Class 9th Tamil Book Solution for CBSE | Lesson 5.3 – சிறுபஞ்சமூலம்

பாடம் 5.3 சிறுபஞ்சமூலம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 5.3 – “சிறுபஞ்சமூலம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • மூவாது – முதுமை அடையாமல்
  • நாறுவ – முளைப்ப
  • தாவா – கெடாதிருத்தல்

இலக்கணக்குறிப்பு

  • அறிவார், வல்லார்- வினையாலணையும் பெயர்
  • விதையாமை, உரையாமை – எதிர்மறைத் தொழிற்பெயர்
  • தாவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

1. உரையாமை = உரை + ய் + ஆ + மை

  • உரை – பகுதி
  • ய் – சந்தி (உடம்படுமெய்)
  • ஆ – எதிர்மறை இடைநிலை
  • மை – தொழிற்பெயர் விகுதி

2. காய்க்கும் = காய் + க் + க் + உம்

  • காய் – பகுதி
  • க் – சந்தி
  • க் – எதிர்கால இடைநிலை
  • உம் – பெயரெச்ச விகுதி.

நூல்வெளி

  • தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின.
  • அவை பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று சிறுபஞ்சமூலம்.
  • சிறுபஞ்சமூலம் என்பதற்கு ஐந்து சிறிய வேர்கள் என்பது பொருள்.
  • அவை கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன.
  • இவ்வேர்களினால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குவது போல சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
  • சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
  • இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன , நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.
  • சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான்
  • இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.
  • காரி என்பது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர்.
  • மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.

பாடநூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக.

பூவாது காய்க்கும், மலர்க்கை – அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?

  1. பெயரெச்சம், உவமைத்தொகை
  2. எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்
  3. வினையெச்சம், உவமை
  4. எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை

விடை : எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை

குறு வினா

மூவாது மூத்தவர், நூல் வல்லார் – இத்தொடர் உணர்த்தும் பொருளைக் குறிப்பிடுக

பூக்காமலே சில மரங்கள் காய்ப்பது போல் நன்மை, தீமைகளை உணர்ந்த இளையோர் மூத்தவரோடு வைத்து நினைக்கத தக்கவர்.

சிறு வினா

விதைக்காமலே முளைக்கும் விதைகள் – இத்தொடரின் வழிச் சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்துக்களை விளக்குக.

பூக்காமலே சில மரங்கள் காய்ப்பது போல் நன்மை, தீமைகளை உணர்ந்த இளையோர் மூத்தவரோடு வைத்து நினைக்கத தக்கவர்.

பாத்தி அமைத்து விதை விதைக்காமலேமுளைக்கும் விதைகளைப் போல அறிவுநுட்பம் மிகுந்தவர் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்துகொள்வர்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. ஐந்து கருத்துகள் இடம் பெறும் பதினெண்கீழ்கணக்கு நூல் …………..

  1. ஏலாதி
  2. திருக்குறள்
  3. திரிகடுகம்
  4. சிறுபஞ்சமூலம்

விடை : சிறுபஞ்சமூலம்

2. மூன்று கருத்துகள் இடம் பெறும் பதினெண்கீழ்கணக்கு நூல் ……….

  1. ஏலாதி
  2. திருக்குறள்
  3. திரிகடுகம்
  4. சிறுபஞ்சமூலம்

விடை : திரிகடுகம்

3. ஆறு கருத்துகள் இடம் பெறும் பதினெண்கீழ்கணக்கு நூல் ……….

  1. ஏலாதி
  2. திருக்குறள்
  3. சிறுபஞ்சமூலம்
  4. திரிகடுகம்

விடை : ஏலாதி

4. சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் ……………

  1. பெருவாயின் முள்ளியார்
  2. நல்லதானார்
  3. திருவள்ளுவர்
  4. காரியாசான்

விடை : காரியாசான்

5. சிறுபஞ்சமூலம் – இதில் பஞ்ச என்ற சொல் குறிப்பது ……………

  1. ஐந்து
  2. நான்கு
  3. மூன்று
  4. இரண்டு

விடை : ஐந்து

6. சிறுபஞ்சமூலம் – இதில் மூலம் என்ற சொல் குறிப்பது ……………

  1. ஐந்து
  2. சிறிய
  3. வேர்
  4. வறுமை

விடை : வேர்

7. சிறுபஞ்சமூலத்துடன் தொடபில்லாத ஒன்று ……………

  1. கண்டங்கத்திரி
  2. சிறுவழுணை
  3. சிறுமல்லி
  4. சிறுநாவற்பூ

விடை : சிறுநாவற்பூ

8. பூக்காமலே காய்க்கும் மரங்களை உவமையாக கூறப்பட்டது ………..

  1. மூவாது மூத்தவர்
  2. மூத்தார்
  3. மேதை
  4. ஞானி

விடை : மூவாது மூத்தவர்

9. விதை விதைக்காமல் முளைக்கும் விதைகள் உவமையாக கூறப்பட்டது ………..

  1. மூவாது மூத்தவர்
  2. மூத்தார்
  3. மேதை
  4. ஞானி

விடை : மேதை

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மனித வாழ்வைச் செழுமையாக்குபவை …………… பண்புகளே.

விடை : அறப்

2. சாதனைக்கு …………. ஒரு தடையில்லை.

விடை : வயது

3. ஐந்து சிறிய வேர்கள் …………………

விடை : சிறுபஞ்சமூலம்

4. 10 வயதில் சொற்பொழிவாற்றியவர் …………..

விடை : வள்ளலார்.

5. 11 வயதில் கவிதை எழுதி ‘பாரதி’ பட்டம் பெற்றவர் …………..

விடை : பாரதியார்

6. 15 வயதில் பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் …………..

விடை : விக்டர் ஹியூகோ

7. 16 வயதில் போர்ப் படையில் தளபதியானவர் …………..

விடை : மாவீரன் அலெக்சாண்டர்.

8. 17 ஊசல் விதியினை கண்டுபிடித்தவர் …………..

விடை : கலீலியோ

9. நாறுவ என்பதன் பொருள் ………………….

விடை : வித்து

குறு வினா

1. உமக்குத் தெரிந்த மூவாது மூத்த சான்றோர் சிலரது பெயரினை எழுதுக

கரிகாலன், வள்ளலால், பாரதி, விக்டர் யூகோ, அலெக்ஸாண்டர், கலீலியோ

2. மூத்தவரோடு வைத்து எண்ணத்தக்கவர் யார்?

நன்மை, தீமைகளை நன்கு உணர்ந்தோர் வயதில் இளையவராக இருந்தாலும் மூத்தவரோடு வைத்து எண்ணத்தக்கவர் ஆவர்.

3. எதையும் தாமே உணர்ந்து கொள்வர் யார்?

மேதையார் (அறவு நுட்பம் மிகுந்தவர்) பிறர் உணர்த்தாமலே எதையும் தாமே உணர்ந்த கொள்வர்.

4. மூவாது முத்தவர் – தொடர் பொருள் கூறுக.

வயதில் இளையவராக இருந்தாலும் அறிவில் சிறந்ததால் மூத்தவர் போன்றவர்.

5. மேதைக்கு உரையாமை – தொடர் பொருள் கூறுக

மேதையார் (அறிவு நுட்பம் மிகுந்தவர்) பிறர் உணர்த்தாமல் தானே உணர்ந்து கொள்வர்.

6. பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளவை எவை?

தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின. அவையே பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன.

7. சிறுபஞ்சமூலம் என்பதற்கு பொருள் யாது?

சிறுபஞ்சமூலம் என்பதற்கு ஐந்து சிறிய வேர்கள் என்பது பொருள்.

8. ஐந்து சிறிய வேர்கள் எவை?

கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி

9. சிறுபஞ்ச மூலம் பற்றி குறிப்பு வரைக

  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று சிறுபஞ்சமூலம்.
  • சிறுபஞ்சமூலம் என்பதற்கு கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து சிறிய வேர்கள் என்பது பொருள்.
  • ஐந்து சிறிய வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குவது போல சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.

10. சிறுபஞ்சமூலப் பாடல்கள் எவ்வாறு அமைந்துள்ளன?

  • சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
  • இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன , நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.

11. காரியாசான் – குறிப்பு வரைக

  • சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான்
  • இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.
  • காரி என்பது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர்.
  • மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.

12. சாதனைக்கு வயது தடையன்று என்பதற்கு சான்றுகள் கூறுக.

  • 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் வள்ளலார்.
  • 11ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி ‘பாரதி’ என்னும் பட்டம் பெற்றவர் பாரதியார்.
  • 15ஆவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் விக்டர் ஹியூகோ.
  • 16ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் மாவீரன் அலெக்சாண்டர்.
  • 17ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் அறிவியலாளர் கலீலியோ

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment