Class 9th Tamil Book Solution for CBSE | Lesson 5.1 – கல்வியில் சிறந்த பெண்கள்

பாடம் 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 5.1 – “கல்வியில் சிறந்த பெண்கள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

பாடநூல் மதிப்பீட்டு வினா

குறு வினா

சாரதா சட்டம் எதற்காகப் போடப்பட்டது?

பெண்கள் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம். எனவே அதைத் தடுக்க 1929-ம் ஆண்டு சாரதா சட்டம் போடப்பட்டது.

சிறு வினா

1. சங்க கால பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக

ஔவையார்ஒக்கூர் மாசாத்தியார்,
ஆதிமந்தியார்வெண்ணிக் குயத்தியார்
பொன்முடியார்அள்ளூர் நன்முல்லையார்
நக்கண்ணையார்காக்கைப்பாடினியார்
வெள்ளிவீதியார்காவற்பெண்டு
நப்பசலையார்

2. இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பின் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக.

“தந்தனத்தோம் என்று சொல்லியே வல்லினில் பாட

ஆமாம் வில்லினில் பாட

வந்தருள்வாய் தமிழ் மகளே!

இன்றைய பெண்கல்வி பற்றிப் பாடப்போகிறோம்!

ஆமாம்! பாடப்போகிறோம்.

மருத்துவம் படித்து மருத்துவ மாேமேதைகள் தான்

இன்று பெண்கள்…

சட்டம் படித்து சட்ட மாமேதைகள் தான்

இன்று பெண்கள்…

பொறியில் படித்து பொறியியல் மாமேதைகள் தான்

இன்று பெண்கள்…

ஆமாம்!

வாழிய வாழிய பெண்கல்வி

ஆமாம் வாழிய வாழியவே!”

3. முத்துலெட்சுமி – குறிப்பு வரைக. (அல்லது) மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளை குறிப்பிடுக.

  • தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
  • இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.
  • சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.
  • சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
  • தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்தவர்.
  • அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

4. நீலாம்பிகை அம்மையாரின் தமிழ்ப்பணி குறித்த சிறப்பங்களை எழுதுக.

  • மறைமலையடிகளின் மகள் ஆவார்.
  • தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்
  • இவரது தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல் – தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.

நெடு வினா

நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க

மூவலூர் இராமாமிர்தம்:-

  • தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர்
  • திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்.
  • தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர்.
  • தமிழக அரசு, 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது.

முத்துலெட்சுமி:-

  • தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
  • இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.
  • சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.
  • சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
  • தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்தவர்.
  • அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

நீலாம்பிகை அம்மையார்:-

  • மறைமலையடிகளின் மகள் ஆவார்.
  • தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்
  • இவரது தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல் – தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு,பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.

கூடுதல் வினாக்கள் 

பலவுள் தெரிக

1. கொவ்வைத் தமிழைக் கொண்டு பாடியவர் என்று குழுத்தலைவர் யாரைக் குறிப்பிடுகிறார்?

  1. ஓவையார்
  2. ஆதிமந்தி
  3. ஆண்டாள்
  4. பொன்முடியார்

விடை : ஆண்டாள்

2. முதன் முதலில் பெண் கல்விக்குப் பரிந்துரை செய்தது

  1. கோத்தாரி குழு
  2. ஹண்டர் குழு
  3. பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம்
  4. ராஜாராம் குழு

விடை : ஹண்டர் குழு

3. இந்தியாவில் முதன்முதலாகப் பெண்களுக்கான பள்ளி தொடங்கப்பட்ட மாநிலம் ……………..

  1. தமிழநாடு
  2. கேரளா
  3. குஜராத்
  4. மாராட்டியம்

விடை : மாராட்டியம்

4. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர் …………..

  1. முத்துலட்சுமி
  2. சாவித்திரி பூலே
  3. மூவலூர் இராமாமிர்தம்
  4. ஐடோஸ் சோபியா ஸ்கட்டர்

விடை : மூவலூர் இராமாமிர்தம்

5. தமிழக அரசு, 8 வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை இவரின் பெயரால் வழங்கப்படுகின்றது?

  1. முத்துலட்சுமி
  2. சாவித்திரி பூலே
  3. மூவலூர் இராமாமிர்தம்
  4. ஐடோஸ் சோபியா ஸ்கட்டர்

விடை : மூவலூர் இராமாமிர்தம்

6. வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் …………….

  1. முத்துலட்சுமி
  2. சாவித்திரி பூலே
  3. மூவலூர் இராமாமிர்தம்
  4. ஐடோஸ் சோபியா ஸ்கட்டர்

விடை : ஐடோஸ் சோபியா ஸ்கட்டர்

7. சட்டமேற்படிப்பிற்குரிய பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் ……………….

  1. சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம்
  2. மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித்திட்டம்
  3. ஈ.வெ.ரா – நாகம்மை இலவச கல்வி உதவித்திட்டம்
  4. இவற்றில் ஏதுமில்லை

விடை : ஈ.வெ.ரா – நாகம்மை இலவச கல்வி உதவித்திட்டம்

8. கல்வி மற்றும் திருமண உதவித் தொகையுடன் தொடர்புடையது …………..

  1. சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம்
  2. மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித்திட்டம்
  3. ஈ.வெ.ரா – நாகம்மை இலவச கல்வி உதவித்திட்டம்
  4. இவற்றில் ஏதுமில்லை

விடை : சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம்

9. அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்தியது …………….

  1. ஹண்டர் குழு
  2. கோத்தாரி கல்விக் குழு
  3. பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம்
  4. ராஜாராம் குழு

விடை : கோத்தாரி கல்விக் குழு

10. மறைமலை அடிகளாரின் மகள் …………….

  1. முத்துலட்சுமி
  2. மூவலூர் இராமாமிர்தம்
  3. நீலாம்பிகை அம்மையார்
  4. ஈ.த. இராேஜஸ்ரி அம்மையார்

விடை : நீலாம்பிகை அம்மையார்

11. இராணிமேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியராக பணியாற்றியவர் ……………….

  1. முத்துலட்சுமி
  2. மூவலூர் இராமாமிர்தம்
  3. நீலாம்பிகை அம்மையார்
  4. ஈ.த. இராேஜஸ்ரி அம்மையார்

விடை : ஈ.த. இராேஜஸ்ரி அம்மையார்

பொருத்துக

1. சாராதா சட்டம்அ. 1930
2. அவ்வை இல்லம்ஆ. 1929
3. புற்றுநோய் மருத்துவமனைஇ. 1964
4. கோத்தாரி கல்விக்குழுஈ. 1952
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

பொருத்துக

1. முத்துலட்சுமிஅ. தேவதாசி ஒழிப்புச் சட்டம்
2. சாவித்திரி பூலேஆ. இலவச மருத்துவம் அளித்தவர்
3. ஜடோஸ் சோபியா ஸ்கட்டர்இ. முதல் பெண் ஆசிரியர்
4. மூவலூர் இராமாமிர்தம்ஈ. முதல் பெண் மருத்துவர்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பாகிஸ்தானில், பெண்கல்வி வேண்டுமென்று போராடியவர் ………………….

விடை : மலாலா

2. பாகிஸ்தானில், பெண்கல்விக்கெனப் போராடியபோது மலாலாவின்  வயது …………………

விடை : பன்னிரண்டு

3. பெண்களுக்கெனப் பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு …………..

விடை : 1848

4. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் ………………..

விடை : சாவித்திரிபாய் பூலே

5. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்  ……………

விடை : முத்துலெட்சுமி

6. நோபல் பரிசு வாங்கி சிறுமி ………….

விடை : மலாலா

7. குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவியவர் ……………….

விடை : கைலாஷ் சத்தியமூர்த்தி

8. 80 ஆயிரம் குழந்தைகள் கல்வி பெற உதவியாய் இருந்தவர் ……………….

விடை : கைலாஷ் சத்தியமூர்த்தி

9. 2014-ல் நோபல் பரிசு வாங்கிய பெருமைக்குரியவர்கள் ………………, …………………..

விடை : கைலாஷ் சத்யார்த்தி, மலாலா

10. 1952-ல் அடையாற்றில் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியவர் ………………..

விடை : முத்துலெட்சுமி

11. இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் ………………..

விடை : முத்துலெட்சுமி

12. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் ………………..

விடை : முத்துலெட்சுமி

13. சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ………………..

விடை : முத்துலெட்சுமி

14. 1930-ல் அடையாற்றில் அவ்வை இல்லம் தொடங்கியவர் ………………..

விடை : முத்துலெட்சுமி

15. மாதவி மகள் ………………..

விடை : மணிமேகலை

16. இறைவனுக்கு பாமாலை சூட்டிய பெண்கள் ……………….., ……………………

விடை : காரைக்காலம்மையார், ஆண்டாள்

17. முப்பெண்மணிகள் வரலாறு நூலை எழுதியவர் ………………

விடை : நீலாம்பிகை அம்மையார்

18. பட்டினத்தார் பாராட்டிய மூவர் நூலை எழுதியவர் ………………

விடை : நீலாம்பிகை அம்மையார்

19. சூரியன், பரமாணுப்புராணம் ஆகிய நூல்களை எழுதியவர் ………………

விடை : ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார்

குறு வினா

1. பெண்கல்வி ஊக்குவிப்புக்கான திட்டங்கள் யாவை?

  • ஈ.வெ.ரா. – நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் – பட்ட மேற்படிப்புக்கு உரியது.
  • சிவகாமி அம்மையார் கல்வி உதவித் திட்டம் – கல்வி திருமண உதவித் தொகை ஆகியவற்றுடன் தொடர்புடையது

2. மலாலா என்பவர் யார்?

தனுது 12 வயதில் பெண்கல்வி வேண்டுமென்று பாகிஸ்தானில், போராடிய சிறுமி ஆவார்.

3. இறைவனுக்குப் பாமாலை சூட்டிய பெண்கள் யாவர்?

காரைக்கால் அம்மையார், ஆண்டாள்

4. பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்வர்கள் யார்?

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், தந்தை பெரியார், பாரதியார், பாரதிதாசன்

5. சாவித்திரிபாய் பூலே ஆற்றிய பணி யாது?

  • 1848-ல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • நாட்டின் முதல் பெண் ஆசிரியர்.

6. ஒருவரின் வாழ்வின் இறுதி வரையிலும் கை கொடுப்பது?

கையிலுள்ள செல்வத்தைக் காட்டிலும் நிலைத்த புகழுடைய கல்விதான் ஒருவருக்கு வாழ்வின் இறுதி வரையிலும் கை கொடுக்கிறது.

7. ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார் பற்றி குறிப்பு வரைக

  • தமிழ், இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார்.
  • திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்துச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
  • இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியாகப் பணியாற்றினார்.
  • சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment