Class 6th Tamil Book Solution for CBSE | Lesson 5.1 – ஆசாரக்கோவை

பாடம் 5.1 ஆசாரக்கோவை

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 6 Tamil Chapter 5.1 – “ஆசாரக்கோவை” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 6 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • நன்றியறிதல் – பிறர் செய்த உதவியை மறவாமை
  • ஒப்புரவு – பிறருக்கு உதவி செய்தல்
  • நட்டல் – நட்பு கொள்ளுதல்

பாடலின் பொருள்

  • பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்;
  • பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்;
  • இனிய சொற்களைப் பேசுதல்;
  • எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்;
  • கல்வி அறிவு பெறுதல்;
  • எல்லோரையும் சமமாகப் பேணுதல்;
  • அறிவுடையவராய் இருத்தல்;
  • நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல் ஆகிய எட்டும் நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் ஆகும்.

நூல் வெளி

  • ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.
  • இவர் பிறந்த ஊர் கயத்தூர்.
  • ஆசாரக்கோவை என்பதற்கு “நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு” என்பது பொருள்.
  • இந்நூல்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.

1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பிறரிடம் நான் _______ பேசுவேன்.

  1. கடுஞ்சொல்
  2. இன்சொல்
  3. வன்சொல்
  4. கொடுஞ்சொல்

விடை : இன்சொல்

2. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது _________ ஆகும்.

  1. வம்பு
  2. அமைதி
  3. அடக்கம்
  4. பொறை

விடை : பொறை

3. “அறிவு + உடைமை” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. அறிவுடைமை
  2. அறிவுஉடைமை
  3. அறியுடைமை
  4. அறிஉடைமை

விடை : அறிவுடைமை

4. “இவை + எட்டும்” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. இவைஎட்டும்
  2. இவையெட்டும்
  3. இவ்வெட்டும்
  4. இவ்எட்டும்

விடை : இவையெட்டும்

5. “நன்றியறிதல்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. நன்றி + யறிதல்
  2. நன்றி + அறிதல்
  3. நன்று + அறிதல்
  4. நன்று + அறிதல்

விடை : நன்றி + அறிதல்

6. “பொறையுடைமை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. பொறுமை + உடைமை
  2. பொறை + யுடைமை
  3. பொறு + யுடைமை
  4. பொறை + உடைமை

விடை : பொறை + உடைமை

2. குறுவினா

1. எந்த உயிருக்கும் செய்யக் கூடாதது எது?

எந்த உயிருக்கும் செய்யக் கூடாதது துன்பம்.

2. நாம் யாருடன் நட்புக் காெள்ள வேண்டும்?

நாம் நற்பண்புகள் உடையவரோடு நட்புக் காெள்ள வேண்டும்.

3. சிறுவினா

1. ஆசாரக்காேவை கூறும் எட்டு வித்துகள் யாவை?

  • பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்;
  • பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்;
  • இனிய சொற்களைப் பேசுதல்;
  • எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்;
  • கல்வி அறிவு பெறுதல்;
  • எல்லோரையும் சமமாகப் பேணுதல்;
  • அறிவுடையவராய் இருத்தல்;
  • நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல் ஆகிய எட்டும் நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் ஆகும்.

4. சிந்தனை வினா

1. உங்கள் நண்பரிடம் உங்களுக்குப் பிடித்த பண்புகளைப் பட்டியலிடுக.

பரிவுஇரக்கம்கருணை
நட்பு ஒழுக்கும்தெய்வ பயம்
மூத்தோர்களை மதித்தல்எளிமைசிக்கனம்
உதவி செய்தல்கீழ்ப்படிதல்அன்பு
அரவணைப்புஇன்சொல் பேசுதல்அமைதி
அடக்கம்இன்னா செய்யாமைஉண்மை பேசுதல்
விருந்தோம்பல்காலந்தவறாமைநண்றியுணர்வு

2. நல்ல ஒழுக்கங்களை வித்து எனக் கூறுவதின் காரணத்தைச் சிந்தித்து எழுதுக.

விதையை மண்ணில்  புதைத்தால் அது எப்பாடுபட்டாவது முளைத்து பலன் தரும் பெரிய மரமாகும். அதுபோல நல்ல ஒழுக்கங்களை மனதில் விதைத்தால், அவ்வொழுக்கங்கள் தலை சிறந்த சான்றோனாக மாற்றும். எனவே நல்லொழுக்கங்களின் வித்து எனக் கூறுவர்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஆசாரக்கோவையில் ஆசிரியர் __________________

  1. பாரதிதாசன்
  2. ஒளவையார்
  3. பெருவாயின் முள்ளியார்
  4. கவிமணி

விடை : பெருவாயின் முள்ளியார்

2. ___________________ மறக்கக் கூடாது

  1. பிறர் செய்த தீங்கினை
  2. பிறர் செய்த கொடுமையை
  3. பிறர் கூறிய தீயசொற்களை
  4. பிறர் செய்த உதவியை

விடை : பிறர் செய்த உதவியை

3. ஆசாரக்கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை _______________

  1. 300
  2. 100
  3. 200
  4. 400

விடை : 100

4. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் _______________________

  1. கயத்தாறு
  2. வயலூர்
  3. மானாமதுரை
  4. கயத்தூர்

விடை : கயத்தூர்

5. ஆசாரக்கோவை ______________ நூல்களுள் ஒன்று.

  1. பதினெண்கீழ்கணக்கு
  2. பதினெண்மேல்கணக்கு
  3. பத்துப்பாட்டு
  4. எட்டுத்தொகை

விடை : பதினெண்கீழ்கணக்கு

6. “நட்டல்” என்பதன் பொருள் ______________

  1. காத்தல்
  2. நட்புக் கொள்ளுதல்
  3. கடைபிடித்தல்
  4. நன்மை செய்தல்

விடை : நட்புக் கொள்ளுதல்

5. நல்லொழக்கத்தை விதைக்கும் விதைகளாக ஆசாரக்கோவை குறிப்பிடுபவை ______________

  1. 7
  2. 9
  3. 6
  4. 8

விடை : 8

குறுவினா

1. எதனை மறத்தல் கூடாது என ஆசாரக்கோவை கூறுகிறது?

பிறர் செய்த உதவியை மறக்கக் கூடாது என ஆசாரக்கோவை கூறுகிறது?

2. எதனை பொறுத்து கொள்ள வேண்டும் என ஆசாரக்கோவை கூறுகிறது?

பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்து கொள்ள வேண்டும் என்று ஆசாரக்கோவை கூறுகிறது

3. எப்படிபட்பட்ட சொற்களை பேச வேண்டும் என பெருவாயின் முள்ளியார் கூறுகிறார்?

அனைவரும் இனிய சொற்களைப் பேச வேண்டும் என பெருவாயின் முள்ளியார் கூறுகிறார்

4. எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என ஆசாரக்கோவை கூறுகிறது

கல்வி அறிவுடன், பிறருக்கு உதவும் தன்மையுடன் அறிவுடையவராய் இருத்தல் வேண்டும் என ஆசாரக்கோவை கூறுகிறது.

5. ஆசாரக்கோவை என்பதன் பொருள் யாது?

ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்

சிறுவினா

பெருவாயின் முள்ளியார் பற்றிய குறிப்பு எழுதுக

  • ஆசாரக்கோவையில் ஆசிரியர் பெருவாளின் முள்ளியார்.
  • இவர் பிறந்த ஊர் கயத்தூர்
  • ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்
  • பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • நூறு வெண்பாக்களை கொண்டது

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment