Class 6th Tamil Book Solution for CBSE | Lesson 9.3 – முடிவில் ஒரு தொடக்கம்

பாடம் 9.3 முடிவில் ஒரு தொடக்கம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 6 Tamil Chapter 9.3 – “முடிவில் ஒரு தொடக்கம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 6 Tamil Text Books – Download

மதிப்பீடு

1. “முடிவில் ஒரு தொடக்கம்” என்ற தலைப்பின் காரணம் குறித்துக் கூறுக.

மனிதன் மற்றொரு மனிதன்பால் கொள்ளும் நேயமே மனிதநேயம். இந்த உலகம் பல உயிர்களின் தோட்டம். மனித பூக்கள் அதில் ஏராளம். பார்த்து ரசிப்பது ஒரு இனம். பறித்து சூடுவது ஒரு இனம் மலரைப் பார்ப்பதற்கு உரிமம் தேவையில்லை. பறிப்பதற்கு அந்த செடியின் சொந்தக்காரராய், அதன் பராமரிப்பாளராய், பாதுகாவலராய் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

அவ்வாறு இருக்கையில் தனது உயிரையே பிறருக்கு தானமாக அளித்த ஹிதேந்தரேயன் பெற்றோர் செயலை என்னவென்று சொல்வது தெரியவில்லை. ஆயிரம் கனவுகளோடு வளர்த்த மகனின் உடல் உறுப்புகளை பிறருக்கு கொடுக்க முன்வந்தனர். அவன் இறந்தும் வாழ வேண்டும் எனறு நினைத்தனர். அவனது முடிவு ஒரு தொடக்கமாகப் பிறருக்கு அமைய வேண்டும் என்று எண்ணினர். ஹிதேந்திரனின் இறுதி முடிபவு பல மனிதர்களுக்கு தொடக்கமாக அமைந்துள்ளது. அரக்ள எடுத்த முடிவு சரியானதே.

ஹிதேந்திரன் பெற்றோர் மருத்துவராக இருந்ததால் தக்க தருணத்தில் முடிவை எடுக்க முடிந்தது. ஆனால், நம்பில் பலர் இந்தச் சூழ்நிலைக்கு பல நேரங்களில் ஆட்படுகின்றோம். ஆனால் சரியான முடிவை எடுக்காமல் தவிக்கின்றோம். இதனால் பல மனிதர்களின் முடிவு முடிவாகவே அமைந்து விடுகின்றது. அவை மண்ணுக்குள்ளேயே மடிந்தும் முடிந்தும் விடுகிறது. பல உயிர்கள் வாழ வழிவகை இல்லாமல் போய்விடுகிறது.

இதனால் பல உயிர்கள் மடிந்தும் விடுகின்றது. ஒரு மனிதனின் முடிவு பல மனிதர்களின் தொடக்கத்திற்கு வழிவகை செய்கிறது. ஆகவே “முடிவில் ஒரு தொடக்கம்” என்ற தலைப்புத் தக்க காரணத்துடன் நம் பாடத்தலைப்பிற்கு பொருந்தி வந்துள்ளது.

2. இக்கதைக்குப் பொருத்தமாக மற்றொரு தலைப்பு இடுக.

இறந்தும் வாழ்வர்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment