Class 9th Tamil Book Solution for CBSE | Lesson 7.6 – ஆகுபெயர்

பாடம் 7.6 ஆகுபெயர்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 7.6 – “ஆகுபெயர்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

பாடநூல் மதிப்பீட்டு வினா

பண்பாகுபெயர், தொழிலாகுபெயர் – விளக்குக.

பண்பாகுபெயர்

பண்புப்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது பண்பாகு பெயர் எனப்படும்.

சான்று :- மஞ்சள் பூசினாள்

மஞ்சள் என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகிவந்தது.

தொழிலாகு பெயர்

தொழில்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் எனப்படும்.

சான்று :- வற்றல் தின்றான்

வற்றல் என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப்பொருளுக்கு ஆகி வந்தது.

கூடுதல் வினாக்கள்

1. ஆகுபெயர் என்றால் என்ன?

ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்றுதொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.

2. ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

ஆகுபெயரை தொல்காப்பியர் ஏழாகவும், நன்னூலார் பதினைந்தாகவும் வகைப்படுத்தியுள்ளனர்.

3. பொருளாகு பெயர் (முதலாகு பெயர்) – விளக்குக. 

ஒரு முழுப்பொருளின் பெயர், அதனைச் சுட்டாது அதன் முதற்பொருளுக்கு ஆகி வருவது பண்பாகு பெயர் எனப்படும்.

சான்று :- முல்லையைத் தொடுத்தாள்

முதற்பொருளாகிய முல்லைக்கொடி, அதன் சினை(உறுப்பு)யாகிய பூவுக்கு ஆகி வந்தது.

4. இடவாகு பெயர் – விளக்குக. 

இடப்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது இடவாகு பெயர் எனப்படும்.

சான்று :- வகுப்பறை சிரித்தது

வகுப்பறை என்னும் இடப்பெயர் அங்குள்ள மாணவர்களுக்கு ஆகி வந்தது.

5. காலவாகு பெயர் – விளக்குக. 

காலப்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது காலவாகு பெயர் எனப்படும்.

சான்று :- கார் அறுத்தான்

கார் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்தது.

6. சினையாகு பெயர் – விளக்குக. 

சினைப்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது சினையாகு பெயர் எனப்படும்.

சான்று :- மருக்கொழுந்து நட்டான்

மருக்கொழுந்து என்னும் சினைப் (உறுப்பு) பெயர், அதன் செடிக்கு ஆகிவந்தது.

7. கருவியாகு பெயர் – விளக்குக. 

கருவியின் பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது கருவியாகு பெயர் எனப்படும்.

சான்று :- வானாெலி கேட்டு மகிழ்ந்தனர்

வானாெலி என்னும் கருவி, அதன் காரியமாகிய நிகழ்ச்சிகளுக்கு ஆகி வந்தது

8. எண்ணலளவை ஆகுபெயர் – விளக்குக. 

எண்ணின் பெயர் அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது எண்ணலளவை ஆகுபெயர் எனப்படும்.

சான்று :- ஒன்று பெற்றால் ஒளிமயம்

ஒன்று என்னும் எண்ணுப்பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்தது.

9. நீட்டலளவை ஆகுபெயர் – விளக்குக. 

நீட்டல் அளவைப் பெயர் அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது நீட்டலளவை ஆகுபெயர் எனப்படும்.

சான்று :- ஐந்து மீட்டர் வெட்டினான்

நீட்டி அளக்கும் நீட்டலளவைப் பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

கற்பவை கற்றபின்…

I. ஆகுபெயரைக் கண்டறிக.

அ.

தமிழரசி வள்ளுவரை ஓவியமாக வரைந்தாள்தொழிலாகு பெயர்
தமிழரசி வள்ளுவரைப் படித்தாள்கருத்தாவாகு பெயர்

ஆ.

மாமாவின் வருகைக்கு வீடே மகிழ்கிறதுஇடவாகு பெயர்
நாடும் வீடும் நமது இரு கண்கள்சினையாகு பெயர்

இ.

கலைச்செல்வி பச்சை நிற ஆடையை உடுத்தினாள்தொழிலாகு பெயர்
கலைச்செல்வி பச்சை உடுத்தினாள்பொருளாகு பெயர்

ஈ.

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதிஎண்ணலளவையாகு பெயர்
நாலடி நானூறும் இரண்டடித் திருக்குறளும் வாழ்வுக்கு உறுதி தரும்.காரியவாகு பெயர்

உ.

ஞாயிற்றை உலகம் சுற்றி வருகிறதுதொழிலாகு பெயர்
நீங்கள் கூறுவதை உலகம் ஏற்குமா?இடவாகு பெயர்

ஆகுபெயர் அமையுமாறு தொடர்களை மாற்றி எழுதுக.

அ. மதுரை மக்கள் இரவிலும் வணிகம் செய்கின்றனர்.

விடை : மதுரையில் இரவு வணிகம் உண்டு

ஆ. இந்தியா  வீரர்கள் எளிதில் வென்றனர்.

விடை :  இந்தியா எளிதில் வென்றது.

இ. நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கத்தில் உள்ளவர்கள் சிரித்தனர்.

விடை : நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கமே சிரித்தது

ஈ. நீரின்றி இவ்வுலக மக்களால் இயங்க முடியாது

விடை : நீரின்றி உலகு இயங்காது

சிந்தனை வினா

1. தற்காலப் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் ஆகுபெயரை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டுகள் தருக.

தற்காலப் பேச்சு வழக்கில் ஆகுபெயர்

  • பால் வந்ததா? – என்பது பால் விற்பனை செய்யும் பால்காரருக்கு ஆகி வந்தது.
  • பேருந்து நிறுத்தத்தில் 12 போயிருச்சா? எனக் கேட்பது 12 எண்ணுள்ள பேருந்து ஆகி வந்தது.

தற்காலப் எழுத்து வழக்கில் ஆகுபெயர்

  • “ஈரோடு தமிழ்ச்சங்கம் சார்பில் இரு நாள் தெய்வ நூல் பயிலரங்கம்” என்ற செய்தித்தாள் செய்தியில் தெய்வநூல் என்பது திருக்குறள் நூலுக்கு ஆகி வந்தது.

2. பட்டப் பெயர்கள் ஆகுபெயர்கள் ஆகுமா? எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

பட்டப்பெயர்கள் ஆகுபெயராகும்

சான்று

  • மகாகவி பாடினார் (பாரதி பட்டப்பெயராக ஆகி வந்தது)
  • ரோஜாவின் ராஜா (நேரு பட்டப்பெயராக ஆகி வந்தது)

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்க்க.

Conversation between two friends meeting by chance at a mall.

Aruna: Hi Vanmathi! It’s great to see you after a long time.

Vanmathi: It’s great seeing you. How long has it been? It must be more than 6 months. I’m doing good. How about you?

Aruna: Fine. I have come with my parents. They are inside the grocery shop. What about you?

Vanmathi: I came with my father. He has gone to buy tickets for a 3D movie.

Aruna: Which movie?

Vanmathi: Welcome to the jungle.

Aruna : Great! I am going to ask my parents to take me to that movie.

இரண்டு தோழிகள் வணிக வளாகத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது நடந்த உரையாடல்

அருணாவான்மதி, என்ன ஒரு ஆச்சர்யம் நீண்ட நாட்களுக்குப் பின் உன்னைப் பார்க்கிறேன் மகிழ்ச்சி
வான்மதிஎனக்கும் மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் தான்!  உன்னைப் பாரத்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது. ஆறு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. நான் நன்றாக இருக்கிறேன் நீ எப்படி இருக்கிறாய்.
அருணாநான் பெற்றோருடன் வந்தேன். அவர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் உள்ள பிரிவில் உள்ளார்கள். நீ?
வான்மதிநான் என் தந்தையுடன் வந்தேன். இவ்வளாகத்தில் நடைபெறும் முப்பரிமாண திரைப்படத்திற்கு அனுமதி சீட்டு வாங்கச் சென்றிருக்கிறார்.
அருணாஎன்ன படம்?
வான்மதிகாட்டுக்குள் வரவேற்பு
அருணாஓ…. நானும் என் பெற்றோரிடம் அந்தப் படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்கப் போகிறேன்.

பொருத்தமான இடங்களில் அடைமொழியிட்டு, சொற்றொடரை விரிவாக்குக.

1. புத்தகம் படிக்கலாம் ( நல்ல, ஆழ்ந்து, நாளும், தேர்ந்து, மகிழ்ந்து, உணர்ந்து)

(எ.கா.) நல்ல புத்தகம் படிக்கலாம், நாளும் நல்ல புத்தகம் படிக்கலாம்

  • நாளும் நல்ல புத்தகம் ஆழ்ந்து, உணர்ந்து, மகிழ்ந்து படிக்காலாம்.

2. விளையாடுவது நன்று (ஓடியாடி, மாலையில், சேர்ந்து, திடலில், அனைவருடன்)

  • திடலில் அனைவருடன் மாலையில் சேர்ந்து ஓடியாடி விளையாடுவது நன்று

பிழை நீக்குக.

பெறுந்தலைவர் காமராசர் பள்ளிப் படிப்பை நிரைவு செய்யவிள்ளை எண்ராலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அலவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்கலை நாள்தோறும் படித்தது. எப்போது அரையை விட்டு வெளியே போனாலும் மின்விசிரியை நிருத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமனிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்.

பெருந்தலைவர் காமராசர் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யவில்லைன்றாலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்களை நாள்தோறும் படித்தது. எப்போது அறையை விட்டு வெளியே போனாலும் மின்விசிறியை நிறுத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமணிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்.

கீழ்க்காணும் பத்தியில் உள்ள ஆகுபெயர்களை அட்டவணைப்படுத்துக.

விமலா கூடத்தில் உள்ள தட்டிலிருந்த டிசம்பரைத் தலையில் சூடிக்கொண்டாள் . மல்லிகையைப் படத்திற்குச் சூட்டினாள். அடுப்பிலிருந்து பாலை இறக்கினாள். பின்பு தோட்டத் திற்குச் சென்றாள். விமலாவைப் பார்த்தவுடன் தோட்டம் அமைதியானது!

“தலைக்கு இருநூறு கொடுங்கம்மா ” என்று தோட்டத்தில் வேலை செய்தவருள் ஒருவர் சொன்னார். வெள்ளை மனங்கொண்ட வேலையாட்களின் கூலியைக் குறை க்க விரும்பாமல் அதனை அவளும் ஏற்றுக்கொண்டாள். அவர்கள் சென்றதும், காலையில் சாப்பிடப் பொங்கல் வைத்தாள்.

வீட்டில் சமையல் செய்ய, எந்தெந்தப் பொருள்கள் குறைவாக உள்ளன என்பதை ப்பற்றிச் சிந்தித்தாள். “சாப்பாட்டிற்கு ஐந்து கிலோ வாங்க வேண்டும். தாளிப்பதற்கு மூன்று லிட்டர் வாங்க வேண்டும். துணி  உலர்த்துவதற்கு நான்கு மீட்டர் வாங்க வேண்டும்” எனத் திட்டமிட்டாள்.

அலைபேசி அழைத்தது. அரை நிமிடம் அலைபேசியில் வந்த வயலின் கேட்டு மகிழ்ந்தாள் . பிறகு எடுத்துப் பேசினாள் . கடைக்குப் போய்விட்டு வந்த பிறகு, பாதியில் விட்டிருந்த சிவசங்கரியைப் படித்து முடிக்கவேண்டும் என்று நினைத்தாள் .

1. டிசம்பரைத் தலையில் சூடிக்கொண்டாள்

டிசம்பர் என்னும் காலப்பெயர் பூவுக்கு ஆகி வந்ததால் (காலவாகு பெயர்)

2. பாலை இறக்கினாள்

பால் கொதித்த பாத்திரத்தை இறக்கினாள், கருவி பாலுக்கு அகி வந்தது (கருவியாகு பெயர்)

3. தலைக்கு இருநூறு

ஒவ்வொருவருகு்கும் என்பதைத் தலை என்னும் சினைப்பெயரால் உணர்த்துகிறது (சினையாகு பெயர்)

4. சாப்பாட்டிற்கு ஐந்து கிலோ வாங்க வேண்டும்.

ஐந்து கிலோ அரிசியை குறிக்க… எடுத்து அளந்து தருவது (நிறுத்து) (எடுத்தலளவை ஆகு பெயர்)

5. தாளிப்பதற்கு மூன்று லிட்டர் வாங்க வேண்டும்.

முகந்து அளக்கும் எண்ணெய் (முகத்தலளவையாகு பெயர்)

6. துணி உலர்த்துவதற்கு நான்கு மீட்டர்

நீட்டி அளக்கும் துணி உலர்த்தும் கொடியை குறிக்கும் (நீட்டலளவையாகு பெயர்)

7. சிவசங்கரியைப் படித்து முடிக்க வேண்டும்

சிவசங்கரி நூலைக் குறிக்கும் (கருத்தாவாகு பெயர்)

மொழியை விளையாடு

புதிர் அவிழ்க்க.

நான்கெழுத்துக்காரன்;
முதல் இரண்டும்
அம்மாவில்
“மா“வைத் தொலைத்து நிற்கும்;
அடுத்த எழுத்தைச் சேர்த்தால்
வில்லின் துணைவன்;

கடை இரண்டும்
கணக்கில் ’இது’ என்பர்.!
முழுதாய்ப் பார்த்தால்
மேகத்திடை தெரிவான்!
அவன் யார்?

விடை :  அம்புலி

பண்புத்தொகைகளை இட்டு நிறைவு செய்க

(இன்னோசை, பேரொளி, சிற்றோடை, பேரின்பம், பைங்கிளி, பேரூர், செந்தாமரை)

மானாமதுரை ஓர் அழகான பேரூர்; நீண்ட வயல்களும் சிற்றோடைகளும் நிறைந்த அவ்வூரின் நடுவே வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோவில் குளத்தில் எங்கும் செந்தாமரை பூக்கள் மலர்ந்துள்ளன; கதிரவன் பேரொளி வீசிட, சோலைப் பைங்கிளிகளின் இன்னோசை கேட்போலைப் பேரின்பம் அடையச் செய்கிறது.

வட்டத்திற்குள் உள்ள எழுத்துகளைக்கொண்டு சொற்களை உருவாக்குக.

Class 9 Tamil Chapter 7.6 "‘ஆகுபெயர்" - வட்டத்திற்குள் உள்ள எழுத்துகளைக்கொண்டு சொற்களை உருவாக்குக.

கால்காலைபுத்தகம்புல்
புத்திஅகல்அவல்கல்
அதிகம்கறிதறிபுதன்
வலைஅறிவன்கலைகத்தி
கவலைகாவல்அலைதில்லை

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

Class 9 Tamil Chapter 7.6 "‘ஆகுபெயர்" - காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.கலைகள் சிறந்த நாடு
அது எம் தமிழ்நாடு
சண்டைகள் இல்லா
சமாதானப் புறாவானது
அது எம் தமிழ்நாடு
மதத்தின் குறியீடு
இல்லாத கோபுரச் சின்னம் கொண்டது
அது எம் தமிழ்நாடு
உலகம் போற்றும்
உன்னத தைத்திங்கள் தந்தது
அது எம் தமிழ்நாடு

அகராதியில் காண்க.

1. ஈகை – கொடை, கற்பகமரம், காடை, பொன், முகில், வண்மை

2. குறும்பு – அரணிருக்கை, சிறுமை, பொல்லாங்கு, குறும்புத்தனம்

3. கோன் – அரசன், இடையன், தலைவன், எப்பொருட்கும் இறைவன்

4. புகல் – உடல், உபாயம், குதிர், சொல், தஞ்சம், சரண்

5. மாெய்ம்பு – தோள்வலி பலம்

கலைச்சொல் அறிவோம்

செவ்வியல் இலக்கியம் – Classical Literatureகரும்புச் சாறு – Sugarcane Juice
பண்டமாற்று முறை – Commodity Exchangeகாய்கறி வடிசாறு – Vegetable Soup
இந்திய தேசிய இராணுவம் – Indian National Army

 

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment