Class 4th Tamil Book Solution for CBSE | Lesson.4 – முளைப்பாரி பாடல்

பாடம் 4. முளைப்பாரி பாடல்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 4 Tamil Chapter 4 – முளைப்பாரி பாடல் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

 Class 4 Tamil Chapter 4 "முளைப்பாரி பாடல்" solution for CBSE / NCERT Students

Class 4 Tamil Text Books – Download

வாங்க பேசலாம்

முளைப்பாரி பற்றி அறிந்து வந்து வகுப்பறையில் பேசுக

ஒரு பானையில் மண் நிரப்பி அதில் நவதானியங்களை நெருக்கமாக தூவி, அதை வெயில் அதிகம் படாத ஒரு இடத்தில் நாலைந்து நாட்களுக்கு வைத்துவிடுவார்கள். தினமும் பானையில் இருக்கும் மண்ணிற்கு நீர் ஊற்றி வருவார்கள். எனேவ, பயிர் வகை, விதைகள் நெருக்கமாக பானையில் முளைத்து, வளர்ந்து நிற்கும் பானையை நோன்பிருந்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். இதையே முளைப்பாரி என்கிறோம். முளைப்பாடி இல்லாத மாரியம்மன் விழா இல்லை முளைப்பாரி பல்லாயிரம் வருட விவசாய வாழ்க்கையின் தொடர்ச்சியான விவசாய சடங்கு.

இது போன்று வேறு பாடல்களைக் கேட்டறிந்து வந்து வகுப்பறையில் பாடி மகிழ்க.

தன்னானே தானேனன்னே
தன்னா நன்னானே – தானேதன்னானே தானேனன்னே
தன்னா நன்னானே…வாசலிலே வேப்பங்கொத்து
சொரு வைக்கனுண்டி – வீடுவாசெல்லலாம் சாணமிட்டு
வெளக்கி வைக்கனுண்டி…..மண்பானை கூட்டுக்குள்ளே
வண்டல் மண்ணை நிரப்பி – அதில்மாட்டெருவும் ஆட்டெருவும்
கலந்து வைக்கனுண்டி…..வளைபோட்ட பொண்டுகெளல்லாம்
வாசல் நில்லுங்கடி – சின்னமுனைப்பூவும் பூத்துநிக்க
குலவை சொல்லுங்கடி…..

கறிச்சோறு தின்பதெல்லாம்
நிறுத்தி வச்சிடடி- உன்

காரியத்தை நெஞ்சுக்குள்ளே
இறுக்கி வச்சிடடி…

முளைப்பாரி ஒப்பதாம்
முத்துமாரி உனக்கு – மாதம்

மும்மாரி பெஞ்சிடனும்
அருள்புரி எமக்கு…..

ஆடியிலே கொடியேத்தி
ஆத்தா உனக்கு – முளைப்

பாரியாத்தான் தூக்கிவந்தா
விளைச்சல் சிறப்பு……

தன்னானே தானேனன்னே
தன்னா நன்னானே – தானே – (2)

சிந்திக்கலாமா?

மாட்டு எருவையும், ஆட்டு எருவையும் வயலுக்கு இடவேண்டும் என்று தாத்தா கூறுகிறார் ஆனால் அப்பாவோ, உடனே பலன் தருவது செயற்கை உரம் தான் என்கிறார். யார் கூறுவது சரி?

இருவரும் கூறுவது சரிதான்

மாட்டு எருவையும், ஆட்டு எருவையும் வயலுக்கு இடுவதனால் அவைகள் இயற்கை உரமாக இருப்பதனால், இயற்கை வேளாணமைக்கு உதவுகிறது. உடலுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத ஆரோக்கியமான உணவுப்பொருட்களை தருகிறது. மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது. மண்ணில் நுண்ணுயிரிகள் வாழவும் வழிவகை செய்கிறது.

செயற்கை உரம் இடுவதால் உடனே பலனைத்தரும். ஆனால் அதனால் வேதிப்பொருட்கள் மண்ணில் கலந்து மண் வளம் பாதிக்கப்படுகிது. நூண்ணுயிருகளும் அழிந்து விடுகிது. மனித உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். வேதிப்பொருட்கள் கலந்த உணவையே தருகிறது. அதனால் மனிதன் தனது ஆரோக்கியத்தை இழந்து பல நோய்களுக்கு உட்படுகிறான். இருவர் கூறுவதும் சரியாக இருந்தாலும், இயற்கை உரங்களை வயலுக்கு இடுவதே நல்லது. அதுவே மனித ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும்.

1. பொருள் தருக

Class 4 Tamil Solution - Lesson 4 பொருள் தருக

 

1. முளைப்பாரி = …………………….

விடை : முளையிட்ட நவதானியங்கள் நிறைந்த சிறு மண்பாண்டம்

2. தையலர் = …………………….

விடை : பெண்கள்

3. ஓலைக்கொட்டான் = …………………….

விடை : ஓலையால் முடையப்பட்ட சிறு கூடை

4. மாட்டாந்தொழு = …………………….

விடை : மாடு கட்டும் இடம்

5. ஆட்டாந்தொழு = …………………….

விடை : ஆடு கட்டும் இடம்

2. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. “இரண்டெடுத்து” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………………

  1. இரண் + டெடுத்து
  2. இரண்டு + எடுத்து
  3. இரண்டெ + டுத்து
  4. இரண்டெ + எடுத்து

விடை :இரண்டு + எடுத்து

2. “பொங்கலிட்டு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….

  1. பொங்கல் + இட்டு
  2. பொங்கல் + லிட்டு
  3. பொங்க + இட்டு
  4. பொங் + கலிட்டு

விடை பொங்கல் + இட்டு

3. “ஆடு + எரு” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் …………………………..

  1. ஆடுஎரு
  2. ஆடெரு
  3. ஆட்டெரு
  4. ஆடொரு

விடை: ஆட்டெரு

4. “செவ்வாய் + கிழமை” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் ……………………….

  1. செவ்வாய்கிழமை
  2. செவ்வாய்க்கிழமை
  3. செவ்வாகிழமை
  4. செவ்வாக்கிழமை

விடை: செவ்வாய்க்கிழமை

5. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக

  1. சோளத்தட்டு = சோளம் + தட்டு
  2. மாட்டெரு = மாடு + எரு

3. இப்பாடலில் ஒரே சொல் இரண்டு முறை அடுத்தடுத்து வருவதைக் கண்டறிந்து எழுதுக -அடுக்குத்தொடர்.

கணுக்கணுவா, சுளைசுளையா

4. இப்பாடலில் இடம்பெற்றுள்ள ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.

நாளையிலே – கிழமையிலஊறவச்சி – முறிச்சிவச்சி
கம்மந்தட்டை – சோளத்தட்டைமாட்டாந்தொழு – ஆட்டாந்தொழு
மாட்டெருவு- ஆட்டெருவுகடுகுலயுஞ் – மிளகுளயுஞ்

5. இப்பாடலில் இடம்பெற்றுள்ள முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.

லைக்கொட்டான் டும்பிள்ளைவாங்கியாந்த – வாளியிலே
ம்மந்தட்டை – ணுக்கணுவா
மாட்டாந்தொழு – மாட்டெருவு
ட்டாந்தொழு – ட்டெருவுரெலையாம் – ரெலைக்குங்

6. மேகத்திலுள்ள பேச்சு வழக்குச் சொற்களைக் குடையிலுள்ள எழுத்து வழக்குச் சொற்களுடன் இணைத்துக் காட்டுக.

 

Class 4 Tamil Solution - Lesson 4 மேகத்திலுள்ள பேச்சு வழக்குச் சொற்களைக் குடையிலுள்ள எழுத்து வழக்குச் சொற்களுடன் இணைத்துக் காட்டுக.

  • ஒசந்த – உயர்ந்த
  • செவ்வா – செவ்வாய்
  • வாங்கியாந்த – வாங்கி வந்த
  • ஊறவச்சி – ஊறவைத்து
  • முறிச்சி – முறித்து
  • மொளபோட்ட – முளைக்க  வைத்த

அறிந்து கொள்வோம்

நவதானியங்கள் எவை என அறிந்து கொள்வோமா…

நெல்கோதுமைபாசிப்பயறு
துவரைமொச்சைஎள்
கொள்ளுஉளுந்துகடலை

செயல் திட்டம்

பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான எழுத்து வழக்குச் சொற்களை எழுதுக

பேச்சுவழக்குஎழுத்து வழக்கு
படிச்சான்படித்தான்
ஓடியாந்தான்ஓடி வந்தான்
காத்தாலகாலையிலே
நோம்புநோன்பு
இங்கிட்டுஇந்தப்பக்கம்
போயிட்டு வாறேன்போய் வருகின்றேன்
சிலவுசெலவு
பதட்டம்பதற்றம்
ஆப்பைஅகப்பை
அண்ணாக்கயிறுஅரைஞாண் கயிறு

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment