Class 7th Tamil Book Solution for CBSE | Lesson 3.5 – வழக்கு

பாடம் 3.5 வழக்கு

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 3.5 – “வழக்கு ” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 7 Tamil Text Books – Download

மதீப்பிடு

பொருத்துக.

1. பந்தர்முதற்போலி
2. மைஞ்சுமுற்றுப்போலி
3. அஞ்சுஇடைப்போலி
அரையர்கடைப்போலி
விடை – 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

குறுவினா

1. வழக்கு என்றால் என்ன?

நம் முன்னோர் எந்தெந்ச் சொற்கள் என்னென்ன பொருளில்  பயன்படுத்தினார்களோ அச்சொற்கள் அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்

2. தகுதி வழக்கின் வகைகள் யாவை ?

ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும்.

தகுதி வழக்கு மூன்று வகைப்படும்.

  • இடக்கரடக்கல்
  • மங்கலம்
  • குழூஉக்குறி

3. வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது. – இத்த தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல்லைக் கண்டறிக. அதன் சரியான சொல்லை எழுதுக.

போலிச் சொல் : நஞ்சுவாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது
சரியான சொல் : நைந்துவாழைப்பழம் மிகவும் நைந்து விட்டது

வழக்கு – கூடுதல் வினாக்கள்

1. வழக்கு எத்தனை வகைப்படும்?

வழக்கு இருவகைப்படும்.

அவை

  1. இயல்பு வழக்கு
  2. தகுதி வழக்கு

2. இயல்பு வழக்கு என்றால் என்ன?

ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிபபிடுவது இயல்பு வழக்கு ஆகும்.

3. இயல்பு வழக்கு வகைகளை கூறுக

இயல்பு வழக்கானது இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ என மூன்று வகைப்படும்.

4. இலக்கணப்போலி என்றால் என்ன?

இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.

5. இலக்கணப் போலியை முன்பின்னாகத் தொக்க போலி எதனால் குறிப்பிடுவர்?

இலக்கணப்போலி என்பது பெரும்பாலும் சொற்களின் முன்பின் பகுதிகள் இடம்மாறி வருவதையே குறிக்கும். எனவே, இலக்கணப் போலியை முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர்.

6. மரூஉ என்றால் என்ன?

இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.

(எ.கா.)- கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு

7. இடக்கரடக்கல் என்பது என்ன? சான்று தருக.

பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும்.

(எ.கா.)

  • கால் கழுவி வந்தான்.
  • குழந்தை வெளியே போய்விட்டது.
  • ஒன்றுக்குப் போய் வந்தேன்.

7. மங்கலம் என்பதை சான்று கூறுக

செத்தார் என்பது மங்கலமில்லாத சொல் என நம் முன்னோர் கருதினர். எனவே, செத்தார் எனக் குறிப்பிடாமல் துஞ்சினார் எனக் குறிப்பட்டனர். நாம் இக்காலத்தில் இயற்கை எய்தினார் என்று குறிப்பிடுகிறோம். இவ்வாறு மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை மங்கலம் என்பர்.

(எ.கா.)

  • ஓலை – திருமுகம்
  • கறுப்பு ஆடு – வெள்ளாடு
  • விளக்கை அணை – விளக்கைக் குளிரவை
  • சுடுகாடு – நன்காடு

8. குழூஉக்குறி என்பது என்ன? சான்று கூறுக

பலர் கூடியிருக்கும் இடத்தில் சிலர் மட்டும் தமக்குள் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால் மற்றவர்கள் புரிந்துகொள்ள இயலாத வகையில் சொற்களைப் பயன்படுத்துவர். இவ்வாறு ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் குழூஉக்குறி எனப்படும்.

(எ.கா.)

பொன்னைப் பறி எனல் (பொற்கொல்லர் பயன்படுத்துவது)

ஆடையைக் காரை எனல் (யானைப்பாகர் பயன்படுத்துவது)

9. போலி என்றால் என்ன?

சொல்லின் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது போலி எனப்படும். போலி என்னும் சொல் போல இருத்தல் என்பதிலிருந்து தோன்றியது.

10. போலியின் வகைகளை கூறுக?

போலி மூன்று வகைப்படும்.

  • முதற்போலி
  • இடைபோலி
  • கடைப்போலி

11. முற்றுப்போலி என்றால் என்ன?

ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி எனப்படும்.

எ.கா. : அஞ்சு

12. முதற்போலி, இடைபோலி, கடைப்போலி விவரிக்க

முதற்போலி

சொல்லின் முதலில் இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது முதற்போலி எனப்படும்.

(எ.கா.)

பசல் – பைசல், மயல் – மையல், மஞ்சு – மைஞ்சு

இடைபோலி

சொல்லின் இடையில் இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது இடைப்போலி எனப்படும்.

(எ.கா.)

அச்சு – அமைச்சு, இலஞ்சி – இலைஞ்சி, அரயர் – அரையர்

கடைப்போலி

சொல்லின் இறுதில் இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது கடைபோலி எனப்படும்.

(எ.கா.)

அகம் – அகன், நிலம் – நிலன், முகம்- முகன், பந்தல் – பந்தர்

மொழியை ஆள்வோம்

பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க.

1. வீரர்கள் நாட்டைக் காத்தனர்.

  • எழுவாய் – வீரர்கள்
  • பயனிலை – நாட்டைக்
  • செயப்படுபொருள் – காத்தனர்

2. பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.

  • எழுவாய் – பொதுமக்கள்
  • பயனிலை – அந்நியத்துணிகளைத்
  • செயப்படுபொருள் – தீயிட்டு எரித்தனர்

3. கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி பறந்தது.

  • எழுவாய் – கொற்கைத் துறைமுகத்திலே
  • பயனிலை – பாண்டியனுடைய மீனக்கொடி
  • செயப்படுபொருள் – பறந்தது

4. திருக்குறளை எழுதியவர் யார்?

  • எழுவாய் – திருக்குறளை
  • பயனிலை – எழுதியவர்
  • செயப்படுபொருள் – யார்?

5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்.

  • எழுவாய் – கபிலர்
  • பயனிலை – குறிஞ்சிப்பாட்டை
  • செயப்படுபொருள் – எழுதிய புலவர்

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக.

  1. கம்பர் இராமாயணத்தை எழுதினார்
  2. ராமு கவிதை எழுதினான்
  3. கீதா ஓவியம் வரைந்தாள்
  4. ஒளவையார் ஆத்திசூடி இயற்றினார்
  5. வீரர்கள் நாட்டைக் காத்தனர்

மொழியோடு விளையாடு

இடைச்சொல் ‘கு’ சேர்த்துத் தொடரை எழுதுக.

(எ.கா.) வீடு சென்றான் – வீடு+கு+சென்றான் – வீட்டுக்குச் சென்றான்

1. மாடு புல் கொடுத்தார்  = …………………………

விடை : மாடு + கு + புல் கொடுத்தார் = மாடுக்குப் புல் கொடுத்தார்

2. பாட்டு பொருள் எழுது = …………………………

விடை : பாட்டு + கு + பொருள் எழுது = பாட்டுக்குப் பொருள் எழுது

3. செடி பாய்ந்த நீர்  = …………………………

விடை : செடி + கு + பாய்ந்த நீர் = செடிக்குப் பாய்ந்த நீர்

4. முல்லை தேர் தந்தான் பாரி  = …………………………

விடை : முல்லை + கு + தேர் தந்தான் பாரி = முல்லைக்குத் தேர் தந்தான் பாரி

5. சுவர் சாந்து பூசினாள் = …………………………

விடை : சுவர் + கு + சாந்து பூசினாள் = சுவர்க்குச் சாந்து பூசினாள்

இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

Class 7 Tamil Chapter 3.5 இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

கண் + அழகு = கண்ணழகுகண் + உண்டு= கண்ணுண்டு
மண் + அழகு = மண்ணழகுமண் + உண்டு= மண்ணுண்டு
விண் + அழகு = விண்ணழகுவிண் + உண்டு = விண்ணுண்டு
பண் + அழகு = பண்ணழழுபண் + உண்டு = பண்ணுண்டு

அகம் என முடியும் சொற்களை எழுதுக.

நூலகம்மருந்தகம்தலைமையகம்
எழிலகம்அலுவலகம்செயலகம்

கோடிட்ட இடங்களைத் தமிழ் எண் கொண்டு நிரப்புக.

1. திருக்குறள் ____________ பால்களைக் கொண்டது.

விடை : ௩ (3)

2. எனது வயது ____________

விடை : க௩ (13)

3. நான் படிக்கும் வகுப்பு ____________

விடை : எ (7)

4.  தமிழ் இலக்கணம் ____________   வகைப்படும்.

விடை : ரு (5)

5. திருக்குறளில் ____________  அதிகாரங்கள் உள்ளன.

விடை : க௩௩ (133)

6. இந்தியா ____________ ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.

விடை : க௯௪எ (1947)

குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.

 

Class 7 Tamil Chapter 3.5 - குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.

1. மூதறிஞர் ____________

விடை : இராஜாஜி

2. வீரமங்கை ____________

விடை : வேலுநாச்சியார்

3. பாஞ்சாலங்குறிச்சி வீரன் ____________

விடை : கட்டபொம்மன்

4. வெள்ளையரை எதிர்த்த தீரன் ____________

விடை : சின்னமலை

5. கொடிகாத்தவர் ____________

விடை : திருப்பூர் குமரன்

6. எளிமையின் இலக்கணம் ____________

விடை : கக்கன்

7. தில்லையாடியின் பெருமை ____________

விடை : வள்ளியம்மை

8. கப்பலோட்டிய தமிழர் ____________

விடை : சிதம்பரனார்

9. பாட்டுக்கொரு புலவன் ____________

விடை : பாரதியார்

10. விருதுப்பட்டி வீரர் ____________

விடை : காமராஜர்

11. கள்ளுக்கடை மறியல் பெண்மணி ____________

விடை : நாகம்மை

12. மணியாட்சியின் தியாகி ____________

விடை : வாஞ்சிநாதன்

நிற்கு அதற்குத் தக

கலைச்சொல் அறிவோம்.

  • கதைப்பாடல் – Ballad
  • பேச்சாற்றல் – Elocution
  • துணிவு – Courage
  • ஒற்றுமை – Unity
  • தியாகம் – Sacrifice
  • முழக்கம் – Slogan
  • அரசியல் மேதை – Political Genius
  • சமத்துவம் – Equality

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment