Class 6th Tamil Book Solution for CBSE | Lesson 4.2 – துன்பம் வெல்லும் கல்வி

பாடம் 4.2 துன்பம் வெல்லும் கல்வி

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 6 Tamil Chapter 4.2 – “துன்பம் வெல்லும் கல்வி” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 6 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • தூற்றும் படி – இகழும் படி
  • மூத்தோர் – பெரியோர்
  • மேதைகள் – அறிஞர்கள்
  • மாற்றார் – மற்றவர்
  • நெறி – வழி
  • வற்றாமல் – அழியாமல்

பாடலின் பொருள் 

  • நாம் நூல்களைக் கற்றதோடு இருந்து விடக் கூடாது . கற்ற தன் பயனை மறக்கக் கூடாது. நம் நாட்டின் நெறி தவறி நடக்கக் கூடாது. நல்லவர்கள் குறை சொல்லும்ப டி வளரக் கூடாது.
  • பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்புநெறி மாறக் கூடாது. பிறர் உழைப்பை நம்பி வாழக் கூடாது.
  • தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக் கூடாது. துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேண்டும். சோம்பலைப் போக்கிட வேண்டும். பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும். வானைத் தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  • மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெறவேண்டும். பெற்ற தாயின் புகழும் நம் தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழவேண்டும்.

நூல் வெளி

  • எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
  • திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.
  • மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.

மதிப்பீடு

1.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாணவர் பிறர் _______ நடக்கக் கூடாது.

  1. போற்றும்படி
  2. தூற்றும்படி
  3. பார்க்கும்படி
  4. வியக்கும்படி

விடை : தூற்றும்படி

2. நாம் _______ சொற்படி நடக்க வேண்டும்.

  1. இளையோர்
  2. ஊரார்
  3. மூத்தோர்
  4. வழிப்போக்கர்

விடை : மூத்தோர்

3. “கைப்பொருள்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. கையில் + பொருள்
  2. கைப் + பொருள்
  3. கை + பொருள்
  4. கைப்பு + பொருள்

விடை : கை+பொருள்

4. “மானம் + இல்லா” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. மானம்இல்லா
  2. மானமில்லா
  3. மானமல்லா
  4. மானம்மில்லா

விடை : மானமில்லா

2. சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. மனமாற்றம்

விடை : மனிதன் தீயவழியிலிருந்து நல்வழிக்கு மனமாற்றம்  அடைய வேண்டும்.

2. ஏட்டுக்கல்வி

விடை : மாணவர்கள் ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அனுபவ கல்வியையும் கற்றுக்கொள்ள வேண்டும்

3. நல்லவர்கள்

விடை : இந்த உலகில் நல்லவர்கள் என்று யாரும் கிடையாது

4. சோம்பல்

விடை : சோம்பல் மனித வாழ்க்கைக்கு எதிரி

3. குறுவினா

1. நாம் யாருடன் சேரக்கூடாது?

நாம் தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது

2. எதை நம்பி வாழக்கூடாது?

மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது

3. நாம் எவ்வாறு வாழ வேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்?

  • நாம் நூல்களைக் கற்றதோடு இருந்து விடக்கூடாது. கற்றதன் பயனை மறக்கக் கூடாது. நம் நாட்டின் நெறி தவறி நடக்கக் கூடாது. நல்லவர்கள் குறை சொல்லும்படி வளரக்கூடாது.
  • பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்பு நெறி மாறக் கூடாது. பிறர் உழைப்பில் வாழக் கூடாது.
  • தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது. துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேண்டும். சோம்பலை போக்கிட வேண்டும்.
  • பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டு விட வேண்டும். வானைத்தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  • மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும், விருதுகளையும், பெருமையையும் பெற வேண்டும்.
  • பெற்ற தாயின்  புகழும் நம் தாய் நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்.

4. நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?

மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின் படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும், விருதுகளையும், பெருமைகளையும் பெறலாம்.

5. சிந்தனை வினா

நீங்கள் படித்து என்னவாக விரும்புகிறீர்கள்? ஏன்?

நான் படித்துச் சிறந்த பேச்சாளராக விரும்புகிறேன். பேரறிஞர் அண்ணா போல சுவையாக நயம்பட பேச பயிற்சி எடுப்பேன். சுப்பிரமணிய சிவா, வ.உ.சி.  சத்தியமூர்த்தி போன்றோர் தன் சொல்வன்மையால் தடம் பதித்தவர்கள். இவர்களையெல்லாம் என் வழிகாட்டிகளாய்க் கொண்டு சிறந்த பேச்சாளராய் மாற ஆசைப்படுகிறேன். நாட்டையும் நாட்டு மக்களையும் நன்னெறிப்படுத்தவும், விபிப்படையவும் என் பேச்சை பயன்படுத்துவேன்.

 

கூடுதல் வினாக்கள் 

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. துன்பத்தை வெல்ல _______________ வேண்டும்

விடை : கல்வி

2. நெறி என்னும் சொல் தரும் பொருள் _______________

விடை : வழி

3. மானமில்லா _______________  சேரக்கூடாது

விடை : கோழையுடன்

4. _______________  என்னும் சிறப்பினை பெற்றவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

விடை : மக்கள் கவிஞர்

5. திரையாசைப் பாடல்களில் _______________  உயர்வைப் போற்றினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

விடை : உழைப்பாளிகளின்

6. துன்பத்தை நீக்கும் _______________  கற்க வேண்டும்

விடை : கல்வியினைக்

7. வானைத்தொடும் அளவுக்கு ______________ வளர்த்துக் கொள்ள வேண்டும்.

விடை :

பிரித்து எழுதுக

  1. குணமிருந்தால் = குணம் + இருந்தால்
  2. கைப்பொருள் = கை + பொருள்

பாடலில் எதுகை, மேனைச் சொற்களை கூறுக

மேனைச் சொற்கள்
டந்துவிடாதே – ல்லவர்கள்
மாற்றார் – மானமில்லா
ம்பு – ளர்ச்சி
வெற்றிமேல் – வெற்றிவர
ல்வி – ற்றிட
எதுகைச் சொற்கள்
வெற்றிமேல் – வெற்றிவர
பெற்ற – வற்றாமல்
ண்ணில் – வேண்டும்
கொல்லும் – கல்வி
மீ – மா

குறு வினாக்கள்

1. எதனை விட்டுவிட வேண்டும்?

பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும்

2. எதை மீறக் கூடாது?

பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது..

3. எவ்வகையில் வாழ்தல் வேண்டும்?

பெற்ற தாயின் புகழும் நம் தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும்.

4. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றி குறிப்பு வரைக

  • எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
  • திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.
  • மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment