Class 6th Tamil Book Solution for CBSE | Lesson 5.4 – மனம் கவரும் மாமல்லபுரம்

பாடம் 5.4 மனம் கவரும் மாமல்லபுரம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 6 Tamil Chapter 5.4 – “மனம் கவரும் மாமல்லபுரம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 6 Tamil Text Books – Download

சிறு வினா

1. மாமல்லபுரம் எப்படி உருவானது? அதற்கான நிகழ்வு யாது?

  • மாமல்லன் சிறுவனாக இருந்தபோது ஒருநாள் அவர் தந்தையுடன் மாமல்லபுரம் கடற்கரைக்குச் சென்றார்.
  • ஒரு பாறையில் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த பாறையில் நிழல் யானை போல் தரையில் விழந்தது. அதை அவர் தந்தையிடம் காட்டினார். அவர் தந்தை “ஆம் நரசிம்மா! இது யானைப் போலத்தான் தெரிகிறது.
  • அதோ அந்தக் குன்றில்  நிழலைப் பார். கோவில் போலத் தெரிகிறது” என்றார். மாமல்லான் “ஆம் அப்பா! அந்தக் குன்றை கோவிலாகவும், இந்த குன்றைக் கோவில் முன் நிற்கும் யானை போலவும் மாற்றிவிட்டால் நன்றாக இருக்குமே” என்றார். ” நல்ல சிந்தனை.
  • இவை இரண்டை மட்டும்” அல்ல. இங்குள்ள ஒவ்வொரு குன்றையும் சிற்பமாக மாற்றலாம். ஒவ்வொரு பாறையையும் நந்தி, சிங்கம், யானை என்று மாற்றுவோம்.
  • இந்தக் கடற்கரையையே சிற்பக்கலைக்கூடமாக மாற்றிவிடலம்” என்று கூறினார். இந்நிகழ்வே மாமல்லபுரம் உருவான நிகழ்வாகும்.

2. மாமல்லபுரத்தில் “அர்ச்சுனன் தபசு” பாறையில் உள்ள சிறப்பங்களைப் பற்றி எழுதுக.

  • அர்ச்சுனர் தபசு பாறையில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை உயிருள்ளவற்றை நேரில் பார்ப்பது போல அழகாக இருக்கும்.
  • அப்பாறையில் 150-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. அர்ச்சுனன் கண்களை மூடி, இரு கைகளையும் உயர்த்தி, வணங்குவது போல ஒரு சிற்பம் உள்ளது. அவரது உடல் மெலிந்து, எலும்புகளும், நரம்புகளும் வெளியே தெரிவது போல அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது.
  • ஆகாய கங்கை பூமிக்கு வருவது போல ஒரு சிற்பம் உள்ளது. சிங்கம். புலி. யானை. அன்னப்பறவை. உடும்பு. குரங்குகள் என எல்லாமே உயிருள்ளவை போலச் செதுக்கப்பட்டுள்ளன.
  • மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொறிந்து கொள்வது போன்ற சிற்பம் அது உண்மையிலேயே மான் ஒன்று இருப்பது போல தோன்றும்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கலைகளும் இலக்கியங்களும் ஒருநாட்டின் __________________ உலகிற்கு உணர்த்துவன.

  1. பண்பட்ட நாகரிகத்தை
  2. உணவு முறை
  3. வாழ்க்கை முறை
  4. பண்பாட்டினை

விடை : பண்பட்ட நாகரிகத்தை

2. பல்லவ அரசன் ___________________ மற்போரில் சிறந்நதவன்.

  1. நந்தவர்மன்
  2. கரிகாலன்
  3. மகேந்திரவர்மன்
  4. நரசிம்மன்

விடை : நரசிம்மன்

3. ஐந்து இரதங்கள் உள்ள இடம் ________________ எனப்படும்.

  1. அர்ச்சுனன் தபசு
  2. கடற்கரைக் கோவில்
  3. பஞ்சபாண்டவர் இரதம்
  4. குகைக்கோவில்

விடை : பஞ்சபாண்டவர் இரதம்

4. பல்லவ அரசன் நரசிம்மன் _______________ சேர்ந்தவர்.

  1. 6-ம் நூற்றாண்டைச்
  2. 7-ம் நூற்றாண்டைச்
  3. 8-ம் நூற்றாண்டைச்
  4. 9-ம் நூற்றாண்டைச்

விடை : 7-ம் நூற்றாண்டைச்

5. ______________________ உள்ள இடம் மாமல்லபுரம்.

  1. நான்கு வகை சிற்பக்கலைகளும்
  2. இரண்டு வகை சிற்பக்கலைகளும்
  3. மூன்று வகை சிற்பக்கலைகளும்
  4. ஐந்து வகை சிற்பக்கலைகளும்

விடை : நான்கு வகை சிற்பக்கலைகளும்

வினாக்கள்

1. இரதக்கோவில் என்று எதனை அழைக்கிறார்கள்?

  • மாமல்லபுரத்தில் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட கோவில் ஒன்று உள்ளது.
  • இது இரதம் (தேர்) வடிவத்தில் இருக்கிறது.
  • அதனால் இதனை இரதக் கோவில் என்று அழைக்கிறார்கள்

2. புடைச்சிற்பங்கள் பற்றி கூறு

  • அர்ச்சுனன் தபசு என்றும் பாறையில் உள்ள மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிறப்பங்கள் உயிருள்ளவற்றை நேரில் பார்ப்பது போல் அழகாக உள்ளன.
  • இவற்றிற்கு புடைப்பு சிற்பங்கள் என்று பெயர்.

3. மகாபலிபுரம் என பெயர்வரக் காரணம் என்ன?

மாமல்லன் கேள்வியால் இந்த ஊர் உருவாகியுள்ள காரணத்தால் இதற்கு மகாபலிபுரம் என அழைக்கப்படுகிறது

4. மாமல்லபுரத்தில் காண வேண்டிய இடங்கள் எவை?

  • அர்ச்சுன் தபசு
  • கடற்கரைக் கோவில்
  • பஞ்ச பாண்டவர் இரதம்
  • ஒற்றைக்கல் யானை
  • குகைக்கோவில்
  • புலிக்குகை
  • திருக்கடல் மல்லை
  • கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து
  • கலங்கரை விளக்கம்

5. சிற்பக்கலை எத்தனை வகைப்படும்?

சிற்பக்கலை நான்கு வகைப்படும்

  • குடைவரைக் காேயில்கள்
  • கட்டுமானக் கோயில்கள்
  • ஒற்றைக் கல் கோயில்கள்
  • புடைப்புச் சிற்பங்கள்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment