Class 8th Tamil Book Solution for CBSE | Lesson 1.3 – தமிழ் வரிவடிவ வளர்ச்சி

பாடம் 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 1.3 – “தமிழ் வரிவடிவ வளர்ச்சி” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற ……………………… காரணமாக அமைந்தது?

  1. ஓவியக்கலை
  2. இசைக்கலை
  3. அச்சுக்கலை
  4. நுண்கலை

விடை : அச்சுக்கலை

2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து …………………… என அழைக்கப்படுகிறது?

  1. கோட்டெழுத்து
  2. வட்டெழுத்து
  3. சித்திர எழுத்து
  4. ஓவிய எழுத்து

விடை : வட்டெழுத்து

3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் …………………

  1. பாரதிதாசன்
  2. தந்தை பெரியார்
  3. வ.உ. சிதம்பரனார்
  4. பெருஞ்சித்திரனார்

விடை : தந்தை பெரியார்

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ………………………… என அழைக்கப்பட்டன.

விடை : கண்ணெழுத்துக்கள்

2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ………………………

விடை : வீரமாமுனிவர்

குறு வினா

1. ஓவிய எழுத்து என்றால் என்ன?

தொடக்க காலத்தில் எழுத்து என்பது பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தால் அதனை ஓவிய எழுத்து என்பர்.

2. ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?

ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்.

3. ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?

புள்ளியிட்டு எழுதினால் ஓலைச்சுவடி சிதைந்துவிடும்.

நேர்கோடிட்டு எழுதினால் ஓலைச்சுவடி கிழிந்து விடும்.

ஆகிய காரணங்களால் ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலவில்லை

4. வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக

ஒகர வரிசை எழுத்துக்களில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை வீரமாமுனிவர் போக்கினார்.

“எ” என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு “ஏ” என்னும் எழுத்தை நெடிலாகவும் “ஒ” என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு “ஓ” என்னும் எழுத்தாக உருவாக்கினார்

சிறு வினா

1. எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.

  • ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.
  • ஓலைச் சுவடிகளில் நிறுத்தற் குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.
  • புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.
  • இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.

2. தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.

  • நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் (ர) பயன்படுகின்றது.
  • ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு (ை) பயன்படுகின்றது.
  • ஒளகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால் (ள) பயன்படுகின்றது.
  • குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின் மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்து விட்டது.

நெடு வினா

எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.

  • மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான்.
  • அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.
  • தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.
  • அடுதத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது.
  • அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து

சிந்தனை வினா

1. தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.

  • தமிழராய் பிறந்தோர் அனைவரும் தமிழ் வழிக் கல்வியை ஆதரிப்பவர்களாக விளங்க வேண்டும்.
  • தமிழ்மொழியில் தோன்றிய இலக்கண, இலக்கிங்கள் மற்றும் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் போன்ற அனைத்தும் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அனைவருக்கும் பயன்படும் வகையில் வெளிப்பட வேண்டும்.
  • பழைமையைப் பேணுவதுடன், புதுமை காணும் நோக்கத்துடன் வெளிவரும் படைப்பிலக்கியங்களையும் அவற்றைப் படைப்போரையும் பேணும் நிலை வர வேண்டும்.
  • பிறமொழி இலக்கியங்களை மொழிபெயர்த்து தமிழிலேயே வெளியிட வேண்டும். கலைச்சொற்கள் புதிதாகப் படைக்கப்பட வேண்டும்

2. தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதால் தமிழுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து விவாதிக்கவும்.

அருள்“அம்மா இங்கே வா” என்பதை amma ingkee vaa  என்று ஆங்கில எழுத்துக்களில் தமிழை எழுதுவது மிகும் தவறு.
செல்விநான் எப்போதும் கைபேசியில் யாருக்காவது வாழ்த்து சொல்வதை Valthukal  என்று தான் சொல்வேன்.
மாலாமலாய் மொழியில் எல்லாம் ஆங்கில எழுத்துருவில் தான் அனைவரும் எழுதுகிறார்கள். என் அத்தை கூட இதனை அடிக்கடி கூறுவார்கள்.
ஆனந்திஇணையத்தில், முகநூலில், கட்செவி அஞ்சலில் எழுதும்போது சிறிதாக எழுதுவதற்கு ஆங்கி எழுத்துருவைப் பயன்படுத்தில் தவறில்லை என்று நினைக்கிறேன்.
ஆலன்எப்படி தவறில்லை? என்று கூறலாம், உலகில் உள்ள அனைத்துக் கண்டுபிடிப்புகளுக்கும் தமிழில் பெயரிட்டுள்ளனர். இன்று இணையத்தில் அதிகம் தேடப்படும். பயன்படுத்தப்படும் எட்டு மொழிகளில் ஒன்றாகத் தமிழ் திகழ்ந்து வருகிறது. தமிழின் பெருமை கடல் கடந்தும் கோலோச்சி வருகிறது. தமிழை நாம் எழுதும்போது தமிழ் எழுத்துருவில் தான் எழுத வேண்டும். “வாழ்த்துக்கள்” என்றும் “அம்மா இங்கே வா வா” என்றும் தமிழில் எழுதுவற்கு பாமினி, இளங்கோ, ஸ்ரீலிபி, அமுதம், வானவில், அழகி போன்ற இணைய தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தலாம்.

வாழ்க தமிழர்! வளர்க தமிழ்!!

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மனிதன் தன் கருத்தை பிறருக்கு அறிவிக்க ……………… கண்டுபிடித்தான்.

  1. அறிவை
  2. மொழியை
  3. நட்பை
  4. மாநிலத்தை

விடை : மொழியை

2. மொழியை நிலைபெறச் செய்ய ________________ உருவாக்கினான்

  1. எழுத்துகளை
  2. கூட்டத்தை
  3. பாறைகளை
  4. அறிவை

விடை : எழுத்துகளை

3. மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும், கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்க …………….. பயன்படுத்தினான்.

  1. ஒலியை
  2. ஒளியை
  3. பொருளை
  4. சைகைகளை

விடை : சைகைகளை

4. மனிதன் பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களை ……………… ஆகப் பொறித்து வைத்தான்.

  1. இசையாக
  2. பாடலாக
  3. குறியீடுகளாக
  4. செம்மொழியாக

விடை : குறியீடுகளாக

5. தொடக்க காலத்தில் எழுத்து, பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவத்தை …………… என்பர்.

  1. ஓவிய எழுத்து
  2. ஒளி எழுத்து
  3. வட்டெழுத்து
  4. கண்ணெழுத்து

விடை : ஓவிய எழுத்து

6. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை …………….. நிலை என்பர்.

  1. ஒளி எழுத்து
  2. வடிவ எழுத்து
  3. ஓலி எழுத்து
  4. பேச்சு எழுத்து

விடை : ஓலி எழுத்து

7. ‘ஸ’ என்பது …………………… மொழி எழுத்து

  1. வட
  2. தெலுங்கு
  3. இந்தி
  4. கன்னடம்

விடை : வட

8. தமிழ் எழுத்துக்களின் பழைய வரி வடிவங்களைக் கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் ……………..ளிலும்  காண முடிகிறது.

  1. திருமேனி
  2. கல்வெட்டு
  3. செப்பேடு
  4. குகைகள்

விடை : செப்பேடு

9. …………………….. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

  1. ஓவியங்கள்
  2. கல்வெட்டுகள்
  3. செப்பேடுகள்
  4. எழுத்துகள்

விடை : கல்வெட்டுகள்

10. …………………….. கி.மு. ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

  1. ஓவியங்கள்
  2. கல்வெட்டுகள்
  3. எழுத்துகள்
  4. செப்பேடுகள்

விடை : செப்பேடுகள்

11. கண்ணெழுத்துக்கள் பற்றிக் குறிப்பிடும் நூல் ……………

  1. திருக்குறள்
  2. சிலப்பதிகாரம்
  3. மணிமேகலை
  4. சீவகசிந்தாமணி

விடை : சிலப்பதிகாரம்

12. இருபதாம் நூற்றாண்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் ……………

  1. வீரமாமுனிவர்
  2. பெரியார்
  3. பாரதியார்
  4. இளங்கோவடிகள்

விடை : பெரியார்

13. தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கிலிருந்தன என்தற்கு சான்று ……………

  1. அரச்சலூர் கல்வெட்டு
  2. ஆதிச்சநல்லூர் கல்வெட்டு
  3. கீழடி கல்வெட்டு
  4. மண்ணடி கல்வெட்டு

விடை : அரச்சலூர் கல்வெட்டு

பிரித்து எழுதுக

  • காலந்தோறும் = காலம் + தோறும்
  • குறிப்பதாயிற்று = குறிப்பது + ஆயிற்று
  • வந்துள்ளன = வந்து + உள்ளன
  • இப்போதுள்ள =  இப்போது + உள்ள
  • பெற்றுள்ளன = பெற்று + உள்ளன
  • நூற்றாண்டு = நூறு + ஆண்டு
  • தமிழெழுத்து = தமிழ் + எழுத்து
  • வட்டெழுத்து = வட்டம் + எழுத்து
  • காலமான = காலம் + ஆன
  • கண்ணெழுத்துக்கள் =  கண் + எழுத்துக்கள்
  • சிலப்பதிகாரம் = சிலம்பு + அதிகாரம்
  • மொழியிலுள்ள = மொழியில் + உள்ள

சேர்த்து எழுதுக

  • காலத்திற்கு + ஏற்ப = காலத்திற்கேற்ப
  • அடைந்து + இருக்கின்றன = அடைந்திருக்கின்றன
  • அழகு + உணர்ச்சி = அழகுணர்ச்சி
  • சான்று + ஆகும் = சான்றாகும்
  • வழக்கில் + இருந்த = வழக்கிலிருந்த
  • செப்பு + ஏடு = செப்பேடு
  • நிலை + ஆன = நிலையான
  • இடர் + உற்றனர் = இடருற்றனர்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு ……………… போன்றவற்றில் எழுதினர்.

விடை : ஓலை

2. அந்தந்தப் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துக்களில் ……………… அமைந்தன.

விடை : வடிவங்கள்

3. பாறைகளில் செதுக்கும் போது வளைகோடுகளை பயன்படுத்த முடியாது என்பதால் ……………… பயன்படுத்தப்பட்டன.

விடை : நேர்கோடுகள்

4. ஓலைகளில் நேர்க்கோடுகளையும், புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் ……………….. அதிகமாகப் பயன்படுத்தினர்.

விடை : வளைகோடுகளை

5. சில எழுத்துக்களை அழுகுபடுத்துவதற்காக அவற்றின மேற்பகுதியில் ……………… இடப்பட்டது.

விடை : குறுக்குக்கோடு

குறு வினா

1. மனிதன் எதற்கு மொழியைக் கண்டுபிடித்தான்?

மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க மொழியைக் கண்டுபிடித்தான். மொழியை நிலைபெறச் செய்ய எழுத்துக்களை உருவாக்கினான்.

2. மனிதன் ஏன் சைகைகளைப் பயன்படுத்தினான்?

மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான்.

3. எழுத்து வடிவத்தின் தொடக்க நிலைக் குறித்து எழுதுக

ஆதிமனிதன் பாறைகளிலும், குகைச்சுவர்களிலும் தன் எண்ணங்களை குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்கநிலை ஆகும்.

4. தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு நிலையான வடிவத்தைப் பெற்றன?

  • காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரி வடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன.
  • அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துக்கள் இப்போது நிலையான வடிவத்தை பெற்றுள்ளன.

5. வீரமாமுனிவரின் எழுத்துச்சீரத்திருத்தம் அட்டவணையிடுக

எ்ஒ்கெ்கெகெ்ாகொ
கெகேகொகோ

6. கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளின் அமைப்பு பற்றி கூறுக

  • ‘ஸ’ எனும் வடமாெழி எழுத்து காணப்படுகிறது.
  • மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை.
  • எகர, ஒகரக குறில் நெடில் வேறுபாடில்லை.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment