Class 8th Tamil Book Solution for CBSE | Lesson 3.2 – வருமுன் காப்போம்

பாடம் 3.2 வருமுன் காப்போம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 3.2 – “வருமுன் காப்போம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • நித்தம்  நித்தம் –நாள்தோறும்
  • வையம் – உலகம்
  • மட்டு – அளவு
  • பேணுவயல்  –பாதுகாத்தல்
  • சுண்ட – நன்கு
  • திட்டுமுட்டு – தடுமாற்றம்

பாடலின் பொருள்

உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார். உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது. சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு. நாள்தோறும் நீங்கள் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தல் நீடித்த வாழ்நாளைப் பெயலாம்.

காலையும், மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது. அவர் உயிரைக் கவர எமனும் அணுக மாட்டான். எனவே நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்த பிறகே குடித்தல் வேண்டும்! நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்க வேண்டும்.

அளவாக உண்ணாமல் அதிகமாக உண்பதால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழுவீர்கள். தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும். அரிய நம் உடல் நலமோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிவீர்களாக! ஆகவே நோய் வரும் முன் காப்போம்! உலகம் புகழ வாழ்வோம்!

நூல்வெளி

  • கவிமணி எனப் போற்றப்படும் தேசிய விநாயகனார் குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்.
  • முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • இவர் ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.
  • மலரும் மாலையும் என்னும் நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. காந்தியடிகள் ………………. போற்ற வாழ்ந்தார்.

  1. நிலம்
  2. வையம்
  3. களம்
  4. வானம்

விடை : வையம்

2. நலமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………

  1. நலம் + எல்லாம்
  2. நலன் + எல்லாம்
  3. நலம் + எலாம்
  4. நலன் + எலாம்

விடை : நலம் + எல்லாம்

3. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….

  1. இடவெங்கும்
  2. இடம்எங்கும்
  3. இடமெங்கும்
  4. இடம்மெங்கும்

விடை : இடமெங்கும்

வருமுன்காப்போம் இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

மோனை சொற்கள்
டமும் – னியசுத்தமுள்ள  – சுகமும்
காலை – காற்றுடலின் – லகில்
ருமை – டையும்திட்டு – தினமும்
எதுகை சொற்கள்
லின் – இமும்கூழை – ஏழை
சுத்தமுள்ள – நித்தம்திட்டு – மட்டு
ருமை – வருமுன்ட்டிடுவாய் – ஓட்டிவிடும்
இயைபு சொற்கள்
தினமும் – இடமும்கூழை – ஏழை
திட்டு – மட்டுகுடியப்பா – உறங்கப்பா
உணணாமல் – தின்பாயேல்

குறு வினா

1. நம்மை நோய் அணுகாமல் காப்பவை யாவை?

நடைப்பயிற்சியும், நல்ல காற்றும் நம்மை நோய் அணுகாமல் காப்பவை ஆகும்

2. அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமையாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?

அதிகமாக உண்பதால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழுவீர்கள் என கவிமணி குறிப்பிடுகிறார்.

சிறு வினா

உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக

  • உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார். உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது.
  • சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு. நாள்தோறும் நீங்கள் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தல் நீடித்த வாழ்நாளைப் பெயலாம்.
  • காலையும், மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது.
  • அவர் உயிரைக் கவர எமனும் அணுக மாட்டான். எனவே நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்த பிறகே குடித்தல் வேண்டும்.
  • நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்க வேண்டும்.
  • அளவாக உண்ணாமல் அதிகமாக உண்பதால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழுவீர்கள்.
  • தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும்.
  • அரிய நம் உடல் நலமோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிவீர்களாக! ஆகவே நோய் வரும் முன் காப்போம்! உலகம் புகழ வாழ்வோம்!

சிந்தனை வினா

நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?

  • உடலின் வலிமைக்கம், நோய் வராமல் தடுப்பதற்கு உடற்பயிற்சி அவசியமானது. உடற்பயிற்சியால் இரத்த ஓட்டம் சீராகும்.
  • உடலின் கழிவுப் பொருட்கள் வெளியேறும். துணிவும், தெம்பும், சுறுசுறுப்பும் ஏற்படும். அதனால் விளையாட்டு தண்டால், நீச்சல், உலாவுதல் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளல் வேண்டும்.
  • நாம் வாழும் வீடும், சுற்றுப்புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். காற்றும் கதிரொளியும் தாராளமாக உள்ளே புகும் வகையில் வீடும், உறங்கும் இடமும் அமைய வேண்டும்.
  • உணவே மருந்து மருந்தே உணவு என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஒருவர் உட்கொள்ளம் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் சேர்ந்தே சமச்சீர் உணவு. எனவே அளவறிந்து உண்ண வேண்டியது அவசியமாகும்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்த எழுதுக

1. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது …………….

  1. புதுமொழி
  2. பழமொழி
  3. சிறுமொழி
  4. அறிவுமொழி

விடை : பழமொழி

2. நோய் வந்த பின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே …………….

  1. பொதுவுடைமை
  2. தன்னுடைமை
  3. அறிவுடைமை
  4. அன்புடைமை

விடை : அறிவுடைமை

3. நல்ல உணவு, உடல் தூய்மை, உடற்பயிற்சி ஆகியவையே …………………. நலத்திற்கு அடிப்படை

  1. நல்ல உடல்
  2. அறிவு உடல்
  3. அன்புடல்
  4. துன்ப உடல்

விடை : நல்ல உடல்

4. கவிமணி எனப் போற்றப்படுபவர் ……………………..

  1. பாரதிதாசன்
  2. சுரதா
  3. தேசிய விநாயகனார்
  4. பாதியார்

விடை : தேசிய விநாயகனார்

5. வருமுன் காப்போம் பாடலை பாடியவர் ……………………..

  1. சுரதா
  2. கவிமணி
  3. பாதியார்
  4. பாரதிதாசன்

விடை : கவிமணி

6. உடலில் உறுதி கொண்டவரே, உலகில் __________ உடையவர்

  1. மகிழ்ச்சி
  2. வீரம்
  3. அன்பு
  4. பரிவு

விடை : மகிழ்ச்சி

7. தேசிய விநாயகனார் __________ என்னும் மொழிபெயர்ப்பு நூலை படைத்துள்ளார்.

  1. உமர்கய்யாம் பாடல்கள்
  2. ஒரு நதியின் கதை
  3. நல்மொழி
  4. முள்ளும் மலரும்

விடை : உமர்கய்யாம் பாடல்கள்

8. சுத்தம் நிறைந்துள்ள இடங்களில் ………………………. உண்டு

  1. வீரம்
  2. அன்பு
  3. பரிவு
  4. சுகம்

விடை : சுகம்

9. வையம் என்பதற்கு ……………. என்பது பொருள்

  1. வீரம்
  2. அன்பு
  3. உலகம்
  4. பரிவு

விடை : உலகம்

குறு வினா

1. எது அறிவுடைமை?

நோய் வந்த பின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே அறிவுடைமை

2. நல்ல உடல் நலத்திற்கு அடிப்படைகள் யாவை?

நல்ல உணவு, உடல் தூய்மை, உடற்பயிற்சி ஆகியவையே நல்ல உடல் நலத்திற்கு அடிப்படைகள்.

3. உலகில் மகிழ்ச்சி உடையவர் யார்?

உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவர் ஆவார்

4. இனிய வாழ்வைத் தராது எவை?

உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது.

5. நீடித்த வாழ்நாளை எவ்வாறு பெறலாம்?

நாள்தோறும் தூய்மையைப் போற்றி பாதுகாத்தால் நீடித்த வாழ்நாளைப் பெறலாம்.

6. எமன் யாரை அணுக மாட்டான்?

காலையும், மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை எமனும் அணுக மாட்டான்.

7. எவை நம்மை நூறாண்டு வாழ வைக்ககும்?

தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும்.

8. கூழை எவ்வாறு குடித்தல் வேண்டும்?

கூழைக் குடித்தாலும் குளித்த பிறகே குடித்தல் வேண்டும்

சிறு வினா

கவிமணி குறிப்பு வரைக

  • கவிமணி குமரி மாவட்டத்தில் தேரூரில் சிவதாணுபிள்ளை – ஆதிலட்சுமி ஆகியோருக்கு மகனாக 27.08.1876-ல் பிறந்தார்
  • கவமணி எனப் போற்றப்படும் தேசிய விநாயகனார் 36 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியவர்.
  • இவர் ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை ஆகிய கவிதை நூல்களை இயற்றியுள்ளார்.
  • தேசிய விநாயகனார் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.
  • 1940-ல் கவிமணி பட்டம் பெற்றார்.
  • 26.09.1954 (78வயது)-ல் காலமானார்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment