Class 9th Tamil Book Solution for CBSE | Lesson 7.3 – முத்தொள்ளாயிரம்

பாடம் 7.3 முத்தொள்ளாயிரம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 7.3 – “முத்தொள்ளாயிரம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • அள்ளல் – சேறு
  • பழனம் – நீர் மிக்க வயல்
  • வெரீஇ – அஞ்சி
  • பார்பபு – குஞ்சு
  • நாவலோ – நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து
  • இசைத்தால் – ஆரவாரத்தோடு கூவுதல்
  • நந்து – சங்கு
  • கமுகு – பாக்கு
  • முத்தம் – முத்து

இலக்கணக் குறிப்பு

  • அஞ்சி – பெயரச்சம்
  • வெண்குடை, இளங்கமுகு – பண்புத்தொகை
  • கொல்யானை, குவிமொட்டு – வினைத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

கொண்ட = கொள்(ண்) + ட் + அ

  • கொள் – பகுதி
  • ண் – ஆனது விகாரம்
  • ட் – இறந்தகால இடைநிலை
  • இ – பெயரெச்ச விகுதி

நூல் வெளி

  • வெண்பாவால் எழுதப்பட்ட நூல்
  • மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாக பாடுகிறது.
  • மூவேந்தர்களைப் பற்றிய பாடப்பட்ட 900 பாடல்களை கொண்ட நூல் என்பதால் முத்தெள்ளாயிரம் என்று பெயர் பெற்றது.
  • நூல் முழுமையாக கிடைக்கவில்லை
  • புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன. அவை முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில பதிப்பிக்கப்பட்டுள்ளன.
  • எழுதியவர், தொகுத்தவர் பெயர் அறிய இயலவில்லை.
  • இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரகக் கருதப்படுகிறார்.
  • சேர நாட்டை அச்சமில்லாத நாடாகவும், சோழ நாட்டை ஏர்களச் சிறப்பும், போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும், பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் பாடப்பகுதி காட்டுகிறது.

பாடநூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக

1. சாெல்லும் பாெருளும் பாெருந்தியுள்ளது எது?

  1. வருக்கை – இருக்கை
  2. புள் – தாவரம்
  3. அள்ளல் – சேறு
  4. மடிவு – தொடக்கம்

விடை : மடிவு – தொடக்கம்

2. நக்சிலைவேல் காேக்காேதை நாடு, நல்யானைக் காேக்கிள்ளி நாடு – இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே,

  1. பாண்டிய நாடு, சேர நாடு
  2. சாேழ நாடு, சேர நாடு
  3. சேர நாடு, சாேழ நாடு
  4. சாேழ நாடு, பாண்டிய நாடு

விடை : சேர நாடு, சாேழ நாடு

குறு வினா

1. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ – இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை?

சேறு – அள்ளல், வயல் – பழனம்

2. கொற்கை நகரில் முத்துக்களைப் போல் உள்ள பொருள்களாக் காட்டப்பட்டுவன எவை?

சங்குவின் முட்டைகள், புன்னை மொட்டுகள், பாக்கு பாளையில் இருந்து சிந்தும் மணிகள்

சிறு வினா

சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.

சேரர்:-

வயல்களில் செவ்வாம்பல் மெல்ல விரிந்தன. அதனைக் கண்ட நீர்ப்பறைவகள் தண்ணீர் தீப்பிடித்து விட்டது என்று நினைத்து தம் குட்டிகளை சிறகில் மறைத்து வைத்தன. பகைவர் அஞ்சும் சேர நாட்டில் இந்த அச்சமும் இருக்கின்றது.

சோழர்:-

உழவர்கள் நெய்போர் மீது ஏறி “நாவலோ” என்று கூறி மற்ற உழவர்களை அழைப்பர். இது போரில் யானை மீது நின்று “நாவலோ” என்று கூவி மற்ற வீரர்களை அழைப்பது போல் இருந்தது. இத்தகு வளம் சோழ நாட்டில் காணப்பட்டது.

பாண்டியர்:-

கொற்கை நகரில் முத்துகளைப் போல் சங்குவின் முட்டைகள், புன்னை மொட்டுகள், பாக்கு பாளையில் இருந்து சிந்தும் மணிகள் ஆகியவை. இத்தகைய வளம் பாண்டியர் நாட்டில் காணப்பட்டது.

2. தற்குறிப்பேற்றவணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

இலக்கணம்:-

இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் மனக்கருத்தை ஏற்றிக் கூறவது தற்குறிப்பேற்ற அணி ஆகும்.

சான்று:-

“அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம்தீப் பட்டதென வெரீஇப்பு ள்ளினம்”

விளக்கம்:-

இயல்பான நிகழ்வு – வயலில் ஆம்பல் மலர்தல்.

கவிஞர் மனக்கருத்து – நீர் பறவைகள் வெள்ளத்தில் தீப்பற்றியதாக எண்ணி வருந்தி தன் குஞ்சுகளை காத்தல்.

ஆகையால் இச்செய்யுள் தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. முத்தொள்ளாயிரம் எழுதப்பட்ட பா …………………

  1. வெண்பா
  2. கலிப்பா
  3. ஆசிரியப்பா
  4. வஞ்சிப்பா

விடை : வெண்பா

2. முத்தொள்ளாயிரத்தில் பாடப்பெற்ற மன்னர் …………………

  1. சேரர்
  2. சோழர்
  3. பாண்டியர்
  4. மூவரும்

விடை : மூவரும்

3. அச்சமில்லா நாடு …………………

  1. சேர நாடு
  2. சோழ நாடு
  3. பாண்டிய நாடு
  4. பல்லவ நாடு

விடை : சோழ நாடு

4. ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடு ………………..

  1. சேர நாடு
  2. பாண்டிய நாடு
  3. சோழ நாடு
  4. பல்லவ நாடு

விடை : சோழ நாடு

5. முத்துடை நாடு ………………..

  1. சேர நாடு
  2. சோழ நாடு
  3. பல்லவ நாடு
  4. பாண்டிய நாடு

விடை : பாண்டிய நாடு

6. பகைவர் அஞ்சும் வேலைக் கொண்ட நாடு ………………..

  1. சேர நாடு
  2. சோழ நாடு
  3. பல்லவ நாடு
  4. பாண்டிய நாடு

விடை : சேர நாடு

7. யானைப்படைகளை உடைய நாடு ………………..

  1. சேர நாடு
  2. சோழ நாடு
  3. பல்லவ நாடு
  4. பாண்டிய நாடு

விடை : சோழ நாடு

8. முத்துகளான வெண் கொற்றக் குடை உள்ள நாடு ………………..

  1. சேர நாடு
  2. சோழ நாடு
  3. பல்லவ நாடு
  4. பாண்டிய நாடு

விடை : பாண்டிய நாடு

9. நவலோ என்று அழைத்தவர் ………………..

  1. வீரர்கள்
  2. உழவர்
  3. சோழன்
  4. சேரன்

விடை : உழவர்

10. நவலோ என்று அழைத்தவர் ………………..

  1. கோக்கோதை நாடு – சேர நாடு
  2. கோக்கிள்ளி நாடு – சோழ நாடு
  3. முத்த வெண்குடையான் நாடு – பாண்டிய நாடு
  4. நச்சிலைவேல் நாடு – சோழநாடு

விடை : நச்சிலைவேல் நாடு – சோழநாடு

11. “பந்தர் இளங்கமுகின்” என்பதில் “பந்தர்” என்பது குறிக்கும் சொல் ………………..

  1. அரேபியர் வணகம் செய்த இடம்
  2. பாக்கு
  3. பந்தல்
  4. முத்து

விடை : பந்தல்

12. “தென்னன் நகைமுத்து” என்பதில் “தென்னன் என்பது குறிப்பது ……………….

  1. சேரன்
  2. சோழன்
  3. பல்லவன்
  4. பாண்டியன்

விடை : பாண்டியன்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ஒரு நாட்டின் …………… பாடுவதை புலவர்கள் கவிமரபாகக் கொண்டிருந்தனர்.

விடை : வளத்தை

2. பிற்காலக் காப்பியங்களில் …………….. தவறாது இடம் பெற்றது.

விடை : நாட்டுவளம்

3. முத்தெள்ளாயிரத்தின் ஆசிரியர் …………….

விடை : அறிய இயலவில்லை

4. வெண்பாவால் எழுதப்பட்ட நூல் ……………

விடை : முத்தெள்ளாயிரம்

5. முத்தெள்ளாயிரம் …………….. பாடல்களை கொண்ட நூல்

விடை : 900

6. வயல்களில் விரிந்திருந்தவை ……………….

விடை : அரக்காம்பல்

7. முத்தெள்ளாயிரத்தில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை …………..

விடை : 108 செய்யுட்கள்

குறு வினா

1. நீர் பறவைகள் அஞ்சக் காரணம் என்ன?

வயல்களில் செவ்வாம்மல் மலர்கள் மலர்ந்திருந்ததைக் கண்டு, நீரில் தீப்பிடத்தது என்று எண்ணி நீர்ப் பறவைகள் அஞ்சியது.

2. நாவலோ என்பதன் பொருள் யாது?

நாள் வாழ் என்பது போன்ற வாழ்த்து

3. முத்தெள்ளாயிரம் குறிப்பிடும் சோழ நாட்டு வளம் யாது?

உழவர்கள் நெய்போர் மீது ஏறி “நாவலோ” என்று கூறி மற்ற உழவர்களை அழைப்பர். இது போரில் யானை மீது நின்று “நாவலோ” என்று கூவி மற்ற வீரர்களை அழைப்பது போல் இருந்தது. இத்தகு வளம் சோழ நாட்டில் காணப்பட்டது.

4. முத்தெள்ளாயிரம் குறிப்பிடும் சேர நாட்டு வளம் யாது?

வயல்களில் செவ்வாம்பல் மெல்ல விரிந்தன. அதனைக் கண்ட நீர்ப்பறைவகள் தண்ணீர் தீப்பிடித்து விட்டது என்று நினைத்து தம் குட்டிகளை சிறகில் மறைத்து வைத்தன. பகைவர் அஞ்சும் சேர நாட்டில் இந்த அச்சமும் இருக்கின்றது.

5. முத்தெள்ளாயிரம் குறிப்பிடும் பாண்டிய நாட்டு வளம் யாது?

கொற்கை நகரில் முத்துகளைப் போல் சங்குவின் முட்டைகள், புன்னை மொட்டுகள், பாக்கு பாளையில் இருந்து சிந்தும் மணிகள் ஆகியவை. இத்தகைய வளம் பாண்டியர் நாட்டில் காணப்பட்டது.

சிறு வினா

முத்தெள்ளாயிரம் – குறிப்பு வரைக

  • வெண்பாவால் எழுதப்பட்ட நூல்
  • மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாக பாடுகிறது.
  • மூவேந்தர்களைப் பற்றிய 900 பாடல்களை கொண்ட நூல் முத்தெள்ளாயிரம்
  • நூல் முழுமையாக கிடைக்கவில்லை
  • எழுதியவர், தொகுத்தவர் பெயர் அறிய இயலவில்லை.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment