Class 7th Tamil Book Solution for CBSE | Lesson 6.3 – பேசும் ஓவியங்கள்

 பாடம் 6.3 பேசும் ஓவியங்கள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 6.3 – “பேசும் ஓவியங்கள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 7 Tamil Text Books – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. குகை ஓவியங்களில் வண்ணம் தீட்ட பயன்பட்ட பொருள்களில் ஒன்று _______.

  1. மண்துகள்
  2. நீர் வண்ணம்
  3. எண்ணெய் வண்ணம்
  4. கரிக்கோல்

விடை : மண்துகள்

2. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் ________.

  1. குகை ஓவியம்
  2. சுவர் ஓவியம்
  3. கண்ணாடி ஓவியம்
  4. கேலிச்சித்திரம்

விடை : கேலிச்சித்திரம்

3. ‘கோட்டோவியம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

  1. கோடு + ஓவியம்
  2. கோட்டு + ஓவியம்
  3. கோட் + டோவியம்
  4. கோடி + ஓவியம்

விடை : கோட்டு + ஓவியம்

4. ‘செப்பேடு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

  1. செப்பு + ஈடு
  2. செப்பு + ஓடு
  3. செப்பு + ஏடு
  4. செப்பு + யேடு

விடை : செப்பு + ஏடு

5. ‘எழுத்து + ஆணி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________.

  1. எழுத்துஆணி
  2. எழுத்தாணி
  3. எழுத்துதாணி
  4. எழுதாணி

விடை : எழுத்துதாணி

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் _________________

விடை : பாரதியார்

2. கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது _________________

விடை : துணி ஓவியம்

3. மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் _________________ மீது பொறித்துப் பாதுகாத்தனர்.

விடை : செப்பேடுகளில்

குறு வினா

1. ஓவியங்களின் வகைகள் யாவை?

குகை ஓவியம்சுவர் ஓவியம்
துணி ஓவியம்ஓலைச்சுவடி ஓவியம்
செப்பேட்டு ஓவியம்தந்த ஓவியம்
கண்ணாடி ஓவியம்தாள் ஓவியம்
கருத்துப்பட ஓவியம்நவீன ஓவியம்

2. குகை ஓவியங்களில் இருந்து நாம் அறியும் செய்திகள் யாவை?

குகை ஓவியங்களில் இருந்து செய்திகளை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காக குகைகளில் ஓவியம் வரைந்ததையும் பழந்தமிழரின் வாழ்க்கை முறைகளையும் அறியலாம்.

3. தாள் ஓவியங்களை எவற்றைக் கொண்டு வரைவர்?

கரிக்கோல், நீர்வண்ணம், எண்ணெய், வண்ணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைவர்

4. சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களைக் கூறுக.

அரண்மனைகள், மண்டபங்கள், கோவில்கள் ஆகியவற்றின் சுவர்களிலும் மேற்கூரைகளிலும் சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்கள் ஆகும்

5. செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?

நீர்நிலைகள், செடி கொடிகள், பறவைகள், விலங்குகள், குறியீடுகள் ஆகியன செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் ஆகும்

சிறு வினா

1. கேலிச்சித்திரம் என்றால் என்ன?

மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும்படி வரைவதை கேலிச்சித்திரம் என்பர்

2. ஓலைச்சுவடி ஓவியங்கள் குறித்து நீங்கள் அறிந்து கொண்டவற்றை எழுதுக.

  • ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும் வண்ணப்பூச்சு ஓவியமாக வரைவர்
  • இவை பெரும்பாலும் புராண, இதிகாசக் காட்சிகளை கொண்டு இருக்கும்.
  • இவை தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் மட்டுமே காணப்படுகிறது.

சிந்தனை வினா

தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுவது ஏன்?

யானைத் தந்தங்களின் மீது வரையப்படும் ஓவியங்கள் தந்த ஓவியங்கள் ஆகும். ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றன. கேரளாவில் யானைகள் அதிகமாக உள்ளன. வயது முதிர்ந்த யானைகளும், தந்தங்களும் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றன. எனவே கேரளாவில் அதிகம் காணப்படுகின்றது.

கூடுதல் வினாக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஆயக்கலைகள் ……….

  1. 62
  2. 96
  3. 64
  4. 63

விடை : 64

2. பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள உதவும் ஓவியம் ………….

  1. குகை ஓவியம்
  2. துணி ஓவியம்
  3. ஓலைச்சுவடி ஓவியம்
  4. செப்பேட்டு ஓவியம்

விடை : குகை ஓவியம்

3. தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஓவியம் ____________

  1. துணி ஓவியம்
  2. சுவர் ஓவியம்
  3. ஓலைச்சுவடி ஓவியம்
  4. செப்பேட்டு ஓவியம்

விடை : சுவர் ஓவியம்

4. தமிழகத்திலும், ஆந்திராவிலும் ஓவியர்கள் வரைந்து வரும் ஓவியம் ………………..

  1. சுவர் ஓவியம்
  2. ஓலைச்சுவடி ஓவியம்
  3. செப்பேட்டு ஓவியம்
  4. துணி ஓவியம்

விடை : துணி ஓவியம்

5. கேரளாவில் அதிகம் காணப்படும் ஓவியம் ____________

  1. சுவர் ஓவியம்
  2. ஓலைச்சுவடி ஓவியம்
  3. தந்த ஓவியம்
  4. செப்பேட்டு ஓவியம்

விடை : தந்த ஓவியம்

6. கண்ணாடி ஓவியம் வரையும் ஓவியர்கள் காணப்படும் இடம் …………….

  1. தஞ்சாவூர்
  2. கோவை
  3. தஞ்சாவூர்
  4. ஆந்திரா

விடை : தஞ்சாவூர்

7. கருத்துப்பட ஓவியம் முதன்முதலில் வெளி வந்த இதழ் …………

  1. விடுதலை
  2. எழுத்து
  3. இந்தியா
  4. கழையானி

விடை : இந்தியா

குறு வினா

1. ஓவியம் வரையப் பயன்படும் துணியின் வேறு பெயர்கள் யாவை?

எழினி, திரைச்சீலை, கிழி, படாம்

2. ஓவியத்தின் வேறு பெயர்களை எழுதுக.

ஓவு, ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி

3. ஓவியம் வரைபவரின் வேறு பெயர்கள் யாவை?

  • கண்ணுள் கவிஞர்
  • ஓவியப் புலவர்
  • ஓவமாக்கள்
  • கிளவி வல்லோன்
  • சித்திரக்காரர்
  • வித்தகர்

4. புனையா ஓவியங்கள் பற்றி குறிப்பிடும் இலக்கியங்கள் கூறும் செய்திகள் யாவை?

  • புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் – நெடுநல்வாடை
  • புனையா ஓவியம் புறம் போந்தன்ன – மணிமேகலை

5. பசார் பெயிண்டிங்கின் முன்னோடி என கருதப்படுபவர் யார்?

பசார் பெயிண்டிங்கின் முன்னோடி என கருதப்படுபவர் கொண்டையராஜூ

6. ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக்கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் யார்?

இராஜா இரவிவர்மா.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment