பாடம் 3.5 வினைமுற்று
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 3.5 – “வினைமுற்று” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது இத்தொடரிலுள்ள வினைமுற்று
- மாடு
- வயல்
- புல்
- மேய்ந்தது
விடை : மேய்ந்தது
2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று
- படித்தான்
- நடக்கிறான்
- உண்பான்
- ஓடாது
விடை : படித்தான்
3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல்
- செல்க
- ஓடு
- வாழ்க
- வாழிய
விடை : ஓடு
சிறு வினா
1. வினைமுற்று என்றால் என்ன?
ஒருவினை, எச்சப் பொருளில் அமையாமல், முழுமை பெற்று விளங்குவது இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச் சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர்
2. தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகியவற்றை தெரிநிலை வினைமுற்று காட்டும்.
3. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?
க, இய, இயர், அல் என்பன வியங்கோள் வினைமுற்று ஆகும்
4. ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
ஏவல் வினைமுற்று | வியங்கோள் வினைமுற்று |
1. முன்னி்லயில் வரும். | இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும். |
2. ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு. | ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை. |
3. கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும். | வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும். |
4. விகுதி பெற்றும் பெறாமலும் வரும். | விகுதி பெற்றே வரும். |
தெரிந்து தெளிவோம்
- விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று, தன்மை இடத்தில் வராது.
- இயல், அல் ஆகிய இரண்டு வியங்கோள் வினைமுற்று விகுதிகள் தற்கால வழக்கில் இல்லை. செய்யுள் வழக்கில் மட்டுமே உள்ளன.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. ஒன்றன் செயலை குறிக்கும் சொல்
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- உரிச்சொல்
- இடைச்சொல்
விடை : வினைச்சொல்
2. செயலை ________ என்று குறிப்பர்
- பெயர்
- பயன்
- பயனிலை
- வினை
விடை : வினை
3. பொருள் முற்றுப்பெற்ற வினைச்சொற்களை ________ என்பர்
- வினையெச்சம்
- பெயரெச்சம்
- பண்புத்தொகை
- வினைமுற்று
விடை : வினைமுற்று
4. ஐம்பால், முக்காலம், மூவிடம் ஆகிய அனைத்திலும் ________ வரும்
- வினைமுற்று
- வினையெச்சம்
- பெயரெச்சம்
- பண்புத்தொகை
விடை : வினைமுற்று
5. செய்பவர், செயல், காலம் ஆகியவற்றை காட்டும் வினைமுற்று
- தெரிநிலை வினையெச்சம்
- தெரிநிலை பெயரெச்சம்
- தெரிநிலை வினைமுற்று
- குறிப்பு வினைமுற்று
விடை : தெரிநிலை வினைமுற்று
சிறு வினா
1. வினைச்சொல் என்றால் என்ன?
ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். ஒன்றன் தொழிலை உணர்த்தி காலத்தைக் காட்டி நிற்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
2. வினைமுற்று எத்தனை வகைப்படும்?
தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.
3. வியங்கோள் வினைமுற்று என்றால் என்ன?
வாத்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று எனப்படும்.
4. ஏவல் வினைமுற்று என்றால் என்ன?
தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் விளைமுற்று ஏவல் வினைமுற்று எனப்படும். ஏவல் வினை முற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகைகளில் வரும்.
5. தற்கால வழக்கில் பயன்பாட்டில் இல்லாத வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?
இயர், அல்
அறிந்து பயன்படுத்துவோம்.
நிறுத்தக்குறிகள்
காற்புள்ளி ( , )
1. பொருள்களை எண்ணும் இடங்களில் காற்புள்ளி வரும்.
(எ.கா)
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியன ஐந்திணைகள்.
2. கடிதத்தில் விளி முன் காற்புள்ளி வரும்.
(எ.கா.)
அன்புள்ள நண்பா,
3. வினையெச்சங்களுக்குப் பின் காற்புள்ளி வரும்.
(எ.கா.)
பொழிலன் தோட்டத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்.
4. மேற்கோள் குறிகளுக்கு (“) முன் காற்புள்ளி வரும்.
(எ.கா.)
குழந்தை நிலவைப் பார்த்து,” நிலா நிலா ஓடி வா” என்று பாடியது.
5. முகவரியில் இறுதி வரி நீங்க ஏனைய வரிகளின் இறுதியில் காற்புள்ளி வரும்.
(எ.கா.)
ச. ஆண்டாள், எண் 45, காமராசர் தெரு, திருவள்ளூர்.
அரைப்புள்ளி ( ; )
1. ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.
(எ.கா.)
கரிகாலன் கங்கை வரை படையெடுத்துச் சென்றான்; கனக விசயருடன் போரிட்டான்.
2. உடன்பாடு, எதிர்மறைக் கருத்துகளை ஒன்றாகக் கூறும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.
(எ.கா.)
நல்லவன் வாழ்வான்; தீயவன் தாழ்வான்.
முக்காற்புள்ளி ( : )
சிறு தலைப்பான தொகைச் சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் முக்காற்புள்ளி வரும்.
(எ.கா.)
முத்தமிழ் : இயல், இசை, நாடகம்.
முற்றுப்புள்ளி ( . )
1. சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.)
கல்வியே மனிதனின் வாழ்வை உயர்த்தும்.
2. சொற்குறுக்கங்களை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.)
திரு. வி. க. மா. க. அ. ஊ. ஒ. ந. நி. பள்ளி
3. பெயரின் தலைப்பெழுத்தை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.)
நெ. து. சுந்தரவடிவேலு
வினாக்குறி ( ? )
வினாப்பொருளை உணர்த்தும் வாக்கியத்தின் இறுதியில் வினாக்குறி இட வேண்டும்.
(எ.கா.)
சேக்கிழார் எழுதிய நூல் எது?
வியப்புக்குறி ( ! )
மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.
(எ.கா.)
தமிழின் இனிமைதான் என்னே! – வியப்பு
பாம்பு! பாம்பு! – அச்சம்
அந்தோ! இயற்கை அழிகிறதே! – அவலம்
ஒற்றை மேற்கோள் குறி ( ‘ ‘ )
தனிச் சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும்போதும், இரட்டை மேற்கோள் குறியில் இன்னொரு கூற்று உட்பட்டு வரும்போதும் ஒற்றை மேற்கோள் பயன்படும்.
(எ.கா.)
‘நல்ல’ என்பது குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.
கூட்டத்தின் தலைவர், “அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது ‘தலைப்பில்லை’ என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார
இரட்டை மேற்கோள்குறி ( “ “ )
நேர்கூற்றுகளிலும் செய்யுள் அடிகளையோ பொன்மொழிகளையோ குறிப்பிடும் இடங்களிலும் இரட்டை மேற்கோள் குறியைப் பயன்படுத்த வேண்டும்.
(எ.கா.)
திரு. வி. க. மாணவர்களிடம்,” தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள்” என்று கூறினார
பின்வரும் தொடர்களில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.
1. பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்
விடை : பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.
2. திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது
விடை : திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.
3. தமிழ்மொழி செம்மையானது வலிமையானது இளமையானது
விடை : தமிழ்மொழி செம்மையானது, வலிமையானது, இளமையானது.
4. கபிலன் தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்
விடை : கபிலன், “தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா?” என்று கேட்டான்.
5. திரு.வி.க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது
விடை : திரு.வி.க. எழுதிய ‘பெண்ணின் பெருமை’ என்னும் நூல் புகழ்பெற்றது.
பின்வரும் பத்தியில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.
நூல் பல கல் என்பர் பெரியோர் அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா முடியாது நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும். நூலகத்தின் வகைகளாவன மையநூலகம் மாவட்ட நூலகம் கிளை நூலகம் ஊர்ப்புற நூலகம் எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்றார் நேரு ஆகவே நூலகத்தின் பயன் அறிவோம் அறிவு வளம் பெறுவோம்
விடை :-
‘நூல் பல கல்’ என்பர் பெரியோர். அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா? முடியாது. நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும். நூலகத்தின் வகைகளாவன மையநூலகம், மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம். ‘எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன்’ என்றார் நேரு. ஆகவே, நூலகத்தின் பயன் அறிவோம்! அறிவு வளம் பெறுவோம்!
கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
1. எந்த நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது?
உலக புத்தக நாள்
2. புத்தகக் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?
இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம்
3. புத்தகக் கண்காட்சி எத்தனை நாள்கள் நடைபெறுகிறது?
11 நாட்கள் (ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 23 வரை)
4. புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் எவ்வளவு?
நுழைவு கட்டணம் இல்லை
5. புத்தகம் வாங்குவோருக்கு வழங்கப்படும் சலுகை யாது?
10% கழிவு
மொழியோடு விளையாடு
கீழ்க்காணும் வினாக்களுக்கு விடைகளைக் கட்டத்தில் நிரப்புக. வட்டத்தில் சிக்கிய எழுத்துகளை எடுத்து எழுதுக. எழுத்துகளை முறைப்படுத்திக் கல்வி பற்றிய பழமொழியைக் கண்டறிக.
1. திரைப்படப் பாடலாசிரியர் சோமுவின் ஊர்.
ஆ | ல | ங் | கு | டி |
2. கேடில் விழுச்செல்வம் ………….
க | ல் | வி |
3. குமர குருபரர் எழுதிய நூல்களுள் ஒன்று.
நீ | தி | நெ | றி | வி | ள | க் | க | ம் |
4. ‘கலன்’ என்னும் சொல்லின் பொருள்.
அ | ணி | க | ல | ன் |
5. ஏட்டுக்கல்வியுடன் …………….. கல்வியும் பயில வேண்டும்.
இ | ய | ற் | கை |
6. திரு.வி.க. எழுதிய நூல்களுள் ஒன்று.
உ | ரி | மை | வே | ட் | கை |
7. மா + பழம் என்பது _____ விகாரம்.
தோ | ன் | ற | ல் |
கட்டத்தில் சிக்கிய எழுத்துகள்
ஆ | ல் | றி | அ | ற் | வே | ற |
பழமொழி : அறிவே ஆற்றல்
நிற்க அதற்குத் தக….
கலைச்சொல் அறிவோம்
நிறுத்தக்குறி – Punctuation | திறமை – Talent |
மொழிபெயர்ப்பு – Translation | அணிகலன் – Ornament |
விழிப்புணர்வு – Awareness | சீர்திருத்தம் – Reform |