Class 8th Tamil Book Solution for CBSE | Lesson 9.2 – இளைய தோழனுக்கு

 பாடம் 9.2 இளைய தோழனுக்கு

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 9.2 – “இளைய தோழனுக்கு” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

பாடலின் பொருள்

செயல்படத் தொடங்கு! நாளை மட்டுமல்ல. இன்றும் நமது நாள் தான். உனது பாதங்கள் நடக்கத் தயாராக இருந்தால், நீ செல்லும் பாதைகள் உன்னை எதிர்க்கப் போவதில்லை.

உலகிற்க ஒளியேற்ற எண்ணெயாய், திரியாய் உன்னையே நீ மாற்றினால் தோல்வியும் உன் உயர்விற்குத் தூண்டுகோலாகும்! வெற்றி உன் அங்கமாககி, வாழ்வில் ஒளியேற்றும்.

கவலைகளை உள்ளத்தில் தேங்கவிட வேண்டாம். உன்னைப் பாராட்டிப் புத்துணர்வூட்ட ஒருவரும் இல்லையென்று வருந்தாதே! உன்னை விட ஒருவரும் உன்னைப் பாராட்டிப் புத்துணர்வூட்ட முடியாது.

நீ சோர்ந்து தளர்ந்தால் பூமி உன் நோய்படுக்கையாகும். நீ கிளர்ந்து எழுந்தால் அது உனக்கும் பாதையாகும்.

நீ செயல்படப் புறப்டம் திசைதான் இனி இந்தப் பூமிக்குக் கிழக்கு. கதிரவன் உன் விரல்களில் விளக்காக ஒளிவீசும். செயல்படத் தொடங்கு! நாளை மட்டுமல்ல. இன்றும் நமது நாள் தான்.

நூல் வெளி

  • வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு.மேத்தா.
  • கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்
  • புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்
  • கண்ணீர்ப் பூக்கள், சோழ நிலா, மகுட நிலா உள்ளிட்ட பல நூல்களையும், திரையிசைப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
  • இவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புக்கவிதை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
  • மு.மேத்தா கவிதைகள் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. உன்னுடன் நீயே …………….. கொள்.

  1. சேர்நது
  2. பகை
  3. கைகுலுக்கிக்
  4. நட்பு

விடை : கைகுலுக்கிக்

2. கவலைகள் ……………. அல்ல

  1. சுமைகள்
  2. சுவைகள்
  3. துன்பங்கள்
  4. கைக்குழந்தைகள்

விடை : கைக்குழந்தைகள்

3. ‘விழித்தெழும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..

  1. விழி + எழும்
  2. விழித்து + எழும்
  3. விழி + தெழும்
  4. விழித் + தெழும்

விடை : விழித்து + எழும்

4. ‘போவதில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….

  1. போவது + இல்லை
  2. போ + இல்லை
  3. போவது + தில்லை
  4. போவது + தில்லை

விடை : போவது + இல்லை

5. ‘படுக்கையாகிறது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….

  1. படுக்கை + யாகிறது
  2. படுக்கையா + ஆகிறது
  3. படுக்கையா + கிறது
  4. படுக்கை + ஆகிறது

விடை : படுக்கை + ஆகிறது

6. ‘தூக்கி + கொண்டு’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………

  1. தூக்கிகொண்டு
  2. தூக்குக்கொண்டு
  3. தூக்கிக்கொண்டு
  4. தூக்குகொண்டு

விடை : தூக்கிக்கொண்டு

7. ‘விழித்து + எழும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………

  1. விழியெழும்
  2. விழித்தெழும்
  3. விழித்தழும்
  4. விழித்துஎழும்

விடை : விழித்தெழும்

குறு வினா

1. கவலைகளைக் கவிஞர் எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

கவலைகளைக் கவிஞர் கைக்குழந்தைகளாக உருவகப்படுத்துகிறார்

2. தோல்வி எப்போது தூண்டுகோலாகும்?

நெய்யாகவும், திரியாகவும் நீ மாறினால் தோல்வியும் உனக்கு தூண்டுகோலாகும்.

சிறு வினா

பூமி எப்போது பாதையாகும்?

  • நீ சோர்ந்து தளர்ந்தால் பூமி உன் நோய் படுக்கையாகும்
  • நீ பிடித்து நடந்தால் அந்த பூமியே உனக்குப் பாதையாகும்.

சிந்தனை வினா

வாழ்வில் உயர நம்பிக்கையைப் போன்று வேறு என்னென்ன பண்புகள் தேவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

வாழ்வில் உயர

ஊக்கம்சொல்லும் சொல்லில் உண்மை
தன்னம்பிக்கைநடுவுநிலைமை
தளராத முயற்சிஒருமைப்பாடு
காலம் அறிந்து செயல்படுதல்இரக்கம்
செய்யும் செயலில் நேர்மைஅன்பு

ஆகிய பண்புகள் இருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் ஒருவர் …………….. 

  1. பாரதியார்
  2. மு.மேத்தா.
  3. சுரதா
  4. கவிமணி

விடை : கைகுலுக்கிக்

2. சாகித்திய அகாதெமி விருது பெற்ற மேத்தாவின் நூல் ……………. 

  1. ஆகாயத்துக்கு அடுத்தவீடு
  2. கண்ணீர்பூக்கள்
  3. மகுட நிலா
  4. ஊர்வலம்

விடை : ஆகாயத்துக்கு அடுத்தவீடு

3. நீ செல்லும் ………….. உன்னை எதிர்க்கப் போவதில்லை

  1. நாள்
  2. திசை
  3. பாதைகள்
  4. கவலைகள்

விடை : பாதைகள்

4. உன் விரல்களில் ……………. விளக்காக ஒளி வீசும்

  1. நிலா
  2. கதிரவன்
  3. வானவில்
  4. விண்மீன்

விடை : கதிரவன்

பிரித்து எழுதுக

  • மட்டுமல்ல = மட்டும் + அல்ல
  • போவதில்லை = போவது + இல்லை
  • உனக்கொரு = உனக்கு + ஒரு
  • தூக்கிக்கொண்டு = தூக்கி + கொண்டு
  • கைக்குழந்தைகள் = கை + குழந்தைகள்
  • குழந்தைகளல்ல = குழந்தைகள் + அல்ல
  • ஒருவருமில்லையா = ஒருவரும் + இல்லையா
  • படுக்கையாகிறது = படுக்கை + ஆகிறது
  • பாதையாகிறது = பாதை + ஆகிறது
  • விழித்தெழும் = விழித்து + எழும்
  • நம்முடையது = நம் + உடையது

குறு வினா

1. “பாதைகள் உன்னை எதிர்க்கப் போவதில்லை” என்று கவிஞர் மேத்தா கூறக் காரணம் யாது?

  • செயல்படத் தொடங்கும் நாளை மட்டுமல்ல, இன்றும் நமது நாள் தான்.
  • உனது பாதங்கள் நடக்கத் தயராக் இருந்தால், நீ செல்லும் பாதைகள் உன்னை எதிர்க்கப் போவதில்லை என்றார் மேத்தா

2. வாழ்க்கையில் நம்பிக்கை எதற்கு உறுதுணையாக இருக்கிறது?

நம்பிக்கையின் ஆற்றலை உணர்ந்து, வாழ்வுக்கு உறுதுணையாக்கினால் வாழ்வில் வெற்றி பெறலாம்

3. எதனை உள்ளத்தில் தேங்க விடக் கூடாது என்று கவிஞர் மேத்தா கூறுகிறார்?

கவலைகளை உள்ளத்தில் தேங்க விடக் கூடாது என்று கவிஞர் மேத்தா கூறுகிறார்.

4. புத்துணர்வு ஊட்டுபவர் யார்?

  • உன்னை பராட்டி புத்துணர்வு அளிக்க ஒருவரும் இல்லை என்று வருந்தாதே!
  •  உன்னை விட ஒருவரும் உன்னைப் பாராட்டி புத்துணர்வு ஊட்ட முடியாது.

5. பூமியின் கிழக்கு என் மேத்தா எதனைக் குறிப்பிடுகிறார்?

நீ செயல்பட புறப்படும் திசை தான், இனி இந்தப் பூமிக்கு கிழக்கு என்று மேத்தா குறிப்பிடுகிறார்.

6. மு.மேத்தா எழுதியுள்ள நூல்கள் யாவை?

  • கண்ணீர்ப் பூக்கள்
  • சோழ நிலா
  • மகுட நிலா

7. மு. மேத்தா அவர்களுக்கு எதற்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது?

மு. மேத்தா எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புக்கவிதை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

சிறு வினா

கவிஞர் மு.மேத்தா குறிப்பு வரைக

  • வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்
  • கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்
  • புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடி
  • கண்ணீர்ப் பூக்கள், சோழ நிலா, மகுட நிலா ஆகிய நூல்களை எழுதியுள்ளார்
  • இவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புக்கவிதை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment