Class 8th Tamil Book Solution for CBSE | Lesson 2.2 – கோணக்காத்துப் பாட்டு

பாடம் 2.2 கோணக்காத்துப் பாட்டு

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 2.2 – “கோணக்காத்துப் பாட்டு” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • முகில் – மேகம்
  • வின்னம் – சேதம்
  • கெடிகலங்கி – மிக வருந்தி
  • வாகு – சரியாக
  • சம்பிரமுடன் – முறையாக
  • காலன் – எமன்
  • சேகரம் – கூட்டம்
  • மெத்த – மிகவும்
  • காங்கேய நாடு – கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று

பாடலின் பொருள்

திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின. அழிவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின.

அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு வீழ்ந்தன. ஆடவர் தம் மனைவி, பிள்ளைகளுடன் “கூ” “கூ” என்று அலறியபடி ஓடினர். தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னாமாக ஒடிந்து விழுந்தன. கடலில் விரைந்து வந்த கப்பல், எமனைப் போல வந்த பெருமழையினாலும் சுழல் காற்றினாலும் கவிழ்ந்தது.

ஆர்க்காடு முதல் மைசூர் வரை வீசிய பயுலால் சாலைகளில் சென்ற மக்கள் தடுமாறித் தவித்தனர். தெத்துக்க்காடு, காளப்பநாயக்கன்பட்ட ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆடு மாடுகள் இறந்தன. சித்தர்கள் வாழும் கொல்லி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது.

முருகப் பெருமானே! இத்தகைய அழிவுகளை நாங்கள் எவ்வாறு தாங்குவோம்? எங்களுக்கு வருகின்ற இடர்களை எல்லாம் தடுத்து எங்களைக! காப்பாயா

நூல்வெளி

  • நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாக பாடினர்.
  • பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன.
  • புலவர் செ.இராசு தொகுத்த பஞ்சக் கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய கோணக்காத்துப் பாட்டு என்னும் காத்து நொண்டிச் சிந்திலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வானில் கரு _____ தோன்றினால் மழை பொழியும் என்பர்.

  1. முகில்
  2. துகில்
  3. வெயில்
  4. கயல்

விடை : முகில்

2. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் _____யும் ஓட்டிவிடும்.

  1. பாலனை
  2. காலனை
  3. ஆற்றலை
  4. நலத்தை

விடை : காலனை

3. ‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. விழுந்த + அங்கே
  2. விழுந்த + ஆங்கே
  3. விழுந்தது + அங்கே
  4. விழுந்தது + ஆங்கே

விடை : விழுந்தது + அங்கே

4. ‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. செ + திறந்த
  2. செத்து + திறந்த
  3. செ + இறந்த
  4. செத்து + இறந்த

விடை :  செத்து + இறந்த

5. “பருத்தி + எல்லாம்” என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. பருத்திஎல்லாம்
  2. பருத்தியெல்லாம்
  3. பருத்தெல்லாம்
  4. பருத்திதெல்லாம்

விடை : பருத்தியெல்லாம்

குறு வினா

1. கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?

எமனைப் போல வந்த பெருமையும், சூழல் காற்றும் கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகும்.

2. புயல்காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?

தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னா பின்னமாகப் புயல் காற்றால் ஒடிந்து விழுந்தன.

3. கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?

சித்தர்கள் வாழும் மலை கொல்லிமலை. அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் புல் அடித்தது.

சிறு வினா

1. புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

வொங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின. தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னா பின்னமாகப் புயல் காற்றால் ஒடிந்து விழுந்தன.

2. கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?

திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு வீழ்ந்தன.

சிந்தனை வினா

இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

  • வெள்ளப் பெருக்குக் காலங்களில் ஆற்றோரமோ, நீர்நிலைகள் அருகிலோ வசிப்போர்கள் மேட்டுப் பகுதிக்கு சென்று தங்குதல் வேண்டும்.
  • எரிமலை வெடிக்கும் சூழலில், மலைக்கு அருகில் வசிப்போர் பாதுகாப்பான இடத்திற்கு சென்று தங்குதல் வேண்டும்.
  • காட்டுத்தீ ஏற்படும் நேரத்தில் காட்டிற்கு அருகில் வசிப்போர் நகர்புறத்திற்கு வந்த தங்க வேண்டும்.
  • சுனாமி ஏற்படும்போது கடற்கரையில் வசிப்போர், கடலை விட்டு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் சென்று தங்கதல் வேண்டும்.
  • நிலநடுக்கம் ஏற்படும் சூழலில், கட்டத்தை விட்டு வெளியேறி வெட்ட வெளியில் சென்று தங்குதல் வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. …………………. அடிக்கடி புயலால் தாக்கப்படும் பகுதியாகும்.

  1. டெல்லி
  2. தமிழ்நாடு
  3. பஞ்சாப்
  4. அஸ்ஸாம்

விடை : தமிழ்நாடு

2. இயற்கை …………………… கொண்டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத்திவிடும்.

  1. ஆசை
  2. அன்பு
  3. சீற்றம்
  4. நாற்றம்

விடை : சீற்றம்

3. “சேகரம்” என்பதன் பொருள் …………………

  1. கூட்டம்
  2. நாட்டம்
  3. பட்டம்
  4. கட்டம்

விடை : கூட்டம்

4. திரண்டு எழுந்த ……………….. ஆல் உருவான காற்று வேகமாக அடித்தது.

  1. காற்றுகள்
  2. ஓசைகள்
  3. கூட்டங்கள்
  4. மேகங்கள்

விடை : மேகங்கள்

5. ……………….. என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின

  1. தொண்டை
  2. ஆர்க்காடு
  3. வாங்கல்
  4. மைசூர்

விடை : மேகங்கள்

6. பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்த நாடு ……………….

  1. தொண்டைமான் நாடு
  2. ஆர்க்காடு
  3. தெத்துக்காடு
  4. காங்கேய நாடு

விடை : காங்கேய நாடு

பிரித்து எழுதுக

  • வீடுகளெல்லாம் = வீடுகள் + எல்லாம்
  • தென்னம்பிள்ளை = தென்னம் + பிள்ளை
  • சுவரெல்லாம் = சுவர் + எல்லாம்
  • தானடந்து = தான் + அடைந்து
  • நாடெல்லாம் = நாடு + எல்லாம்
  • செத்திறந்து = செத்து + இறந்து
  • மார்க்கமான = மார்க்கம் + ஆன
  • வேகமுடன் =  வேகம் + உடன்

குறு வினா

1. இயற்கை எவ்வாறு அழிவை ஏற்படுத்தும்?

இயற்கைச் சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத்திவிடும்.

2. வீடுகளின் கூரைகள் ஏன் சரிந்தன?

திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாக பிரிந்து சரிந்தன.

3. எந்த ஊரில் தென்னை மரங்கள் வீணாயின?

வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.

4. எந்த நாட்டில் பருத்திச் செடிகள் சிதைந்தன?

அழவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின

5. மாடி வீடுகள் எப்படி விழந்தன?

அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன

6. இயற்கை சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் என்ன நேரிடும்?

சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத்திவிடும்

7. யாரெல்லாம் எப்படி அலறியபடி ஓடினர்?

ஆடவர்கள் மனைவி பிள்ளைகளுடன் “கூ” “கூ” என்று அலறியபடி ஓடினர்

8. எப்பகுதிகளில் சென்ற மக்கள் தடுமாறித் தவித்தனர்?

ஆர்க்காடு முதல் மைசூர் வரை வீசிய பயுலால் சாலைகளில் சென்ற மக்கள் தடுமாறித் தவித்தனர்.

9. எந்தெந்தப் பகுதிகளில் ஏராளமான ஆடு மாடுகள் இறந்தன?

தெத்துக்க்காடு, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆடு மாடுகள் இறந்தன.

10. கவிஞர் தெய்வத்திடம் எவ்வாறு வேண்டினார்?

முருகப் பெருமானே! இத்தகைய அழிவுகளை நாங்கள் எவ்வாறு தாங்குவோம்? எங்களுக்கு வருகின்ற இடர்களை எல்லாம் தடுத்து எங்களைக! காப்பாயா

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment