Class 5th Tamil Book Solution for CBSE | Lesson 9.3 – நன்மையே நலம் தரும்

பாடம் 9.3 நன்மையே நலம் தரும்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 5 Tamil Chapter 9.3 – “நன்மையே நலம் தரும் ” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 5 Tamil Text Books – Download

மதிப்பீடு

அ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. பறவைக் குஞ்சுகளை எடுக்க நினைத்த தமிழ்மணிக்குத் தாய்கூறிய அறிவுரை யாது?

தாயிடமிருந்து குஞ்சுகளை பிரித்து விட்டால், அவை மிகுந்த துன்பமடையும் எனத் தமிழ்மணிக்கு தாய் அறிவுரை கூறினார்.

2. தமிழ்மணியின் பிறந்தநாள் விழாவில், பீட்டர் செய்த செயல் யாது?

தமிழ்மணியின் பிறந்தநாள் விழாவில் யாரும் எதிர்பாராத வகையில் பீட்டர்  திடீரென அந்தக் கூட்டின் மீது கல்லெறிந்தான்.

3. பீட்டரின் செயலைக் கண்ட தமிழ்மணி என்ன கூறினான்?

உன் வீட்டை யாராவது இடித்துத் தள்ளினால், நீயும் உன் குடும்பத்தாரும் என்ன செய்வீர்கள்? அதுபோன்றுதானே அந்தப் பறவைகளின் நிலையும். இதை ஏன் நீ புரிந்து கொள்ளவில்லை“ என்று வருந்தினாள்.

4. உயிர்களிடத்து அன்பு காட்டுவது குறித்துத் தமிழ்மணியின் தந்தை என்ன கூறினார்?

“நம்மைப் போலத் தான் இவ்வுலகில் எல்லா உயிர்களும் வாழ்கின்றன. அவற்றிடம் நாம் அன்பு காட்ட வேண்டும். மற்ற உயிர்களுக்குச் செய்யும் தீங்கு, நமக்கு நேர்ந்தது போன்று உணர வேண்டும். நமக்கு வலித்தால் அவற்றிற்கும் வலிக்கும் அல்லவா“ என்றார் தமிழ்மணியின் தந்தை

ஆ. சிந்தனை வினா

நீங்கள் செல்லும் வழியில் நாய்க்குட்டியொன்று நடக்க முடியாமல் துன்பப்படுகிறது. அதற்கு நீங்கள் எப்படி உதவுவீர்கள்?

  • அந்த நாயக் குட்டியைத் தூக்கி, அதன் காலில் அடிபட்டிருந்தால் அதற்கு முதலுதவி செய்வேன்.
  • மேலும் அதைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுபோய் விடுவேன்.
  • அதற்குத் தேவையான உணர்வையும் தருவேன்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment