Class 7th Tamil Book Solution for CBSE | Lesson 1.1 – எங்கள் தமிழ்

பாடம் 1.1 எங்கள் தமிழ்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 1.1 – “எங்கள் தமிழ்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 7 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்
  • குறி – குறிக்கோள்
  • விரதம் – நோன்பு
  • பொழிகிற – தருகின்ற

பாடலின் பொருள்

நம் தாய்மொழியாம் தமிழ் மொழி, அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது. அதுவே தமிழ்மக்களின் குரலாகவும் விளங்குகிறது. தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார். தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்.

கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.

நம் தமிழ்மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும்; அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும். எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழி ஆகும்.

நூல் வெளி

  • இப்பாடலின் ஆசிரியரை (வெ. இராமலிங்கனார்) நாமக்கல் கவிஞர் என்றும் அழைப்பர்.
  • இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
  • காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.
  • தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்.
  • மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
  • நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலிலிருந்து இப்பாடல் எடுத்துத் தரப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. நெறி என்னும் சொல்லின் பொருள் _________.

  1. வழி
  2. குறிக்கோள்
  3. கொள்கை
  4. அறம்

விடை : வழி

2. குரலாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

  1. குரல் + யாகும்
  2. குரல் + ஆகும்
  3. குர + லாகும்
  4. குர + ஆகும்

விடை : குரல் + ஆகும்

3. வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

  1. வான்ஒலி
  2. வானொலி
  3. வாவொலி
  4. வானெலி

விடை : வானொலி

நயம் அறிக

1. எங்கள் தமிழ் பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

ருள்நெறி – துவேகொல்லா – கொள்கை
ல்லா – ன்றும்ன்பும் – ச்சம்,
ன்புறவே –சைந்திடும்

2. எங்கள் தமிழ் பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

ருள் – பொருள்லாகும் – குலாகும்
ன்புறவே – அன்பறமேபுழாது – இழாது
யாரையும் – தாரையும்ன்பும் – இன்பம்

3. எங்கள் தமிழ் பாடலில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

தரலாகும் – குரலாகும்ஊக்கிவிடும் – போக்கிவிடும்
புகழாது – இகழாதுவானொலியாம்– தேன்மொழியாம்

குறு வினா

1. தமிழ் மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?

  • நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தரும்
  • கொல்லாமையைக் குறிக்கோளாகவும், பொய்யாமைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.
  • நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தை தூண்டும். அஃது அச்சத்தை போக்கி இன்பம் தரும்.

2. தமிழ் மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.

  • தமிழ்மொழியை கற்றோர், பொருள் (செல்வம்) பெறுவதற்காக யாரையும் புகழந்து பேசமாட்டார்.
  • தம்மையும் போற்றாதவரையும் இகழந்து பேச மாட்டார்.

சிறு வினா

எங்கள் தமிழ் பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

  • நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தரும். அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.
  • தமிழ்மொழியைக் கற்றோர், பொருள் (செல்வம்) பெறுவதற்காக யாரையும் புகழந்து பேசமாட்டார். தம்மையும் போற்றாதவரையும் இகழந்து பேச மாட்டார்.
  • கொல்லாமையைக் குறிக்கோளாகவும், பொய்யாமைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.
  • நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தை தூண்டும். அஃது அச்சத்தை போக்கி இன்பம் தரும்.

சிந்தனை வினா

கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?

தேன் இனிமையானது; தூய்மையானது; சுவைமிக்கது; இன்பம் கொடுப்பது. அதைப் போல இனிமையாது, தூய்மையானது, சுவைமிக்கது, இன்பம் கொடுப்பது தமிழ் எனவே கவிஞர் தமிழைத் தேனுடன் ஒப்பிடுகிறார்.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும்

  • நெறி – வழி
  • பொருள் – செல்வம், நற்செயல்
  • அருள் – இரக்கம்
  • அச்சம் – பயம்
  • அறம் – நற்செயல்
  • போக்கி – நீக்கி

பொருத்துக

1. விரதம்வழி
2. நெறிநோன்பு
3. குறிதருகின்ற
4. பொழிகிறகுறிக்கோள்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. நாமக்கல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் ________________

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. வெ. இராமலிங்கனார்
  4. கவிமணி

விடை : வெ.இராமலிங்கனார்

2. காந்தியக்கவிஞர் என்றழைக்கப்படுபவர் ______________

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. கவிமணி
  4. வெ. இராமலிங்கனார்

விடை : வெ. இராமலிங்கனார்

3. நாமக்கல் கவிஞர் படைப்புகள் அல்லாத ஒன்று ______________

  1. மலைக்கள்ளன்
  2. என்கதை
  3. காந்திபுராணம்
  4. சங்கொலி

விடை : காந்திபுராணம்

4. அருள்நெறிஅறிவைத் தரலாகும்
    அதுவே தமிழின் குரலாகும் என்று பாடியவர்

  1. பாரதியார்
  2. வெ. இராமலிங்கனார்
  3. பாரதிதாசன்
  4. கவிமணி

விடை : வெ. இராமலிங்கனார்

5. பொருள்பெற யாரையும் புகழாது
    போற்றாதாரையும் இகழாது இவ்வடிகளில் அமைந்த முரண் சொற்கள்

  1. பொருள் – போற்றா
  2. யாரையும் – தாரையும்
  3. பொருள் – பெற
  4. புகழாது – இகழாது

விடை : புகழாது – இகழாது

6. கொல்லா விரதம் குறியாகக்
    கொள்கை பொய்யா நெறியாக இவ்வடிகளில் நோன்பு என்னும் பொருள் தரும் சொல்

  1. விரதம்
  2. கொல்லா
  3. குறி
  4. நெறி

விடை : விரதம்

7. கத்தியின்றி இரத்த மின்றி
    யுத்தமொன்று வருகுது இவ்வடிகளைப் பாடியவர்

  1. பாரதியார்
  2. வெ. இராமலிங்கனார்
  3. பாரதிதாசன்
  4. கவிமணி

விடை : வெ. இராமலிங்கனார்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் ________________

விடை : நாமக்கல் வெ.இராமலிங்கனார்

2. உலக மொழிகளில் தொன்மையாது ________________

விடை : தமிழ்மொழி

4. ________________ நம் அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும்

விடை : தமிழ்மொழி

5. எங்கள் தமிழ் மொழி ________________ போன்ற மொழியாகும்.

விடை : தேன்

குறு வினா

1. நாமக்கல் கவிஞர் “காந்தியக் கவிஞர்” என அழைக்கக் காரணம் யாது?

காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.

2. நாமக்கல் கவிஞரின் பன்முகத்தன்மையினை எழுதுக

தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர்

3. நாமக்கல் கவிஞரின் படைப்புகள் யாவை?

மலைக்கள்ளன், சங்கொலி, என்கதை, நாமக்கல் கவிஞர் பாடல்கள்

சிறு வினா

1. நாமக்கல் கவிஞர் குறிப்பு வரைக

  • நாமக்கல் கவிஞரின் இயற்பெயர் வெ. இராமலிங்கனார்
  • இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
  • காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.
  • தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்.
  • மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

2. தமிழின் சிறப்புகள் சிலவற்றை எழுதுக

  • உலக மொழிகளில் தொன்மையானது தமிழ்மொழி
  • மென்மையும், இனிமையும், வளமையும் உடையது.
  • வாழ்வுக்குத் தேவையான அன்பையும், அறத்தையும் கூறுவது.
  • காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்று, என்றும் இளமையோடு திகழ்கிறது.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment