Class 5th Tamil Book Solution for CBSE | Lesson 3.1 – கடல்

பாடம் 3.1 கடல்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 3.1 – கடல் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 5 Tamil Text Books – Download

சொல்பொருள்

அலுப்பு – களைப்புபுரவி – குதிரை
மகரம் – மீன்திரைகள் – அலைகள்
மகிமை – பெருமைஎல்லை – முடிவு
முழக்கம் – சத்தம்எண்ணில் – எண்ண முடியாத
உலவும் – திரியும்மூலம் – காரணம், அடிப்படை

பாடல் பொருள்

  • எல்லையின்றிப் பரந்து விரிந்திருக்கும் பெருங்கடலே!
  • நீ இரவும் பகலும் உறங்காது எப்போதும் அலைகளை வீசி ஒலித்துக் கொண்டே இருக்கிறாய். உனக்கு ஓய்வு என்பதே இல்லை.
  • பொங்கி வருகின்ற உன் அலைகள், பார்ப்பதற்குக் குதிரைகள் அணிவகுத்து வருவதைப்போல் காட்சியளிக்கின்றன.
  • எங்கும் ஒலிக்கின்ற உன் ஒலி, அலையோசையால் எழுந்ததா அல்லது இடியோசையால் எழுந்ததா என்று எங்களுக்கு ஐயம் எழுகிறது.
  • உயர்ந்த மலையும் கணக்கில்லா மீன்களும் விலை மதிப்புடைய
    முத்துகளையும் உன் உள்ளே
  • நீ, சிப்பிகள் விளையாடுவதற்கும், பூமியில் மழை பெய்வதற்குக் காரணமாகவும் இருக்கிறாய்.
  • பூமியில் மழைபெய்யவும், அந்த மழைநீரைச் சேமித்து வைக்கும் பெரிய கலனாகவும் விளங்குகிறாய்.
  • ஆகவே, உன் பெருமைகளை எல்லாம் எடுத்துரைக்க வல்லவர்கள் இங்கு எவரும் இலர்.

ஆசிரியர் குறிப்பு

  • பெயர்  – தேசிய விநாயகனார்
  • கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் பிறந்தவர்.
  • இவர், இனிமையும் எளிமையும் மிக்க பாடல்களை எழுதியமையால், கவிமணி என்று போற்றப்பெற்றார்.
  • ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்பியம், உமர்கய்யாம் பாடல்கள், குழந்தைச் செல்வம் முதலிய படைப்புகளை படைத்துள்ளார்.

கற்பவை கற்றபின்

கடலைப் பற்றி இப்பாடல் மூலம் நீ அறிந்த செய்திகளை உன் சொந்த நடையில் கூறுக.

கடல் அழகாக இருக்கும். கடலில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. கடல் மழைக்காலத்தில் பெரியதாகாது. வெயில் காலத்தில் குறைவதும் இல்லை. கடலில் பெரிய பெரிய கப்பல்கள் செல்லும். சங்கும், முத்தும், மீன்களும் மிகுதியாகக் கடலில் இருக்கும். இடியோசை போல அலையோைச இருக்கும். மழையைச் சேமிக்கும் மழைநீர் சேமிப்பு தொட்டி போன்றது கடல்.

மதிப்பீடு

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக!

1. “பெருமை + கடல்” – என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. பெருமைகடல்
  2. பெருங்கடல்
  3. பெரியகடல்
  4. பெருமைக்கடல்

விடை : பெருங்கடல்

2. “கருங்கடலே” – என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. கருமை + கடலே
  2. கருங் + கடலே
  3. கரும் + கடலே
  4. கரு + கடலே

விடை : கருமை + கடலே

3. “திரை” – என்ற சொல்லின் பொருள் ______________

  1. மலை
  2. அலை
  3. வலை
  4. சிலை

விடை : அலை

4. மழை பெய்வதற்குக் காரணமாக இருப்பது ___________

  1. வானம்
  2. பூமி
  3. கடல்
  4. நெருப்பு

விடை : கடல்

ஆ. இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.

எ.கா : எல்லை – அல்லும்

பொங்கு- எங்கும்லைகடலே – இலையோ
திரைகளோ – நிரைதாமோலையை – விலைகொள்

இ. முதலெழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.

எ.கா. ல்லும் – லுப்பும்

ரவும்- லையோவிலைகொள் – விளையாட
லையை – கரழுத்து – யிற்றடக்கம்

ஈ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. கடல் நமக்கு அளிக்கும் வளங்கள் யாவை?

அலைகள், மீன்கள், முத்துகள்

2. பாடலின் பொருளை உம் சொந்த நடையில் எழுதுக.

  • பெருங்கடலே! நீ இரவும் பகலும் உறங்காது எப்போதும் அலைகளை வீசி ஒலித்துக் கொண்டே இருக்கிறாய்.
  • அலைகள், குதிரைகள் அணிவகுத்து வருவதைப் போல் உள்ளது.
  • அலையோசையா? இடியோசையா? என்று ஐயம் எழுகிறது.
  • அலைகள், மீன்கள், முத்துகள், ஆகியவை கொண்டது கடல்
  • நீ, சிப்பிகள் விளையாடுவதற்கும், பூமியில் மழை பெய்வதற்குக் காரணமாகவும் இருக்கிறாய்.
  • பூமியில் மழைபெய்யவும், மழைநீரைச் சேமித்து வைக்கும் பெரிய கலனாகவும் விளங்குகின்றது.
  • ஆகவே, உன் பெருமைகளை எல்லாம் எடுத்துரைக்க வல்லவர்கள் இங்கு எவரும் இலர்.

உ. சிந்தனை வினா

எல்லையறியாய் பெருங்கடல் என்று கூறக் காரணம் என்ன?வகுப்பறையில் கலந்துரையாடுக.

கடல் எல்லையற்றது. அதற்கு இதுதான் முடிவு என்று கூற முடியாது. அது விரிந்து பரந்துள்ளது. எனேவ எல்லையறியாய் பெருங்கல் என்று கவிஞர் கூறியிருக்கின்றார்.

கூடுதல் வினாக்கள்

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக!

1. தேரூரில் பிறந்த கவிஞர் …………

  1. பாரதியார்
  2. கவிமணி
  3. பாரதிதாசன்
  4. சுரதா

விடை : கவிமணி

2. “மகரம்” என்ற சொல்லின் பொருள் ………………..

  1. குதிரை
  2. அலைகள்
  3. சங்குகள்
  4. மீன்கள்

விடை : மீன்கள்

3. மழை நீரைச் சேமித்து வைக்கும் கலன் ……………………..

  1. கடல்
  2. அலை
  3. சிப்பி
  4. குதிரை

விடை : கடல்

ஆ. பொருத்துக

1. மகரம்பெருமை
2. மகிமைமீன்
3. புரவிஅலை
4. திரைகுதிரை
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

இ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. பெருங்கடல் எப்படி இருக்கும்.

பெருங்கடல் எல்லையில்லாமல் பரந்து விரிந்து இருக்கும்.

2. குதிரைகள் போல அணிவகுத்து வருபவை எவை?

கடல் அலைகள் குதிரைகள் போல அணிவகுத்து வருகின்றன.

3. ஐயம் எழக்காரணம் யாது?

எங்கும் கேட்கும் ஒலி அலையோசையால் எழுந்ததா? அல்லது இடியோசையால் எழுந்ததா? என்று ஐயம் எழுகின்றது.

4. தேசியக விநாயகனார் – கவிமணி எனப் போற்றபடுவது ஏன்?

இனிமையும் எளிமையும் மிக்க பாடல்களை எழுதியமையால், கவிமணி என்று போற்றப் பெற்றார்.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment