Class 4th Tamil Book Solution for CBSE | Lesson.27 – அறிவுநிலா

பாடம் 27. அறிவுநிலா

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 27 – அறிவுநிலா to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 4 Tamil Chapter 27 "அறிவுநிலா" solution for CBSE / NCERT Students

Class 4 Tamil Text Books – Download

வாங்க பேசலாம்

நீங்கள் அறிந்திருக்கும் புதிர்க்கதைகளுள் ஒன்றை வகுப்பில் பகிர்ந்து கொள்க. 

ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் மிகவும் ஏழை. மற்றொருவன் பணக்காரன். பணக்காரனிடம் அவன் தம்பியாக ஏழை ஒரு பசுவைக் கேட்டான். அண்ணன் பசுவைக் கொடுப்பதற்கு முன், என் வயலில் நீ தினமும் வந்து வேலை பார்க்க வேண்டும். ஒரு வருடத்திற்கு வேலை பார்க்க வேண்டும்! என்றான். அவனும் சரி என்றான். பசுவை வாங்கிக் கொண்ட தம்பி, வயலில் ஒரு வருடம் வேலை பார்த்தான். ஒரு வருடம் முடிந்தது.

அண்ணனிடம் சென்று நீ கூறியபடி நான் உன் வயலில் ஒரு வருடம் வேலை பார்த்து விட்டேன். இப்பொழுது என் பசுவைக் கொடு என்றான். அண்ணன் அதெப்படி பெரியவர்களிடம் கூறினர். அதற்கு அவர்கள் மூன்று புதிர் கொடுத்து. இதற்கு சரியான பதில்களை யார் சொல்கிறீர்களோ அவர்களுக்குத்தான் பசு! என்றார்கள்.

முதல் புதிர் மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது?

இரண்டாவது புதிர் மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருவது எது?

மூன்றாவது புதிர் அதிக விரைவாகச் செல்வது எது?

இதற்கான விடைகளை நாளை கூறுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்கள். இருவரும் வீட்டிற்கு வந்து மூளையை குழப்பி சிந்தித்தனர். மறுநாள் காலை பெரியவர்களை சந்தித்தனர்.

அண்ணர் பெரியவர்களிடம் மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது என்று கேட்டீர்கள் பன்றிக்கறியைச் சாப்பிட்டால் வயிறு நிரம்பும். இரண்டாவது மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருவது எது என்று கேட்டீர்கள் பெட்டி நிறைய பணம் இருந்தால் மகிழ்ச்சி மூன்றாவது வேகமாக செல்வது எது என்று கேட்டீர்கள். வேட்டை நாய்கள் விரைவாக ஓடி முயல்களைக் கூட பிடித்துவிடும். இந்த பதிலைக் கேட்ட பெரியவர்கள் கோபமடைந்தனர். உன் பதில் தவறு எனக் கூறினார்கள்.

அடுத்தது இந்த புதிர்களை தம்பியிடம் கேட்டனர். அதற்குத அவன் வயிற்றை நிரப்புவது பூமி. பூமித்தாயிடம் இருந்து தானியங்களும், கிழங்குகளும் பெறுகிறோம். இரண்டாவது மனிதனுக்கு மிக்க மகிழ்ச்சி தருவது தூக்கம், மூன்றவது வேகமாகச்ச செல்லக் கூடியது நம் எண்ணங்கள் தான். இதனைக் கேட்ட பெரியவர்கள் மகிழ்ந்து பசுவை தம்பிக்கே பரிசளித்தனர்.

சிந்திக்கலாமா!

இக்கதையில் வரும் அண்ணனைப்போல் நீ இருந்தால், தம்பிக்கு என்ன செய்திருப்பாய்? கூறுக. 

நான் அண்ணனைப்போல் வசிதியாக வாழ்ந்தால், வறுமை நிலையில் வாழும் தம்பிக்குத் தேவையான உதவிகள் செய்து அவன் வறுமை நிலை மாற உதவியிருப்பேன்.

1. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. “தினமும்” என்ற சொல்லின் பொருள்?

  1. நாள்தோறும்
  2. வேலைதோறும்
  3. மாதந் தோறும்
  4. வாரந்தோறும்

விடை : நாள்தோறும்

2. “பனிச்சறுக்கு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. பனி + சறுக்கு
  2. பனிச் + சறுக்கு
  3. பன + சறுக்கு
  4. பன் + சறுக்கு

விடை : பனி + சறுக்கு

3. “வேட்டை + நாய்” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?

  1. வேட்ட நாய்
  2. வேட்நாய்
  3. வேட்டைநாய்
  4. வேட்டநாய்

விடை : வேட்டைநாய்

2. வினாக்களுக்கு விடையளிக்க.

1. ஓராண்டு நிலத்தில் உழைத்தவர் யார்?

ஓராண்டு நிலத்தில் உழைத்தவர் தம்பி

2. பெரியவர் சொன்ன புதிர்கள் எத்தனை?

மூன்று புதிர்களை பெரியவர் போட்டார்.

3. புதிருக்குச் சரியான பதிலளித்தவர் யார்?

புதிருக்குச் சரியான பதிலளித்தவர் தம்பி

4. பெரியவர் பசுவை யாருக்குக் கொடுத்தார்?

பெரியவர் பசுவை புதிருக்கு சரியான பதிலை கூறிய தம்பிக்கே கொடுத்தார்.

5. கவின்நிலா பெரியவருக்குக் கொடுத்த பரிசு என்ன?

கவின்நிலா பெரியவருக்குக் கொடுத்த பரிசு சிட்டுக்குருவி ஆகும்.

3. எதிர்ச்சொல்லுடன் இணைப்போமா?

Class 4 Tamil Solution - Lesson 27 எதிர்ச்சொல்லுடன் இணைப்போமா?

1. குறையஇழைத்த
2. மெல்லியமுடியாத
3. முடியும்மெதுவாக
4. விரைவாகதடித்த
5. கொழுத்தநிறைய
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 4 – அ

இணைந்து செய்வோம்

4. விளையாடலாம் வாங்க! தூண்டில் மீன் விளையாட்டு!

மீன் வடிவத்தில் அட்டைகளை வெட்டிக் கொண்டு அட்டையில் பின்வரும் சொற்களை எழுதிக் கொள்ள வேண்டும். அட்டையில் குண்டூசியைக் குத்தி, வகுப்பறையின் நடுவில் வட்டமிட்டு அதில் அட்டைகளை பரப்பி வைக்க வேண்டும். ஒரு குச்சியின் நுனியில் நூலின் ஒரு முனையைக் கட்ட வேண்டும். மறுநுனியில் காந்தத்தை வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். வகுப்பறையில் பெரியதொரு வட்டமிட்டு வட்டத்தில் ஓர் அம்புககுறி இட வேண்டும். வட்டத்தில் மாணவர்களை ஓடவிட வேண்டும். ஆசிரியர் ஊதலை ஊதியவுடன் மாணவர்கள் வட்டத்தில் நிற்க வேண்டும். அம்புககுறி இட்ட இடத்தில் எந்த மாணவர் நிற்கிறாரோ அவர், தூண்டில் மூலம் ஓர் அட்டையை எடுத்து, அதில் உள்ள சொல்லுக்குப் பன்மைச்சொல் கூற வேண்டும்.

முட்டைமுட்டைகள்
புதிர்புதிர்கள்
வீடுவீடுகள்
கோழிகோழிகள்
நாய்நாய்கள்
துணிதுணிகள்
குச்சிகுச்சிகள்
வண்டிவண்டிகள்
பரிசுபரிசுகள்
முயல்முயல்கள்
குருவிகுருவிகள்

மொழியோடு விளையாடு 

1. புகைவண்டி
புகைவடிவண்டி
கைகைவண்டிவகை
2. கதைப்பாட்டு
கதைபாட்டுபாடு
தைபாதைபாப்பா
3. பருத்தி ஆடைகள்
பருத்திகடைஆடை
படைஆதிகரு

5. கொடுக்கப்பட்ட சொல்லின் பொருள் கட்டத்திலுள்ள எழுத்துகளுள் ஒளிந்திருக்கிறது கண்டுபிடித்து எழுதுக.

Class 4 Tamil Solution - Lesson 27 கொடுக்கப்பட்ட சொல்லின் பொருள் கட்டத்திலுள்ள எழுத்துகளுள் ஒளிந்திருக்கிறது கண்டுபிடித்து எழுதுக.சதம் – நூறு
Class 4 Tamil Solution - Lesson 27 கொடுக்கப்பட்ட சொல்லின் பொருள் கட்டத்திலுள்ள எழுத்துகளுள் ஒளிந்திருக்கிறது கண்டுபிடித்து எழுதுக.சித்திரம் – ஓவியம்
Class 4 Tamil Solution - Lesson 27 கொடுக்கப்பட்ட சொல்லின் பொருள் கட்டத்திலுள்ள எழுத்துகளுள் ஒளிந்திருக்கிறது கண்டுபிடித்து எழுதுக.நட்சத்திரம் – விண்மீன்

செயல் திட்டம்

உங்கள் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கேட்டு, 20 விடுகதைகளை எழுதி வருக.

1. ஒரு வீட்டுக்கு இரு வாசல் – அது என்ன?

விடை : மூக்கு

2. கத்திபோல் பூ பூக்கும் காடாரம் போல் காய் காய்க்கும் – அது என்ன?

விடை : தடியங்காய்

3. கால் இருக்கும் நடக்க முடியாது கையிருக்கும் அசைக்க முடியாது – அது என்ன?

விடை : நாற்காலி

4. பச்சைபெட்டிக்கும் வெள்ளை முத்துக்கள் – அது என்ன?

விடை : வெண்டைக்காய்

5. பச்சை வீட்டிற்கு சிவப்பு வாசல் – அது என்ன?

விடை : கிளி

6. மின்னல் அடிக்கும் இடி இடிக்கும் ஆனால் மழை பெய்யாது – அது என்ன?

விடை : பட்டாசு

7. ஒரு கரண்டி மாவு ஊரெல்லாம் தோசை – அது என்ன?

விடை : நிலவு

8. அடித்தால் வலிக்கும் கடித்தால்  இனிக்கும் – அது என்ன?

விடை : கரும்பு

9. ஒரு இட்லிக்கு மூன்று பேர் சண்டை போடுகிறார்கள் – அது என்ன?

விடை : மின் விசிறி

10. இருட்டு அறைக்குள் ஆயிரம் மின்மினிப் பூச்சிகள் – அது என்ன?

விடை : விண்மீன்கள்

11. கிணற்றுக்குள் வெள்ளை முத்துக்கள் – அது என்ன?

விடை : பல்

12. ஒரு புட்டியில் இரண்டு தைலம் – அது என்ன?

விடை : முட்டை

13. ஓடோடும் சங்கிலி பள்ளத்தைப் பார்த்தால் பாய்தோடும் சங்கிலி – அது என்ன?

விடை : நீர்

14. ஒரு கிணற்றுக்குள் 32 திருடர்கள் – அது என்ன?

விடை : பற்கள்

15. கறுப்பு ரோட்டில் வெள்ளைக்காரன் உருளுகிறான் – அது என்ன?

விடை : தோசை

16. வானத்தில் பறக்கும ஆனால் சிறகுகள் கிடையாது – அது என்ன?

விடை : கொடி

17. அள்ள முடியும் ஆனால் கிள்ள முடியாது – அது என்ன?

விடை : தண்ணீர்

18. வளைக்க முடியம் ஆனால் உடைக்க முடியாது – அது என்ன?

விடை : முடி

19. தன்னை கரைப்பான், சரித்திரம் படைப்பான் – அது என்ன?

விடை : சுண்ணாம்புக்கட்டி

20. மேலே போவான், கீழே வர மாட்டான் – அது என்ன?

விடை : வளர்ச்சி

கூடுதல் வினாக்கள்

1. செல்வ செழிப்பில் வாழ்ந்தவன் யார்?

செல்வ செழிப்பில் வாழ்ந்தவன் அண்ணன்

2. பெரியவர் போட்ட மூன்று புதிர்கள் யாவை?

  1. மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது?
  2. மனிதனுக்கு மிக மகிழ்ச்சியைத் தருவது எது?
  3. அதிக விரைவாகச் செல்வது எது?

3. அண்ணனும் தம்பியும் புதிருக்கான விடை எதுவென்று கூறினர்?

புதிர்அண்ணன்தம்பி
வயிற்றை நிரப்புவதுஅறுசுவை உணவுபூமி
மகிழ்ச்சியைத் தருவதுபணம்தூக்கம்
விரைவாகச் செல்வதுவேட்டை நாய்சிந்தனை ஓட்டம்

4. புதிருக்கான சரியான பதிலை தம்பிக்குச் சொல்லிக் கொடுத்தது யார்?

கவின்நிலா தன் தந்தைக்கு புதிருக்கான சரியான பதிலை சொல்லிக் கொடுத்தாள்

 

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment