Class 6th Tamil Book Solution for CBSE | Lesson 4.1 – மூதுரை

பாடம் 4.1 மூதுரை

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 6 Tamil Chapter 4.1 – “மூதுரை” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 6 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • மாசற – குறைஇல்லாமல்
  • சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்து
  • தேசம் – நாடு

பாடலின் பொருள்

  • மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர்.
  • மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.

ஆசிரியர் குறிப்பு

  • மூதுரை நூலின் ஆசிரியர் ஒளவையார்
  • ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.

நூல் குறிப்பு

  • மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்.
  • சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.
  • இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.

மதிப்பீடு

1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாணவர்கள் நூல்களை _________ க் கற்க வவண்டும்.

  1. மேலோட்டமாக
  2. மாசற
  3. மாசுற
  4. மயக்கமுற

விடை : மாசற

2. “இடமெல்லாம்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது __________

  1. இடம் + மெல்லாம்
  2. இடம் + எல்லாம்
  3. இட + எல்லாம்
  4. இட + மெல்லாம்

விடை : இடம் + எல்லாம்

3. “மாசற” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

  1. மாச + அற
  2. மாசு + அற
  3. மாச + உற
  4. மாசு + உற

விடை : மாசு + அற

4. “குற்றம் + இல்லாதவர்” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________

  1. குற்றமில்லாதவர்
  2. குற்றம்இல்லாதவர்
  3. குற்றமல்லாதவர்
  4. குற்றம் அல்லாதவர்

விடை : குற்றமில்லாதவர்

5. “சிறப்பு + உடையார்” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________

  1. சிறப்புஉடையார்
  2. சிறப்புடையார்
  3. சிறப்படையார்
  4. சிறப்பிடையார்

விடை : சிறப்புடையார்

2. குறுவினா

கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?

  • மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர்.
  • மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.

3. சிந்தனை வினா

1. கல்லாதவர்க்கு ஏற்படும் இழப்புகளைப் பட்டியலிடுக

  • மனிதனுக்குக் கல்வி கண் போன்றது. கண் இல்லை என்றால் இவ்வுலகமே இருள் மயமாகி விடும். கற்றவரே கண்ணுடையவர். கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்கள் உடையவர்.
  • கல்லாதவர் விலங்களுக்கும், மரத்துக்கும் ஒப்பாவார்
  • கல்லாதவரால் நாட்டிற்கு பயனில்லாமல் போகும்
  • கல்லாதவரை பெற்றோர்கள். உடன் பிறந்தோர், மனைவி, தம்மக்கள், உற்றார் உறவினர்கள், சான்றோர்கள், ஆன்றோர்கள், ஊரார் மதிக்கமாட்டார்கள்.

2. கல்வியின் சிறப்பாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?

  • அறிவியல், பொறியியல், பொருளியல் முதலியவற்றை வளர்ந்தோங்கச் செய்வது கல்வியே. கல்வியால் மனிதன் விண்ணையும் மண்ணையும்  அளக்க அறிநது கொண்டான்.
  • இன்றைய உலகில் அறிவியலின் கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பெருகிய வண்ணமாக உள்ளன. ஒருவனுக்குள் புதைந்து கிடைக்கும் அறியாமையைத் தோண்டி எடுப்பதே கல்வியாகும்.
  • உள்ளத்தை அறிவான் நிலப்பி ஒழுக்கத்தை வளர்த்திட, மனிதனாக வாழந்திட நூல்களைக் கற்பதே கல்வியாகும்.

கூடுதல் வினாக்கள் 

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. “ஆத்திச்சூடி” நூலின் ஆசிரியர் ________________

விடை : ஒளவையார்

2. “மன்னன்” சொல்லுக்கும் தமிழில் வழங்கும் வேறு பெயர்கள் ______________

விடை : கோ

3. மூதுரையில் __________________ பாடல்கள் உள்ளன.

விடை : 31

4. மன்னனை விடக் ________________ சிறந்தவர்.

விடை : கற்றவரே

5. இடம் + எல்லாம் = _____________

விடை : இடமெல்லாம்

இப்பாடலில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக

எதுகைச் சொற்கள்
ன்னனும் – மன்னனின்
ற்றோன் – கற்றோனும்
சிப்புடையான் – சிப்பில்லை
ற்றோன் – கற்றோருக்கு
ன்னற்குத் – தன்தேசம்
மோனைச் சொற்கள்
ன்னனும் – ன்னனின்
ற்றோன் – ற்றோனும்
சிறப்புடையான் – சிறப்பில்லை
ற்றோன் – ற்றோருக்கு

குறுவினா

1. “மூதுரை” என்னும் சொல்லின் பொருள் யாது?

“மூதுரை” என்னும் சொல்லின் பொருள் “மூத்தோர் கூறும் அறிவுரை” என்பதாகும்

2. ஒளவையார் – குறிப்பு வரைக

மூதுரையின் ஆசிரியர் ஒளவையார் ஆவார்
இவர் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி என்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.

3. மூதுரை – நூற்குறிப்பு வரைக

  • மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்.
  • சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.
  • இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment