பாடம் 3.3 மார்கழிப் பெருவிழா
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 3.3 – “மார்கழிப் பெருவிழா” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சொல்லும் பொருளும்
- ஆனைச்சாத்தன் – கரிக்குருவி
- அரவம் – ஓசை
- கைபேர்த்து – கைஅசைத்து
- குழல் – கூந்தல்
- நகை – சிரிப்பு
- புலர்ந்தின்றோ – விடியவில்லையோ?
நூல் வெளி
திருப்பாவை
- திருப்பாவை திருமாலை முழுமுதற் கடவுளாகக்கொண்ட வைணவ சமயத்தில் ஆழங்கால்பட்ட பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள்.
- திருப்பாவையை இயற்றிய இவர் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டவர்.
- சுடர்க்கொடி என சூடிக்கொடுத்த அழைக்கப்படுகிறார்.
- முப்பது பாடல்கள் கொண்ட இந்நூலில் ஏழாவது பாடல் நம் பாடப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
திருவெம்பாவை
- சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவ சமயத்தில், சமயக்குரவர் எனம் போற்றப்படும் நால்வருள் மாணிக்கவாசகரும் ஒருவர்.
- இவர் திருவாதவூரில் பிறந்ததால் திருவாதவூரடிகள் என அழைக்கப்படுகிறார்.
- இவர் அருளிச்செய்த திருவாசகத்தில் உள்ள பதிகம் திருவெம்பாவை.
- இருபது பாடல்கள் கொண்ட திருவெம்பாவையில் நான்காவது பாடல் நமது பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளது,
பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள்
பலவுள் தெரிக.
பொருந்தாத தொடரைக் கண்டறிக
- பன்னிரு ஆழ்வார்களுள் ஆண்டாளும் ஒருவர்
- சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று ஆண்டாள் அழைக்கப்படுகிறார்.
- திருவெம்பாவையை இயற்றியவர் ஆண்டாள்
- நம்மாழ்வாரின் மகளாவார் ஆண்டாள்
விடை : திருவெம்பாவையை இயற்றியவர் ஆண்டாள்
சிறு வினா
1. கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன், கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ இடஞ்சுட்டிப் பொருள் தருக.
இடம்:
ஆண்டாள் இயற்றிய திருப்பாவைப் பாடல்.
விளக்கம்:
ஆனைச்சாத்தன் குருவிகள் ஒலியெழுப்புவதால் பொழுது விடிந்தது என அறியலாம். நீ இன்னும் உறங்குகிறாயே!
2. கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோ நீயேவந்த இவ்வடிகளில் கண்ணுக் கினியான் என்பது யாரைக் குறிக்கிறது?
கண்ணுக்கினியான் :
அடியவர் கண்ணுக்கு இனியவனாகத் தோன்றும் சிவபெருமானைக் குறிக்கிறது.
குறு வினா
1. திருப்பாவை குறிப்பிடும் காலை வழிபாட்டு நிகழ்வை விளக்குக.
காலை வழிபாட்டு நிகழ்வு :·
- இளம்பெண்களின் கூட்டத்திற்கே தலைவி நீ உறங்கலாமா!
- நாராயணன் மும்மூர்த்திகளின் தலைவன்! கேசவன்! என்று கண்ணனை எல்லாரும் பாடிடும் ஒலி கூடவா உன் காதில் விழவில்லை?
- கண்ணன் நினைவில் உணர்வற்று உலகை மறந்து கிடக்கின்றாயா? ஒளிபடைத்த கண்ணழகி! எழுந்திரு!
- கதவைத் திற! நீராடச் செல்வோம்.
- பாவை நோன்பு எடுப்போம் வாடீ! என ஒரு பெண் அழைக்கின்றாள்.
2. தோழியை எழுப்பும் நிகழ்வைத் திருவெம்பாவை எவ்வாறு காட்சிப்படுத்துகிறது?
தோழியை எழுப்பும் நிகழ்வு:
- பாடிவரும் பாவையருள் ஒருத்தி ‘ஒளிமிக்க முத்துப் போன்ற பல் தெரிய சிரிக்கும் தோழி! உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையோ?’ என்கிறாள்.
- உறங்கிக் கொண்டிருந்த முத்துப்பல்லழகி அழகிய கிளிமொழி பேசும் பாவையர் எல்லாரும்
வந்திருக்கின்றனரா?’ என்கிறாள்.
- எழுப்பியவருள் மற்றொருத்தி, உன் கேள்விக்கு வந்துள்ளவரை எண்ணிப் பார்த்தல்லவோ விடை கூற வேண்டும்’ என்கிறாள்.
- மூன்றாவது பெண் ‘அப்படிச் செய்யாதே. தோழி! அதுவரையில் கண்ணைமூடி உறங்கப் பார்க்கிறாயா? நம் மார்கழி நோன்பு நேரத்தை வீணாகக் கழித்து விடாதே’ என்கிறாள்.
- நான்காவதாக ஒருத்தி, ‘விண்ணவர்க்கு ஒப்பற்ற அமிழ்தாக உள்ளவனை. நான்மறைகள் போற்றும் உயர்ந்தவனை, அடியவர் கண்ணுக்கு இனியவனை புகழ்ந்துப் பாடி மனம் குழைந்து உருவிடவா என்கிறாள்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. திருப்பாவையை இயற்றியவர்
- மாணிக்கவாசகர்
- ஆண்டாள்
- சுந்தரர்
- பெரியாழ்வார்
.விடை : ஆண்டாள்
2. திருப்பாவையிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை
- முப்பது
- இருபது
- நாற்பது
- எழுபது
.விடை : முப்பது
3. திருவெம்பாவையிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை
- பத்து
- முப்பது
- நாற்பது
- இருபது
.விடை: இருபது
4. திருவாதவூரடிகள் என அழைக்கப்படுகிறவர்?
- மாணிக்கவாசகர்
- ஆண்டாள்
- சுந்தரர்
- பெரியாழ்வார்
.விடை : மாணிக்கவாசகர்
சிறு வினா
1. திருப்பாவை பற்றி குறிப்பு வரைக
- திருப்பாவை திருமாலை முழுமுதற் கடவுளாகக்கொண்ட வைணவ சமயத்தில் ஆழங்கால்பட்ட பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள்.
- திருப்பாவையை இயற்றிய இவர் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டவர்.
- சுடர்க்கொடி என சூடிக்கொடுத்த அழைக்கப்படுகிறார்.
- முப்பது பாடல்கள் கொண்ட இந்நூலில் ஏழாவது பாடல் நம் பாடப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
2. திருவெம்பாவை பற்றி குறிப்பு வரைக
- சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவ சமயத்தில், சமயக்குரவர் எனம் போற்றப்படும் நால்வருள் மாணிக்கவாசகரும் ஒருவர்.
- இவர் திருவாதவூரில் பிறந்ததால் திருவாதவூரடிகள் என அழைக்கப்படுகிறார்.
- இவர் அருளிச்செய்த திருவாசகத்தில் உள்ள பதிகம் திருவெம்பாவை.
- இருபது பாடல்கள் கொண்ட திருவெம்பாவையில் நான்காவது பாடல் நமது பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.