Class 9th Tamil Book Solution for CBSE | Lesson 6.2 – இராவண காவியம்

பாடம் 6.2 இராவண காவியம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 6.2 – “இராவண காவியம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • மைவனம் – மலைநெல்
  • முருகியம் – குறிஞ்சிப்பறை
  • பூஞ்சினை – பூக்களை உடைய கிளை
  • சிறை – இறகு
  • சாந்தம் – சந்தனம்
  • பூவை- நாகணவாய்ப் பறவை
  • பொலம் – அழகு
  • கடறு – காடு
  • முக்குழல் – கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்;
  • பொலி – தானியக்குவியல்
  • உழை – ஒரு வகை மான்
  • கல் – மலை
  • முருகு – தேன், மணம், அழகு
  • மல்லல்- வளம்
  • செறு- வயல்
  • கரிக்குருத்து – யானைத்தந்தம்
  • போர்- வைக்கோற்போர்
  • புரைதப- குற்றமின்றி
  • தும்பி- ஒருவகை வண்டு
  • துவரை – பவளம்
  • மரை – தாமரை மலர்
  • விசும்பு – வானம்
  • மதியம் – நிலவு

இலக்கணக் குறிப்பு

  • இடிகுரல் – உவமைத்தொகை
  • பிடிபசி – வேற்றுமைத் தொகை
  • பூவையும் குயில்களும், முதிரையும் சாமையும் வரகும் – எண்ணும்மை
  • கருமுகில், இன்னுயிர், பைங்கிளி – பண்புத்தொகை
  • பெருங்கடல், முதுவெயில், இன்னிளங்குருளை – பண்புத்தொகை
  • மன்னிய- பெயரெச்சம்
  • வெரீஇ – சொல்லிசை அளபெடை
  • கடிகமழ் – உரிச்சொற்றொடர்
  • மலர்க்கண்ணி – மூன்றாம் வேற்றுமைஉருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • எருத்துக்கோடு – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • கரைபொரு – இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • மரைமுகம் – உவமைத் தொகை
  • அதிர்குரல், வருமலை – வினைத் தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

1. பருகிய = பருகு+இன்+ ய்+அ;

  • பருகு – பகுதி
  • இன்- இறந்த கால இடைநிலை (ன் கெட்டது விகாரம்)
  • ய் -உடம்படுமெய்; அ –பெயரெச்ச விகுதி

2. பூக்கும் = பூ + க் + க் + உம்;

  • பூ – பகுதி
  • க் – சந்தி
  • க் – எதிர்கால இடைநிலை
  • உம் – வினைமுற்று விகுதி

நூல் வெளி

  • இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம்.
  • இந்நூல் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம் என ஐந்து காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது.
  • இந்நூல் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்டது.
  • தமிழ்க்காண்டத்திலுள்ள பாடல்ங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன.
  • தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.
  • யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

 

பாடநூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக.

’பொதுவர்கள் பொலிஉறப் போர்அடித்திடும்’ நிலப் பகுதி …………….

  1. குறிஞ்சி
  2. நெய்தல்
  3. முல்லை
  4. பாலை

விடை : முல்லை

குறு வினா

1. பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?

எருதின் கொம்புகளைப் போன்றிருந்த பாலைக் காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு அவர்கள் கோலினால் அடித்து விளையாடினர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்தோடின.

2. இடிகுரல், பெருங்கடல் இலக்கணக்குறிப்பு தருக?

  • இடிகுரல் – உவமைத்தொகை
  • பெருங்கடல் – பண்புத்தொகை

சிறு வினா

1. இராவண காவியத்தில் இடம் பெற்ற இரண்டு உவமைகளை எடுத்துக்காட்டுக

எருதின் கொம்புகளைப் போன்றிருந்த பாலைக் காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு அவர்கள் கோலினால் அடித்து விளையாடினர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்தோடின.

தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி, கடற்கரை மணலிடை உலவி, காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும். பின்னர்த் தாமரை மலரையொத்த பெண்களின் முகத்தினை நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் கா ட்சி போல் உள்ளது.

2. குறிஞ்சி மணப்பதற்கு நிகழ்வுகளைக் குறிப்பிடுக?

தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும் உலையில் இட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் மணமும் காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும் பரவித் தோய்ந்து கிடந்தத னால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் மணம் கமழ்ந்து காணப்பட்டன.

நெடு வினா

இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரி.

குறிஞ்சி மணம்:-

தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும் உலையில் இட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் மணமும் காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும் பரவித் தோய்ந்து கிடந்தத னால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் மணம் கமழ்ந்து காணப்பட்டன.

பறவைகளின் அச்சம்:-

எருதின் கொம்புகளைப் போன்றிருந்த பாலைக் காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு அவர்கள் கோலினால் அடித்து விளையாடினர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்தோடின.

தும்பியின் காட்சி:-

தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி, கடற்கரை மணலிடை உலவி, காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும். பின்னர்த் தாமரை மலரையொத்த பெண்களின் முகத்தினை நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. இராவண காவியத்தின் பாட்டுத்தலைவன் ……………….

  1. இராமன்
  2. இராவணன்
  3. இலக்குவன்
  4. அனுமன்

விடை : இராவணன்

2. மான் ………………. நிலத்திற்குரிய கருப்பொருள்

  1. குறிஞ்சி
  2. முல்லை
  3. மருதம்
  4. நெய்தல்

விடை : முல்லை

3. தந்தைப் பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க புலவர் குழந்தை உரை எழுதிய நூல் ……………..

  1. திருக்குறள்
  2. யாப்பதிகாரம்
  3. தொடையதிகாரம்
  4. இராவண காவியம்

விடை : திருக்குறள்

4. சிறுவர்கள் விளையாடிய குளத்தில் பூத்திருந்தவை ……………….

  1. காஞ்சி
  2. வஞ்சி
  3. தாமரை
  4. குறிஞ்சி

விடை : தாமரை

5. நாயின் இளமைப் பெயர் ……………..

  1. குருளை
  2. பிள்ளை
  3. கன்று
  4. குட்டி

விடை : குட்டி

6. இராவண காவியம்  குறிஞ்சி நிலப் பாடலலில் இடம் பெறும் பறவைகள் ……………

  1. கிளி, மயில்
  2. கோழி, வாத்து
  3. குயில், புறா
  4. நாரை, கொக்கு

விடை : கிளி, மயில்

7. முல்லை நில மக்கள் …………..

  1. குறவர்
  2. உழவர்
  3. ஆயர்
  4. பரதவர்

விடை : ஆயர்

8. நெய்தல் நிலத்தவர் ………………..

  1. குறவர்
  2. உழவர்
  3. ஆயர்
  4. பரதவர்

விடை : பரதவர்

9. “முல்லைஅம் புறவில் தோன்று
     முருகுகான் யாறும் பாயும்” – இதில் “தேன்” என்னும் பொருள் தரும் சொல் யாது?

  1. முல்லை
  2. அம்புற
  3. பாயும்
  4. முருகு

விடை : பரதவர்

9. தேன், மணம், அழகு என்னும் பொருள் தரும் சொல் …………..

  1. முல்லை
  2. அம்புற
  3. முருகு
  4. பாயும்

விடை : முருகு

10. கரிக்குருத்து என்னும் சொல்லின் பொருள் ……………..

  1. கரிக்கோல்
  2. பனைக்குருத்து
  3. தென்னங்குருத்து
  4. யானைத்தந்தம்

விடை : யானைத்தந்தம்

11. போரடிக்கும் குரல் கேட்டு அஞ்சி ஓடுவது ……………..

  1. மயில்
  2. செந்நாய்
  3. உழைமான்
  4. கலைமான்

விடை : உழைமான்

12. குருளைக்குத் தான் துன்புற்று தன்னுடைய நிழலைத் தந்து நின்றது ……….

  1. மயில்
  2. செந்நாய்
  3. உழைமான்
  4. கலைமான்

விடை : செந்நாய்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. இராமயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணன் முதன்மை நாயகனாக கொண்டு அமைக்கப்பட்டது ……………………….

விடை : இராவண காவியம்

2. 20ஆம் நூற்றாண்டில் தோன்றிய பெருங்காப்பியம் …………………

விடை : இராவண காவியம்

3. இராவண காவிய காப்பியத் தலைவன் …………………..

விடை : இராவணன்

4. இராவண காவியம், அரசியரங்கம், நெருஞ்சிப்பழம், யாப்பதிகாரம், தொடையதிகாரம், இன்னூல் உள்ளிட்ட 30-க்கும் மேலான நூல்கள் எழுதியவர் ………………

விடை : புலவர் குழந்தை

5. தந்தைப் பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க 25 நாள்களில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் ………………..

விடை : புலவர் குழந்தை

6. ஐவகை நிலங்கள் பற்றி இடம்பெறும் இராவண காவியக்காண்டம் ……………..

விடை : தமிழகக்காண்டம்

7. அலையினைத் தடவி மணலிடை உலவி, காற்றிலே தன் சிறகினை உலர்த்துவது ……………..

விடை : தும்பி

பாெருத்துக

1. மைவனம்அ. நாகணவாய்ப்பறவை
2. சிறைஆ. மலை நெல்
3. பூவைஇ. இறகு
4. பொலம்ஈ. அழகு
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ, 4 – ஈ

பாெருத்துக

1. கல்அ. வளம்
2. முருகுஆ. வயல்
3. செறுஇ. தேன்
4. மல்லல்ஈ. மலை
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

பாெருத்துக

1. துவரைஅ. வானம்
2. மரைஆ. தாமரை மலர்
3. விசும்புஇ. நிலவு
4. மதியம்ஈ. பவளம்
விடை : 1 – ஈ, 2 – ஆ, 3 – அ, 4 – இ

பாெருத்துக

1. குறிஞ்சிஅ. தாமரை
2. முல்லைஆ. மயில்
3. பாலைஇ. மான்
4. மருதம்ஈ. பருந்து
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

குறு வினா

1. இராவண காவிய காப்பித்தலைவன் யார்?

இராவணன்

2. முக்குழல் – பொருள் கூறுக

கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியற்றால் ஆன குழல்கள்

3. மான்கள் எதனைக் கேட்டு அஞ்சி ஓடும்?

முல்லை நில மக்கள் கதிரடிக்கும் ஓசை கேட்டு மான்கள் அஞ்சி ஓடும்.

4. ஐவகை நிலங்கள் யாவை?

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை

5. இராவண காவியத்தி்ல் நும் செய்யுட் பகுதியில் இடம்பெறும் குறிஞ்சி நிலக் கருப்பொருட்களை எழுதுக.

மலைநெல், குறிஞ்சிப்பறை, கிளி, குரங்கு, காந்தள், சந்தன மரம்

6. இராவண காவியத்தி்ல் நும் செய்யுட் பகுதியில் இடம்பெறும் முல்லை நிலக் கருப்பொருட்களை எழுதுக.

நாகணவாய்ப்பறவை, குயில், ஆயர், தேன், மான், முதிரை, சாமை, கேழ்வரகு, குதிரை வாலி நெல்

7. இராவண காவியத்தி்ல் நும் செய்யுட் பகுதியில் இடம்பெறும் பாலை நிலக் கருப்பொருட்களை எழுதுக.

செந்நாய், மராமலர், பருந்து

8. இராவண காவியம் எத்தனை காண்டங்களை கொண்டது?

இராவண காவியம் ஐந்து காண்டங்களை கொண்டது

  • தமிழகக் காண்டம்
  • இலங்கைக் காண்டம்
  • விந்தக் காண்டம்
  • பழிபுரி காண்டம்
  • போர்க்காண்டம்

9. புலவர் குழந்தை படைப்புகள் எவை?

இராவண காவியம். யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

10. இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்ட நூல் எது?

இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்டது இராவண காவியம்.

சிறு வினா

1. இராவண காவியம் – குறிப்பு வரைக

  • இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம்.
  • இந்நூல் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம் என ஐந்து காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது.
  • இந்நூல் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்டது.

2. புலவர் குழந்தை – குறிப்பு வரைக

  • தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதிய சிறப்பினை உடையவர்.
  • இராவண காவியம், அரசியரங்கம், நெருஞ்சிப்பழம் யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment