு மட்டைஇலை
சணல்பைகாகிதப்பைசாக்குப்பை

5. சொற்களை இனம்கண்டு அதற்குரிய பெட்டிக்குக் கீழே எழுதுக.

(கண்ணாடித்துண்டு, நெகிழிப்பை, காகிதத்தாள், சணல்பை, பீங்கான் தட்டு, இலை)

Class 3 Tamil Solution - Lesson 5 சொற்களை இனம்கண்டு அதற்குரிய பெட்டிக்குக் கீழே எழுதுக.Class 3 Tamil Solution - Lesson 5 சொற்களை இனம்கண்டு அதற்குரிய பெட்டிக்குக் கீழே எழுதுக.
காகிதத்தாள்கண்ணாடித்துண்டு,
சணல்பைபீங்கான் தட்டு
இலைநெகிழிப்பை

ஒருமை, பன்மை அறிவோமா?

ஒருமைச் சொல்லுக்கு உரிய பன்மைச் சொல்லை எழுதுவோமா!!!

Class 3 Tamil Solution - Lesson 5 ஒருமைச் சொல்லுக்கு உரிய பன்மைச் சொல்லை எழுதுவோமா!!!

பந்துபந்துகள்
ஆமைஆமைகள்
முயல்முயல்கள்
பூனைபூனைகள்
பூபூக்கள்
விழாஆமைகள்
பசுபசுக்கள்
வினாவினாக்கள்
படம்படங்கள்
மரம்மரங்கள்
சிங்கம்சிங்கங்கள்
காகம்காகங்கள்
பல்பற்கள்
கல்கற்கள்
சொல்சொற்கள்
புல்புற்கள்
முள்முட்கள்
தாள்தாட்கள்
ஆள்ஆட்கள்
பொருள்பொட்கள்

கூடுதல் வினாக்கள்

. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. தீமை சொல்லின் எதிர்ச்சொல்

  1. கொடுமை
  2. நன்மை
  3. வன்மை
  4. சிறுமை

விடை : நன்மை

2. துணிப்பை பிரித்து எழுதக் கிடைப்பது 

  1. துணி + ப்பை
  2. துணிப் + பை
  3. துணி + பை
  4. துண்ணி + பை

விடை : துணிப்பை

4. நெகிழியற்ற ___________ உருவாக்குவோம்

  1. நீரினை
  2. ஆகாயத்தை
  3. உலகை
  4. காற்றினை

விடை : உலகை

4. நெகிழிக் குப்பைகளை எரிப்பதால் ___________ பாதிப்படைகிறது

  1. ஓசோன் படலம்
  2. நீர்
  3. மண்
  4. மரங்கள்

விடை : ஓசோன் படலம்

வினாக்களுக்கு விடையளி

1. பாடத்தில் கூறப்படும் ஆன்றோர் வாக்கு யாது?

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

2. ஒருமை என்றால் என்ன?

ஒரு பொருளை மட்டும் குறிப்பது ஒருமை.

3. பன்மை என்றால் என்ன?

ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களைக் குறிப்பது பன்மை.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment