Class 7th Tamil Book Solution for CBSE | Lesson 9.1 – மலைப்பொழிவு

 பாடம் 9.1 மலைப்பொழிவு

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 9.1 – “மலைப்பொழிவு” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 7 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • சாந்தம் – அமைதி
  • தாரணி – உலகம்
  • மகத்துவம் – சிறப்பு
  • தத்துவம் – உண்மை
  • பேதங்கள் – வேறுபாடுகள்
  • இரக்கம் – கருணை

பாடலின் பொருள்

(தம் சீடர்களுக்கு அறிவுரை கூற எண்ணிய இயேசுநாதர் ஒரு குன்றின் மீது ஏறி நின்று பேசத் தொடங்கினார்.)

சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள். இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது. அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார். மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமையுடையது என்றார்.

இவ்வுலகம் சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் நிலைதடுமாறுகிறது. அறம் என்கிற ஒன்றனை நம்பியபிறகு சண்டைகள் நீங்கி உலகம் அமைதியாகி விடும். பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும். இவ்வுலகம் ஏற்றத்தாழ்வு இல்லா வாழ்வைப் பெற வேண்டும்.

இரக்கம் உடையோரே பேறுபெற்றவர் ஆவர். அவர்கள் பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டி இறைவனின் இரக்கத்தைப் பெறுவர். இதுதான் அவர்களுக்கான பரிசு. மனிதன்

ஆசையில் விழுந்துவிட்டால் அவனது வாழ்வு பாலைவனம் போல் பயனற்றதாகிவிடும். அவன் நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால் அவன் வாழ்க்கை மலர்ச்சோலையாக மாறிவிடும்.

மனிதர்கள் சண்டை சச்சரவுகளால் தாமும் துன்புற்றுப் பிறரையும் துன்புறுத்துகின்றனர். மேலும் அவர்கள் தன்னாடு என்றும், பிறர்நாடு என்றும் பேசி உண்மையில்லா உறவுகளாக வாழ்கின்றனர்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடக்கும் ஆயிரம் போட்டிகளால் பயனற்ற கனவுகள்தாம் தோன்றுகின்றன. இவை இல்லாமல் அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு உயர்ந்ததாக மாறும்.

மதிப்பீடு

  • கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.
  • இவர் “கவியரசு” என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார்.
  • காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
  • ஏராளமான திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
  • இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார்.
  • இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசுகாவியம் ஆகும்.
  • இந்நூலில் உள்ள மலைப்பொழிவு என்னும் பகுதியிலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது …………………………

  1. பணம்
  2. பொறுமை
  3. புகழ்
  4. வீடு

விடை : பொறுமை

2. சாந்த குணம் உடையவர்கள் ………………………… முழுவதையும் பெறுவர்.

  1. புத்தகம்
  2. செல்வம்
  3. உலகம்
  4. துன்பம்

விடை : உலகம்

3. மலையளவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………..

  1. மலை + யளவு
  2. மலை + அளவு
  3. மலையின் + அளவு
  4. மலையில் + அளவு

விடை : மலை + அளவு

4. தன்னாடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………

  1. தன் + னாடு
  2. தன்மை + னாடு
  3. தன் + நாடு
  4. தன்மை + நாடு

விடை : தன் + நாடு

5. இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………….

  1. இவையில்லாது
  2. இவைஇல்லாது
  3. இவயில்லாது
  4. இவஇல்லாது

விடை : இவையில்லாது

பொருத்துக.

1. சாந்தம்அ. சிறப்பு
2. மகத்துவம்ஆ. உலகம்
3. தாரணிஇ. கருணை
4. இரக்கம்ஈ. அமைதி
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

குறு வினா

1. இந்த உலகம் யாருக்கு உரியது?

சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்களுக்கே இந்த உலகம் உரியது.

2. உலகம் நிலைதடுமாறக் காரணம் என்ன?

சாதிகளும் கருத்து வேறுபாடுகளும் உலகம் நிலைதடுமாறக் காரணம் ஆகும்.

3. வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற என்ன செய்ய வேண்டும்?

வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற நல்ல உள்ளத்தோடு வாழ வேண்டும்

சிறு வினா

சாந்தம் பற்றி இயேசுகாவியம் கூறுவன யாவை?

  • சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்களுக்கே இந்த உலகம் உரியது. அவர்களே தலைவர்கள் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார்.
  • வாழ்க்கையில் தேவைப்படும் பொறுமை. அது மண்ணையும், விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமை உடையது என்றார்.
  • சாதிகளும் கருத்து வேறுபாடுகளும் உலகம் நிலைதடுமாறுகின்றது.
  • அறத்தை நம்பினால் சண்டை இல்லாமல் உலகம் அமைதியாகிவிடும்.
  • பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும்.

சிந்தனை வினா

எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?

எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ மதம், இனம், மொழி, ஏழை, பணக்காரன் ஆகியன ஒழிய வேண்டும். பொறாமை, வன்முறை, அறியாமை ஆகிய அழிந்து மனிதநேயம் மலர வேண்டும். அனைவரும் ஒன்றெனக் கருத வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. முத்தையா என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர் ……………….

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. கண்ணதாசன்
  4. சுரதா

விடை : கண்ணதாசன்

2. இயேசு காவியத்தை இயற்றியவர் ………………….

  1. கண்ணதாசன்
  2. பாரதியார்
  3. பாரதிதாசன்
  4. சுரதா

விடை : கண்ணதாசன்

3. ………….. உடையோரே நற்பேறு பெற்றவர் ஆவர்

  1. இரக்கம்
  2. சாந்தம்
  3. அமைதி
  4. அன்பு

விடை : இரக்கம்

4. ஆசையில் விழுந்த மனித வாழ்வு …………….. போன்றது

  1. சாந்தம்
  2. அமைதி
  3. அன்பு
  4. பொறுமை

விடை : பொறுமை

5. கவியரசு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுவர் ……………….

  1. பாரதியார்
  2. கண்ணதாசன்
  3. பாரதிதாசன்
  4. சுரதா

விடை : கண்ணதாசன்

சிறு வினா

1. எவ்வாறு வாழ்ந்தால் உலகம் எவ்வாறு உயர்வடையும்?

எல்லாரிடமும் அன்பு காட்டி அமைதியையே வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தால் உலகம் உயர்வடையும்.

2. இறைவனின் இரக்கத்தை பெறுவோர் யார்?

இரக்கம் உடையோரே பேறு பெற்றவர். அவர்கள் பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டி இறைவனின் இரக்த்தை பெறுவர்.

3. ஆசையில் விழுந்தவன் வாழ்வு பற்றி கண்ணதாசன் கூறுவன யாவை?

மனிதன் ஆசையில் விழுந்துவிட்டால் அவனது வாழ்வு பாலைவனம் போல் பயனற்றதாகவிடும்.

4. எப்போது வாழ்க்கை மலர்ச்சோலையாக மாறும்?

மனிதன் நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால்,  அவன் வாழக்கை மலர்சோலையாக மாறிவிடும்.

5. இயேசுகாவியம் பற்றி எழுதுக

இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசு காவியம் ஆகும்

குறு வினா

1. உண்மையில்லா உறவுகளாக வாழ்பவர் யாவர்?

மனிதர்கள் சண்டை சச்சரவுகளால் தாமும் துன்புற்றுப் பிறரையும் துன்புறுத்துகின்றன. மேலும் அவர்கள் தன்னாடு என்றும். பிறர்நாடு என்றும் பேசி உண்மையில்லா உறவுகளாக வாழ்கின்றனர்.

2. கண்ணதாசன் பற்றி குறிப்பு வரைக

  • கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா
  • சிறப்புப் பெயர் கவியரசு ஆகும்
  • காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்
  • ஏராளமான திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்
  • இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment